Jump to content

கொரியாவும் தமிழ் இளவரசியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொறியா என்னும் நாடு இருபிரிவுகளாகப் பிரிந்திருக்க வட கொறியா சமீப காலமாக உலக நாடுகளுக்கு ஓரச்சுறுத்தலாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள்.  அவர்களது மொழியில் பல தமிழ்ச்சொற்கள் காணப்படுகின்றன. லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவி, தமிழ் அறிஞர்கள் பலராலேயே கொறிய மொழி வளம்படுத்தப்பட்டுள்ளதாக அங்கு கற்கும் கொறிய மாணவர் ஒருவர் கூறியதாகக் கூறினார்.

எத்தனையாம் நூற்றாண்டில் என்று தெரியவில்லை. கொறிய மன்னன் ஒருவருடன் தமிழ் நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் நட்புப் பூண்டிருந்தான் என்றும், அவன் கனவில் அவர்களின் தெய்வம் வந்து "தமிழ் இளவரசி ஒருதத்தியை மணமுடித்து வைத்தால் உன் நாடு செழிப்புறும்" என்று கூறியதாகவும், அதை நம்பிய கொரிய மன்னன்  தன்னுடன் நட்புப்  பூண்டிருந்த கன்னியாகுமரி இளவரசியை தன்மகனுக்கு மணமுடித்துக் கொடுத்ததாகவும், திருமணத்தின் பின்னர் கொறிய மன்னன் தன் மனைவிக்கு கொடுத்த முழு சுதந்திரம் காரணமாக அவள் அந்நாட்டில் பல திருத்தங்களையும் நாட்டின் மேம்பாட்டுக்குப் பல புதிய உத்திகளையும் கையாண்டு நாட்டை வளம்படுத்தினாள்  என்றும், அவளின் சிறப்புக்கண்டு கொறிய மக்கள் அவளைப்  போற்றி அவளுக்கு மரியாதை செலுத்தினர் என்றும், தமது பெயர்களின் பின்னால் அந்த அரசியின் பெயரையும் சேர்த்துக்கொண்டனர் என்றும் இன்று கொரியாவில் இருக்கும் சனத்தொகையில் மூன்றில் ஒன்று அவளின் பரம்பரைதான் என்றும் கொறிய மக்களே கூறுகின்றனர்.

ஆனால் அந்தப் பெண்ணின் தமிழ்ப் பெயர் என்ன? அவளின் தந்தையின் பெயர் என்ன என்பது பற்றி அவர்களுக்குத் தெரியாதுள்ளது.எனக்கும் அது பற்றி எதுவும் தெரியாது. யாராவது இந்த வரலாறு பற்றிக் கேள்விப்பட்டுள்ளீர்களா???  
தெரிந்தால் வந்து எழுதுங்கள். தமிழின் பெருமை எங்கெல்லாம் பரவியிருந்தது என்று நாமும் அறிந்துகொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

Link to comment
Share on other sites

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட ஒருவருக்கு கூட இந்த விடயம் தெரியவில்லையே. ஆதித்த இளம்பிறையன் வாருங்கள். ஏதும் தெரிந்தால் கூறுங்கள்.

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

Link to comment
Share on other sites

8 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மோகனா said:

 

மிக்க நன்றி மோகனா.உங்கள் வீடியோவை முழுதும் பார்த்துவிட்டு ஆறுதலாகக் கருத்து எழுதுகிறேன்.

14 hours ago, குமாரசாமி said:

இன்றைய தமிழினத்துக்கு பழைய வரலாறுகள் எதுவுமே பிரயோசனமில்லை.....  வரலாறு எண்டு சொல்லி சும்மா எங்கடை சட்டி பானை அங்கையும் இருந்தது....சோழர் புடுங்கினார்  வெட்டினார் எண்டு நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியது தான்.

சிங்களம்  எங்கடை அடிப்படலையுக்கை நிண்டு கத்தி தீட்டிக்கொண்டிருக்கு......

தமிழ்நாட்டிலையும் கிந்தியன்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லையாம்.

 

வரலாறு இல்லையென்றால் எவருக்கும் ஓர் தனித்த்துவம் இல்லை குசா. ஆனால் தமிழர்களுக்கு தான் தான் முன்னேறினால் சரி. ஒரு குழுவாக எம்மையும் எம் மொழியையும் மேம்படுத்தவேண்டும் என்றோ அதைக் காக்க வேண்டும் என்ற நோக்கமோ இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

நன்று சுமேரியர்.

நான் இது பற்றி முதன்முதலில் கடல்சார் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்களின் காணொளியில் கண்டேன். இவர் தமிழர்களின் கடலோடும் மாண்பு பற்றிக் குறிப்பிடும்போது பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட ஆய் நாட்டைச் சேர்ந்த இளவரசி கடல் கடந்து கொரியா சென்று அங்கு இருந்த இளவரசனை மணந்ததாக குறிப்பிட்டார்.

 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் முப்பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான ‘சாம்குக் யுசா’ எனும் கொரிய வரலாற்று தொன்மத்தின்படிஇ கி. பி. 48ஆம் காலகட்டம். இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியின் கனவில் ஒரு கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அப்படியே. பெற்றோரும் காதலுக்குச் சம்மதிக்க இளவரசி மரக்கலத்தில் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரியாவையும் கூடவே இளவரசன் சுரோவையும் அடைந்தாள். தன்னுடன் தங்கம்,  வெள்ளி,  செம்பவளம்,  மணிக்கற்கள் மூலம் செய்த ஆபரணங்கள், அரிசி, சரிகைப்பூ வேலைப்பாடு செய்த பட்டுத் துணி, மேசை விரிப்புகள், 12 நரம்புகள் கொண்ட இசைக் கருவி போன்ற பரிசுப் பொருட்களும்,  ‘மீன் சின்னம்’ மரக்கன்று மற்றும் சூலத்தையும் மரக்கலத்தில் கொண்டு சென்றதாக சாம்குக் யுசா குறிப்பிடுகிறது. சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறான். அவர்களுக்கு 12 வாரிசுகள். காரக் வம்சத்தை சேர்ந்த சுமார் அறுபது லட்சம் மக்கள் தற்போது தென்கொரியாவில் வசிக்கின்றனர்.

ஆனால் அவ்விளவரசி "மகாராணி ஹு ஹவாங் ஓக்" இந்தியாவில் உள்ள அயோத்தி நகரில் இருந்து சென்றதாக  அயோத்தியில் ஓர் நினைவிடம் கட்டப்பட இருக்கிறது.

அன்றாட பேச்சு மொழிகளில் கிட்டத்தட்ட 4000 வார்த்தைகள் தமிழ் வார்த்தைகளை ஒத்து இருப்பதாக தமிழ் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அவற்றுள் சில 
அம்மா... 
அப்பா...
அச்சச்சோ...
அப்பாடா...
புது... (புதியது)
நீ இங்கே பா...(நீ இங்கே வா)
புல் வேடா (புல் வெட்டு)
உரம் (உயரம்)
நாள் 
புல்
சோறு  
அம்மோ -வியப்பை சொல்வது .அம்மா 

மிக்க நன்றி ஆதித்தியன் இத்தனை தரவுகளை எமக்குத் தந்தமைக்கு.

தொல்லியல் துறை சார்ந்த ஆய்வும் அதன் நுட்பங்களும் எத்தனை அவசியமானது என்பது பற்றிய தெளிவு தமிழ் அறிஞர்கள் பலருக்கும் இல்லை. இருந்த ஒரு சிலரும் இறந்துவிட்டனர். இந்தியத் தமிழ் அறிஞர்கள் ஒன்று சேர்ந்தால் எத்தனை விதமாக எம் மொழிபற்றிய விடயங்களை முதன்மைப்படுத்தலாம். யாருக்கும் அதுபற்றியஅக்கறை இல்லை. எங்கள் தலைமுறையே பெரிதாக எடுக்காதபோது அடுத்த தலைமுறைக்கு இவற்றையெல்லாம் எண்ணிப்பார்க்க நேரம் இருக்குமா ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான ஒரு வரலாற்று விடயத்தை கையிலெடுத்திருக்கிறீர்கள் ......பாராட்டுக்கள் சகோதரி......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

செவ்விந்தியர் வாழ்ந்த மண்ணில் அவர்களை  அழித்து விட்டு........அதில் குடியேறிய சமுதாயம் இது எமது நாடு மார்தட்டிக்கொண்டிருக்கும் நிலையில்.....மாண்பும் பண்பும் எவ்வளவு தூரம் செல்லும்?

அது வரைக்கும் தமிழினம் தாக்கு பிடிக்குமா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

வரலாறு நமது சிறந்த வழிகாட்டி.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்பட ஓர் பொதுப்பண்பு வேண்டும். அதற்க்கு ஒரு மாண்பு வேண்டும். அந்த மாண்பு வரலாற்றின் சிறந்த பக்ககளிலிருந்தே பெற முடியும்.  இன்று முடியாவிடினும் அடுத்த தலைமுறை சாதிக்கும். அதற்க்கு நமது வரலாறு அடுத்த தலைமுறைக்கு தெரிய வேண்டும். 

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சண்டமாருதன். என்னுடைய அபிப்பிராயம், இவர் தமிழர்களை ஊக்குவிக்கும் நல்லெண்ணம் கொண்ட ஒரு செயற்பாட்டாளர். பைபிளில் ஊர் மட்டுமல்ல, ஈழம் என்று கூட இருக்கிறது ஆனால் அவை தமிழ் சொற்களாக அல்லாமல் அரமைக் மொழிச் சொற்களாக உள்ளன. தமிழோடு உறுதியான தொடர்புகள் காட்டப் படவில்லை. ஆய்வுகள் என்று இவர் குறிப்பிடும் செயல்பாடுகள் சர்வதேச மட்டத்தில் வெளிப்படுத்தப் பட்டால் மட்டுமே துறை சார் அறிஞர்கள்  குறை நிறைகளைச் சுட்டிக் காட்டுவர். மற்றபடி உற்சாகமூட்டும் pep talk ஆக மட்டுமே இவை அமையும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ,தமிழன் மொழி பரந்து விரிந்து காணப்படுகின்றது , வாழ்கின்றான் ஆனால் தமிழனுக்கு ஓர் நாடில்லை அதுதான் வேதனை 

 

Link to comment
Share on other sites

 

On 12/27/2018 at 6:57 AM, Justin said:

இளம்பிறையன், ஒரிசா பாலு  பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். ஆய்வாளர் என்று தான் வருகிறது ஆனால் ஒரு செயற்பாட்டாளர் போலவே அவர் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. அவரது விக்கிபீடியா பக்கத்தில் யாழ்.கொம் ஒரு உசாத்துணையாக இருக்கிறது, வேறு நூல்கள் எதையும் அவர் எழுதியதாகக் காணவில்லை. இதை நான் கேட்பதற்குக் காரணம் அவர் சீமான் ரைப்பாக இருந்தால், அவர் சொல்வதை நிறைய உப்புப் போட்டுத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும், இல்லையா?

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/28/2018 at 3:40 PM, ஆதித்ய இளம்பிறையன் said:

 

நேரில் இவரை ஒருமுறை சந்தித்திருக்கேன். இவர் பேசுவது மட்டுமின்றி களத்திலும் நின்று வேலை செய்கிறார். பல விடயங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். நீரோட்டத்தில் பயணம் செய்யும் ஆமைகளை பற்றி ஒரு ஆய்வுக்கு கட்டுரை எழுதி இருக்கிறார்.  தமிழ் மரபு அறக்கட்டளை தலைவர் கண்ணனும், ஒரிசா பாலுவும் இணைந்து தமிழ், கொரியா தொடர்பு பற்றி நிறைய விடயங்களை ஆய்வு ரீதியாக மேற்கொண்டுள்ளனர். , கொரியா தமிழ் வேர்ச்சொல் ஆய்வு , கொரியா தமிழ் அகராதியை கொண்டு வரவும் தொல்லியல் ஒப்பிட்டியல் தொடர்பாக முயற்சியம் நடந்து வருவதாக கேள்வி. 

எப்படியிருப்பினும் இவரது பேச்சுக்களில் நிறைய விடயங்கள் எனக்கு புதிதாக கிடைக்கிறது. இது நன்று தானே !

இது தொடர்பான ஒரு செய்தி

நன்றி இளம்பிறையன். மேலே இரண்டு வீடியோக்களையும் பார்த்த பின்னர் என் கருத்தை இட்டிருக்கிறேன். புதிதாக கிடைக்கும் தகவல்கள் நம்பகரமானவையாகவும் இருக்க வேண்டும் என நான் கருதுவதால் தான் ஏன் மற்றைய ஆய்வாளர்கள் கருத்துரைக்கும் (peer review) வகையில் பிரசுரிக்கப் படவில்லை என வினவுகிறேன். பைபிளில் இருக்கும் ஊர் பற்றியும் இவர் குறிப்பிட்டதில் தான் இவரது ஆய்வுகள் பற்றிய நம்பிக்கை குறைகிறது. ஒரு மொழியின் பழமையை நிரூபிக்க கடினமாக உழைப்பது நல்லது, ஆனால் அது மேலோட்டமான ஆய்வுகள் மூலம் செய்யப் பட்டால் அந்தப் பழமை நிரூபிக்கப் படுவதற்குப் பதிலாக போலியென மற்றவர்கள் நம்ப ஏதுவாகி விடும். 

நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 
பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.
(2000 வருடங்களுக்கு மேலாக மக்கள் வாழ்ந்து எகிப்து நாட்டில் இருக்கும் 
ப்யரமிட்டுக்களுக்கு நேராக ஆயிரம் ஆண்டுகள் முன்பே மெக்சிகோவில் பிரமிட்டுகள் 
கட்டி வாழ்ந்து இருக்கிறது  மாயன் இனமக்கள் கூட்டம்)  

pyramidsalignnorthernhemisphere.jpg

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

இவர் தமிழ்..... தமிழர் ..... தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை 

பாவிக்கிறார் சீமான் மாதிரி இவரையும் நம்ப முடியாது.

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

4 hours ago, Maruthankerny said:

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் 
இப்படி ஆணித்தரமான ஆதாரங்கள் இல்லை.

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஆதித்ய இளம்பிறையன் said:

ஒருவர் தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்ற வார்த்தைகளை பாவிப்பதாலேயே நம்பக் கூடாது என்பதை எப்படி எடுத்துக் கொள்வது?? தமிழர் சென்றார்கள், தமிழர்கள் வாழ்ந்தார்கள், தமிழ் மொழி பேசினார்கள்  என்பதை அப்படித்தானே கூற முடியும். உங்களுக்கு சீமானின் மீது உள்ள வெறுப்பா? இல்லை அவ்வார்த்தைகளின்  மீதான வெறுப்பா?  

 

தமிழர்களுக்கும், கொரியர்களுக்கும் தொடர்பு இருந்தது என்பதை மேலே கொடுக்கப்பட்ட பல இணைப்புகள் வலியுறுத்துகின்றன. அதை ஒட்டி பல ஆய்வுகள் நடந்து வருகின்றன.  இந்தியாவிற்க்கான கொரிய தூதுவரும் தமிழுக்கும் கொரிய மொழிக்குமான தொடர்பை  உணர்ந்து அதனை பதிவும் செய்துள்ளார்.  

ஆதாரங்களை தமிழர்கள்தானே திரட்ட வேண்டும்.  தமிழர்கள் சொன்னால் தாங்கள் நம்புவீர்களா ??

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிசா பாலு அவ்ர்களை ஆராய்ச்சி செய்ய சொல்லி 
ஒரு பில்லியன் டாலர் கொடுத்து விட்டு இருப்பவர்கள் போல் 
அதில் உண்மை இருக்குமா? ஆதாரம் இருக்குமா? என்றால் 
இவர்கள் என்ன செவ்வாய் கிரகத்திலா வாழ்கிறார்கள்?

இவர்கள் போய் உண்மைகளை கண்டு அறிந்து ஒரிசா பாலு போல 
மக்களுக்கு சொல்லலாமே? அவர் தனது பொருளாதார நிலைமை 
பயணத்துக்கு ஆனா நாட்கள் போன்றவற்றை வைத்துதானே செயல்பட முடியும் 

இப்போதும் கன்னியா குமாரியில் இருந்து 25 மையில் தொலைவில் ஒரு கட்டிட பகுதி 
கடல் அடியில் கிடக்கிறது ..... யாரையும் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய இந்திய அரசு 
தடை வித்தித்து இருக்கிறது. வட இந்தியாவில் மூழ்கி கிடக்கும் துவாரகை நகருக்கும் இதே கதிதான் 
கிந்தியர்கள் மூடி மறைக்கிறார்கள் என்றாலே யோசிக்க வேண்டும் எதோ அங்கே தமிழ் சார்ந்து கிடக்கிறது என்று  (ஒரு வேளை  இல்லாமலும் இருக்கலாம்) ஏன் தடை போடுகிறார்கள் என்றுதான் புரியவில்லை.
இப்படி எல்லா இடங்களிலும் ஒரு தடை இருக்கிறது 
உண்மைகள் திட்டமிட்டு மறைக்க படுகின்றன.
அந்த அந்த அரசுகள் எந்த பொய்யில் கட்டமைக்க பட்டதோ அதே பொய்யில் மக்களை 
வைத்திருக்கவே அவர்கள் துடிக்கிறார்கள்.
சுய ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரிசா பாலு போன்றவர்கள் .... பல வெள்ளைகாரகளும் தான் 
இப்படியான அரச கெடுபிடிகளுக்கு முகம் கொடுத்தே எதையும் செய்ய வேண்டி இருக்கிறது. 

1000 வருடம் முன்பு உலகின் முதன் முதலாக கட்டப்பட்ட உயரமான கட்டிடமான 
தஞ்சை பெரிய  கோவிலை யுனெஸ்கோ பாதுகாத்து வருகிறபோதும். உலக அதிசயதில் ஒன்று என்ற 
பரிந்துரைக்கு அனுப்ப இந்திய அரசு தொடர்ந்தும் மறுத்து வருகிறது. இன்று வரையிலும் ஒரு இஞ்சி கூட 
அரங்கவோ சரியாவோ இல்லை ........... முற்று முழுதாக புவி ஈர்ப்பின் விசையையும் அழுத்தத்தையும் 
வைத்தே ஒவ்வரு கல்லும் கட்டி இருக்கிறார்கள். உலகில் முதன் முதலில் கிரைனெட்டு கற்களில் தமக்கு 
தேவையான விடடத்தில் துளை போட்டு இருக்கிறார்கள்.

இதுதான் முதலாவது உயரமான கட்டிடம் என்று ஆதார படுத்த சிலருக்கு ஒரு வெள்ளை காரனை 
கொண்டு வர வேண்டும் 

Link to comment
Share on other sites

8 hours ago, Justin said:

ஐயோ இளம்பிறையன், அவர் உங்களைச் சொல்லவில்லை! வேறு சில திரிகளில் இன்னொருவரோடு இருக்கும் "காண்டு" வை இங்கு முரண்நகையாகக் கொட்டியிருக்கிறார். நீங்கள் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! சரியான தரவுகள், அடிப்படை அறிவு என்பன கொண்டு கருத்துக்களை எதிர் கொள்ள முடியாத போது இப்படி எல்லாத் திரிகளிலும் பின் தொடர்ந்து குரைத்துத் திரிவது அவரது பிரச்சினை! உங்களுக்கோ எனக்கோ இது பிரச்சினையில்லை! நோ வொறீஸ்! 😀

 

7 hours ago, Maruthankerny said:

ஆதித்ய இளம்பிறையன்! மன்னித்து கொள்ளுங்கள் குழப்பத்துக்கு 

நான் அடைப்பு குறியினுள் எழுதியதை நீங்கள் வாசிக்க வில்லை 
அல்லது ஏன் எழுதினேன் என்று விளங்கி கொள்ளவில்லை என்று எண்ணுகிறேன்.

எனது கருத்து எமது சில வெள்ளாந்தி மனநிலையில் இருப்பவர்களை 
குறித்தது. தமிழன் ஏதும் செய்தால் அதுக்குள் முட்டையில் மயிர் பிடுங்குவது 
வெள்ளைக்காரன் பச்ச பொய்யை சொன்னாலும் அப்படியே எதோ ஆண்டவர் 
சொன்னதுபோல ஏற்றுக்கொள்ளும் மனநிலையில்தான் சிலர் அலைகிறார்கள்.

3000 ஆண்டுகள் முன்பே அமெரிக்க கண்டத்துக்கும் ஆசிய ஐரோப்பிய கண்டத்துக்கும் 
மனிதர்கள் பயணித்து இருக்கிறார்கள். மாயன் என்ற இன மக்கள் எகிப்தில் இருக்கும் பிரமிட்டுகளுக்கு 
நேர் கோட்டிலையே தமது பிரமிட்டுகளை கட்டி இருக்கிறார்கள் .... இதே கோட்டிலேயே இந்தோனேசியாவிலும் ஒரு பிரமிட்டு இருக்கிறது ..... இந்த மூன்று பிரமிட்டுகளிலும் 
மூன்று வாசல் இருக்கிறது... இது ஒன்றோடு ஒன்று எதோ ஒரு வகையில் சம்மந்தப்பட்டுதான் இருக்கிறது 

1500 வருடங்கள் முன்பே பிஜி தீவில் இருந்த மக்கள் கடல் வழியாக பயணித்து 
இப்போதைய அமெரிக்கா சொந்தம் கொண்டாடும் காவாய் தீவுகளில் குடியேறி இருக்கிறார்கள் 
இந்தோனேசியா ஊடாக பிஜி தீவுகளில் இருந்த சிவா  ஆலயங்கள் போல் பாழடைந்த நிலையில்  
இப்போதும் சில சிவ ஆலயங்கள் காவாய் தீவுகளில் இருக்கின்றது. 

இருண்ட ஐரோப்பாவில் கிடந்த வெள்ளையனுக்கு முன்பே 
உலகின் அனைத்து நாகரிகமும் வளர்ந்து இருக்கிறது பல முன்னோடி 
மொழிகள் இலக்கண வடிவம் பெற்று இருக்கிறது.
இதை பொறுக்கித்தனமான வெள்ளையன் ஏற்றுக்கொண்டு உறுதி படுத்த போவதில்லை 
இப்போ 1400 கடைசியில் 1500இல் இந்தியாவுக்கு போகிறேன் என்று போன திசையில் தவறுதலாக 
கப்பல் சென்று அடைந்த இடம்தான் அமெரிக்கா ....  அங்கு இருப்பவர்கள் வெள்ளையாக இருந்ததால் 
குழம்பிய கொலம்பஸ் குழு அவர்களை ரெட் இந்தியர்கள் என்று அழைத்தார்கள் அப்போதும் அவர்கள் 
தாம் இந்தியா அடைந்து விட்ட்டதாகவே எண்ணினார்கள். 
இந்த லட்ஷணத்தில்தான் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டு பிடித்தார் என்று ஒரு பொறுக்கி 
வரலாறை உலகில் புகுத்த தொடங்கினார்கள் .... அதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வெள்ளாந்தி தமிழர்களுக்கு............ உலகிலேயே பெரிய ஆலயமான கம்போடியாவில் இருக்கும் சிவ ஆலயம் (பின்பு க்மேர் இன மன்னர்களின் ஆட்சியில் புத்த மதம் புகுத்த பட்டது) முழுக்க முழுக்க பல்லவர்களின் கட்டிட கலையை 
வைத்தே கட்ட பட்டு உள்ளது ...... அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்து இருக்கிறது என்றால் 
அதுக்கு முடடையில் மயிர் புடுங்கவேணும். 

 

இடம், சூழல் அதன் பின்னணி அறியாது எழுதி விட்டேன் என்று எண்ணுகிறேன். வருந்துகிறேன் :)

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இத்திரியில் இத்தனை விடயங்களை இணைத்த, எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி. இப்படியே விட்டுவிடாது புதிதாக ஏதாவது தெரிந்தால் எழுதுங்கள் உறவுகளே.

எத்தனையோ விடயங்களை இத்திரி மூலம் புதிதாய் அறிந்துகொள்ள முடிந்தது. ஒரிசா பாலு கூடநிறைய விடையங்களை செய்தாலும் அவருக்கு அகழ்வாய்விலோ மற்றும் அது சார்ந்த துறையிலோ புலமை பெரிதாக இல்லை என்று தெரிகிறது.
T . கண்ணன் என்பவரும் நிறைய அறிவு உள்ளவராக இருந்தாலும்  கொறிய மக்கள் பலருக்கு கொரிய- தமிழ் தொடர்பு தெரியவில்லை என்று தவறான தகவலைக் கூறினார். இங்கு லண்டன் soas பல்கலைக்கழகத்தில் கொரிய மொழியைக் கற்பிக்கும் போதே தமிழர்களுக்கும் அவர்களுக்கும் தொடர்புஉண்டு என்று கூறுகிறார்கள்.

எனது பிள்ளைகள் கொரியாவில் சந்திக்கும் பல கொறிய இனத்தவர்தான் அவர்களுக்கு இந்தக் கதையை கூறினார்கள் முதலில்.

இளம்பிறையன் கூறியதுபோல் ஒரு குழுவை இதற்காக உருவாக்கி முழுநேரமும் இதே பணியைச் செய்யவைத்தாலன்றி பல அறிவுஜீவிகளும் போகுமிடங்களில் மட்டும் இவற்றைப் பேசிக் கைதட்டை வாங்கிவிட்டு பின் எதுவும் ஆவண செய்யாது இருப்பதாகத்தான் இருக்கும்.

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fnews.lankasri.com%2Fothercountries%2F03%2F195682%3Fref%3Dhome-imp-flag%26fbclid%3DIwAR1RK59ENTsVEAuDeU7aAHOZnvhtzyTttzCm4mXCzlckXx_IKkd84kWLXP4&h=AT2XipKRcn1TjIjNzCSlv-dIxwZV9pXwnFxVmjxHddYDGWngkLA2f38gUoPNPqhgL1ZRdTJhkwIyTblD2xAvyFRzb4tj0ymSBDSnBmSjwaORS3nuoEUw7zwOGyY8bwPpQrY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

625.0.560.350.160.300.053.800.668.160.90

இப்பெண் தான் செம்பவளம் என்ற கன்னியாகுமரி இளவரசி என லங்கா சிறியில் இது பற்றிப் போட்டிருந்த லிங்கே மேலே இட்டுள்ளேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.