Jump to content

மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம்  - வ.ஐ.ச.ஜெயபாலன்  .


Recommended Posts

மீண்டும் எழுந்த முஸ்லிம் கலாசார உடைகள் தொடர்பான விவாதம் 
- வ.ஐ.ச.ஜெயபாலன் 
.
இலங்கையில் குறிப்பாக கிழக்கு பாடசாலை அலுவகங்களில் முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகள் தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. இதுபற்றி என்னிடம் கேட்க்கபட்டபோது என் கருத்தை உறுதியாக முன் வைத்தேன். 
.
ஒரு பெண் நிர்பந்திக்கபடாமல் சொந்த விருபத்தின்பேரில் முக அடையாளத்தை மறைக்காமல் அணியும் ஆடையைச் சிலர் கேழ்விக்குரித்தாக்குவதை அனுமதிக்க முடியாது. அதேபோல மாற்று மதத்தவர்களின் உடைகளை காமத்தை தூண்டுவது என வக்கிரமாகச் சிலர் குறிப்பிடுவதையும் அனுமதிக்க முடியாது. 
.
எங்கள் இளமையில் சேலை முக்காடு என முஸ்லிம்களின் கலாசார உடைகள் ஒருபோதும் கேழ்விக்குள்ளானதில்லை. 1980 பதுகளின் பின்னர் முஸ்லிம்கள் அரபிய வடிவ உடைகளுக்கு மாற ஆரம்பித்தபோது உலகளாவி உருவான உருவாக்கபட்ட சூழல் இதுவாகும். 
.
மரபு இஸ்லாமிய ஆடைகளா அல்லது அரபுமயமாதலா என்கிற விவாதம் உலக மட்டத்திலும் இலங்கையிலும் அதிகரித்து வருகிறது. எனினும் இதுசார்ந்த விவாதங்களும் முடிவுகளும் உள்வாரியாக முஸ்லிம் மக்கள் மத்தில் மட்டுமே இடபெறுதல் வேண்டும். ஏனையோர் விலகி இருப்பதே சரியானது என்பதை வலியுறுத்துகிறேன். . 
.
முஸ்லிம் பெண்களிடமிருந்து உடைகள் தொடர்பான விதிகள் மற்றும் இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட தீர்ப்புகளால் தாம் தனிப்பட்டமுறையில் பாதிக்கபட்டதாக முறைப்பாடு வராத பட்சத்தில் இவ்விடயத்தில் சட்டமும் அரசும் விலகி இருப்பதே ஜனநாயகமாகும்.

2.

முஸ்லிம்கள் பற்றி இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிற விடயம் அரபிய மயமாதலாகும். துர் அதிஸ்ட்ட வசமாக இதுபற்றிய தொடர் விவாதங்களும் உலக நாடுகளின் விவாதங்களில் அதன்மூலம் பங்களித்தலும் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிகம் இல்லை. இந்த தசாப்தத்தில் இலங்கை ஐலண்ட் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள்பலவற்றுக்கு இன்றுவரை பதிலளிக்கபடவில்லை. உலகில் முஸ்லிம்கள் சிறுபாண்மையினராக வாழும் நாடுகளில் ஆய்வு 
கலந்துரையாடல் விவாதங்கள் இல்லாத முரட்டுத்தனமான நியாயப் படுத்தல்கள் பகை வளர்க்குமேயென்றிப் பதில்களாகிவிடாது. .

சிறுபாண்மையினராக வாழும் நாட்டில் விசேட சட்டங்களைக் கோரும் இனமாக முஸ்லிம்கள் இருக்கிறது தொடர்பான முரண்களை மென்போக்குடனும் சரியான கலந்துரையாடல்கள்மூலமும் ஞானத்தோடு அணுகுவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். உலகம் முழுவதும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கான இயற்க்கை நீதியை மறுக்கும் வகையிலும் பயன்படுத்தபடுவதாக குற்றச்சாட்டுக்கள் பெருகி வருகின்றன. காதி மன்றுகள் சிலவற்றின்மீது முஸ்லிம்களே அத்தகைய குற்றச்சாட்டுக்களை வைத்திருக்கிரார்கள். விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யபடும்போது விசேட சட்டங்களை நெடுநாட்கள் பாதுகாப்பதே போராட்டாமாகிவிடும் ஆபத்துள்ளது. 
விவாக விவாகரத்து சட்டங்கள் முஸ்லிம் பெண்களுக்கு எதிராகவே பிற மத பெண்களை மணப்பது தொடர்பாகவோ துஸ்பிரயோகம் செய்யப்படும்போது அது அநீதியாகும். அது நிச்சயம் முஸ்லிம்களின் உள்விவகாரமல்ல என்பதை முஸ்லிம்கள் உணரவேண்டும். அதனை மனித உரிமை ஆர்வலர்களும் பெண்ணியவாதிகளும் எதிர்ப்பார்கள். அது முஸ்லிம்களையல்ல முஸ்லிம் விரோதிகளையே பலப்படுத்தும். விசேட சட்டங்கள் துஸ்பிரயோகம் செய்யப்படுவது முஸ்லிம் விரோதிகளுக்கு கோட்டை மதில் கதவுகளைத் கதவு திறந்து வைக்கிற துரோகச் செயலாகும். இவையும் முஸ்லிம்கள் அரசுக்குள் அரசாக இயங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்களோ என்கிற பெரும்பாண்மையினரின் சந்தேகங்களையே வல்லுப்படுத்துகிறது. அடிப்படையாகும். இந்த விடயத்தை நான் முஸ்லிம் சான்றோரின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

தயவு செய்து எனக்கு கற்பிக்கவும். மரபு சார்ந்த சேலை முட்டக்கு பிஜாமா தலை நாடியை சுற்றிய முட்டாக்கு இவை புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு விரோதமானதா? அரபிய ஆடைகள் மட்டும்தான் புனிதநூல் நெறிப்படுத்தலுக்கு அமைந்ததா? இஸ்லாத்தில் சரிஆ போன்றவை புனிதநூலுக்கு இணையானவையா? புனித நூலில் சொன்னவற்றை பின்பற்றினால் அதை இஸ்லாத்துக்கு ஒவ்வாத ஆடையென சொல்லலாமா? தயவுசெய்து எனக்கு கற்பிக்க வேண்டுகிறேன்.

3.

Jaya Palan Segudawood Nazeer பெண் விருப்பின் பேரில் முகத்தை மூடினால் அதை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது.
. Jaya Palan முஸ்லிம் நாடுகள் பல அந்த உரிமையைக் கொண்டுள்ளதை நீங்கள் அறிவீர்களா? முகம் மூடுவது தடை செய்யபட்டால் அதை எதிர்த்து போராடுவேன் என்று சொல்கிறீர்கள். நித்தயமாக முகம் மூட்வதை ஆதரித்து நான் போராட மாட்டேன் நண்பா. மத்திய ஆபிரிக்க நாடான சாட் முஸ்லிம் பெரும்பாண்மை நாடாகும் 2015ல் இரண்டு தற்கொலைத் தாக்குதல்களின்பின் முகமூடும் உடைகள் தடை செய்யப்பட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே. நண்பா, பெண்கள் முகம் திரையிட்டு மூடல், தடுக்கபட்ட அல்லது கட்டாயமாக்கபடாத முஸ்லிம்நாடுகளின் சேதிகளை வாசியுங்கள் .

4.

 

முஸ்லிம்களின் கலாச்சார அடையாளம் அடிபடை உரிமை. 
ஆனால் 1980பதுகளில் பணிபெண்கள் பணியாளர்கள் அரபு நாடுகளில் இருந்து கொண்டுவந்த கண்ணீர் கதைகளும் செல்வமும் அரபிய மயமாதலும் வேறு. இதுபற்றிய விவாதங்கள் சிங்களவர் மத்தியில் நடப்பதுபோல முஸ்லிம் மக்கள் மத்தியில் இடம்பெறாதமையும் சிங்களவருக்கு பதில் கூறாமையும் இன்றய சோகங்களின் அடிப்படை. உலகம் முழுவதிலும் முஸ்லிம்களின் அடிபடை உரிமைகளா அரபியமயமாதாலா எடத்ன்கு முக்கியம் என்கிற பூதாகரமான கேழ்வியை முஸ்லிம்கள் எதிர்கொள்கிறார்கள். . அரபியமயமாதல்பற்றி எனக்கு எந்த அக்கறையுமில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கிறதுக்காக 
என்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, poet said:

-----ஆனால் முஸ்லிம் பெண்கள் ஏற்றுக்கொள்கிற முஸ்லிம்களின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கிறதுக்காக 
என்னுடைய உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்.

இதனை வாசித்தவுடன்.. உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ப‌ற்றி முஸ்லிம் அல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஏன்தான் இத்த‌னை க‌வ‌லை என‌ தெரிய‌வில்லை..

எழுத்தாள‌ர் வ‌ ஐ ச‌ ஜெய‌பால‌ன் என்ப‌வ‌ர் இது ப‌ற்றி எழுதும் போது 1980க்கு முன் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் சாரி, முக்காடு
என்றிருந்தார்க‌ள், இப்போது ஏன் அபாயா என்ற‌ அரேபிய‌ ஆடையை அணிய‌ வேண்டும் என‌ கேட்கிறார்.
முத‌லில் க‌றுப்பு நிற‌ அபாயா என்ப‌து அர‌புப்பெண்க‌ளின் க‌லாசார‌ ஆடைய‌ல்ல‌ என்ப‌தை புரிந்து கொள்ள‌ வேண்டும். அந்த‌ ஆடை முஹ‌ம்ம‌து ந‌பிக்கு முன்பே உல‌கில் வாழ்ந்த‌ உத்த‌ம‌ பெண்க‌ளின் ஆடையாகும். ஜீச‌சின் தாயார், ம‌ர்ய‌ம் என‌ப்ப‌டும் மேரி இத்த‌கைய‌ ஆடைக‌ளையே அணிந்தார்.

ஒரு ச‌மூக‌த்தின் க‌லாசார‌ ஆடை என்ப‌து எப்போதும் ஒரே மாதிரியாக‌ இருப்ப‌தில்லை. ஒரு கால‌த்தில் இல‌ங்கையின் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளின் ஆடையாக‌ சாரியே இருந்த‌து. பின்ன‌ர் அது குட்டை க‌வுனாக‌ மாறிய‌து. இப்போது கிழ‌விக‌ளை த‌விர‌ பொது வெளியில் சாரி அணியும் த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ளை காண்ப‌து அரிது. அனைவ‌ருமே ஐரோப்பிய‌ உடையையே அணிகின்ற‌ன‌ர். ஏன் இத்த‌கைய‌ ஐரோப்பிய‌ மோக‌ம் த‌ம் பெண்க‌ளுக்கு வ‌ந்த‌து என்ற‌ கேள்வியை ஜெய‌பால‌ன் போன்றோர் த‌ம் ச‌மூக‌த்தில் கேட்க‌ வேண்டும்.
ஒரு கால‌த்தில் முழ‌ங்காலுக்கு கீழ் உள்ள‌தையும் ம‌றைத்த‌ த‌மிழ், சிங்க‌ள‌ பெண்க‌ள் இப்போது தொடைக‌ளையும் காட்டித்திரிவ‌து க‌லாசார‌மாகிவிட்ட‌து. இன்னும் கொஞ்ச‌ கால‌ம் போனால் வெள்ளைக்காரி போல் ஜ‌ட்டியுட‌னும் பிராவுட‌னும் வீதியில் உலா வ‌ரும் நிலையும் வ‌ரும் என்ப‌தை எவ‌ரும் ம‌றுக்க‌ முடியாது.

இவ்வாறான‌ க‌லாசார‌ சூழ் நிலையில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் ஆடைக்க‌லாசார‌ம் அப்ப‌டியே இன்ன‌மும் பேண‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌ ஒரு க‌லாசார‌ சூழ‌லில் வாழும்போது அக்க‌லாச‌ர‌த்தின் அசிங்க‌ங்க‌ள் அசிங்க‌மாக‌ தெரியாது.
உதார‌ண‌மாக‌ ஒரு வீட்டில் த‌ன் தாய் தொடைய‌ காட்டிக்கொண்டு ஆடை அணியும் க‌லாசார‌ம் இருந்தால் அவ‌ள‌து ம‌க‌னுக்கு அது அசிங்க‌மாக‌ தெரியாது.அவ‌ள‌து ம‌க‌ள் தாயை விட‌ அதிக‌மாய் தொடையை காட்டிக்கொண்டு செல்வாள். அவ‌ளுட‌ன் செல்லும் அவ‌ள் த‌ம‌ய‌ன் கூட‌ கூச்ச‌மில்லாம‌ல் செல்வான்.

80க‌ளுக்கு முன் சாரி கலாசார‌ம் இருந்த‌து. அத‌ன் பின் அந்த‌ உடையும் இஸ்லாத்துக்கு முர‌ணான‌ உடை என்ப‌தை முஸ்லிம் ச‌மூக‌ புரியத்தொட‌ங்கிய‌து. சாரி அணியும் போது மார்புக்கும் இடுப்புக்கும் இடைப்ப‌ட்ட‌ பெரும் ப‌குதி ம‌றைக்க‌ப்ப‌டுவ‌தில்லை. அது ம‌ட்டும‌ல்லாம‌ல் கால‌நேர‌ வேக‌ம் கார‌ண‌மாக‌ தொழிலுக்கு, வெளியே செல்ல‌ முய‌லும் பெண் ஆறு முழ‌ சேலையை சுற்றிக்கொண்டிருக்க‌ முடியாது. இத‌ன் கார‌ண‌மாக‌ சாரியை விட‌ ஒழுக்க‌மான‌ அபாயாவை முஸ்லிம் பெண்க‌ள் அணிகிறார்க‌ள். இந்த‌ ஆடையை அர‌பு நாட்டு ஆடையாக‌ பார்க்காம‌ல் ந‌ல்ல‌ பெண்க‌ளின் ஒழுக்க‌ ஆடையாக‌ பார்க்க‌ வேண்டும்.

அர‌பு நாட்டு ஆடையாக‌ இருந்தால்த்தான் என்ன‌? ஐரோப்பிய‌, இந்திய‌ பெண்க‌ளின் அசிங்க‌ ஆடைக‌ளை விட‌ அர‌பு நாட்டு ஆடை சிற‌ந்த‌து என்ப‌தை ஏன் நாம் ஜீரணிக்க‌ ம‌றுக்கிறோம்.?

ஆக‌வே முஸ்லிம் பெண்க‌ளின் ஆடை ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் காம‌த்துக்கு இட‌ம் வைக்காத‌தால் அது ப‌ற்றி க‌வ‌லைப்ப‌டாம‌ல் காம‌த்தை தூண்டும் வித‌மாக‌ ஆடை அணியும் த‌ம‌து ச‌மூக‌ பெண்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌ ஜெய‌பால‌ன் போன்றோர் முன் வ‌ர‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.

https://www.madawalaenews.com/2018/12/mam.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீதையும் தான்...வனவாசம் போகும்போது மரவுரி தரித்தாள் என்பதற்காக....எல்லா....வைஷ்ணவப் பெண்களும்...மரவுரி..தரித்தால் ... எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்!

சிரிப்பை அடக்க முடியவில்லை!

Link to comment
Share on other sites

காம‌த்தை தூண்டும் வித‌மாக‌ ஆடை அணியும் த‌ம‌து ச‌மூக‌ பெண்க‌ளுக்கு புத்திம‌தி சொல்ல‌ ஜெய‌பால‌ன் போன்றோர் முன் வ‌ர‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்.
.
நண்பரே
பெண்கள் ஆடை பற்றி வக்கிரமாக பேசுவதே உங்கள் வளக்கமாகிவிட்டது. காமம்பற்றியே எப்பவும் சிந்திபீர்கள்போலும்.   நான் உளவியல் நிபுணனல்ல நண்பரே. உங்களைபோன்ற ஒருவருக்கு  1950 களில் நாசர்கூறிய பதில் ஞாபகம் வருகிறது. அது அப்படியே உங்களுக்கும் பொருந்தும் என்பதால் .பதிவிடுகிறேன்.

.

நாசரின் பதில் (1943) இதோ "Your daughter is studying medicine. She does not wear the veil. If you can't impose the veil on your daughter, what makes you think I can impose the veil on 10 million Egyptian women?" தமிழில் ”உங்கள் மகள் மருத்துவம் பயில்கிறார். அவர் முகத்திரை அணிவதில்லை. உங்களால் உங்கள் மகளுக்கு முகத்திரை அணிய நிர்பந்திக்க முடியாதபோது எதனால் ஒருகோடி எகிப்திய பெண்களை முகத்திரை அணியுமாறு என்னால் நிர்பந்திக்க முடியுமென நீங்கள் கருதுகிறீர்கள்” இது அரை நூற்றாண்டுகளுக்கு முந்திய நிலமை. அபோது உங்களைப்போல சிந்திக்கிறவர்கள் இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=TX4RK8bj2W0

 


.

https://www.youtube.com/watch?v=TX4RK8bj2W0

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவரே அப்படியே முஸ்லிம் ஆடைகளை அணிந்து கொண்டு நடக்கும் துஸ்பிரயோகங்களை உங்கள் உயிரை கொடுப்பதற்கு முன் சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும் ,
பெண்களின் கழிப்பறைக்குள் ஆண் அபாயா அணிந்து கொண்டு நுழைந்து கமெரா செட் பண்ணுவது 
மொக்காட்டிற்குள் BlueTooth HeadSet வைத்து உயர்தரப்பரீட்சை எழுதுவது  ,
முகத்தை மூடிக்கொண்டு வந்து வேறொருவருக்காக குதிரை ஓடுவது 
இப்படி டசின் கணக்காக உள்ளது இவர்களின் வித்தைகள்  இதெற்கெல்லாம் தீர்வையும் அப்படியே எடுத்துவிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மேயரின் ஓர் அறிவிப்பு எப்படியெல்லாம் இவர்களை யோசிக்க வைக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய மார்க்கத்துக்கு இசைவான உடை அணிகிறோம் எனக்கூறி ஐரோப்பிய நாடுகளில் பஸ் தரிப்பிடங்களில் அவ்வுடைகளையே மறைப்பாகவைத்து நடக்கும் அசிங்கங்களைப்பற்றி இங்கு ஒருவரும் பேசுவதில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.