Jump to content

விடியா விடியலாய்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தூரத்து கானல்போல தெரிகிறது ஒரு முகம்
நெருங்க நெருங்க கானலும் காணாமல்ப் போக வெறுமைகள் தொடர்கிறது
சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக
மனம் வெதும்பித் தணிகிறது

சொன்னவையும் கேட்டவையும் ஆழ்கடல் தூரத்தில் எதிரொலிக்க
நியாயங்கள் கேட்டுக் கொல்வதோடு மட்டுமே இப்போது நாட்கள் கடக்கிறது
பதிலில்லாக் கேள்விகள் கேட்பதால் வெறுமையே பதிலாக - ஒரு மனதில்
கோபம் கொப்பளிக்கிறது

விதி பிய்த்தெறிந்து புதிதாக எழுது கதையொன்று
உலகத் தவறெலாம் சுரண்டியெடு -  அதைத்
 தலைமேல் கொட்டிக்கொண்டு ஆர்ப்பரி
கூடவே இரு தளிர் கொண்டு போ - உன்
துயர் சேர்த்துகரைத்து ஊற்று
அது அவற்றின் விதியென்று பறை !
விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !

Link to comment
Share on other sites

5 hours ago, ragunathan said:

சிறுகச் சிறுக சேர்த்துவந்த துளிரெல்லாம் கருகிச் சருகாக
மனம் வெதும்பித் தணிகிறது

------ ----- ---- ---- -----
கூடவே இரு தளிர் கொண்டு போ - உன்
துயர் சேர்த்துகரைத்து ஊற்று
அது அவற்றின் விதியென்று பறை !
விடியா விடியலாய் உதிக்கும் ஒரு உலகு - உனக்கு !

 

அருமை! 🌱 துளிர்விடும் நேர்மறை எண்ணங்களை பெரு விருட்சமாய் வளர்க்கத் தூண்டும் வரிகள்.  🌴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு கவிதை ரகுநாதன்.தொடர்ந்தும் எழுதுங்கள்.......!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.