Jump to content

HIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அனகா பதக் பிபிசி மராத்தி
  •  
HIVபடத்தின் காப்புரிமை Getty Images

"நான் 15 ஆண்டுகளாக தனியாக போராடி வருகிறேன். HIVக்கு எதிராக போராடி வருகிறேன். எனக்கு HIV இருக்கிறது என்ற உண்மையை மறைக்க போராடுகிறேன். இதையெல்லாம் விட, நான் என்னுடனே போராடி வருகிறேன்.

 

நான் இவ்வளவு ஆண்டுகளாக எதிலும் வெற்றிப் பெற்றதில்லை. எனக்கு HIV இருக்கிறது என்பதினால் என்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் ரஜனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

என்னுடன் தொலைப்பேசியில் பேசும்போது அவரது மகிழ்ச்சி வெளிப்பட்டது. பெரும் மூச்சிற்கு பிறகு, தன் கதையை அவர் சொல்லத் தொடங்கினார். அவரை யாரும் பாராட்டியது எல்லாம் இல்லை. அவரை முறைத்து, ஏதோ ஒரு குப்பையை போலத்தான் அவரை பார்ப்பார்கள்.

 

புனேவில் வாழ்ந்து வரும் 35 வயதான ரஜனி, தன் பணியை திரும்பப் பெற மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார். சமீபத்தில் புனே தொழிலாளர் நீதிமன்றம் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிநீக்க காலத்துக்குமான ஊதியத்தையும் அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த ரஜனி, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு 22 வயது இருந்தபோது, அவரது கணவர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம்

"2004ஆம் ஆண்டில்தான் என் கணவருக்கு HIV தொற்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் 2006ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதற்கு பிறகு என் கணவரின் பெற்றோர் என்னை வீட்டை விட்டு துறத்தி விட்டார்கள்."

தன் பெற்றோராலும் தனக்கு ஆதரவு தர இயலவில்லை என்பதை நினைவு கூர்கிறார் ரஜனி. "அவர்களின் நிதி நிலைமை சரியில்லை. என்னால் அவர்களுக்கு பாரமாக இருக்க முடியாது." என்கிறார் அவர்.

அதனால் சிறு சிறு வேலைகளை ரஜனி பார்க்க ஆரம்பித்தார். "நான் ஒரு வேலைக்காக 15 நாட்கள் புனே வந்தேன். சமூக அழுத்தத்தில் இருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தேன். இங்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கலாம் என்று நினைத்தேன். என் கிராமத்தில் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எனக்கும் HIV இருந்தது. ஆனால், எனக்கு அது அப்போது தெரியவில்லை. ஆனால், புனே வந்த பிறகு நான் நன்றாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உணர்ந்தேன். அதனால், என்னை புனேவில் தங்கி வேலை பார்க்குமாறு என் தாய் என்னிடம் சொன்னார்" என்கிறார் ரஜனி.

விரைவில் ரஜனிக்கு புனேவில் வேலையும் கிடைத்தது. அப்போது மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்த பிறகே HIV இருப்பது அவருக்கு தெரிய வந்தது. "மீண்டும் என் வாழ்க்கை மோசமடைந்தது. உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்து போனேன். எங்கு போவதென்று தெரியவில்லை. புனேவில் புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவும் சிதறிப்போனது" என்று அவர் கூறுகிறார்.

அவரது குடும்பமும் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் தனியே நின்றார்.

HIVபடத்தின் காப்புரிமை Getty Images

"எனக்கு யாருமே இல்லை என்பதை உணர்ந்தேன். நான் இறந்தால் கண்ணீர் சிந்தக்கூட யாரும் இல்லை. நான்தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என் உணவுமுறையில் கவனம் செலுத்த தொடங்கி, சிகிச்சை எடுக்க பதிவு செய்தேன்."

விரைவில் மருந்து கம்பெனி ஒன்றில் ரஜனிக்கு வேலை கிடைத்தது. நன்கு பணியாற்றியதால் வேலை நிரந்தரமாக்கப்பட்டது. 10 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். அவருக்கு HIV இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரை வேலையை விட்டு செல்ல நிறுவனம் தன்னை நிர்பந்தப்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.

என்ன நடந்தது?

தனக்கு உடம்பு முடியாமல் போனதால், சிறிது காலம் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். மீண்டும் பணிக்கு திரும்பியபோது, அங்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ளார்.

"மருத்துவமனை செலவுகளை சமர்பித்தால் அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று கேள்விப்பட்டேன். எனக்கு எப்போதும் நிதி பற்றாக்குறை இருந்ததினால், இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு HIV இருப்பது தெரிய வந்த 30 நிமிடங்களில் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்" என்று ரஜனி கூறுகிறார்.

ஆனால், ஏன் அவரை வேலையை விட்டு போக சொன்னார்கள்? "மருத்துவ கம்பெனி என்பதால், அந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களில் ஏதேனும் பரவி விடும் அபாயம் இருப்பதினால் நான் வேலையை விட்டு போக வேண்டும் என்றார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று நான் கூறினேன். நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். எனக்கு இந்த வேலை வேண்டும் என்று எவ்வளவோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்பதை அவர் நினைவு கூற்கிறார்.

HIVபடத்தின் காப்புரிமை Getty Images

மற்றவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியும், அதனை ரஜனி ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவரது சகோதரரின் உதவியுடன், ஒரு ஊழியருக்கு HIV உள்ளது என்ற காரணத்திற்காக அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டார். புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

"ஒவ்வொரு முறையும் ஏதேனும் எனக்கு ஒரு நல்லது நடக்கும்போது, எனக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், நான் இறுதிவரை போராட முயற்சித்தேன். இவை அனைத்தையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு. எனினும், நான் விட்டுக் கொடுக்கவில்லை" என்கிறார் அவர்.

'என் முகத்தை மறைத்திருக்கக் கூடாது…'

டிசமபர் 3ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "HIV இருக்கிறது என்பதற்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது" என்று அந்த தீர்ப்பு வந்ததில் இருந்து, ஊடகத்தினரிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரது தைரியம் பாராட்டப்படுகிறது. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை விட்டு துறத்திய அதே நிறுவனத்திற்கு போக நினைக்கிறாரா?

"ஆம், எனக்கு அங்கு போக வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு HIV இருக்கிறது என்பதை மறைக்க முயற்சித்து வந்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரியும். குறைந்தது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். அதனால், இனி எதையும் மறைக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. இதையெல்லாம் விட, எனக்கு இனி எதைப் பற்றியும் கவலை இல்லை. தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது என் முகத்தை மறைத்திருந்தேன். அதை திரும்பி நினைத்துப் பார்த்தால், என் முகத்தை காண்பித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று ரஜனி தெரிவத்தார்.

HIV இருக்கும் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்

ஆண்களுக்கு HIV இருந்தால் ஏற்படும் பிரச்சனையை விட, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் என்று ரஜனி நம்புகிறார்.

"நான் ஒவ்வொரு மாதமும் மருந்து வாங்க போகும்போதும், என்னை கீழ் தரமாகவே பார்ப்பார்கள். பெரும்பாலான பெண்களுக்கு கணவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். கணவர் இழந்தால் வீட்டை விட்டு துறத்தப்படுவார்கள். பெற்றோரும் ஆதரவு தர மாட்டார்கள். இவைதான் எனக்கும் நடந்தது. ஆனால், இது எனக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது."

https://www.bbc.com/tamil/india-46500531

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் அஹிம்சை முகத்தை உலகுக்குக் காட்டும் இந்தியாவின்....தொழுநோய் நோயாளிகளைக் கவனிக்க வெளி நாட்டிலிருந்து ...அன்னை திரேசா அம்மையார் வர வேண்டியிருந்தது!

இப்போது இந்தப் பெண் போன்றவர்களின் வாழ்க்கையை மேம் படுத்த இன்னுமொரு திரேசா அம்மையார் பிறந்த வர வேண்டும்!

எப்போதும் ஆத்மீகம் பேசும் இந்தியா....வெறும் பகட்டு வாழ்வில் ....மூழ்கிக் கிடக்கின்றது!

இந்தப் பெண்ணின் வைராக்கியம்...மனதில் வலியைத் தான் ஏற்படுத்துகின்றது!

இவர் போன்றவர்கள் தான்....சமூக விழிப்புணர்வை...ஏற்படுத்த வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.