Jump to content

கொழும்பின் எண்ணப்போக்குகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பின் எண்ணப்போக்குகள்

- ராஜீவ் பாதியா

 

இலங்கையின் அரசியல் நெருக்கடியில் வெற்றியாளர் எவருமில்லை. நெருக்கடி உருவாக காரணமாயிருந்த நடவடிக்கைகளை எடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரு நம்பிக்கை வாக்கெடுப்புகளில் தோல்வி கண்ட மகிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைக்கொண்டிருக்கும் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவருமே பலப்பரீட்சையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

        maithripala-sirisena-mahinda-rajapaksa-r

இந்த பின்புலத்திலே,  இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பிரதான அரசியல் பாத்திரங்கள் மத்தியில் இருக்கக்கூடிய எண்ணப்போக்குகள் எவை? முன்னாள் வெளியுறவு செயலாளரும் கலிங்க லங்கா பவுண்டேசனின் தலைவருமான லலித் மான்சிங் தலைமையிலான  மாண்புமிக்க இந்திய கல்விமான்கள், முன்னாள் சிவில் சேவை அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதியொருவரை உள்ளடக்கிய தூதுக்குழு ஒன்று கடந்த மாதம் கொழும்பில் இருந்தது. இந்த தூதுக்குழு இலங்கையின் நான்கு முன்னணி ஆய்வு நிறுவனங்களுடனும் அரசியல் பிளவின் வெவ்வேறு தரப்புகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களுடனும் திறந்த மனதுடன் நேர்மையான முறையில் நடத்திய கலந்துரையாடல்கள் தற்போதைய நிலைவரம் பற்றிய தெளிவான பார்வையை தந்தன.

இந்ததியாவுடன் நேர்மறையானதொரு ஈடுபாட்டை வளர்த்துக்கொள்வதில் இலங்கைக்கு இருக்கின்ற தொடர்ச்சியான தேவை பற்றி கட்சிவேறுபாடுகள் கடந்த நிலையில் தெளிவான இருதரப்பு கருத்தொருமிப்பு தோன்றக்கூடியதாக இருந்தது. உறவுகளை மேம்படுத்துவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முன்முயற்சிகள் பெரிதும் வரவேற்கப்பட்டன. ஆனால், இந்தியாவின் சமச்சீரற்ற பருமனையும் வல்லமையையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது இந்தியாவினால் தாங்கள் அமுக்கப்படுவதாக இலங்கையர்கள் உணருகிறார்கள். அதன் காரணத்தினால் நெருக்கமான ஒத்துழைப்புக்கு இந்தியா விடுக்கின்ற அழைப்புக்களை எதிர்ப்பது இலங்கையின் சதந்திர அடையாளத்தை முனைப்புறுத்தும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக நோக்கப்படுவதாக இருக்கலாம்.

இலங்கையின் கருத்துக்கோணத்தில் நோக்கும்போது இந்தியாவுக்கு எதிரிடையானதாக சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவது என்பது ஒரு  தந்திரோபாயரீதியான அணுகுமுறையாகும். இலங்கைக்கு அதன் அபிவிருத்தி திட்டங்களுக்காக பாரியளவு மூலதனம் தேவைப்படுகிறது. கடுமையான நிபந்தனைகளுடன் கூடியதாக இருந்தாலும் கூட அந்த மூலதனத்தை வழங்க முன்வருகின்ற ஒரே நாடாக சீனா மாத்திரமே இருக்கிறது போலத் தோன்றுகிறது. பெருமளவு கடனுதவிகளை வழங்குவதன் மூலமாக இலங்கையை சீனா கடன்பொறியொன்றில் சிக்கவைத்திருக்கிறது என்ற கருத்தையும் அம்பாந்தோட்டை துறைமுகம்  சீனாவுக்கு 99 வருடங்களுக்கு குத்தகைக்கு கொடுக்கப்பட்டமை ஒரு நவகாலனித்துவ பாணிச் செயற்பாடு என்ற விமர்சனங்களையும் இலங்கையின் பல புத்திஜீவிகளும் கொள்கை வகுப்பாளர்களும் நிராகரிக்கிறார்கள். சீனாவின் பணத்தை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அதேவேளை சீனாவின் பிரசன்னத்தை ஆரத்தழுவத் தயாராயில்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். சீனாவை நன்கு புரிந்து விளங்கிக்கொண்டு கையாளுவதற்கான நிபுணத்துவம் தங்களுக்கு இருப்பதாக அவர்கள் பெருமை பேசுவதை நம்பக்கூடியதாக இல்லை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டாபோட்டி என்று வரும்போது அந்த இரு ஆசிய வல்லாதிக்க நாடுகளுடனான இலங்கையின் உறவுகளில் ஒரு சமநிலையைப் பேணவேண்டும் என்ற அபிப்பிராயம் ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களுக்கு இருக்கிறது.சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கலான உறவுகள் என்ற குறுகிய நிறப்பிரிகையின் ஊடாக பார்க்கக்கூடாது என்று வேண்டுகோள் ஒன்று விடுக்கப்பட்டது. அது யதார்த்தபூர்வமற்றது என்றபோதிலும் வலுவானதாக இருக்கிறது. இதற்கு அவர்கள் இரு மேலதிக வாதங்களை முன்வைக்கிறார்கள். பெரும்பாலான திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை முதலில் இந்தியாவையே அணுகியது. இந்தியா தயக்கம் காட்டிய பின்னரே சீனாவின் உதவி நாடப்பட்டது என்பது ஒரு வாதம். சீனா திட்டங்களை பொறுப்பெடுத்தால் துரிதமாக அவற்றை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டும். ஆனால், இந்திய உயரதிகாரிகள் மட்டத்தில் எப்போதுமே தாமதம் காட்டப்படும் என்பது இரண்டாவது வாதம். இந்த வாதம் இலங்கையின் ஒரு பல்லவியாக இருந்து வருகிறது.

தெற்காசிய நாடு என்ற அடையாளத்தில் இருந்து தூரவிலகி இந்து சமுத்திர நாடு என்ற பாத்திரத்தை வகிப்பதிலேயே இலங்கை இப்போது முனைப்புக்காட்டுகிறது போலத்தெரிகிறது. தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்துடனும் (ஆசியான்) ஜப்பானுடனும் கூடுதலான அளவுக்கு தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்ற நாட்டம் இதற்கு காரணமாக இருக்கக்கூடும். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) செயற்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முட்டுக்கட்டை நிலை தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தியும் ' பிம்ஸ்ரெக் ' என்று அழைக்கப்படுகின்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி என்ற அமைப்பை வலுப்படுத்துவதில் எதிர்நோக்கப்படுகின்ற சவால்களும் இலங்கையின் இந்த நகர்வின் பின்னணியில் இருக்கக்கூடிய காரணங்களாக இருக்கலாம். சிறந்த சர்வதேச கடல்சார் தொடர்புகளின் விளைவாக ஏற்படக்கூடிய பொருளாதார வாய்ப்புகளும் கடல் வளங்களை பெருமளவுக்குப் பயன்படுத்துகின்ற ஆற்றலைக்கொண்ட நாடாக மாறுவதில் உள்ள சாத்தியமும் இது விடயத்தில் மேலதிக நோக்கங்களாக இருக்கலாம்.

இந்து சமுத்திரத்தைப் பொறுத்தவரை, அமைதியும் சமாதானமும்  நிலவுகின்ற பிராந்தியமாக அதை மாற்றுவதற்கான தனது முயற்சிகளில் இந்தியாவின் ஒத்துழைப்பைப் பெறுவதில் இலங்கை ஆர்வம் காட்டுகிறது. இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு ஆதரவாக சிலர் கருத்து வெளியிட்டார்கள். பிராந்தியத்தின் நன்மைகளுக்காக சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்துச் செயற்படவேண்டும் என்று வேறு சிலர் எதிர்பார்க்கிறார்கள்.

பொருளாதாரப் பிரச்சினைகள்

இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு என்று வரும்போது ஜனாதிபதி சிறிசேனவையும் ராஜபக்சவையும் விட விக்கிரமசிங்க கூடுதலான அளவுக்கு உற்சாகத்துடன் செயற்பட்டுவந்திருக்கிறார். 2017 ஏப்ரிலில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் அடையாளம் காட்டப்பட்ட செயற்திட்டங்களை விரைவாக முன்னெடுக்கவேண்டுமென்று விக்கிரமசிங்க வலியுறுத்தியமையும் தற்போதைய அரசியல் நெருக்கடி தோன்றுவதற்கான உடனடிக்காரணங்களில் ஒன்று. அந்தச் செயற்திட்டங்களை சிறிசேன எதிர்த்தார். அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட ஒரு விஜயத்தின்போது விக்கிரமசிங்க இந்தியா சம்பந்தப்பட்ட செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் காட்டப்படுகின்ற தாமதங்கள் குறித்து பிரதமர் மோடி விசனம் வெளியிட்டவேளையில்  அதற்கு காரணம் ஜனாதிபதி சிறிசேனவே என்று அர்த்தப்படக்கூடியதாக பதிலளித்தார். இது மேலும் தன்னைக்கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்ற சதி முயற்சிகள் குறித்து கரிசனை காட்டுவதற்கு விக்கிரமசிங்க மறுத்ததனால் சிறிசேனவுக்கு ஏற்பட்ட கவலையும் இருவருக்கும் இடையிலான முரண்பாடுகளை உச்சநிலைக்கு கொண்டுவந்தது.

இந்தியப் பொருட்கள் இலங்கைச் சந்தையில் குவிக்கப்படக்கூடும் என்றும் இந்திய தொழில்சார் நிபுணர்கள் படையெடுக்கக்கூடும் என்றும் இலங்கை கைத்தொழில்துறையினர் கொண்டிருக்கின்ற அச்சம் குறித்தும் கலிங்க லங்கா பவுண்டேசன் தூதுக்குழுவுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை.இந்திய முதலீட்டாளர்கள் தங்கள் நாட்டிலேயே முதலீடுகளைச் செய்யவிரும்புகிறார்களா என்பதே கொழும்பில் உள்ள மதிப்பீடாக இருக்கிறது. அதனாலேயே தென்கிழக்காசியாவில் இருந்தும் அதற்கு அப்பால் இருந்தும் புதிய முதலீடுகளைக் கவருவதற்கு இலங்கையில் நாட்டம் காட்டப்படுகிறது. ஆனால், சகல முதலீட்டாளர்களுமே இலங்கையில் உறுதிப்பாடு குழம்பிப்போய் அரசியல் ரீதியில் நாடு நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் நிலையில் முதலீடுகளைச் செய்யத்தயங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இலங்கைத் தமிழர்களின் அபிப்பிராயம் இந்தியா இலங்கையுடனான விவகாரங்களில் தன்முனைப்புடனான கொள்கையைக் கடைப்பிடித்துச்  செயற்படவேண்டும் என்று வலியுறுத்துவதாகவே இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் நோக்குகையில் இலங்கையில் இந்தியா பல்வேறு பிரதிபலிப்புகளை எதிர்நோக்குகிறது ; அதாவது வரவேற்பு, ஆதரவு, சந்தேகம் மற்றும் எதிர்ப்பு என்று அந்த பிரதிபலிப்புக்களை வரிசைப்படுத்தலாம். இந்திய இராஜதந்திரம் இக்கட்டான ஒரு நிலையை எதிர்நோக்குகிறது. அயல்நாடொன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பதில் புதுடில்லி பற்றுறுதி கொண்டிருக்கிறது, ஆனால், அது எப்போதுமே தனது முக்கியமான நலன்களைப் பாதுகாக்கும். சகல தரப்புகளுக்கும் நியாயமாக நடந்துகொள்கின்ற அதேவேளை, விரிவடையும் நெருக்கடியை இந்தியா உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது.

 ( ராஜீவ் பாதியா மியன்மாருக்கான முன்னாள் இந்தியத் தூதுவரும் கேட்வே ஹவுஸ் என்ற கொள்கை ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினருமாவார் )

( இந்து)

 

http://www.virakesari.lk/article/45914

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.