Jump to content

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழந்தைகள் என்ன செய்தனர்?

Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:31 Comments - 0

-ஜெரா

போரின் வலியை, அது விட்டுச்சென்ற மானுடப் பேரவலத்தை, இனிவரும் காலம் முழுவதும் தமிழ்த் தலைமுறை சுமக்கப்போகிறது. போரின் உள வடுவும் உடலியல் தாக்கங்களும், இன்னமும் 80 ஆண்டுகளுக்கு நீடிக்குமன, சமூகவியல் ஆய்வாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தத் தொடர்பு அறாத துயரம் பற்றிப் பதிவுசெய்வதும் அவசியமாகிறது.  

image_176dc2cf4c.jpg

அதிலும், சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று (10) அனுஷ்டிக்கப்பட்ட பின்னணியில், இவர்களின் துயரங்களைப் பதிவுசெய்வது முக்கியமானது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம், ஐக்கிய நாடுகளால் அங்கிகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. ஆனால், போர் நடந்த பிரதேசங்களில், குறைந்தபட்ச மனித உரிமைகளாவது மதிக்கப்படுகின்றனவா என்பது கேள்விக்குரியது. அதிலும், இலங்கையின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் துயரங்கள், சொல்லி மாளாதவை.  

“இண்டைக்குத்தான் அவர் செத்தார்... “;  

“இந்த இடத்தில தான் நான் காயப்பட்டனான்...”;  

“இந்தப் பாலத்தடியிலதான் ஆமியிட்டச் சரணடைஞ்சனாங்கள்...”;  

“இவடத்திலதான் அவரப் புதைச்சனாங்கள்...” என நீளும் துயர நினைவுப் பேச்சுக்களில், மாத்தளன் - புதுமாத்தளன், வலைஞன்மடம், முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இடங்களும் கட்டாயமாக இருக்கும்.   

ஆனால், இந்நினைவுகள் நிலைத்து நிற்கக்கூடியவை அல்ல. காலவோட்டத்தில், நினைவு மங்கும்; காட்சிகள் மாறும். ஆட்சிகள் மாற மாற, இந்தப் பேரவல நினைவுகள், தூரமாய்த் தெரியும். வரலாறு முழுதும் தமிழர் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எப்படி நினைவில் தங்காமல் நீங்கினவோ, அதுபோலவே, இறுதிப்போர் குறித்த அவலங்களுக்கும் நடக்கலாம். ஏனெனில், தமிழர்கள், மறதியால் கட்டுண்டவர்களாவர்.   

ஆனால், எதையும் மறக்க முடியாமல், தம் உடலோடு போரின் குரூர விளைவுகளைச் சுமக்கும் குழந்தைகளிடம், அந்த வலி நிரந்தரமாகவே தங்கிவிட்டது. இறுதிப் போரின் போது காயமடைந்து, உடல் அவயவங்களை இழந்தக் குழந்தைகளின் இன்றைய வாழ்க்கை எப்பிடியிருக்கிறது, அவர்களின் எதிர்காலம் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் போன்றவற்றைக் கண்டறிவது அவசியம்.  

வன்னியில் இருக்கின்ற ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து, அந்தக் கிராமத்துக்குள்ளும் 3 கிலோமீற்றர் சுற்றெல்லைக்குள், ஒரு பாடசாலையை மய்யப்படுத்தியே, இப்பதிவுக்கான சிறார்களை, இக்கட்டுரையாளர் சந்தித்தார். இப்பதிவுக்காக வரையறுத்துக்கொண்ட பகுதிக்குள், போரால் பாதிக்கப்பட்ட 5 சிறார்கள் இருக்கின்றனர். அவர்களில் இருவர், இக்கட்டுரைக்குள் வருகின்றனர்.   

பரபரப்பான சாலையோரத்தில் இருக்கிறது அதிகாவின் (13 வயதுச் சிறுமி; பெயர்மாற்றப்பட்டுள்ளது) வீடு. படலையைத் திறந்து உள்ளே கால் வைத்ததும், வலுக்கக்கூடிய சாய்வுதளம். வீட்டின் வாசலிலும் அதே போன்றதொரு சாய்வுதளம். அச்சாய்வுதளங்களே, அதிகா எவ்வாறான காயத்துக்குள்ளாகியிருக்கிறாள் என்பதை நமக்கு உணர்த்திவிடுகின்றன. அவள் ஒரு மாற்றத்திறனாளி. போர், அவளை எழுந்து நடக்கமுடியாத மாற்றுத்திறனாளியாக்கிவிட்டது.   

அதிகாவின் அம்மா, “...அவா குளிக்கிறா. தானே குளிப்பா, தன்னைக் கவனிச்சிக்கொள்ளுவா..” என்று சொல்ல, “யார் பிள்ள வந்தது...?” என்றபடி, அதிகாவின் அம்மம்மா உரையாடலுக்குள் வந்துவிடுகிறார். அறிமுகத்தை வாங்கிக்கொண்டு, நம் மீதான நம்பிக்கையைப் பெற்றபின் கதைக்கத் தொடங்கினார். அதிகாவின் அம்மம்மாவுக்கும் கட்டுரையாளருக்கும் இடையிலான உரையாடல் நடந்துகொண்டிருக்கையில், அதிகாவின் அம்மா, அழத் தொடங்கியிருந்தார்.   

அதிகாவின் அப்பப்பா, தடியொன்றின் துணையுடன் எமக்கு முன் வந்தமர்ந்தார்.  

அதிகாவின் தம்பிமார், யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி, அம்மம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.  

“..இப்ப ஏன் அழுறாய்? முடிஞ்சத நினைச்சு அழுது என்ன பிரயோசனம்? அழாத. அவள் என்ன செய்யிறாள் எண்டு பார்..”, தன் மகளின் கண்ணீர் நீளமாவதை, கட்டுரையாளரோடு பேசிக்கொண்டிருந்த அம்மாவும், அதிகாவின் அம்மம்மாவும் கொஞ்சமும் விரும்பவில்லை. பேச்சில் கண்டிப்புத் தெரிந்தது. அதிகாவின் அம்மா உள்ளே செல்ல, அம்மம்மா தொடர்ந்தார்.   

“2009.....05ஆம் மாசம் 04 ஆம் திகதிதான் அது நடந்தது.   

“மாத்தளன்...இல்ல இல்ல அம்பவன்பொக்கண...  

“காயப்படேக்க 6 வயசு. நேசரி (முன்பள்ளி) படிச்சிக்கொண்டிருந்தவள். இங்கிலீஸ் மீடியம்.  

“புதுக்குடியிருப்பில ஒரே ஷெல்லடி. இருக்க முடியேல்ல. நடந்துதான் பொக்கணைக்குப் போனம். அதிகாவின்ர சித்தி வீடு இருந்தது. வீடெண்டா, டென்ட். பகல் பதிணொண்டர இருக்கும். வீட்டுக்குப் போனதும், ரீ (tea) தந்திச்சினம். அதிகாவின்ர அப்பா, கதிரையில இருந்து ரீ குடிச்சுக்கொண்டிருந்தார். அதிகாவும் தம்பியும், அப்பாவின்ர முழங்காலில கையை ஊண்டிக் (ஊன்றி) கொண்டு, ரெண்டுபக்கமும் இருந்தவ.   

“திடீரெண்டு வேப்பமரத்தில விழுந்து, ஷெல் வெடிச்சது. அப்பாவின்ர மடியில இருந்த பெடியனின்ர முகமெல்லாம் இரத்தம். பதறியடிச்சிக்கொண்டு அவனத் தூக்கினா, நெத்தில காயம். பிறகு எங்க அதிகாவக் காணேல்ல எண்டு பாத்தா, கீழ விழுந்து கிடக்கிறாள். அவளுக்கு முதுகில காயம்பட்டிட்டு. ரெண்டு பேரும் அழ, எல்லாரும் பிள்ளயள வச்சுக்கொண்டு, அழுறம்.   

“அதிகாவின்ர அப்பாவக் கவனிக்கேல்ல. அவர் அப்பிடியே கதிரயில இருக்கிறார். பிறகு கொஞ்சத்தால, தல சரிஞ்சது. வடிவா கிட்டப்போய் பாத்தன். அவருக்கு, பீஸ் முன்னுக்குப் பட்டு, முதுகால போயிற்று. கதிரயில இருந்தபடியே இறந்திட்டார்.  

“உடன பக்கத்தில நிண்ட ஆக்கள், பிள்ளயள ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிற்றினம். ஆஸ்பத்திரியெண்டாத் தெரியும்தானே? அங்கயும் பயம்தான். ஒரே ஷெல்லடி தானே. நாங்கள், மருமகனின்ர பொடியோட (சடலம்) நிண்டிட்டம்.   

“பிறகு, ஆஸ்பத்திரிக்குப் போனாம். மகனுக்குப் பிரச்சின இல்ல, மகளுக்கு இடுப்புக்குக் கீழ சரிவராது எண்டுச்சினம். என்ர குழந்தையின்ர முகத்த, என்னால பாக்கவே முடியேல்ல. அவளின்ர ஆசைகள், கனவுகள் எல்லாமே, நான் வச்சிருந்த ஆசைகள் எல்லாமே.....” வைராக்கியமிக்க அம்மம்மாவின் குரலும் தளர்ந்தது. குரூரமான அந்த நினைவை மீட்ட குற்றவுணர்ச்சி எமக்கு ஏற்பட்டது.   

“பத்தாம் திகதி, கப்பல்ல திருகோணமலைக்கு ஏத்திச்சினம். கப்பல்லயும் படாதபாடு பட்டுத்தான் ஏறினம். அங்கயும் கப்பல்ல, கொண்டு போன பாக் (bag) எல்லாத்தையும் துலைச்சிட்டு, நாங்கள் பட்ட கஷ்ரங்களச் சொன்னால், இப்ப கதறவேணும்.  

“திருகோணமலயில ஒன்றரை வருசம் இருந்தம். பிறகு, வவுனியாவுக்கு மாத்திச்சினம். அங்கயிருந்து பம்பமடுவில வச்சுப் பராமரிச்சது. அங்கயிருந்து மருந்தெடுக்க, கொழும்புக்கு அனுப்புவாங்கள். அது அம்புலன்ஸ்ல பெட்ல பிள்ளையின்ர உடம்பு தேய்பட்டு தேய்பட்டு, படுக்க புண் வந்திட்டு. உணர்வில்லதா இடம்தானே. யூரின், டொய்லெட் எல்லாம் போய்போய் அதுவும் பெருத்திட்டு. பிள்ள அதனால பட்ட கஸ்ரம் கொஞ்சநஞ்சமில்ல. கொழும்பு பெரிய ஆஸ்பத்திரிலயே மறிச்சிட்டினம். அங்க, சரியா கவனிப்பும் இல்ல. எனக்குச் சிங்களமும் தெரியாது. பிள்ள, தாயிட்டப் போகப்போகுதெண்டு அழுது. நான், விடாப்பிடியா நிண்டு, வவுனியாக்குக் கொண்டு வந்திட்டன்.  

“இப்பிடியே 3 வருசம் ஆஸ்பத்திரி வாழ்க்கதான்” என, அதிகா பற்றி அம்மம்மா சொல்லிக்கொண்டிருக்கையில், அவளின் படிப்புக் குறித்து அறியவும் விரும்புவீர்கள்.   
“படிப்பெல்லாம்...  

“3ஆம் ஆண்டில இருந்துதான் பள்ளிக்கூடம் போகத் தொடங்கினவ. சுகமாகின பிறகு, வவுனியா சிங்கள மகா வித்தியாலத்துக்குத்தான், இடம்பெயர்ந்த பிள்ளயள அனுப்பிச்சினம். அதிகாவையும் கூட்டிக்கொண்டு போனன். அதிபர் சொன்னார், ‘பிள்ளைய இப்ப 1ஆம் ஆண்டில சேர்த்தா ஷ்கொலர்ஷிப் எடுக்க ஏலாது. வயசுப்படி 3ஆம் ஆண்டிலயே சேர்ப்பம். பிள்ள படிக்கச் சிரமப்பட்டால், பிறகு யோசிப்பம்’ எண்டார். நாங்களும் சம்மதிச்சம்.  

“அவ்வள பிள்ளையளுக்குள்ளயும், அதிகா 3ஆம் பிள்ளையா வந்திட்டாள். ஆச்சரியமா இருந்தது. முதலாம், ரெண்டாம் ஆண்டெல்லாம், ஆஸ்பத்திரியிலதான் அதிகா படிச்சவள். கொஞ்சம் சுகமா இருக்கேக்க, ஒண்டு, ரெண்டு. ஏ.பி.சி.டி, தமிழ் எழுத்துகள், தேவாரம் எல்லாம் சொல்லிக்குடுப்பன். அப்பிடியே மனப்பாடமாச் சொல்லுவாள். அது பிள்ளைக்கு பெரிய உதவியா இருந்திருக்கு.  

“பிறகு ஸ்கொலர்ஷிப்லயும் பாஸ் பண்ணிட்டாள். 184 மார்க்ஸ்...! இப்ப எட்டாம் ஆண்டு படிக்கிறாள். இப்ப ஓட்டோவிலதான் பள்ளிக்கூடம் கொண்டு போறது. அம்மா, காலம கூட்டிக்கொண்டு போய் விடுவா.   

“பள்ளிக்கூடத்தில, இவைய நல்லாக் கவனிப்பினம். இவா, லேட்டாத்தான் எழும்புவா. அதனால இவா, 8 மணிக்குப் பிறகும் பள்ளிக்கூடம் போகலாம்.   

“இவாவின்ர ஓட்டோவக் கண்டதும், வகுப்புப் பிள்ளயள் எல்லாரும் ஓடிவருவினம். ரீச்சராக்களும் நல்லாக் கவனிப்பினம். பெரிய கஷ்ரமில்ல. ஆனா எங்களுக்குத்தான், பிள்ளைய பாக்க...பாக்க, அவவின்ர எதிர்காலத்த நினைக்க நினைக்க.....!” அதிகாவின் அம்மம்மா மிகுதியாகச் சொல்ல வந்ததைச் சொல்வதற்கு, அவரிடம் வார்த்தையில்லை, துன்பம் மட்டுமே எஞ்சியிருக்கிறது. அம்மம்மா அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்க, சக்கரக் கதிரையில் அமர்ந்திருக்கும் அதிகா என்னும் அழகிய சிறுமியை, அவளின் தம்பி தள்ளிவருகின்றான்.   

தொடுவது, பார்ப்பது, பேசுவது என, புலன்களால் உணரக்கூடிய அனைத்துக்கும் வர்ணமிடித்துப் பார்க்கும் கண்களோடு, அச்சிறுமி அங்கிருந்தவர்களை நோக்கினாள். எல்லோரும் அவளைப் பார்க்க, அவள் வெட்கப்பட்டாள். யாரையும் பார்க்கமுடியாது திணறினாள். அவ்விடத்தில் அதிகா வெளிப்படுத்திய கூச்சவுணர்வு சொன்ன செய்திகள் ஏராளம். அந்தக் கூச்சவுணர்வுக்கும் மகிழ்ச்சி பூச, அவள் சிரிக்க முயன்றாள்; இயலவில்லை. தோற்றாள்; தோல்வியை மறைக்கவும் இயலவில்லை.   

“...உள்ள போ(க)ப் போறன்... உள்ள போ(க)ப் போறன்...” என்றாள். சக்கரக் கதிரையைத் திருப்பிக்கொண்டாள். எங்கள் முகம் பார்க்கவும் விரும்பவில்லை; எங்களை விட்டு நகரவும், அதிகா விரும்பவில்லை. திரும்பி வாசலில் நின்றுகொண்டாள்.  

அப்படி நின்றபடியே, தன் பெயர் சொன்னாள். தனக்குப் பிடித்த ஆசிரியர்களைச் சொன்னாள். நண்பிகளைச் சொன்னாள். தனக்குப் பிடித்த கதை சொன்னாள். பாடல் பாடினாள். தன் ஆசைகள் அதிகம் சொன்னாள் அதிகா.  

“நான் படிச்சு, டொக்டரா வரவேணும்” என்றாள். அதிகாவின் தம்பி, சக்கரக் கதிரையைத் தள்ளிக்கொண்டு, வீட்டின் உள்ளே போனான். அந்த வீட்டின் உட்புறம், இருளாய் இருந்தது. இருள் மங்கியிருந்த வீட்டின் சுவர்களில், வர்ணச் சுண்ணக்கட்டிகளால் கீறப்பட்ட பல்வேறு உருவங்களும் மின்னிக்கொண்டிருந்தன. அவை, அதிகாவால் தீட்டப்பட்ட வர்ணங்களாக இருக்கக்கூடும். எங்கள் பிஞ்சுகளை, போர் இப்படித்தான் தின்று கொண்டிருக்கின்றது என்பதற்கு, அதிகாவும் ஒரு சாட்சி.  

இரண்டாவது கதை

இந்தச் சிறுமி, நலன்புரி நிலையத்தில் வைத்துத்தான் சுடப்பட்டாள். 

அதிகாவுடனான உரையாடல் முடிந்ததும், அவளின் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த, ஆயிசாவின் வீட்டுக்குப் பயணமானோம்.  

குன்று குழிகளாலும் கால் புதையும் மணலாலும், அவளின் வீட்டுக்கான ஒழுங்கை நிரம்பியிருந்தது. அவ்வொழுங்கை முடிவதற்கு நான்கைந்து வீடுகள் முன்னதாக , கழித்துவிடப்பட்ட தகரத்தால் ஆன படலையொன்றின் முன்னால், சக்கரக் கதிரையில் ஆயிசா அமர்த்தப்பட்டிருக்கிறாள். அருகில், அவளுக்குத் துணையாக, தம்பியொருவர் நிற்கிறார்.  

இருவரும் புதினப் பார்வையுடன் எம்மை நோக்கினர்.  

“என்ன செய்யிறீங்கள் றோட்டில?” என்று கேட்க, “அம்மாக்கு அக்சிடென்ட். அப்பா, ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கொண்டு போயிற்றார். பார்த்துக்கொண்டு நிக்கிறம்” என, ஆயிசா சட்டெனப் பதிலளித்தாள். அவளின் பார்வையில் குறும்புத்தனங்களும், அந்தக் குறும்புத்தனங்களைக் கைவிட்ட குழந்தையொன்றின் ஏராளமான ஏக்கங்களும் வழிந்தன.   

“வேற யார் நிக்கினம்?” எனக் கேட்க, “ஒருத்தரும் இல்ல. இவர் சித்தியின்ர மகன். என்னைப் பார்த்துக்கொள்றதுக்காக, கூப்பிட்டு விட்டிட்டுப் போனவ. இப்ப வந்துடுவினம். நில்லுங்கோ” என்றாள்.   

“படிக்கிறீங்களா?”  

“ஓம். 8ஆம் வகுப்புப் படிக்கிறன்..”  

“அப்பா என்ன செய்யிறார்?”  

“கூலிக்குத்தான் போறவர்”  

“அப்பா உழைக்கிற காசு காணுமா?”  

“அம்மாக்குத்தான் தெரியும்”  

“என்னத்தில பள்ளிக்கூடம் போவீங்கள்?”  

“அம்மா, இந்தச் சக்கரக் கதிரையில வச்சுத் தள்ளிக்கொண்டு போய் விடுறவா. பள்ளிக்கூடம் முடிய வந்து கூட்டிவருவா”  

“இந்த மணலுக்குள்ளால, இவ்வளதூரம் கஷ்ரமில்லயா?  

“கஷ்ரம் எண்டு அம்மா சொல்லேல்ல...”  

“எத்தின மணிக்குப் பள்ளிக்கூடம் போவீங்கள்?”  

“ஏழு மணிக்கு”  

“ஏன் அவ்வள நேரத்தோட?”  

“காலம நேரத்தோட போனா, முதல்நாள் எனக்கு விளங்காத பாடங்கள, ரீச்சராக்கள் விளங்கப்படுத்திவிடுவினம். வகுப்பு நடந்தா, அதில போய் இருப்பன்”  

“பள்ளிக்கூடத்தில எல்லாரும் எப்பிடி?”  

“எல்லாரும் நல்லவயள். ரீச்சராக்கள் நல்லாக் கவனிப்பினம். எல்லாப் பிள்ளையளும் உதவிசெய்வினம். பள்ளிக்கூடம் சந்தோசமா இருக்கும். ஆனா, இன்ரவெல் நேரம்தான் கவலையா இருக்கும். எல்லாப் பிள்ளையளும் விளையாடுவினம். கன்ரீன் போவினம். நான் வகுப்பில இருப்பன். இல்லாட்டி, வகுப்புப் பிள்ளையளிட்ட லைப்றரிக்கு கூட்டிப்போகக் கேட்டா, கூட்டிக்கொண்டு போய் விடுவினம்”  

“ஏன் நீங்க உங்களோட படிக்கிற பிள்ளையளிட்டக் காசு குடுத்துவிட்டு, கன்ரீன்ல ஏதும் வாங்கி சாப்பிடலாம்தானே?”  

“எல்லா நாளும் அப்பாட்டக் காசிருக்காது”  

“உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் எத்தின பேர்?”  

“ஒராள்..”  

“யார்?”  

“அதிகா. அவரும் என்னப்போலத்தான். நிறைய நேரம் கதைப்பம். அவா, ஓட்டோவில வருவா..”  

“உங்களுக்கு எப்பிடிக் காயப்பட்டதெண்டு அம்மா சொல்லியிருக்கிறவா?”  

“ஓம். எனக்குத் தெரியும். முள்ளிவாய்க்காலில இருந்து போய், அருணாச்சலம் காம்ப்பில இருந்தனாங்கள். பின்னேரம்போல, டென்ட் ஓரம் விளையாடிக்கொண்டிருந்தம். அந்த நேரம், பக்கத்து காம்ப்பில விறகு எடுக்கக் காட்டுக்கு போன ஆக்களுக்கும் ஆமிக்கும் சண்ட வந்திட்டு. ஆமி, மேல் வெடி வச்சவன். அதில தான் ஒரு ரவுண்ஸ் வந்து, எனக்கு பட்டிற்று.  

“காயப்பட்ட உடன, வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனவ. பிறகு கொழும்புக்குக் கொண்டு போனவ. அதுக்குப் பிறகு, விசாரண நடந்தது. பிறகு விட்டிட்டினம்”  

“என்ன விசாரணை?”  

“பொலிஸ், ஆமியெல்லாம் வந்து, யார் சுட்டது எண்டு விசாரிச்சவ. பிறகு போயிற்றினம். ஒண்டும் சொல்லேல்ல..”  

“காயப்பட்டதுக்கு நட்டஈடு ஏதும் தந்தவையா?”  

“இல்ல”  

“நட்டஈடு எண்டா என்ன எண்டு தெரியுமா?”  

“ஓம். பாதிக்கப்பட்ட ஆக்களுக்குக் குடுக்கிறது. எனக்கு அப்பிடி ஒண்டும் தரேல்ல”  

“பிறகு எப்பிடிப் படிச்சீங்கள்?”  

“காயப்படேக்க நான் நேசரிதான் படிச்சுக்கொண்டிருந்தன். பிறகு 2ஆம் ஆண்டிலதான் சேர்த்தது. 2 வருசம், ஆஸ்பத்திரில இருந்தனான். அங்க நேர்ஸ் ஆக்கள், பாடம் சொல்லித்தந்தவ”  

“இரவில எத்தின மணி வரைக்கும் படிப்பீங்கள்?”  

“10 மணி மட்டும். பிறகு நித்திரை வரும். அம்மா, தூக்கிக் கிடத்திவிடுவா”  

“வீட்டில என்ன வேலை செய்வீங்கள்?”  

“சயிக்கிள்ள இருந்தபடியே வீடு கூட்டுவன். மரக்கறி வெட்டிக் குடுப்பன். இவ்வளந்தான்”  

“உங்கட இலட்சியம் என்ன எண்டு ரீச்சராக்கள் கேட்டா, என்ன சொல்லுவீங்கள்?”  

“டொக்டரா வரவேணும் எண்டு”  

அவளுக்கும் எமக்குமான 2 மணிநேர உரையாடல், இப்பிடித்தான் நிறைவுற்றது. அந்தச் சிறுமியின் கண்களில் படரும் வலி, வார்த்தைகளில் இல்லை. அவளின் கண்களில் கண்ணீர் இல்லை. அவள் பேசிய சொற்களில், ஆங்காங்கே இரத்தம் கசிவதை, இதைப் படிக்கும்போது நீங்களறிவீர்கள். போர்தான் கொடுமையெனில், போருக்குப் பின்னரும் கொடுமை நிகழ்ந்தமைக்கு, ஆயிசாவும் ஒரு சாட்சி. இறுதிப்போரின் அவலம் முள்ளிவாய்க்கால் நிலத்தோடு மட்டும் நிறைவடையவில்லை. அதன் பின்னரும் அப்பேரவலம் நீடிக்கிறது என்பதற்கும், அவளொரு சாட்சி.   

அதிகாவினதும் ஆயிசாவினதும் கதைகள், இந்த நிலத்தின் விதிவிலக்குகள் இல்லை, இந்த நிலத்தின் விதிகளாகவே அவை இருக்கின்றன என்பது தான் வருத்தமானது. இவர்களைப் போன்றவர்களின் மனித உரிமைகள் பற்றிய கவனம், விசேட தினங்களில் மாத்திரமல்லாது, தினமும் ஏற்படுமா? இவர்களுக்கான விடிவு கிடைக்குமா?    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்தக்-குழந்தைகள்-என்ன-செய்தனர்/91-226407

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.