Jump to content

77 வயதிலும் வீட்டுத் தோட்டம் செய்து அசத்தும் மூதாட்டி விஜயலட்சுமி...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம்   காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77 
வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.

தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.

இவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன.
77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உழைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.

ஆறுமுகம் விஜயலட்சுமி மன உறுதி தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

 

https://www.madawalaenews.com/2018/12/77.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல மனவலிமையும் உடல் வலிமையும் உள்ள தாய்.
போற்றிப புகழவேண்டிய தாய்.
பாராட்டுக்கள் அம்மா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஊரில் இருக்கும் வரையிலும் இதெல்லாம் சர்வசாதாரணம்.விவசாயிகளின் வாழ்க்கையில் வயோதிபம் என்ற சொல்லே இல்லை.
இப்ப கண்டறியாத கைத்தொலைபேசி வந்தாப்பிறகு எல்லாரும் செய்தியாளர் ஆகிட்டாங்கள்.

இனிமேல் கண்ணம்மா கக்கூசுக்கு போனார் எண்டு கொட்டை எழுத்திலை செய்தி வந்தாலும் வரும்.tw_glasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் உங்களுக்கு வேறு செய்தி கிடைக்கவில்லையா போட?? அந்தத் தோட்டமா அவருக்கு வாழ்வாதாரம்?? சின்னப்  பிள்ளைகளுக்கு கதை சொல்வதுபோல் இருக்கு. 

Link to comment
Share on other sites

முன்னைய காலத்தில் 80 வயதிலும் அதிகாலையில் எழுந்து ஓடியாடி வேலை செய்வது சர்வசாதாரணம். இது அவர்களை சுகதேகியாக வாழ பெரிதும் உதவியது. கிணற்று நீரை அருந்தி, வெயிலில் நடந்து, மழையில் நனைந்து, தினமும் சமைத்து வீட்டு சாப்பாடு உண்டு, நடை நடையென நடந்து கோவில் திருவிழாக்கள் மற்றும் புத்தக வாசிப்பு என பொழுது போக்கி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இக்காலத்திலோ பெரும்பாலானவர்கள் இரவிரவாக தொல்லைக்காட்சி தொடர்களிலும், ஸ்மார்ட் அலைபேசிகளிலும் மூழ்கி, தாமதமாக எழுந்து, வடிகட்டிய நீரை அருந்தி, குளிரூட்டியில் வைத்த / கடையில் வாங்கிய உணவுகளை பெரிதும் உண்டு, வெயிலும் மழையும் உடலில் கொஞ்சமும் படாமல் குடை பிடித்து, உந்துருளியில் வலம் வந்து 50 வயதின் பின்னர் பல்வேறு உடல் உபாதைகளினால் பீடிக்கப்பட்டு, ஆரோக்கியமான வாழ்வை தொலைத்து வாழ்கிறார்கள்.

குறிப்பாக பெண்கள் இளவயதிலிருந்து வெயிலில் சிறிது நேரமாவது நடப்பது பிற்காலத்தில் அவர்களின் எலும்பு தேய்வை குறைக்கும். இன்று பெருமளவு பெண்கள் 50 களின் பின்னர் எலும்பு தேய்வு, மூட்டு வியாதி போனற்றவற்றால் அவதிப்படுகிறார்கள்.

இந்தப் பின்னணியில், இந்த மூதாட்டியின் முயற்சி, அதுவொரு சிறு முயற்சியாக இருந்தாலும், இக்கால மக்களுக்கு அவசியமான ஒரு செய்தியை தருகிறது. இறக்கும்வரை ஆரோக்கியமாக வாழ நினைப்பவர்களுக்கு இந்த மூதாட்டியின் சுறுசுறுப்பு, கடின வேலை நல்ல பாடமாக இருக்கும் என்பது எனது கருத்து.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருக்கும் வரையிலும் இதெல்லாம் சர்வசாதாரணம்.விவசாயிகளின் வாழ்க்கையில் வயோதிபம் என்ற சொல்லே இல்லை.
இப்ப கண்டறியாத கைத்தொலைபேசி வந்தாப்பிறகு எல்லாரும் செய்தியாளர் ஆகிட்டாங்கள்.

இனிமேல் கண்ணம்மா கக்கூசுக்கு போனார் எண்டு கொட்டை எழுத்திலை செய்தி வந்தாலும் வரும்.tw_glasses:

ஜேர்மனி பக்கம் ஏதாவது தோட்டம் செய்றது சாமி அங்க லண்டன்ல வாழை தோட்டம் செய்யுறாங்கள் ஆப்பிள் தோட்டம் செய்யுறாங்கள் நீங்க ஒரு சொச்சி மரம் நட்டாவது பார்க்கப்படாத என்ன :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.