Jump to content

மகளின் திருமணத்துக்கு, 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமான நà¯à®°à®¿à®à®²à¯ à®à®·à®¾ à®à®®à¯à®ªà®¾à®©à®¿ à®à®²à¯à®¯à®¾à®£à®®à¯

இஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வளவு தெரியுமா...?

உலகின் மிக அழகான நகரங்களுள் உதய்பூருக்கு என்றுமே தனி இடம் உண்டு. இங்கு இருக்கும் அரண்மனைகள் ambani, adani போன்ற பணக்காரர்களின் திருமணம், காது குத்து, வரவேற்பு, கம்பெனி விழாக்கள் என அடுத்தடுத்து கொண்டாடியே இன்னும் அந்த அரண்மனைக்கான பிரபல்யத்தை மெருகேற்றிவிட்டார்கள். இன்று முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி - ஆனந்த பிரமலின் வரவேற்பு நிகழ்ச்சி அதே உதய்பூர் அரண்மனையில் தான் நடக்கிறது.

ஹà¯à®à¯à®à®²à¯à®à®³à¯

இதனால், சாதாரண ஹோட்டல்கள் கூட அரண்மனை வடிவில் அத்தனை கலை அழகுடன் கட்டி இருக்கிறார்கள். கட்டியும் வருகிறார்கள். இந்தியாவின் முக்கியமான ராஜபுத்திர வம்சத்தினர் இந்த மேவார் பகுதிகளில் தான் வாழ்ந்து வந்தார்கள். பத்மாவதி படத்தில் வரும் ஷாகித் கபூருமிந்த மேவார் ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர் தான். மொகலாயர்கள் அதிக பாடுபட்டு பிடித்த கோட்டையும் இந்த மேவார் கோட்டையைத் தான் என வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.

அத்தனை பிரசித்தி பெற்ற பகுதியை ஆண்ட மகராணா உதய்சிங் கி.பி. 1559-ம் ஆண்டு இந்த நகரை உருவாக்கினார். ராஜஸ்தானில் குஜராத் எல்லையையொட்டி அமைந்துள்ள உதய்பூரை தார் பாலைவனத்தில் இருந்து ஆரவல்லி மலைக்குன்றுகள் பிரிக்கிறது. இங்கு பேசப்படும் மொழியை மேவாரி மொழி என்று அழைக்கிறார்கள்.

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும், பிரமல் குழுமத்தின் வாரிசான ஆனந்த் பிரமலுக்கும் வரும் 12-ம் தேதி மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்துக்கு முன்னதாக டிசம்பர் 8 மற்றும் 9-ம் தேதிகளில் உதய்பூரில் இரண்டு நாட்கள் சில சடங்குகள் நடைபெறுகின்றன. இதற்காக, உதய்பூரில் பிரமாண்ட செயற்கை மேடைகள் அமைக்கப்பட்டு கண் கவரும் அலங்காரத்துடன் மின்னுகின்றன.

இஷாவின் திருமணத்துக்காக அடிக்கப்பட்ட அழைப்பித மன்னிக்கவும் பெட்டியின் விலையே ரூ.3 லட்சம். இவ்வளவு விலை மதிப்பில் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களைத் தான் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி மற்றும் குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன், திருப்பதி வெங்கடாசலபதியின் பாதங்களைல் வைத்துச் சிறப்பு பூஜை நடத்தினார் முகேஷ் அம்பானி. என்ன இருந்தாலும் தகப்பன் இல்லையா...? என்ன தான் பெரிய பணக்காரராக இருந்தாலும், மகளின் வாழ்கையில் பயம் கலந்த பக்தி இருக்கத் தானே செய்யும்

திருமணத்துக்குப் பிறகு மும்பையின் ஒர்லி பகுதியில், கடலைப் பார்த்த படிக்கு கட்டப்பட்டு வரும் ஒரு பெரிய சொகுசு வீட்டில் வாழ இருக்கிறார். அந்த வீட்டை கட்டுவதற்கான செலவுகள் மட்டும் ரூ.450 கோடியாம். இந்த சொகுசு பங்களாவில் இஷா கணவருடன் வசிக்கப் போகின்றார். வீட்டுக்கு வரும் மருமகளுக்காக ஆனந்த் பிரமாலின் தந்தை அஜய் பிரமால் வீட்டைப் பார்த்து பார்த்துக் கட்டியுள்ளார்.

இந்த சொகுசு வீட்டை முதலில் ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் பயிற்சிப் பட்டறை இருந்தது. 2012-ல் இந்த குலிதா (Gulita) கட்டிடம் ஏலத்துக்கு வந்த போது அதை வென்றவர் அஜய் பிரமல் தான்.

இந்த குலிதா வீடு சுமார் 50,000 சதுர அடி பரப்பு கொண்ட ஐந்து அடுக்கு மாளிகை. நீச்சல் குளம், ஜிம், மல்டி பர்பஸ் ஹால், லைப்ரரி என மினி உலகத்தையே உள்ளே வைத்திருக்கிறார்களாம். இதை கடந்த 2015-ல் இருந்து பார்த்து பார்த்து செதுக்கி வருகிறாராம் மாப்பிள்ளையின் அப்பா அஜய் பிரமல். உலகின் இரண்டாவது பிரமாண்ட வீடான அம்பானியின் அண்டிலா வீட்டில் வாழ்ந்த பெண் நம் வீட்டுக்கு வந்து வசதி குறைபாடோடு இருக்கக் கூடாது என அத்தனை கவனத்துடன் செய்கிறாராம்.

ராஜஸ்தானில் இன்று ஓட்டுப்பதிவு முடிவடைந்து விடுகிறது. இதைத் தொடர்ந்து மும்பையில் இருந்து அம்பானி மற்றும் பிரமல் குடும்பத்தினர் தனி விமானங்களில் உதய்பூர் செல்கின்றனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் உதய்பூர் செல்ல 80 முதல் 100 தனியார் விமானங்கள் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்திருக்கிறாராம் அம்பானி.

பொதுவாக உதய்பூர் விமான நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இருக்காது. ஒரு நாளைக்கு 19 லேண்டிங் மற்றும் 19 டேக் ஆஃப்தானாம். இப்போது அம்பானி குடும்பத்தினர் வருகையால், அடுத்த 5 நாள்களுக்குத் தனியார் விமானங்கள் 200 முறை டேக் ஆஃப் மற்றும் 200 லேண்டிங் செய்யும் வகையில் ஷெட்யூல்கள் தயாரிக்கச் சொல்லி இருக்கிறாராம். அம்பானி.

தன் செல்ல மகளின் திருமணத்துக்கு உலகின் பல நாடுகளில் இருந்து வரும் 1000 சிறப்பு விருந்தினர்கள் வர இருக்கிறார்கள். இதனால், உதய்பூரில் உள்ள அனைத்து நட்சத்திர ஹோட்டல்களையும் அம்பானி ஒற்றை செக்கில் வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். விருந்தினர்களை நிறைவாக கவனிக்க தனிக்குழு நியமித்து கவனிக்கச் சொல்லி அன்புக் கட்டளை இட்டிருக்கிறார்.

விமான நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு வருவது, ஹோட்டலில் இருந்து இஷாவின் வைபவ நிகழ்சிகளுக்கு வருவது போன்ற சாலை போக்குவரத்து சேவைகளுக்கு மட்டும் சுமார் 1000 கார்களை வாடகைக்கு எடுத்திருக்கிறாராம். அதற்கும் ஒரு செக் தானாம்.

அப்படி வாடகைக்கு எடுத்த கார்கள் எல்லாமே காஸ்ட்லியான ஆடி, பெண்ட்லி, பி.எம்.டபிள்யூ, ஜாகுவர் ரக சொகுசு கார்கள் தானாம். வரும் விருந்தினர்களுக்கு ஒரு நொடி கூட தங்களை கவனிக்கவில்லை என நினைக்க கூடாது என இத்தனை செலவுகளாம். கார் வாடகைக்கு மட்டும் ச்ய்னார் 250 கோடி வரை செலவு செய்திருப்பதாக மும்பை வட்டாரங்களில் கிசுகிசுக்கிறார்கள்.

அமெரிக்க அதிபருக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜான் கெர்ரி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் அம்பானி வீட்டு திருமணத்தில் கை நனைக்க இருக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் நடனம் என உதய்பூர் வேற லெவலில் களை கட்டப் போகிறது.

உதய்பூரில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்வுகள் முடிந்த பிறகு மும்பையில் வரும் 12-ம் தேதி அம்பானியின் பிரமாண்ட அண்டிலா வீட்டிலேயே இஷா, ஆனந்த் பிரமல் திருமண நிகழ்வு நடைபெற இருக்கிறதாம். திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். அதற்குத் தான் இந்த பிரமாண்ட ரிசப்ஷன் நிகழ்சிகளாம்.

Read more at: https://tamil.goodreturns.in/news/2018/12/08/on-her-daughters-function-ambani-booked-1000-audi-jaguar-benz-cars/articlecontent-pf67773-013182.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பணம் 10 ம் செய்யும்  பணக்காரன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோவிலில் சிம்பிளா ஒரு 50 பேரை வைச்சு கல்யாணத்தைச் செய்திட்டு.. இந்தப் பெருந்தொகை செலவுத் தொகையை.. இந்தியாவில்.. குப்பங்களில் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான இருப்பிடம் கட்டிக் கொடுக்க தந்திருந்தால்... அது நாட்டுப் பற்றாகவும்.. நல்ல திருமண அன்பளிப்பாகவும் இருந்திருக்கும்.

அம்பானிக்கு கூட அதுக்கு மனசு வரேல்ல. ஆனால்.. பில்கேட்ஸ் போன்றவர்கள்.. இந்தியாவில் வறுமை ஒழிக்க சிறுக என்றாவது பங்களிப்பது உண்மையில்.. பாராட்டத்தக்கது. 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, nedukkalapoovan said:

ஒரு கோவிலில் சிம்பிளா ஒரு 50 பேரை வைச்சு கல்யாணத்தைச் செய்திட்டு.. இந்தப் பெருந்தொகை செலவுத் தொகையை.. இந்தியாவில்.. குப்பங்களில் வாழும் மக்களுக்கு ஒரு உருப்படியான இருப்பிடம் கட்டிக் கொடுக்க தந்திருந்தால்... அது நாட்டுப் பற்றாகவும்.. நல்ல திருமண அன்பளிப்பாகவும் இருந்திருக்கும்.

அம்பானிக்கு கூட அதுக்கு மனசு வரேல்ல. ஆனால்.. பில்கேட்ஸ் போன்றவர்கள்.. இந்தியாவில் வறுமை ஒழிக்க சிறுக என்றாவது பங்களிப்பது உண்மையில்.. பாராட்டத்தக்கது. 🙄

இந்தியாவில் கக்கூஸ் கட்டிக் கொடுக்கும் பில் கேட்ஸ் எங்கே... இந்த பீலா பணக்காரர்கள் எங்கே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியான புளிச்சல் ஏவறை பந்தாக்களை பாக்க .....எங்கடை சனத்தின்ரை கெலிகொப்பர் சாமத்திய விட்டு கொண்டாட்டங்களும் அலையலையாய் வந்து போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவரது ஆடம்பரச் செலவுகளையும் விமர்சிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

தமிழர்கள் புலத்தில் செய்யாத வேலைகளா? 

அம்பானியின் நாட்டுக்கொரு அரசாங்கம் இருக்கிறது. சாதாரண நாளாந்த வாழ்க்கைச் சுமைகளைத்தவிர இந்தியர்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லை. அப்படியிருந்தால்க் கூட இந்திய அரசு அடிப்பதை அடித்து, மீதியில் ஏதோ சில உதவிகளையாவது செய்யும்.

ஆனால், தாயகத் தமிழருக்கு? யுத்தம் சப்பித்துப்பிய வாழ்வு, இழக்கப்பட்ட உறவுகள், உதவுவோர் இல்லாத வறுமை, தாயக விடுதலைக்குப் போராடியதற்கு அரசாலும் அதே தமிழர்களாலும் ஒதுக்கப்பட்டு வாழும் அவமானம். ஆனால் இவை எதுவுமே புலத்திலுள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. கலியாணவீடு, சாமத்தியவீடு, 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள் என்று அட்டகாசமாகத்தான் செய்கிறோம். ஹிலரியையும், பியோன்ஸேயையும் கூப்பிடுகிறோமோ இல்லையோ, எமது சக்திக்குற்பட்ட குப்புசாமியையோ அல்லது கந்தசாமியையோ கூப்பிடுகிறோம். பணத்தை கடனட்டை திருடியாவது செலவு செய்கிறோம். இதெல்லாம் செய்யும்போது அட, எமது சொந்தங்களுக்கு அனுப்பியிருக்கலாமே என்று யாருமே சிந்திப்பதில்லை.

அப்படியிருக்க, அம்பானியை ஏன் நோவான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ragunathan said:

எவரது ஆடம்பரச் செலவுகளையும் விமர்சிக்கவேண்டிய தேவை எமக்கில்லை.

தமிழர்கள் புலத்தில் செய்யாத வேலைகளா? 

அம்பானியின் நாட்டுக்கொரு அரசாங்கம் இருக்கிறது. சாதாரண நாளாந்த வாழ்க்கைச் சுமைகளைத்தவிர இந்தியர்களுக்கு வேறு பிரச்சனைகள் இல்லை. அப்படியிருந்தால்க் கூட இந்திய அரசு அடிப்பதை அடித்து, மீதியில் ஏதோ சில உதவிகளையாவது செய்யும்.

ஆனால், தாயகத் தமிழருக்கு? யுத்தம் சப்பித்துப்பிய வாழ்வு, இழக்கப்பட்ட உறவுகள், உதவுவோர் இல்லாத வறுமை, தாயக விடுதலைக்குப் போராடியதற்கு அரசாலும் அதே தமிழர்களாலும் ஒதுக்கப்பட்டு வாழும் அவமானம். ஆனால் இவை எதுவுமே புலத்திலுள்ளவர்களுக்குத் தெரிவதில்லை. கலியாணவீடு, சாமத்தியவீடு, 50 ஆவது பிறந்தநாள், 60 ஆவது பிறந்தநாள் என்று அட்டகாசமாகத்தான் செய்கிறோம். ஹிலரியையும், பியோன்ஸேயையும் கூப்பிடுகிறோமோ இல்லையோ, எமது சக்திக்குற்பட்ட குப்புசாமியையோ அல்லது கந்தசாமியையோ கூப்பிடுகிறோம். பணத்தை கடனட்டை திருடியாவது செலவு செய்கிறோம். இதெல்லாம் செய்யும்போது அட, எமது சொந்தங்களுக்கு அனுப்பியிருக்கலாமே என்று யாருமே சிந்திப்பதில்லை.

அப்படியிருக்க, அம்பானியை ஏன் நோவான்?

👏👏👏

2009 மே வரை இருந்தவர்கள் கூட.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, MEERA said:

 

2009 மே வரை இருந்தவர்கள் கூட.

ம்ம்  அண்மையில் ஓர் வீடியோ பார்த்தன் பாகுபலி ரேஞ்சில் இருந்தது , இன்னொன்று பணத்தை பிறந்த நாளில் வாரி இறைத்துள்ளார்கள் அத்தனையும் நோட்டுக்கள் அவர்கள் அனைவரும் எம்ம தமிழர்களே :35_thinking: 

Link to comment
Share on other sites

On ‎12‎/‎10‎/‎2018 at 8:55 AM, தனிக்காட்டு ராஜா said:

பணம் 10 ம் செய்யும்  பணக்காரன் 

நில உச்சவரம்பை நிறைவேற்றிய இந்தியா. பண உச்சவரம்பையும் நிறைவேற்றி இருந்தால் இத்தகைய அளவுக்குமிஞ்சிய ஆடம்பரங்களை மட்டுப்படுத்தி இருக்கலாம். மறுபுறம்... இந்தப் பணக்காரக் கூட்டத்தில் எவருமே குனிந்து வளையமாட்டார்கள் என்பது வெளிப்படை. அதனால் அன்றாடம் காச்சிகளான ஏழை மக்கள் பலருக்கு, கொஞ்சநாளாவது வயிறுநிறைய கஞ்சி குடிக்க வழிஏற்பட்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/17/2018 at 2:03 AM, Maruthankerny said:

 

கலியாணவீட்டு கொண்டாட்டங்களை பாத்தால்.......
மகளை விட தாய்க்காரியின்ரை அட்டகாசம் அமோகமாய் இருக்கெல்லே!
சரி விடுவம்.......
எப்பவும் மோளை விட மாமிமார் அதிரடியாய் கவர்ச்சி காட்டுறது  வழமைதானே...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

எப்பவும் மோளை விட மாமிமார் அதிரடியாய் கவர்ச்சி காட்டுறது  வழமைதானே...:grin:

நோட் பண்ண வேண்டியதுதான் இனி மேல் ஆனாலும் மாமி குலாப் ஜாமுன் மாதிரி தான் இருக்குறா

India-Gulab-Jamun.jpg

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்டால் இவை போட்டு இருக்கின்ற நகையையும்,😫உடுப்பையும் பார்க்க சவுத் தோல் புரோட்வேயில் வாங்கின மாதிரி இருக்கு😄....அமிதாப்பில் இருந்து ஷாருக்கான் வரைக்கும் கல்யாண வீட்டில் சாப்பாடு பரிமாறினவையாம்💀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நோட் பண்ண வேண்டியதுதான் இனி மேல் ஆனாலும் மாமி குலாப் ஜாமுன் மாதிரி தான் இருக்குறா

India-Gulab-Jamun.jpg

 

தம்பி! கண்டது கிண்டது எல்லாத்தையும் நோட் பண்ணி..... கடைசியிலை நாறாமல் இருக்க வேணும் ராசா. எல்லா சூட்சுமங்களும் எல்லாருக்கும் சரிவாறேல்லை தெரியுமோ? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தம்பி! கண்டது கிண்டது எல்லாத்தையும் நோட் பண்ணி..... கடைசியிலை நாறாமல் இருக்க வேணும் ராசா. எல்லா சூட்சுமங்களும் எல்லாருக்கும் சரிவாறேல்லை தெரியுமோ? :grin:

ஏதேனும் அனுபவம் ஒன்றைப்பகிர்வது :104_point_left::27_sunglasses:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.