Jump to content

HIV பாதிப்பால் பணிநீக்கம்: 15 ஆண்டுகால போராட்டத்துக்கு வெற்றி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அனகா பதக் பிபிசி மராத்தி
  •  
HIVபடத்தின் காப்புரிமை Getty Images

"நான் 15 ஆண்டுகளாக தனியாக போராடி வருகிறேன். HIVக்கு எதிராக போராடி வருகிறேன். எனக்கு HIV இருக்கிறது என்ற உண்மையை மறைக்க போராடுகிறேன். இதையெல்லாம் விட, நான் என்னுடனே போராடி வருகிறேன்.

 

நான் இவ்வளவு ஆண்டுகளாக எதிலும் வெற்றிப் பெற்றதில்லை. எனக்கு HIV இருக்கிறது என்பதினால் என்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் நான் வெற்றி பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்கிறார் ரஜனி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

என்னுடன் தொலைப்பேசியில் பேசும்போது அவரது மகிழ்ச்சி வெளிப்பட்டது. பெரும் மூச்சிற்கு பிறகு, தன் கதையை அவர் சொல்லத் தொடங்கினார். அவரை யாரும் பாராட்டியது எல்லாம் இல்லை. அவரை முறைத்து, ஏதோ ஒரு குப்பையை போலத்தான் அவரை பார்ப்பார்கள்.

 

புனேவில் வாழ்ந்து வரும் 35 வயதான ரஜனி, தன் பணியை திரும்பப் பெற மூன்று ஆண்டுகளாக போராடி வந்தார். சமீபத்தில் புனே தொழிலாளர் நீதிமன்றம் இவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்து, அவரை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது. அவரது பணிநீக்க காலத்துக்குமான ஊதியத்தையும் அந்நிறுவனம் வழங்க வேண்டும்.

மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் பிறந்த ரஜனி, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு 22 வயது இருந்தபோது, அவரது கணவர் எய்ட்ஸ் நோயால் உயிரிழந்தார்.

கோப்புப்படம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption கோப்புப்படம்

"2004ஆம் ஆண்டில்தான் என் கணவருக்கு HIV தொற்று இருப்பது எனக்கு தெரிய வந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவர் 2006ஆம் ஆண்டு உயிரிழந்தார். அதற்கு பிறகு என் கணவரின் பெற்றோர் என்னை வீட்டை விட்டு துறத்தி விட்டார்கள்."

தன் பெற்றோராலும் தனக்கு ஆதரவு தர இயலவில்லை என்பதை நினைவு கூர்கிறார் ரஜனி. "அவர்களின் நிதி நிலைமை சரியில்லை. என்னால் அவர்களுக்கு பாரமாக இருக்க முடியாது." என்கிறார் அவர்.

அதனால் சிறு சிறு வேலைகளை ரஜனி பார்க்க ஆரம்பித்தார். "நான் ஒரு வேலைக்காக 15 நாட்கள் புனே வந்தேன். சமூக அழுத்தத்தில் இருந்து விடுபட்ட மாதிரி உணர்ந்தேன். இங்கு ஒரு புது வாழ்க்கை தொடங்கலாம் என்று நினைத்தேன். என் கிராமத்தில் எனக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். எனக்கும் HIV இருந்தது. ஆனால், எனக்கு அது அப்போது தெரியவில்லை. ஆனால், புனே வந்த பிறகு நான் நன்றாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உணர்ந்தேன். அதனால், என்னை புனேவில் தங்கி வேலை பார்க்குமாறு என் தாய் என்னிடம் சொன்னார்" என்கிறார் ரஜனி.

விரைவில் ரஜனிக்கு புனேவில் வேலையும் கிடைத்தது. அப்போது மருத்துவமனையில் சோதனை செய்து பார்த்த பிறகே HIV இருப்பது அவருக்கு தெரிய வந்தது. "மீண்டும் என் வாழ்க்கை மோசமடைந்தது. உணர்வு ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உடைந்து போனேன். எங்கு போவதென்று தெரியவில்லை. புனேவில் புதிய வாழ்க்கை தொடங்கலாம் என்ற கனவும் சிதறிப்போனது" என்று அவர் கூறுகிறார்.

அவரது குடும்பமும் அவருடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் தனியே நின்றார்.

HIVபடத்தின் காப்புரிமை Getty Images

"எனக்கு யாருமே இல்லை என்பதை உணர்ந்தேன். நான் இறந்தால் கண்ணீர் சிந்தக்கூட யாரும் இல்லை. நான்தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். எனவே என் உணவுமுறையில் கவனம் செலுத்த தொடங்கி, சிகிச்சை எடுக்க பதிவு செய்தேன்."

விரைவில் மருந்து கம்பெனி ஒன்றில் ரஜனிக்கு வேலை கிடைத்தது. நன்கு பணியாற்றியதால் வேலை நிரந்தரமாக்கப்பட்டது. 10 ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தார். அவருக்கு HIV இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவரை வேலையை விட்டு செல்ல நிறுவனம் தன்னை நிர்பந்தப்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார்.

என்ன நடந்தது?

தனக்கு உடம்பு முடியாமல் போனதால், சிறிது காலம் மருத்துவமனையில் தாம் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறுகிறார். மீண்டும் பணிக்கு திரும்பியபோது, அங்கு மருத்துவ காப்பீட்டுக்காக பதிவு செய்துள்ளார்.

"மருத்துவமனை செலவுகளை சமர்பித்தால் அதனை நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும் என்று கேள்விப்பட்டேன். எனக்கு எப்போதும் நிதி பற்றாக்குறை இருந்ததினால், இது எனக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு HIV இருப்பது தெரிய வந்த 30 நிமிடங்களில் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டார்கள்" என்று ரஜனி கூறுகிறார்.

ஆனால், ஏன் அவரை வேலையை விட்டு போக சொன்னார்கள்? "மருத்துவ கம்பெனி என்பதால், அந்நிறுவனம் தயாரிக்கும் மருந்துப் பொருட்களில் ஏதேனும் பரவி விடும் அபாயம் இருப்பதினால் நான் வேலையை விட்டு போக வேண்டும் என்றார்கள். அப்படி ஏதும் நடக்காது என்று நான் கூறினேன். நான் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன் என்று நான் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. என்னை பணிநீக்கம் செய்ய வேண்டாம் என்று நான் மீண்டும் மீண்டும் கெஞ்சினேன். எனக்கு இந்த வேலை வேண்டும் என்று எவ்வளவோ முறை கூறினேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை" என்பதை அவர் நினைவு கூற்கிறார்.

HIVபடத்தின் காப்புரிமை Getty Images

மற்றவர்கள் அவருக்கு பண உதவி வழங்கியும், அதனை ரஜனி ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அவரது சகோதரரின் உதவியுடன், ஒரு ஊழியருக்கு HIV உள்ளது என்ற காரணத்திற்காக அவரை நிறுவனம் பணிநீக்கம் செய்ய முடியாது என்பதை தெரிந்து கொண்டார். புனே தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

"ஒவ்வொரு முறையும் ஏதேனும் எனக்கு ஒரு நல்லது நடக்கும்போது, எனக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், நான் இறுதிவரை போராட முயற்சித்தேன். இவை அனைத்தையும் விட்டு ஓடிவிட வேண்டும் என்று பலமுறை நினைத்தது உண்டு. எனினும், நான் விட்டுக் கொடுக்கவில்லை" என்கிறார் அவர்.

'என் முகத்தை மறைத்திருக்கக் கூடாது…'

டிசமபர் 3ஆம் தேதி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "HIV இருக்கிறது என்பதற்காக ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது" என்று அந்த தீர்ப்பு வந்ததில் இருந்து, ஊடகத்தினரிடம் இருந்து அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவரது தைரியம் பாராட்டப்படுகிறது. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்பு வேலை விட்டு துறத்திய அதே நிறுவனத்திற்கு போக நினைக்கிறாரா?

"ஆம், எனக்கு அங்கு போக வேண்டும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு HIV இருக்கிறது என்பதை மறைக்க முயற்சித்து வந்தேன். ஆனால், இப்போது அனைவருக்கும் தெரியும். குறைந்தது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்தவர்களுக்கு தெரியும். அதனால், இனி எதையும் மறைக்க வேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை. இதையெல்லாம் விட, எனக்கு இனி எதைப் பற்றியும் கவலை இல்லை. தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும்போது என் முகத்தை மறைத்திருந்தேன். அதை திரும்பி நினைத்துப் பார்த்தால், என் முகத்தை காண்பித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது" என்று ரஜனி தெரிவத்தார்.

HIV இருக்கும் பெண்களுக்கு பாதிப்பு அதிகம்

ஆண்களுக்கு HIV இருந்தால் ஏற்படும் பிரச்சனையை விட, பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதிகம் என்று ரஜனி நம்புகிறார்.

"நான் ஒவ்வொரு மாதமும் மருந்து வாங்க போகும்போதும், என்னை கீழ் தரமாகவே பார்ப்பார்கள். பெரும்பாலான பெண்களுக்கு கணவர்களிடம் இருந்து வைரஸ் பரவும். கணவர் இழந்தால் வீட்டை விட்டு துறத்தப்படுவார்கள். பெற்றோரும் ஆதரவு தர மாட்டார்கள். இவைதான் எனக்கும் நடந்தது. ஆனால், இது எனக்கு ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது."

https://www.bbc.com/tamil/india-46500531

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் அஹிம்சை முகத்தை உலகுக்குக் காட்டும் இந்தியாவின்....தொழுநோய் நோயாளிகளைக் கவனிக்க வெளி நாட்டிலிருந்து ...அன்னை திரேசா அம்மையார் வர வேண்டியிருந்தது!

இப்போது இந்தப் பெண் போன்றவர்களின் வாழ்க்கையை மேம் படுத்த இன்னுமொரு திரேசா அம்மையார் பிறந்த வர வேண்டும்!

எப்போதும் ஆத்மீகம் பேசும் இந்தியா....வெறும் பகட்டு வாழ்வில் ....மூழ்கிக் கிடக்கின்றது!

இந்தப் பெண்ணின் வைராக்கியம்...மனதில் வலியைத் தான் ஏற்படுத்துகின்றது!

இவர் போன்றவர்கள் தான்....சமூக விழிப்புணர்வை...ஏற்படுத்த வேண்டும்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.