Jump to content

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஐந்து மாநில தேர்தல்கள்- பாஜகவின் மூன்று கோட்டைகளை கைப்பற்றும் நிலையில் காங்கிரஸ்

 

இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டசபைக்களுக்கு இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்பின் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்ற நிலையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி  முன்னிலை வகிக்கின்றது 

சத்தீஸ்கர் ராஜஸ்தான் மத்தியபிரேதசம் தெலுங்கானா மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளிற்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டுள்ளன

இந்நிலையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.

தெலுங்கானாவில் ஆளும் ராஸ்டிரிய சமிதி கட்சி முன்னிலை வகிக்கின்றது.

மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி முன்னிலை வகிக்கின்றது.

election_india.jpg

ராஜஸ்தான் மாநிலத்திலும் சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சி 10 வருடங்களின் பின்னர் ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/article/46144

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
தேர்தல் முடிவுகள்

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் தெலங்கானா, மிசோரம் தவிர்த்த மூன்று முக்கிய மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வந்தது.

ஆனால் தற்போது மத்திய பிரதேசத்தில் காங்கிரசிற்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

பல ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி செய்து வந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மிசோரத்தில், தற்போது மிசோ தேசிய முன்னணி முன்னிலையில் உள்ளது.

பின்னடைவு

ரஜினிகாந்த்படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டு இருப்பதை காட்டுவதாக நடிகர் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ரஜினி இவ்வாறாக கூறி உள்ளார்.


அடையாளம்

கமல்படத்தின் காப்புரிமை Getty Images

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது என்று கமல் ஹாசன் ட்வீட் பகிர்ந்து உள்ளார்.


6.45: மிசோரமில் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளது. பத்து ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி செய்த காங்கிரஸ் 40 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 34 இடங்களை வென்றது. மிசோ தேசிய முன்னணி கட்சி 26 தொகுதிகளில் வென்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பா.ஜ.க ஒரு தொகுதியில் மட்டுமே வென்றுள்ளது.

மிசோரம்

5.30: சத்தீஸ்கரில் 9 தொகுதிகளில் காங்கிரஸூம், 1 தொகுதியில் பா.ஜ.கவும் வென்றுள்ளன.

5.25: தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். 45 தொகுதிகளில் வென்றுள்ளது.

5.20: ராஜஸ்தானில் 47 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸும். 32 தொகுதிகளில் பா.ஜ.கவும் வென்றுள்ளன.

5.15 : மத்திய பிரதேசத்தில் 30 தொகுதிகளில் பா.ஜ.கவும், 15 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

தெலங்கானா

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இன்று 43 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 11:30 மணி நிலவரப்படி, 80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இது பெரும்பான்மைக்கு போதுமானது என்பதால் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


#AccheDin வந்துவிட்டது

பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள் என கனிமொழி ட்வீட் செய்துள்ளார்.



டுவிட்டர் இவரது பதிவு @Devinder_Sharma: Rural distress has cast its shadow over election results. Whichever party eventually wins the message is loud and clear. Farmers cannot be taken for granted any more. #Results2018புகைப்பட காப்புரிமை @Devinder_Sharma @Devinder_Sharma <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @Devinder_Sharma: Rural distress has cast its shadow over election results. Whichever party eventually wins the message is loud and clear. Farmers cannot be taken for granted any more. #Results2018" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/Devinder_Sharma/status/1072360071600971778~/tamil/india-46516557" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @Devinder_Sharma</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@Devinder_Sharma</span> </span> </figure>

ஊரக பிரச்னைகள் இந்ததேர்தலில் எதிரொலித்து இருப்பதாக கூறுகிறார் வேளாண் கொள்கை அறிஞர் தேவேந்தர் சர்மா.


மிசோ தேசிய முன்னணி முன்னிலை

2.15 - தெலங்கானாவின் கஜ்வேல் தொகுதியை டி.ஆர்.எஸ். தலைவர் சந்திரசேகர ராவ் தக்கவத்துக்கொண்டார்.

1.30 PM நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 180 இடங்களைத் தாண்டாது- பிபிசி பேட்டியில் மணிசங்கர் ஐயர்

12:15 டிஆர்எஸ் வெற்றியை கொண்டாடும் தொண்டர்கள்

டிஆர்எஸ்
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @DrTamilisaiBJP

வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழிசை செளந்தராஜன் கூறி உள்ளார்.

அவர் பகிர்ந்துள்ள ட்வீட்டில், வெற்றி தோல்விகள் எங்களை பாதிக்காது. வாக்கு இயந்திரங்கள் மீது குற்றஞ்சாட்டி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி உள்ளார்.


12:00 தேர்தல் முடிவுகள் எதை உணர்த்துகிறது?

செளதிக் பிஸ்வாஸ், பிபிசி

modiபடத்தின் காப்புரிமை Getty Images

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் நடக்கும் சட்டமன்ற தேர்தல் இது.

நாடாளுமன்ற தேர்தல் வரை வேறு எந்த சட்டமன்ற தேர்தலும் இல்லை என்பதால் இந்த ஐந்து மாநில தேர்தல் அனைவராலும் கூர்ந்து பார்க்கப்பட்டது.

மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது, அவர்களது தொண்டர்களை உற்சாகப்படுத்தும். யாராலும் தோற்கடிக்க முடியாத கட்சி, தோற்கடிக்காத பிரதமர் என்ற பிம்பம் உடைந்திருப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடனான கூட்டணி பேரத்திற்கும் உதவும்.

குறிப்பாக மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை வழிநடத்திய ராகுலின் பிம்பம் வெகுவாக உயர்ந்திருக்கிறது.

ராகுல்படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

2014ஆம் நாடாளுமன்ற தேர்தலில் , இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தேர்தலில் 62 தொகுதிகளில் பா.ஜ.க வென்றது.

ஆனால், அதே நேரம் சட்டமன்ற தேர்தல்கள் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று கருத முடியாது.


சந்திரசேகர ராவ் வெற்றிப் பயணம்:

தெலங்கானா என்ற தனி மாநிலத்தை அடைவது சாத்தியமற்றது அல்ல என்று உணர்ந்தபோது, முன்னாள் நக்சல் தலைவர் இன்னய்யா, ஜெய்சங்கர் மற்றும் தெலங்கானா சிந்தனையாளர் தலைவர்கள் சிலருடன் தீவிரமாக கலந்து ஆலோசித்தபிறகு ஏப்ரல் 7 ஆம் தேதி தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை கே.சி.ஆர். தொடங்கினார்.

விரிவாக படிக்க:சந்திர சேகர ராவ் வெற்றிப் பயணத்தின் ரகசியம் என்ன?


ராகுல்படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

11:50 "மக்கள் பாஜகவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இது இந்நாட்டு மக்களின் மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி" என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பேனர்ஜி ட்வீட் செய்துள்ளார்.

முடிவு டுவிட்டர் பதிவின் 2 இவரது @MamataOfficial

11:40 தேர்தல் முடிவுகள் குறித்த நல்ல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. "இந்தியாவுக்கு இன்று சிறப்பு வாய்ந்த நாள். இந்தியாவை ஏமாற்றியவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" என்று கருத்து பதிவிட்ட அருண் ஜேட்லியின் வார்த்தைகளை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என சசி தரூர் ட்வீட் செய்துள்ளார்.

11:30 தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி முன்னிலை வகிக்கும் நிலையில், கேசிஆர்-ன் மகள் கல்வகுன்ட்ல கவிதா பிபிசி தெலுகுவிடம் பேசுகையில், 100 இடங்கள் வரை பெறுவோம் என்று நம்புவதாக தெரிவித்தார்.

11:15 பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதை அறிந்த, அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Presentational grey line

பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் பின் தங்கி இருந்தாலும், சித்தாந்தரீதியாக அந்தக் கட்சி வெற்றி பெற்று இருக்கிறதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் கோசாலைகளுக்கு முன்னுரிமை அளித்தது, தேர்தல் பிரசாரங்களில் அந்த கட்சியின் உள்ளூர் தலைவர்கள், "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் கட்டுவோம்" என்றது, ராகுல் தன் கோத்திரம் குறித்து விவரித்தது இந்த கேள்விக்கு வலுசேர்கின்றன.

தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் என்ன நினைக்கிறார்கள்?

விரிவாக படிக்க: சித்தாந்த ரீதியாக பா.ஜ.க வென்று இருக்கிறதா?

Presentational grey line தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ்

11:00 நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கும் நிலையில், அவைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, அவை உறுப்பினர்கள் தங்கள் கட்சிக்காக நேரத்தை செலவிடாமல் மக்களுக்காக அவையின் நேரத்தை செலவிடவேண்டும் என்று கருத்துத் தெரிவித்தார்.

டுவிட்டர் இவரது பதிவு @PMOIndia: I hope the productivity of the Winter Session is high. Let us strive to work hard and complete the legislative agenda pending. May national interest always prevail over party considerations  PM @narendramodiபுகைப்பட காப்புரிமை @PMOIndia @PMOIndia <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="டுவிட்டர் இவரது பதிவு @PMOIndia: I hope the productivity of the Winter Session is high. Let us strive to work hard and complete the legislative agenda pending. May national interest always prevail over party considerations PM @narendramodi" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://twitter.com/PMOIndia/status/1072365143500181504~/tamil/india-46516557" width="465" height="250"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை @PMOIndia</span> <span class="story-image-copyright" aria-hidden="true">@PMOIndia</span> </span> </figure>

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் எந்த ஒரு மாநிலத்திலும் பாஜக-வுக்கு வெற்றி முகம் காட்டாத நிலையில் பிரதமரின் கருத்து வெளியாகியுள்ளது.

மோதிபடத்தின் காப்புரிமை NurPhoto

10:50 மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங்க் சௌஹான், புத்னி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.

10:30 ராஜஸ்தான் ஜல்ராபட்டன் தொகுதியில் முதலமைச்சர் வசுந்தர ராஜே முன்னிலையில் உள்ளார்.

10:10 2003-ம் ஆண்டில் இருந்து சத்தீஸ்கர் முதல்வராக உள்ள பாஜக-வின் ரமன் சிங் தமது சொந்த தொகுதியில் பின்னடைவு.

10:05 தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 66 இடங்களில் முன்னிலை. காங்கிரஸ் 31 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

10:00 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி முகம் காட்டுவதை அடுத்து தில்லியில் உள்ள ராகுல்காந்தி வீட்டுக்கு வெளியே ராகுல்காந்தி, அவரது சகோதரி பிரியங்கா, மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகியோர் படங்களை வைத்து அவற்றின் மீது மலர் தூவி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9:50 மிசோரத்தில் எம்.என்.எஃப் 22 இடங்களிலும் காங்கிரஸ் 11 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

9:35 ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே முன்னிலையில் உள்ளது.

மோதிபடத்தின் காப்புரிமை Hindustan Times

9:15 தெலங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி உள்ளது.

9:05 மிசோரத்தில் காங்கிரசை விட மிசோ தேசிய முன்னனி முன்னிலை வகிக்கிறது.

9.00 மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் பாஜக-வை விட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8.45 முதல் முதலாக வெளியாகியுள்ள முன்னிலை நிலவரங்களின்படி ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸை விட ஒரு இடத்தில் கூடுதலாக பாஜக முன்னிலை வகிக்கிறது. தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

8:00 தபால் ஓட்டுகள் எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல்படத்தின் காப்புரிமை ECI

வாக்குப் பதிவுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் கூறியது என்ன?

முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் (Exit Poll) பெரும்பான்மையானவை ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மிக நெருக்கமான போட்டி நிலவும் என்றும் தெரிவிக்கின்றன.

தெலங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கும், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சில கணிப்புகள் கூறுகின்றன.

மிசோரம் மாநிலத்தை பொறுத்த வரையில் அங்உள்ள மொத்தம் 40 தொகுதிகளில் காங்கிரஸ் 14-18 தொகுதிகளிலும், மிசோ தேசிய முன்னணி 16-20 தொகுதிகளிலும், சோரம் மக்கள் இயக்கம் 3-7 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றும் கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

https://www.bbc.com/tamil/india-46516557

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.