Jump to content

ஒரு கூடைக் கொழுந்து!.. - என்.எஸ்.எம்.இராமையா.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூடைக் கொழுந்து!.. சிறுகதை…. என்.எஸ்.எம்.இராமையா.

 
ஒரு கூடைக் கொழுந்து!..  சிறுகதை…. என்.எஸ்.எம்.இராமையா.

சிறப்புச் சிறுகதைகள் (20) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – என்.எஸ்.எம்.இராமையா எழுதிய ‘ஒரு கூடைக் கொழுந்து’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும்.

“அக்கா எனக்கு எது நெரை?”

கொழுந்து இல்லாத கூடையின் தலைக்கயிறு தோள் வழியாக இடதுகைக்குள் அடங்கியிருக்க, வெற்றுக்கூடை முதுகில் அசைந்துகொண்டிருந்தது. லட்சுமியின் கேள்வி யார் காதில் விழுந்ததோ என்னவோ? பதிலே இல்லை. மற்ற நாட்களாக இருந்தால் அந்த ‘வயசுப்பெண்கள்’ குழுவினர் அவளை ஆளுக்கொரு பக்கமாக இழுப்பார்கள்.

“இங்கே வாடி லெட்சுமி! என்கிட்டே நிரைதாரேன்”

“ஐயோ! லெட்சுமிக்குட்டி! என்கிட்டே நிற்கட்டுண்டி”

நாலாபக்கத்திலிருந்தும் வரும் அழைப்பைக்கண்டு அவள் அரிசிப்பல் தெரியச் சிரிப்பாள். அவளுக்குச் சற்றுக் கர்வமாகக்கூட இருக்கும். இவ்வளவு, கிராக்கியா என்று!

அப்படிப்பட்டவங்கள் இன்று ஒரே மெளனம் அனுட்டித்தனர். எதற்கு இந்த மெளனம் என்று புரியாமல் அவர்கள் முகத்தைப் பார்த்தாள் லெட்சுமி. நிரை பிடித்துக்கொண்டு நின்ற அவளுடைய ‘செட்டு’கள் எல்லாம் சொல்லி வைத்தாற்போல முகத்தை ஒரு மாதிரியாகத் தூக்கி வைத்துக்கொண்டு – கொந்தரப்பு காசும் கொழுந்து காசுமாக ‘முதல் நம்பர் சம்பளம்’ வாங்குபவளை எரிச்சலொடு பார்க்கும் பிள்ளைக்காரி மாதிரி – ஓரப் பார்வை பார்ப்பதைக் கண்டதும் அவளுக்கு எரிச்சலாக்கூட வந்தது.

“என்னடி ஆத்தா உங்களுக்கு வந்த வாழ்வு?” என்று ஒரு வெட்டு வெட்டிவிட்டுக் கடைசித் தொங்கலில் நிரை போட்டுக் கொண்டிருந்த கங்காணிக் கிழவனிடம் போனாள்.

“கங்காணி அப்பச்சி எனக்…”

வழக்கமாக அவளைக் கண்டதும், இருக்கும் இரண்டு முன்பற்களும் தெரியச் சிரித்தவாறு “என்ன ஆயி! இப்பத்தான் வாறியா? போ… போ… முப்பத்திரண்டாவது நிரை ஒனக்கு. அய்யா வர்றத்துக்குள்ளே ஓடு” என்று கனியும்… கிழவன்கூட இன்றைக்கென்று சடசடத்தான். “வாறாக, தொரைச்சாணி அம்மா! வங்க இப்பத்தான் விடிஞ்சுதோ? மொகறையைப் பாரு! நேரம் என்ன ஆவுது? சுணங்கி வாற ஆளுக்கு ஏன் வேலை கொடுத்தேன்னு ‘ஙொப்பன்’ குதிப்பதே! நீயா ‘வதிலு’ சொல்லுவே?”

விடியற்காலை வேளையிலே இப்படி வாங்கிக்கட்ட வேண்டி இருக்கின்றதே என்று அவளுக்கு அங்கலாய்ப்பாக இருந்ததுதான். ஆனால் கணக்கப்பிள்ளை ஐயாவிடமும் கங்காணியிடமும் அதைக் காட்டிக்கொள்ள முடியுமா? அப்புறம் தப்புவதாவது!

“சரி… சரி அப்பச்சி! காலங்காத்தாலே பேசாதீங்க. என்னமோ, என்னைக்கும்போல மத்தக் குட்டிக நெரை புடிச்சிருப்பாளு கன்னு நெனச்சேன். அவுகளுக்கெல்லாம் இன்னைக்கு என்னமோ வந்திருச்சி!”

”நீங்க பண்ணுற காரியங்களுக்கு நெரை வேறே புடிச்சித் தருவாகளோ: – கங்காணிக்கிழவன் எரிந்து விழுந்தான். “தொலைஞ்சுப்போ! கடேசித் தொங்கலுக்கு!”

கீழே இறகி வைக்கப்பட்ட வெற்றுக்கூடை மீண்டும் முதுகுக்குத் தாவியது. கடைசி நிரைக்குப் போய்க் கொண்டிருந்த லெட்சுமியின் பருவத்துப் பின்னழகை அந்தக் கூடையோ, சேலை மேல் கட்டியிருந்த முரட்டுப் படங்குச் சாக்கோ மறைக்கவில்லை.

வழக்கமாகச் கொஞ்சம் அதிகமாகவே றாத்தல் போட விரும்பும் எடுவைக்காரிகள் முதல் தொங்கல், கடைசித் தொங்கலுக்குப் போவதே இல்லை.

முதல் தொங்கலென்றால் ஒழுங்கான நிறை கிடையாது. எல்லாம் குறை நிறைகளாக ஆயிரம் தடவை ஏறி இறங்க வேண்டும். கடைசித் தொங்கலென்றால் பிள்ளைக்காரிகளோடை ‘மாரடிக்க’ முடியாது. ஆடி அசைந்து அம்மன் பவனி வருவதுபோல் எட்டுமணிக்குத்தான் வருவார்கள். ஒருமணிநேரம் ஏதோ பெயருக்கு நாலைந்து றாத்தலை எடுத்துவிட்டு ஒன்பது மணிக்கெல்லாம் ‘அடியே ஏங்கொழுந்தையும் நிறுத்துர்றீ….’ என்று பல்லைக்காட்டிவிட்டு லயத்துக்கோ பிள்ளைக் காம்பிராவுக்கோ போய்விடுவார்கள். அவர்களுடைய கொழுந்தையும் நிறுத்துக்கொள்ள வேண்டும், கூடையையும் பார்த்துக்கொள்ள வேண்டும். போதா குறைக்கு அவர்களுடைய நிறையையும் சேர்த்து எடுத்துப் போக வேண்டும். இந்தத் தொல்லைகளுக்காகத்தான் அவள் அங்குமிங்கும் போவதில்லை. அவளுடைய கலகலத்த சுபாவமும் எளிமையான அழகும் மற்றப் பெண்களுக்கு மத்தியில் ஒரு தனித்துவத்தை ஏற்படுத்தி இருந்தன. ஆகவே அவளை மற்றப் பெண்களும் போகவிடுவதில்லை. ஆனால் இன்றோ?

”ஆமா! இந்தப் ‘பொட்டைச்சி’களுக்கு இன்னைக்கு என்ன வந்தது?” கடை நிரைக்கு வந்து நின்றாள். அந்த மலையிலேயே கடை நிரை, எல்லோரும் சேர்ந்து ஏதோ அவளை மட்டும் ஒதுக்கிவிட்டது போன்ற தனிமை உணர்வு அவளது மனதைப்பிழிய, கூடையை இறக்கி வைத்து இடையில் கட்டியிருந்த படங்குச் சாக்கை அவிழ்த்து, சேலையைச் சற்று முழங்காலுக்குமேலே தூக்கி – இல்லாவிடில் தேயிலைச்செடி கிழித்துவிடுமே! – மீண்டும் படங்கைச் சுற்றிக் கட்டினாள். கறுப்புநிறக் கயிறு அரைஞான் மாதிரி இடுப்பைச் சுற்றி வளைத்தது. கூடைக்குள்ளிருந்த தலைத்துண்டை உதறி, நெற்றியில் பூசிய இரட்டைக்கோடு விபூதி அழியாமல் தலையில் போட்டுக்கொண்ட கூடைக் கயிற்றையும் தலையில் மாட்டிக்கொண்டாள். கடைசியாகப் பக்கத்தில் தொங்கிக்கொண்டிருந்த தலைத்துண்டின் பகுதிகளைக் கயிற்றை மறைப்பதுபோல் மடித்துக் கயிற்றுமேல் போட்டுக் கொண்டாள். ஆயிற்று. நிரைக்குத் தயார்!

அப்போதுதான் அவளைக் கவனித்த பக்கத்து நிரைக்கிழவி தன் பொக்கை வாயைப் பிளந்தாள்.

“என்னடி ஆயா அதிசயமா இருக்கு! என்ன இந்தப் பக்கமா காத்து வீசுது?”

கிழவியை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, சூழ்கொட்டிக் கொண்டாள்.

“என்னடி குட்டி கேக்குறேன் ச்சுங்குறே?”

”ஒண்ணுமில்லை அம்மாயி! சும்மாதான் வந்தேன்”

“ஆயாயே! பொல்லாதவதான். சும்மாகூடவர்ற ஆளு இல்லே நீ, என்னதான் நடந்தது?”

லெட்சுமிக்குக் கோபம் வந்துவிட்டது.

”ஒப்புராணை! ஒண்ணுமில்லேங்கிறேன்”

“சரி… சரி…. காலாங்காத்தாலே ஆணையிடாதே”

மெளனமாகத் தேயிலைச்செடியைத் தொட்டுக்கும்பிட்டுவிட்டு, பனியில் நனைந்துநின்ற கொழுந்துகளைக் கிள்ளத் துவங்கினாள் லெட்சுமி. இரண்டு வீச்சிலே இரண்டு கையும் நிறைந்துவிட்டது. காம்புப்பகுதியைத் திருப்பிப் பார்த்தாள். பரவாயில்லை. எல்லாம் பிஞ்சுக்காம்புதான்! ‘நார்க்குச்சி’ ஒன்றுகூட இல்லை. கிழவியைத் திரும்பிப் பார்த்தாள். அப்போதுதான் கிழவி ஒவ்வொன்றாக மெல்லமெல்லக் கிள்ளிக் கொண்டிருந்தாள். காலைப் பனிக்கும், குளிருக்கும் அவள் கரங்கள் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

“அம்மாயி! பொலி சொல்றியா, கொழுந்தைப் போட்டுக்கிர்றேன்…” முதல்பிடிக்கொழுந்தை கூடைக்குள் போடும்போது ‘பொலி’ சொல்வது ஒரு மரபு. சகுனம் பார்ப்பது மாதிரி! கிழவி ‘பொலி’ சொன்னாள்.

“போடு அப்பனே, சம்முகா! பொலியே… பொலி – பொலி – பொலி” லெட்சுமிக்குக் கை வேகமாக விழத்துவங்கியது. பங்குனி மாதப்பச்சை பார்ப்பதற்கே ஓர் அழகு. எடுத்து வெறிகண்டவர்களுக்கோ, அது ஓர் இன்பப்போதைதரும் விளையாட்டு. இளந்தளிர்கள் ‘சடசட’வென ஒடிந்து கொண்டிருந்தன. ஆனால் இன்பப் போதையோடு அல்ல! மனதுக்குள்ளே சிநேகிதிகளின் பாராமுகம் வண்டாக அரித்துக்கொண்டிருந்தது. அதற்குக் காரணம் அவளுக்கு அந்திக்கொழுந்து நிறுக்கும்போதுதான் தெரிந்தது.

மாலை நாலுமணி சங்கு ஊதியதும் நிரையிலிருந்து இறங்கி அந்திவெயிலில் உடல் வியர்வையால் புழுங்க எல்லா ஆட்களும் ஸ்டோருக்கு முன்னால் வந்து குழுமினார்கள். கூடையை இறக்கி வைத்துவிட்டுத் தலைத்துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி. கூடையில் பொங்கி எழும்பிநின்ற கொழுந்தை ஐந்து விரல்களும் விரிய உள்ள்ங்கையால் அமுக்கிவிட்டுக் கொண்டாள். பெரும்பாலும் எல்லா ஆட்களும் வந்தாயிற்று என்று தெரிந்தவுடன் கங்காணி பணிவாக – முதுகு கூன – கணக்குப்பிள்ளை ஐயாவிடம் போய் “ஆளுக எல்லாம் வந்துருச்சி! நிறுக்கலாந்தானுகளே?” என்று மென்று விழுங்கிக்கொண்டு கேட்டான்.

செக்ரோல் புத்தகத்தில் ஏதோ கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த கணக்கப்பிள்ளை ஐயா நிமிர்ந்து ‘லேபர்’ கூட்டத்தைப் பார்த்தார். எல்லோரும் வரிசையாக கூடையை வைத்துக்கொண்டு நின்றார்கள். விரிக்கப்பட்டுக்கிடந்த படங்குச் சாக்குக்கு முன்னால் போய் நின்று கொண்டனர். தராசுமரம் வந்தது. தட்டுக்கூடை வந்தது. நாலு பெண்களும் வந்தார்கள். தராசுமரம் பிடிக்கவும் தட்டுக்கொட்டவும், ஆயிற்று. நிறுக்க வேண்டியதுதான்.. அப்போதுதான் ஏதோ ஞாபகம் வந்ததுபோல் ‘ஐயா’ ஒதுங்கி ஆட்களுக்கு முன்னால் வந்து நின்றார். அவர் அசைந்து வந்துநின்ற தோரணையும், ஆட்களைப் பார்த்த விதமும், ஏதோ தவறுதலாகக் கறுப்பாகப் பிறந்துவிட்ட வெள்ளைக்காரனைப் போலிருந்தது. பேச்சும்கூடச் சுத்தத் தமிழாக இருக்காது. வெள்ளைத்துரை ஒருவன் சிரமப்பட்டு ‘டமில்’ பேசுவது போலிருக்கும். நாமாக இருந்தால் சிரித்திருப்போம். ‘அது’கள் ‘லேபர்’ கூட்டந்தானே? என்ன தெரியும் அந்தக் ‘கண்ட்றி’களுக்கு? ‘அது’களுக்கு முன்னால் இப்படி ஐபர்தஸ்து பண்ணுவதில் ஒருசில விடலைப் பிள்ளைகளுக்கு என்னமோ ஓர் ‘இது’!

ஆட்கள் எல்லோரையும் அலட்சியத்துடன் ஒருமுறை பார்த்தார் ஐயா, வலதுபுறத்திலிருந்து நேராக ஓடிவந்து கொண்டிருந்த பார்வை லெட்சுமியிடம்வந்ததும் சற்று நின்று மேலும் கீழுமாக ஏறி இறங்கிவிட்டு மீண்டும் இடது கோடிவரை ஓடியது. பிறகு கங்காணி பக்கம் திரும்பி ‘கங்காணி’ என்று கூப்பிட்டார். அதுவரை அவரின் செயல்களைக் கவனித்துக்கொண்டு என்னவோ ஏதோவென்று நின்ற கங்காணி ஓடிவந்து ‘ஐயா’ என்றான். இந்த ஐயாப்பட்டம் போடும்போது ஏந்தான் முதுகு கூனுகிறதோ?

“லெட்சுமியை வர்ச்சொல்லுங்க”

கிழவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது. லெட்சுமியை அனுதாபத்தோடு பார்த்துவிட்டு உரத்துச் சத்தமிட்டான்.

“இந்தா ஆயி! இப்பிடி வா, ஐயா கூப்பிடுறாரு…”

லெட்சுமிக்கு குடல் மார்புவரை ஏறி இறங்கியது பயத்தால்.

“நானா அப்பச்சி”

“ஆமாங்கிறேன்”

லெட்சுமி வாய்க்குள்ளே பயத்தால் முனகிக்கொண்டாள்.

“ஐயோ! என்னா எழவு இது!” ஏற்கனவே வெயிலில் கன்றிப் போயிருந்த அவள் முகம் இப்போது பயத்தால் கூம்பியது. அந்தப் பெரிய கூட்டத்துக்கு முன்னால் உடம்பெல்லாம் கூசிக் குறுக வந்துநின்றாள். கைகளைப் பின்புறமாகக்கட்டி, வலது குதிக்காலை ஊன்றி கட்டை விரலினால் தரையில் அரைவட்டம் வரைந்து கொண்டிருந்த கணக்குப்பிள்ளை ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தார். லெட்சுமி தலை குனிந்து கொண்டாள்.

“லெட்சுமி”

“ஏன்ங்க” – அவள் பார்வை சற்று மேலேறி இறங்கியது.

”நாலைஞ்சு நாளைக்கு முந்தி இருபத்தஞ்சாம் நம்பர் மலையிலே கொழுந்து எடுத்தேயே, அன்னைக்கு நீ ஒருமணிக்கு எத்தனை றாத்தல் எடுத்தே…?” தனக்குள் இருந்த நினைவு மெல்ல வெளிவந்தது. ஆம், ஐம்பத்தி ஏழு!

“அம்பத்தி ஏழுங்க”

“அம்பத்தி ஏழா! நான்கூட மறந்திட்டேன். ஆனா ஆளுக மறக்க மாட்டாக போலே இருக்கு….” பொறுப்புக் கலந்த ஒரு பார்வை ஆட்கள்மீது ஓடியது. “லெட்சுமி இன்னொருமுறை, அதேமாதிரி, ஒன்பது மணிக்கும் ஒரு மணிக்கும் ஊடே அம்பத்தி ஏழு றாத்தல் எடுத்துக்காட்ட முடியுமா/”

லெட்சுமியின் புருவங்கள் கேள்விக்குறியாக வளைந்தன. மீண்டும் அதேமாதிரி ஐம்பத்தி ஏழு றாத்தலா? ஏன்… எதற்காக…? கங்காணி பக்கம் திரும்பினாள்.

“அப்பச்சி! ஐயா என்ன இப்படி கேட்கிறாரு…?”

“என்னைக் கேட்டா? ஐயாவையே கேளு…”

’ஐயா’வைக் கேட்க முடியுமா? ஆனால் தன்னைக் கேட்பதாக நினைத்துக் கொண்டு பேசத் துவங்கினார். அவர் முகம் சொல்லக்கூடாத விஷயத்தைச் சொல்லச் சங்கடப்படுவதுபோல் சுருங்கியது.

“லெட்சுமி! உங்க எல்லாருக்கும் நல்லாத் தெரியும். கணக்குப்பிள்ளைக்கு ‘பொம்புளை கேஸ்’ எவ்வளவு ஆபத்தானதுன்னு. அதிலேயும் நான் கல்யாணம் கட்டாதவன். அப்படிப்பட்டவங்களுக்கு சும்மா கட்டுக்கதையைக் கட்டி விட்டாக்கூட நெசம்னு எங்க மேலிடம் நம்பும். இது உனக்கு நல்லா தெரியும், உன்னைவிட நல்லா எடுக்கக்கூடிய ஆளுக உனக்கு முந்தியே பேரு பதிஞ்சு எத்தனையோ வருஷம் ‘சர்வீசு’ உள்ள ஆளுக இங்கே இருக்கு. அவுகளை எல்லாம்விட போனவருஷம் வேலைக்கு வந்த நீ ஐம்பத்தி ஏழு றாத்தல் எடுத்தது எல்லோருக்கும் ரொம்ப சந்தேகத்தைக் குடுத்திருக்கு. ஆனா இன்னம் யாராவது என்கிட்டே நேரே கேட்கலை. அவுங்களுக்குள்ளே பேச்சு நடக்குதாம்…” கங்காணி, பேச்சு விரசமாய் போவதைக் கவனித்துவிட்டு ஊடே புகுந்தான்.

”இப்ப… அது கிடந்திட்டு போகுதுங்க…”

“இல்லை கங்காணி! நான் இந்தமாதிரி ‘பப்ளிக்’கா விசாரிக்கப்படாதுதான். ஆனா விஷயம் என் சம்பந்தப்பட்டது. அதனாலேதான் ‘ஒடச்சு’ பேச விரும்புகிறேன். அத்தோட லெட்சுமி எங்களுக்கு சொந்தக்காரச்சின்னு ஒரு பிரச்சினை இருக்கு. அதனாலேதான் ஒடச்சிப்பேச நினைக்கிறேன்…” லெட்சுமி பக்கம் திரும்பினார். “லெட்சுமி! என் நிலைமை புரியும்னு நினைக்கிறேன். உன்னாலே மறுபடி எடுத்துக்காட்ட முடியுந்தானே?”

குனிந்திருந்த தலை சட்டென்று நிமிர்ந்தது. ஐயாவை, கங்காணியை அப்புறம் ஆட்களை ஒருமுறை சிலிர்த்துப் பார்த்தது. தூங்கிக்கொண்டிருக்கும் புலியை விலாவில் குத்தினால் இப்படித்தான் துள்ளி எழுந்து முறைத்திருக்கும்.

என்னபுள்ளே மொறைக்கிறே! ஐயா கேட்டதுக்கு வதிலு சொல்லு?”

”எதைச் சொல்வது? ‘ஐயா’ பூடகமாகப் பேசிவிட்டு சும்மா இருந்துவிட்டால், அந்தக் ‘கறை’ நீங்கிவிடுமா? ஐயா முகத்தை ஏறிட்டு வெறித்துப் பார்த்துச் சொன்னாள் லெட்சுமி.

“யாரு முடியாதுன்னா? என்னாலே எடுக்கமுடியும். எடுத்துக் காட்டறேன்” பொங்கி வந்த கண்ணீரை மறைப்பதற்காகப் தலை குனிந்து கொண்டாள். மேட்டிலிருந்து பள்ளத்துக்கு சரேலென இறங்கும் சாரைப்பாம்பு மாதிரிக் கண்ணீர் வழிந்தது. குழுமிநின்ற ஆட்கள் மெளனமாக நடப்பைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள்ளே ’என்னதான் நடக்கிறது பார்ப்போம்’ என்கிற மனநிலை இருந்தாலும், வெளிக்குப் ‘பசு’வாக நின்று கொண்டிருந்தார்கள்.

பொதுவாக தோட்டத்துப் பெண்களுக்கு இது ஒரு விதமான மனநிலை. நேரடியாக ஐயாவை, கங்காணியை பகைத்துக்கொள்ளவோ வாதாடவோ முடியாது. பயம், ஆனால் தங்கள் புகைச்சலைச் சுற்றிவளைத்து அவர்கள் காதுக்கு எட்டும்படி செய்துவிடுவார்கள். விஷயம் உடைபடும்போது எல்லோரும் நல்ல பிள்ளைகள் மாதிரி காட்சியளிப்பார்கள். “ஐயோ கடவுளே! எவளோ பொடசக்காரி இப்படி அநியாயமாகச் சொல்லியிருக்கிறாளே!’ என்று அவர்கள் அங்கலாய்க்கும்போது பார்க்கவேண்டுமே! இந்தப் பூனையும் பால் குடிக்குமா கதைதான்.

எல்லோரையும் ஒருமுறை பார்த்துவிட்டு ஐயா கூறினார்: “ரொம்பச் சந்தோஷம் லெட்சுமி. அதேமாதிரி மறுபடியும் எடுக்கமுடியுங்கிறே. முடியுமோ முடியாதோ எனக்குத் தெரியாது” அவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு கூறினார் “நீ கட்டாயம் எடுத்துக் காட்டத்தான் வேணும். இல்லையோ…” அவர் முகம் கடுகடுத்தது. “அப்புறம் நான் பொல்லாதவனா இருப்பேன்” தலைத்துண்ண்டை எடுத்து முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டாள் லெட்சுமி. அமைதியாக அவர் பேச்சை ஏற்றுக் கொண்டாள். அவளைப் பயமுறுத்தும் கட்டளையோ பழிவாங்கலோ அல்ல! அவள் கண்ணியத்துக்கு விட்ட சவால்!

சின்னதொரு தகரலாம்பு மினுக்மினுக்கென்று எரிந்து கொண்டிருந்தது. அடுப்பில் சாம்பல் பூத்துக்கிடந்த நெருப்பைக் குனிந்து ஊதிவிட்டான் ஆறுமுகம். நெருப்பு இலேசாகக் கனன்றது. பக்கத்தில் கட்டிக்கிடந்த தேயிலை மிலாருக் குவியலில் இரண்டொரு குச்சியை இழுத்து ‘படக் படக்’கென்று ஒடித்து, அடுப்பில் வைத்து ஊதினான். குப்பென்று தீப்பிடித்தது. குளிருக்கு அடக்கமாக கைகளை நெருப்பருகே காட்டியவாறு ஏறிட்டு லெட்சுமியைப் பார்த்தான். அவளும், அவன் என்ன சொல்லப்போகிறான் என்பதைத்தான் எதிர்பார்ப்பதுபோல அவனையே கவனித்துக் கொண்டிருந்தாள். அடுப்பருகே சற்று நெருங்கி உட்கார்ந்தவாறு ஆறுமுகம் கேட்டான். “ஆமா! அப்ப என்னதான் செய்யப்போறே?” கனன்று எரிந்த தீயின் மஞ்சளும் சிவப்பும் கலந்த ஜுவாலை ஒளி அவன்மீது வர்ணப்பூச்சு செய்துகொண்டிருந்தது. “பரிசா அத்தனை கூட்டத்துக்கும் மத்தியிலே வீறாப்பு பேசிட்டாப்புலே பத்தாது, சொன்னமாதிரி செய்யணும். முடியுமா உன்னாலே?”

வலதுகாலை மடக்கிப் பாதத்தை சுவர்மீது பதித்து, சுவரில் சாய்ந்தவாறு அவனைப் பார்த்துச் சிரித்தாள் லெட்சுமி.

“முடியாதுன்னு தெரிஞ்சா சபதம் போடுவேனா?”

“ஆ! கிழிச்சீங்க, அன்னைக்கு என்னமோ நான் சோத்துக்கு வாறப்போ ரெண்டு மூணு ‘ரப்பு’ எடுத்துக் குடுக்காட்டி எடுக்கிறவுக இல்லே…”

லெட்சுமியின் எதிர்காலக் கணவன் அவன். சாயந்தர வேளைகளில் அவன் அவள் வீட்டுக்கு வந்தால் கொஞ்ச நேரம் எல்லாருடனும் பொதுவாகப் பேசிவிட்டு லெட்சுமியுடன் தனியாகக் கொஞ்சம் பேசுவான். அம்மாதிரிச் சமயங்களில் லெட்சுமியின் ‘ஆயாளும் அப்பனும்’ கெளரவமாக ஒதுங்கி விடுவார்கள். அவனும் வரட்டுக் கெளரவத்துடன் திண்ணையிலிருந்தவாறு இரண்டு பேச்சுப் பேசிவிட்டு ஓடிவிடமாட்டான். குடும்பப் பிரச்சினை, வேலைப் பிரச்சினை எல்லாம் அவள் காதுக்கும் சற்று ஈயப்படும். இரவு ஏழரை எட்டுமணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் தன் லயத்துக்குப் போய்விடுவான். அப்படிப்பட்ட காதலனோடு உலகையே மறந்து போதையிலே எதேதோ உளறிக்கொட்டிச் சிரிக்கவேண்டிய வேளையிலே –

வயிற்றுப்பிரச்சினைதான் காதல் பேச்சாக இருந்தது. ஐம்பத்தி ஏழு றாத்தல் பிரச்சினை கூட அவனால் வந்து விடிந்ததுதான். ஆண்களுக்கு வேலை ஒருமணியோடு முடிந்துவிடும். ஆனால் பன்னிரண்டு மணிக்கே கங்காணியிடம் பல்லைக் காட்டிவிட்டு நழுவிவிடும் துணிச்சல்பேர்வழிகளில் அவனும் ஒருவன். அப்படி ஒருநாள் பகல் ‘சோத்து;க்குப் போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவள் லெட்சுமி மலையின் ‘வங்கி’ ஓரத்திலே தனியாக நின்று கொழுந்து எடுத்துக் கொண்டிருந்தாள். அவளோடு சற்றுப் பேசப்போனவன், பேசிக்கொண்டே கொழுந்து கிள்ளிக் கொண்டிருந்தான். உழைக்கும் கையல்லவா? வாய், பேச்சை மறக்காதபோது கையும் உழைப்பை மறக்கவில்லை. சாகும்வரை அது மறப்பதில்லை! அந்தக் கொழுந்துதான் ஐம்பத்தி ஏழு றாத்தலாக இருந்து ஐம்பத்தேழு பிரச்சினைகளையும் கிண்டிவிட்டிருக்கிறது!

”ஆமா, இப்பிடி செஞ்சா என்ன?” அவனுக்கு ஒரு யோசனை.

“அன்னைக்கு மாதிரி பன்னெண்டு மணிக்கு வந்து எடுத்துத் தரவா?”

“ஐயய்யோ”

“இனி எல்லோருக்கும் என்மேலேதான் கண்ணிருக்கும். இன்னொருத்தர் எடுத்துக் குடுக்கிறதே குத்தம். அதுவும் இப்பவோ?” இரண்டு கரங்களாலும் கன்னத்தைப் பொத்திக்கொண்டு தோள்களைக் குலுக்கினாள். “வேறே வெனை வேண்டியதில்லை”

“அப்ப என்னதான் செய்யிறது?”

“நானே எடுக்கிறேன். முடிஞ்சமட்டும் எடுக்கிறது. முடியாட்டி துண்டு வாங்கிக்கொண்டு மத்த மலைக்குப் போறேன். இல்லே இஸ்டோருக்கு எல பொறக்கப் போறேன். மலையில இருந்தாத்தானே ஐயாமேல சந்தேகப்படுவாங்க?”

பெருமூச்சோடு ஆறுமுகம் எழும்பினான். ‘என்னமாச்சும் பண்ணு’ என்று சொல்லிக்கொண்டு தோளில் கிடந்த மப்ளரைத் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு புறப்பட்டான். லெட்சுமியின் தாய் திண்ணையிலிருந்தவள் மருமகனைக் கண்டதும் பவ்வியமாக எழும்பி ஒதுங்கி நின்றுவிட்டு உள்ளே ஓடிவந்தாள். “ஆயி, அத்தானுக்கு தேத்தண்ணி ஊத்திக் கொடுத்தியா” என்றாள்.

“குடிச்சிட்டுத்தான் போறாக” வாயிற்புறம் அரைத்தூக்கம் தூங்கிக்கொண்டிருந்த நாய் ஒன்று ஆறுகுகத்தைக் கண்டதும் இரண்டுதரம் குரைத்துவிட்டு வழக்கமாக வருகிற ஆசாமி என்று தெரிந்ததும் மீண்டும் சுருண்டுபடுத்தது.

ஒருமணிக்கொழுந்து நிறுவையாகிக் கொண்டு இருந்தது. அது நல்லகொழுந்து உள்ள மலை; ஆகவே எல்லோரும் சாப்பிடப்போகாமல் நின்று எடுத்திருந்தார்கள். நாற்பது ஐம்பது என்று றாத்தல் விஷமாக ஏறிக்கொண்டிருந்தது. படங்குச்சாக்கில் ஓர் ஆள் உயரத்துக்குக் கொழுந்து எழும்பி நின்றது. சாக்கிலே கொழுந்து அமுக்கும் பெண்களும் சாக்குப்பிடிக்கும் பெண்களும் நின்றுகொண்டிருந்தனர். நிறுப்பதற்காக காத்து நின்ற வரிசை மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. லெட்சுமியின் முறை வந்தது. சாக்குக்காரன் லெட்சுமியின் கூடையைத் தூக்கினான். அது கல்லாகக் கனத்தது. அடியிற் கையைக் கொடுத்துத்தூக்கித் தட்டில் கொட்டப் பார்த்தான். முடியவில்லை. காலால் மிதித்து அமுக்கப்பட்ட கொழுந்து சீமெந்து மாதிரி இறுகிப்போய் இருந்தது. மாமுல்படி தனது முழங்காலால் கூடையின் வாயிற்புறத்தை இரண்டு மோது மோதி நாலைந்துதரம் உலுப்பினான். கொழுந்து பிரிந்து கொட்டத் துவங்கியது. கட்டி மண்ணாக பொல பொலவென்று உதிர்ந்து கொட்டிய கொழுந்து தட்டைக் கூடையில் நிரம்பி தராசு அடிதொட்டி எழும்பி, கோபுரம் கட்டியதைப் பார்த்ததும் கணக்கப்பிள்ளையை திரும்பிப் பார்த்தாள், லெட்சுமி!

ஐயா குவிந்து நின்ற கொழுந்தைப் பார்த்தார். கொழுந்தா அது? நார் பிடித்த வெறும் முற்றல் இலையும் மொட்டைப் புடுங்குமாக இதையெல்லாம் எடுத்திட்டா சரியா? கங்காணியைக் கூப்பிடு என்றார்.

“என்ன கங்காணி கொழுந்தா இது… லெட்சுமிகிட்ட கொழுந்து இன்னைக்கு எடுக்கவா சொன்னீங்க?”

“ஆமாங்க! ஒம்பதுமணி நிறுவைக்குப் பொறகு வந்து இன்னைக்கு எடுத்துக்காடறேன்னு சொல்லிச்சுங்க. சாச்சிக்கு நாலு ஆளைவச்சு எடுக்கச் சொன்னேங்க”

“சரி, ஆனா இப்படியா எடுக்கிறது? நாருக்குச்சியும் முத்த எலையுமா இதா கங்காணி கொழுந்து?”

”துப்பரவுபண்ணி தரச்சொல்றேன். றாத்தலைப் பாருங்க”

தராசுமரம் பிடிக்கும் பெண்களைப் பார்த்தார். அந்தப் பெண்கள் தராசில் கயிற்றை மாட்டிக் தூக்கினார்கள்.

தூக்கிய கைகள் நடுங்கின. தராசில் றாத்தல் காட்டும் கம்பி ‘ஜம்’மென்று மேலே ஏறி கீழே இறங்கி ஆடி நின்றது. அறுபத்தி ஒன்று!

சொன்னதுக்கு மேலாக நான்கு றாத்தல் கூடவே இருந்தது.

“அறுவத்தியோர் றாத்தல் இருக்குது கங்காணி. யாரு வேணும்னாலும் வந்து பார்த்துக் கொள்ளலாம்”

ஐயா ஒதுங்கி நின்றார். ஆனால் யாரும் போய்ப்பார்க்கவில்லை. அவ்வளவுக்குத் துணிந்து யார் போவார்கள்?

தராசுமரம் பிடிக்கும் பெண்களின் கரங்கள் வேகமாக நடுங்கத்துவங்கின. தட்டை இறக்கிவைக்குபடி கையை அமர்த்திவிட்டுக் கங்காணியைப் பார்த்து ‘ஐயா’ கூறினார்.

”ஆனா கங்காணி இந்த அறுவத்தியோர் றாத்தலையும் தர முடியாது. இருவது றாத்தல் வெட்டப்போறேன். கொழுந்திலே அவ்வளவு பழுது இருக்கு” லெட்சுமிக்கு தூக்கிவாரிப் போட்டது. கங்காணிக்கும் கூடத்தான்.

“ஐயா!” கங்காணிக்கிழவன் வெறித்துப் பார்த்தான். விடுவிடென்று லெட்சுமி அருகில்போய் அவளது வலதுகையின் ஆள்காட்டி விரலைப்பிரித்து அவர் முன் காட்டினான். அந்த விரலின் ஓரப்பகுதிகள் இரண்டும் தோல் கிழிந்து இரத்தம் கசிந்து உறைந்து போயிருந்தன!

“இதைப் பார்த்துவிட்டுப் பேசுங்க ஐயா, இது நல்ல கொழுந்தோ, கெட்ட கொழுந்தோ, இவ்வளவையும் எடுத்தது இந்தக் கையி! இந்த றாத்தலைத் தரமாட்டேன்னு சொல்றீங்க.”

லெட்சுமியின் கைகளைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டார். அவர் கை தானாகவே துண்டை வாங்கிக் காலைக் கொழுந்தின் றாத்தலோடு அறுபத்தி ஒரு றாத்தலையும் கூட்டிப்போட்டுத் திருப்பிக் கொடுத்தது.

சபதம் நிறைவேறாவிட்டால் மற்ற மலைக்கு மாறிப் போகிறேன் என்று சொன்னவள் சபதம் நிறைவேறிய பின்பும் அந்த மலையில் நிற்க விரும்பவில்லை. அவள் போனபிறகுதான் ‘ஐயா’வுக்கு அவள்மீது உண்மையில் காதல் பிறக்கத் துவங்கியது!

 

http://akkinikkunchu.com/?p=69396

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினக்கூலி வேலைகள் நடக்கும் இடத்தில் இதுபோன்ற கூத்துக்கள் நடப்பது வழமைதான்.அதுவும் கொழுந்து எடுக்கும் இடத்தில் சொல்லி வேல இல்ல....!  😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.