Jump to content
  • 0

நான், செய்தது... சரியா... பிழையா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chefsessel gif

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும்  என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது  சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.   

ஆனால்... எனக்கு,  குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்...  நான், கடந்த வருடங்களில்  சேமித்த விடுமுறை நாட்கள்  நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு  கேட்க, இவ்வளவு நடப்பு  அடிக்கும்  இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....

இன்று...  எனது  மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து... 
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.

இரண்டு நாள்...  விடுமுறை கேட்ட எனக்கு, 
இப்போ... மருத்துவர் மூலம்  ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது  விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.

எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும்  மதிக்கப் பழக வேண்டும்  என்ற படிப்பினையை.. அவருக்கு  கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • Answers 54
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்தது சரியாக செய்யப்படாத ஒரு பிழை யான செயல்.

அலுவலக நடைமுறையையை சரியாக கணித்தபின் மேல் அதிகாரியின் குணாதிசயத்தை முன்கூட்டியே அறிந்து வைத்து அதன்படி நடப்பவராக இருந்தால்  நீங்கள் நேரடியாகவே வைத்தியரிடம் சென்று காரியத்தைச் சாதித்திருக்கவேண்டும். குறுக்கு வழியில் விடுமுறை பெற்றுக்கொண்ட உங்களின் நடத்தையை நிச்சயம் அதிகாரி புரிந்து கொண்டிருப்பார் அது உங்கள்மேல் அவருக்கு தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

நீங்கள் சேமிக்கும் விடுமுறைகளை எப்போது எடுப்பதென்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால் உங்கள் கோடைவிடுமுறையின் 3 வாரங்களை மட்டும் உங்கள் முதலாளியும் (அதிகாரியும்) நீங்களும் இணைந்து தீர்மானிக்கலாம். சிலவேளைகளில் சேமித்த லீவு நாட்களை வருடமுடிவில் ஒவர்ரைமாக கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தொழிலாளர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சில இடங்களில் உண்டு. ஏனெனில் ஒரு வருடத்தில் சேமித்த மேலதிக அல்லது மிகுதியான லீவு நாட்களை அடுத்த வருடத்துpற்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.

இது நான் வசிக்கும் நாட்டில் உள்ள நடைமுறை எனினும் இது நாட்டையும் உத்தியோகங்களையும்  தொழில் துறையையும் சார்த்து மாறுபடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2018 at 3:10 AM, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

 

On 12/11/2018 at 4:04 AM, ஈழப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் பிள்ளைகளின் அலுவலாக இருக்கலாம்.

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பத்தான் கவனித்தன், பொய் சொல்லி நானும் லீவு எடுத்திருக்கிறன், 

வாழ்த்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி என்னையும் மன்னித்துவிடுங்கள். நானும் உங்களை தவறாக திட்டி கருத்தெழுதி விட்டேன். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, colomban said:

தமிழ் சிறி என்னையும் மன்னித்துவிடுங்கள். நானும் உங்களை தவறாக திட்டி கருத்தெழுதி விட்டேன். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

டூ லேட் அடிக்கிறன் வலியை பொறுத்துக்கொள்ளுங்கள் என்பது போல இருக்கு  கொலும்ஸ்:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....

ஆகா ஆகா
நான் சொன்னது தான் சரி.

வாழ்த்துக்கள் சிறி.பிள்ளைகளின் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவென்று வரும் போதும் அதிஉச்ச சந்தோசமாக இருக்கிறோம்.
டாக்ரர் பொறியியலாளர் இதைவிட வேறு என்ன வேண்டும்.பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

சிறி எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை.வந்த  காலத்திலிருந்தே கூலி. போனால் காசு.எத்தனை மாதம் என்றாலும் எவருக்குமே முன்னறிவித்தல் கொடுக்கத் தேவையில்லை.நாளைக்கு வேணுமென்றால் போகலாம்.அடுத்த நாள் தேவையானால் நிற்கலாம்.24 மணி நேரத்தில் எப்போதும் போகலாம் வரலாம்.என்ன போனால்த் தான் பணம்.

விடுமுறையை குடும்பமாக சந்தோசமாக அனுபவியுங்கள்.

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

வேலை போனாலும் பரவாயில்லை என்று கட்டாயம் நானும் இதைத்தான் செய்து இருப்பேன். இதை விட சந்தோசம் ஒரு அப்பாவுக்கு வேறில்லை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

On 12/8/2018 at 2:01 AM, colomban said:

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லீவு எடுப்பு இன்னொரு விதத்தில் உங்களை பாதிக்காது இருக்கும் வண்ணம் அந்த சர்வ வல்லமை படைத்த இயேசுவை கேட்டுக்கொள்கிறேன்.
 யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

அது சரி இந்த கதிரை படம் எதுக்கு ... ஏதாவது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

பண்டிகை காலத்தில் முழுநேர சேவகனாக ரொம்பவும் பிசியாக இருப்பவரை சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு ஏன் சசி கூப்பிடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக நீங்கள் செய்தது சரிதான். பொய்யும் நன்மை பயக்கும் என்றால் தாராளமாய் சொல்லலாம் என்று அய்யனே சொல்லியிருக்கின்றார். உங்களுக்கு நன்மை பயந்துட்டுதுதானே பிறகென்ன விட்டுத்தள்ளுங்க......!  😁

இந்தக்குறள் இப்படியெல்லாம் பயன்படும் என்றால் அன்றே அவர் 1329 துடன் நிறுத்தியிருப்பார்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணம் சொல்லி விடுமுறை  கேடடீர்கள் . நேரடியாகவா அல்லது  தொலைபேசி எழுத்து மூலமாகாவா? ... . டாகடர்  மூலம்  விடுமுறையை சாதித்திருக்கிறீர்கள். அதிகாரிக்கு நன்றாக விளங்கி இருக்கும்.  இவன் கம்பெனிக்காக உழைக்க மாடடார் வேலை யில் பயபக்தி இல்லை  என  உங்கள்மீது ஒரு  கருப்பு புள்ளியிருக்க கூடும்.  எதற்கும் வருங் கா லத்தில்கவனமாய் இருக்கோ வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பி போடுவார்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது சரியான செயல் என சொல்ல இயலாது. இந்த மருத்துவ விடுப்பு ஒர் 'டுபாக்கூர்' விசயம் என நிச்சயம் அதிகாரிக்கு தெரிந்திருக்கும்.

விடுமுறை என்பது உரிமை அல்ல, அது சலுகை. அதை அனுமதிப்பது சூழ்நிலையை பொறுத்தது.

அதிகாரியின் மனநிலையையும், வேலைப்பளுவையும் அனுமானித்து முன்கூட்டியே அவரிடம் சொல்லி வைத்திருக்கலாலாமென்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

மிக்க மகிழ்ச்சி. கல்வியை தவிர வேறு எந்த நிரந்தரமான, பறிக்க முடியாத, கொள்ளை போகாத, வரி விதிக்க முடியாத தேட்டமும், ஒரு தந்தையால் பிள்ளைகளுக்கு வழங்க முடியாது. பாராட்டுக்கள்.

இதுக்கு லீவு தர முடியாத பண்ணாடையா  இருக்காரே (னே) உங்கட மேனேஜர். 

எரிச்சல் போல கிடக்குது, அது சரி, உங்களுக்கு தேதிகள் முன்னமே தெரிந்திருக்குமே.... ஏன்  கடைசி வரை விட்டீர்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு சிறி

இந்த  நேரத்தில் விடுமுறை  கிடைக்காது  என 

உங்களுக்கு  அனுபவத்தின்அடிப்படையில் (கன  காலமாக  அங்கு  வேலை செய்வதால்)

தெரிந்திருக்கும்

எனவே  லீவு  கட்டாயம்  உங்களுக்கு  இந்நாளில் தேவை  என்றால்

லீவை  மேலதிகாரியிடம்  கேட்டு  உங்களுக்கு இந்த நாளில் லீவு  தேவை  என்பதை  அவர் உணராதநிலையில்

மருத்துவ லீவை  நீங்கள்  கொடுத்திருக்கணும்

 

இப்பொழுது  நீங்கள் ஒன்று அவரை  மதிக்கவில்லை

இன்னொன்று  பொய் சொல்கிறீர்கள்

அடுத்தது  முக்கியமானது  சட்டத்தை  ஏமாற்றுகிறீர்கள்

 

எனவே  அதை  அவர் மறக்கமாட்டார்

கொஞ்சம்   கவனமாக இருங்கள்

அதிலும் எமது வயதில் (பென்சனை  நெருங்கும்போது)

அதிக அழுத்தங்களை  அல்லது  மன  உழைச்சலை  தந்து வெளியேற்றவே  நிறுவனங்கள் முயல்கின்றன

முயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெற்றோரின் பொறுப்பான முயற்சிக்கும், பிள்ளைகளின் அக்கறையான படிப்புக்கும்......! 🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கேட்டு கிடைக்கவில்லை என்பதால் அதே நாட்களில் சுகவீன லீவில் செல்வது கட்டாயம் மேலதிகாரிக்கு கடுப்பை உருவாக்கும். இதை எப்படியும் வேறு பக்கத்தால் பழிவாங்க முயற்சிப்பார். எனவே இதில் தமிழ் சிறி அண்ணா கெட்டித்தனமாக நடந்ததாகச் சொல்லமுடியாது.

அவசரம் லீவு தேவை என்றால் இயலுமானவரை முன்கூட்டியே அனுமதி பெறுவது நல்லது. கேட்டால் கிடைக்காது என்று சந்தேகம் இருந்தால் லீவு எடுக்கவேண்டிய நாளுக்கு முதல்நாளில் இருந்து குறைந்தது நான்கு நாட்கள் சுகவீன லீவில் போவது நல்லது. 

நான் வருத்தம் என்று சொல்லி வேலையில் இருந்து லீவு எடுப்பது குறைவு. எனது வேலையில் எப்போதும் லீவு எடுக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் லீவு தேவை என்றால்தான் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லவேண்டும். 

சுகவீன லீவு எடுக்கவேண்டுமென்றால் திங்கள் ஷேவ் செய்யாத முகத்துடன் போய் இடையிடையே இருமிக்கொண்டு இருந்துவிட்டு அடுத்த நாலு நாளும் வருத்தம் என்று சொல்லி போகாமல் விட்டிருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்தினையும் சொல்லி விடுங்கள்...உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

அதிகாரி உங்கள் விடுமுறையையை நிராகரித்ததுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்பு காரணமாக அமையாவிடின் என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் செய்தது தவறு தமிழ் சிறி. அவருக்கு வலுவான ஒரு காரணம் இருக்கலாம். அத்துடன் உங்கள் விடுமுறைக்கான காரணம் உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் பொறுப்புகளுடன் ஒப்பிடுகையில் வலு குறைந்ததாக இருக்கலாம்.

வேலையில் accountability யும் realiability யும் முக்கியம். உங்கள் செயல் உங்கள் accountability இனையும் உங்கள் மீதான நம்பிக்கையையும் அசைத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 2:54 PM, தமிழ் சிறி said:

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 

திடீர் லீவுகளுக்கு உரிய காரணம் சொல்லவேணும்.....இல்லையெண்டால் லீவுக்கு 1,2 மாதம் முன்னமே விண்ணப்பித்திருக்கலாம். குசும்புக்கு வீம்புக்கு உவருக்கு நான் ஆரெண்டு காட்டுறன் எண்டு நினைச்சால் தொழில் தர்மத்துக்கு கூடாத விளையாட்டு....இல்லாட்டி நீங்கள் செய்யிற வேலையை நிவர்த்தி செய்யக்கூடிய இன்னொரு ஆள் இருந்தாலும்  ஓரளவு ஓகே....

வேலையிடத்து சண்டித்தனங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வரைக்கும் செல்லும். பெற்றோர்களின் நற்பெயர்தான் பிள்ளைகளின் வாழ்க்கைகும் உதவும்.:)

நீங்கள் செய்தது சரி பிழைகளுக்கப்பால்........

செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து முதலாளி முதல் மேலதிகாரி வரைக்கும் அன்னியோன்யமாக நடப்பீர்களேயானால் அந்த இடத்தில் நீங்களும் முதலாளி போல் இருக்கலாம். நினைத்த நேரத்தில் லீவு எடுப்பது முதல்.......:cool:

Link to comment
Share on other sites

7ஆம் திகதி விடுமுறை வேண்டும் என்று 4 ஆம் திகதி அறிவித்தது சற்று அதிகம்.

பல வருடங்களாக இரவு பகல் அலுப்புப் பாராமல் உங்கள் நிறுவனத்துக்காக நீங்கள் உழைத்தவராகவும் அவசரமாக முக்கியமாகத் தேவையான நேரத்தில் அதிகாரி உங்கள் கோரிக்கையை உதாசீனம் செய்திருந்ததாகவும் எடுத்துக் கொண்டால் நீங்கள் செய்தது திருப்தியான காரியம்.

விடுமுறை முடிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதிகாரி முன்னால் போய் நிற்க எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை வேண்டிக் கொள்ளுங்கள். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.