Jump to content
  • 0

நான், செய்தது... சரியா... பிழையா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für chefsessel gif

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 
இவரிடம் தொடர்ந்து வாதாடினால்.. எனக்குத் தான் நட்டம் வரும்  என்று, தெரிந்து...
நீங்கள் சொல்வது  சரி, என்று சொல்லி விட்டு.. சிரித்த முகத்துடன் திரும்பி வந்து விட்டேன்.
அவருக்கும்... நான் சொன்னது சந்தோசமாக இருந்ததை.. அவரின் முக பாவனையில் அறிந்து கொண்டேன்.   

ஆனால்... எனக்கு,  குறிப்பிட்ட நாளில் விடுமுறை தேவை.
இவ்வளவிற்கும்...  நான், கடந்த வருடங்களில்  சேமித்த விடுமுறை நாட்கள்  நாற்பதுக்கு மேல்.
இரண்டு நாள்... லீவு  கேட்க, இவ்வளவு நடப்பு  அடிக்கும்  இவருக்கு, ஒரு பாடம் கொடுக்க வேண்டும் என்று....

இன்று...  எனது  மருத்துவரிடம், இருமிக் கொண்டு சென்று...
ஆறு நாட்கள்.. மருத்துவ விடுமுறை எடுத்து... 
அதனை அவருக்கு... உடனே தொலை பேசியில் அறிவித்து உள்ளேன்.

இரண்டு நாள்...  விடுமுறை கேட்ட எனக்கு, 
இப்போ... மருத்துவர் மூலம்  ஆறு நாள் லீவு கிடைத்தது மட்டுமல்லாது...
எனது  விடுமுறை நாட்களும் சேமிக்கப் பட்டுள்ளது.

எந்த.. உயர் அதிகாரியாக இருந்தாலும், அங்கு.. வேலை செய்யும்.. ஆட்களின் தேவைகளையும், உணர்வுகளையும்  மதிக்கப் பழக வேண்டும்  என்ற படிப்பினையை.. அவருக்கு  கற்பித்ததாக நான் உணர்கின்றேன்.

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • Answers 54
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் செய்தது சரியாக செய்யப்படாத ஒரு பிழை யான செயல்.

அலுவலக நடைமுறையையை சரியாக கணித்தபின் மேல் அதிகாரியின் குணாதிசயத்தை முன்கூட்டியே அறிந்து வைத்து அதன்படி நடப்பவராக இருந்தால்  நீங்கள் நேரடியாகவே வைத்தியரிடம் சென்று காரியத்தைச் சாதித்திருக்கவேண்டும். குறுக்கு வழியில் விடுமுறை பெற்றுக்கொண்ட உங்களின் நடத்தையை நிச்சயம் அதிகாரி புரிந்து கொண்டிருப்பார் அது உங்கள்மேல் அவருக்கு தப்பான அபிப்பிராயத்தையும் ஏற்படுத்தியிருக்கும்.

நீங்கள் சேமிக்கும் விடுமுறைகளை எப்போது எடுப்பதென்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. ஆனால் உங்கள் கோடைவிடுமுறையின் 3 வாரங்களை மட்டும் உங்கள் முதலாளியும் (அதிகாரியும்) நீங்களும் இணைந்து தீர்மானிக்கலாம். சிலவேளைகளில் சேமித்த லீவு நாட்களை வருடமுடிவில் ஒவர்ரைமாக கணக்கிட்டு அதற்குரிய பணத்தை தொழிலாளர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் சில இடங்களில் உண்டு. ஏனெனில் ஒரு வருடத்தில் சேமித்த மேலதிக அல்லது மிகுதியான லீவு நாட்களை அடுத்த வருடத்துpற்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.

இது நான் வசிக்கும் நாட்டில் உள்ள நடைமுறை எனினும் இது நாட்டையும் உத்தியோகங்களையும்  தொழில் துறையையும் சார்த்து மாறுபடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/11/2018 at 3:10 AM, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

 

On 12/11/2018 at 4:04 AM, ஈழப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் பிள்ளைகளின் அலுவலாக இருக்கலாம்.

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்பத்தான் கவனித்தன், பொய் சொல்லி நானும் லீவு எடுத்திருக்கிறன், 

வாழ்த்துக்கள் உங்கள் பிள்ளைகளுக்கு......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி என்னையும் மன்னித்துவிடுங்கள். நானும் உங்களை தவறாக திட்டி கருத்தெழுதி விட்டேன். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, colomban said:

தமிழ் சிறி என்னையும் மன்னித்துவிடுங்கள். நானும் உங்களை தவறாக திட்டி கருத்தெழுதி விட்டேன். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.

டூ லேட் அடிக்கிறன் வலியை பொறுத்துக்கொள்ளுங்கள் என்பது போல இருக்கு  கொலும்ஸ்:27_sunglasses:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....

ஆகா ஆகா
நான் சொன்னது தான் சரி.

வாழ்த்துக்கள் சிறி.பிள்ளைகளின் ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவென்று வரும் போதும் அதிஉச்ச சந்தோசமாக இருக்கிறோம்.
டாக்ரர் பொறியியலாளர் இதைவிட வேறு என்ன வேண்டும்.பிள்ளைகள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் எனது வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உங்களுக்கு... இந்த விடயத்தில்... வேறு அணுகுமுறை இருக்கலாம்.
அல்லது... இப்படியான சந்தர்ப்பத்தில்,  நீங்கள் எப்படி நடந்து  கொள்வீர்கள்?

சிறி எனக்கு இதில் எந்த அனுபவமும் இல்லை.வந்த  காலத்திலிருந்தே கூலி. போனால் காசு.எத்தனை மாதம் என்றாலும் எவருக்குமே முன்னறிவித்தல் கொடுக்கத் தேவையில்லை.நாளைக்கு வேணுமென்றால் போகலாம்.அடுத்த நாள் தேவையானால் நிற்கலாம்.24 மணி நேரத்தில் எப்போதும் போகலாம் வரலாம்.என்ன போனால்த் தான் பணம்.

விடுமுறையை குடும்பமாக சந்தோசமாக அனுபவியுங்கள்.

Link to comment
Share on other sites

9 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

வேலை போனாலும் பரவாயில்லை என்று கட்டாயம் நானும் இதைத்தான் செய்து இருப்பேன். இதை விட சந்தோசம் ஒரு அப்பாவுக்கு வேறில்லை. உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி ... இப்படி நாங்களும் பிழைகளை சரி என்டு நினச்சு செய்து இருக்கிறம் தானே.
தமிழ் சிறி ஒரு கடின உழைப்பாளி ..இந்த ஒரு சம்பவம் பெரிதாக எந்த கெடுதலையும் தொழில் இடத்தில 
ஏற்படுத்தாது என்று தான் நினைக்கிறன்.
ஒரு மேலதிகாரியாக இருப்பவரும் யோசிக்க வேணும்... அடேய் நான் என்னுடைய நல்ல ஒரு தொழிலாளியை அனாவசியமாக பொய் பேச வைத்து அலைக்கழித்து விட்டேனே என்று.
இதுவும் கடந்து போகும் ... இவரை நம்பி அவங்களும் இல்லை... 
அவங்களை நம்பி நம்மவரும் இல்லை. 
ஒரு டீம் லீடாக இருக்கும் நான், நான் மேட்பார்வை பார்க்கும் சக தொழிலாளர்களின் இது போன்ற இக்கட்டான சம்பவங்களை கையாளும் முறையே வேறு.
- விட்டுப்பிடிப்பது 
- அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பின் முக்கியத்தையும் , பெறுமதியையும் அடிக்கடி மெச்சுவது , நன்றியை தெரிவிப்பது .
- தேவை ஏற்பட்டால் அவர்களின் கடமைகளை சற்றேனும் பகிர்ந்து கொள்வது.
- திறந்த மனதுடன் அவர்களுடன் உரையாடுவது. (அவர்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை ஓரளவுக்கேனும் அறிந்து கொள்ள முடியும்)
- இவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது அல்லது அவர்களையே நல்ல முடியை நோக்கி நகர்த்துவது.
** வின் வின் சிட்டுவேஷன் *** 😉

On 12/8/2018 at 2:01 AM, colomban said:

ஒரு வளர்ந்த/முதிர்ச்சியடந்த மனிதன் இப்ப‌டியான ஒரு காரியம் செய்து போட்டு, இதற்கு ஒரு திரியும் திறந்து அதற்கு வாசகர்களில் அபிப்பிராயமும் கேட்கப்படுகின்றது. என்னத்தை சொல்ல?

கொழும்பான் நீங்கள் திறந்து விடும் பல திரிகளை நான் இப்படித்தான் பார்த்திருக்கிறேன் என்றால் நம்புவீர்களா பாருங்களேன். 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லீவு எடுப்பு இன்னொரு விதத்தில் உங்களை பாதிக்காது இருக்கும் வண்ணம் அந்த சர்வ வல்லமை படைத்த இயேசுவை கேட்டுக்கொள்கிறேன்.
 யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

அது சரி இந்த கதிரை படம் எதுக்கு ... ஏதாவது வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Sasi_varnam said:

யேசுவே உங்கள் குழந்தைகளின் சிறு தவறுகளை மன்னியும்.

பண்டிகை காலத்தில் முழுநேர சேவகனாக ரொம்பவும் பிசியாக இருப்பவரை சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு ஏன் சசி கூப்பிடுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சராசரியாக நீங்கள் செய்தது சரிதான். பொய்யும் நன்மை பயக்கும் என்றால் தாராளமாய் சொல்லலாம் என்று அய்யனே சொல்லியிருக்கின்றார். உங்களுக்கு நன்மை பயந்துட்டுதுதானே பிறகென்ன விட்டுத்தள்ளுங்க......!  😁

இந்தக்குறள் இப்படியெல்லாம் பயன்படும் என்றால் அன்றே அவர் 1329 துடன் நிறுத்தியிருப்பார்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணம் சொல்லி விடுமுறை  கேடடீர்கள் . நேரடியாகவா அல்லது  தொலைபேசி எழுத்து மூலமாகாவா? ... . டாகடர்  மூலம்  விடுமுறையை சாதித்திருக்கிறீர்கள். அதிகாரிக்கு நன்றாக விளங்கி இருக்கும்.  இவன் கம்பெனிக்காக உழைக்க மாடடார் வேலை யில் பயபக்தி இல்லை  என  உங்கள்மீது ஒரு  கருப்பு புள்ளியிருக்க கூடும்.  எதற்கும் வருங் கா லத்தில்கவனமாய் இருக்கோ வீட்டுக்கு அனுப்பினாலும் அனுப்பி போடுவார்.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதியில்லாமல் விடுமுறை எடுத்தது சரியான செயல் என சொல்ல இயலாது. இந்த மருத்துவ விடுப்பு ஒர் 'டுபாக்கூர்' விசயம் என நிச்சயம் அதிகாரிக்கு தெரிந்திருக்கும்.

விடுமுறை என்பது உரிமை அல்ல, அது சலுகை. அதை அனுமதிப்பது சூழ்நிலையை பொறுத்தது.

அதிகாரியின் மனநிலையையும், வேலைப்பளுவையும் அனுமானித்து முன்கூட்டியே அவரிடம் சொல்லி வைத்திருக்கலாலாமென்பது எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

 

யாழ் கள  உறவுகளிடம், அளவுக்கு அதிகமாகவே...  பேச்சு வாங்கிய பின்பும்,
லீவு தேவை, என்பதற்காக....  மருத்துவ விடுப்பு எடுத்த காரணத்தை சொல்லாமல் இருப்பது சரியல்ல.

07.12.18 அன்று... மகள், பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்து, பட்டமளிப்பு விழாவும்,
10.12.18 அன்று.... மகன்,  மருத்துவ  பட்டதாரி படிப்பை முடித்தமைக்கான  பட்டமளிப்பு விழாவும்...
இரு வேறு நகரங்களில் நடை பெற இருந்ததாலும்... குடும்பத்தினருடன் கலந்து கொள்ள வேண்டி  இருந்ததாலும்....
எனக்கு வேறு தெரிவு இல்லாமையால் மட்டுமே... மருத்துவ விடுமுறையை எடுத்து,  அந்த விழாவில் கலந்து கொண்டேன்.

என்னுடைய நிலைமையில்... நீங்கள் இருந்திருந்தாலும், இதனைத்தான் செய்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.

மிக்க மகிழ்ச்சி. கல்வியை தவிர வேறு எந்த நிரந்தரமான, பறிக்க முடியாத, கொள்ளை போகாத, வரி விதிக்க முடியாத தேட்டமும், ஒரு தந்தையால் பிள்ளைகளுக்கு வழங்க முடியாது. பாராட்டுக்கள்.

இதுக்கு லீவு தர முடியாத பண்ணாடையா  இருக்காரே (னே) உங்கட மேனேஜர். 

எரிச்சல் போல கிடக்குது, அது சரி, உங்களுக்கு தேதிகள் முன்னமே தெரிந்திருக்குமே.... ஏன்  கடைசி வரை விட்டீர்கள்?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவறு சிறி

இந்த  நேரத்தில் விடுமுறை  கிடைக்காது  என 

உங்களுக்கு  அனுபவத்தின்அடிப்படையில் (கன  காலமாக  அங்கு  வேலை செய்வதால்)

தெரிந்திருக்கும்

எனவே  லீவு  கட்டாயம்  உங்களுக்கு  இந்நாளில் தேவை  என்றால்

லீவை  மேலதிகாரியிடம்  கேட்டு  உங்களுக்கு இந்த நாளில் லீவு  தேவை  என்பதை  அவர் உணராதநிலையில்

மருத்துவ லீவை  நீங்கள்  கொடுத்திருக்கணும்

 

இப்பொழுது  நீங்கள் ஒன்று அவரை  மதிக்கவில்லை

இன்னொன்று  பொய் சொல்கிறீர்கள்

அடுத்தது  முக்கியமானது  சட்டத்தை  ஏமாற்றுகிறீர்கள்

 

எனவே  அதை  அவர் மறக்கமாட்டார்

கொஞ்சம்   கவனமாக இருங்கள்

அதிலும் எமது வயதில் (பென்சனை  நெருங்கும்போது)

அதிக அழுத்தங்களை  அல்லது  மன  உழைச்சலை  தந்து வெளியேற்றவே  நிறுவனங்கள் முயல்கின்றன

முயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிள்ளைகளுக்கு உங்களுக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பெற்றோரின் பொறுப்பான முயற்சிக்கும், பிள்ளைகளின் அக்கறையான படிப்புக்கும்......! 🌼

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லீவு கேட்டு கிடைக்கவில்லை என்பதால் அதே நாட்களில் சுகவீன லீவில் செல்வது கட்டாயம் மேலதிகாரிக்கு கடுப்பை உருவாக்கும். இதை எப்படியும் வேறு பக்கத்தால் பழிவாங்க முயற்சிப்பார். எனவே இதில் தமிழ் சிறி அண்ணா கெட்டித்தனமாக நடந்ததாகச் சொல்லமுடியாது.

அவசரம் லீவு தேவை என்றால் இயலுமானவரை முன்கூட்டியே அனுமதி பெறுவது நல்லது. கேட்டால் கிடைக்காது என்று சந்தேகம் இருந்தால் லீவு எடுக்கவேண்டிய நாளுக்கு முதல்நாளில் இருந்து குறைந்தது நான்கு நாட்கள் சுகவீன லீவில் போவது நல்லது. 

நான் வருத்தம் என்று சொல்லி வேலையில் இருந்து லீவு எடுப்பது குறைவு. எனது வேலையில் எப்போதும் லீவு எடுக்கலாம். இரண்டு வாரங்களுக்கு மேல் லீவு தேவை என்றால்தான் பல மாதங்களுக்கு முன்னரே சொல்லவேண்டும். 

சுகவீன லீவு எடுக்கவேண்டுமென்றால் திங்கள் ஷேவ் செய்யாத முகத்துடன் போய் இடையிடையே இருமிக்கொண்டு இருந்துவிட்டு அடுத்த நாலு நாளும் வருத்தம் என்று சொல்லி போகாமல் விட்டிருக்கின்றேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பிள்ளைகளுக்கு எனது வாழ்த்தினையும் சொல்லி விடுங்கள்...உங்களுக்கு எனது பாராட்டுக்கள் 

Link to comment
Share on other sites

அதிகாரி உங்கள் விடுமுறையையை நிராகரித்ததுக்கு தனிப்பட்ட வெறுப்பு விருப்பு காரணமாக அமையாவிடின் என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கள் செய்தது தவறு தமிழ் சிறி. அவருக்கு வலுவான ஒரு காரணம் இருக்கலாம். அத்துடன் உங்கள் விடுமுறைக்கான காரணம் உங்களுக்கு அலுவலகத்தில் இருக்கும் பொறுப்புகளுடன் ஒப்பிடுகையில் வலு குறைந்ததாக இருக்கலாம்.

வேலையில் accountability யும் realiability யும் முக்கியம். உங்கள் செயல் உங்கள் accountability இனையும் உங்கள் மீதான நம்பிக்கையையும் அசைத்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2018 at 2:54 PM, தமிழ் சிறி said:

எனக்கு.... இன்று  வெள்ளிக் கிழமையும் (07.12.18),  வருகின்ற  திங்கள் கிழமையும் (10.12.18)  விடு முறை தேவை என்று,
எழுத்து பூர்வமாக கடந்த  செவ்வாய்க் கிழமை  (04.12.18) விண்ணப்பித்த போது....   

எனது மேல் அதிகாரி... வருட முடிவில்,  வேலைகள் அதிகம் உள்ளதால், எனக்கு விடுமுறை தர முடியாது,  என்று  கூறி விட்டார். 

திடீர் லீவுகளுக்கு உரிய காரணம் சொல்லவேணும்.....இல்லையெண்டால் லீவுக்கு 1,2 மாதம் முன்னமே விண்ணப்பித்திருக்கலாம். குசும்புக்கு வீம்புக்கு உவருக்கு நான் ஆரெண்டு காட்டுறன் எண்டு நினைச்சால் தொழில் தர்மத்துக்கு கூடாத விளையாட்டு....இல்லாட்டி நீங்கள் செய்யிற வேலையை நிவர்த்தி செய்யக்கூடிய இன்னொரு ஆள் இருந்தாலும்  ஓரளவு ஓகே....

வேலையிடத்து சண்டித்தனங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை வரைக்கும் செல்லும். பெற்றோர்களின் நற்பெயர்தான் பிள்ளைகளின் வாழ்க்கைகும் உதவும்.:)

நீங்கள் செய்தது சரி பிழைகளுக்கப்பால்........

செய்யும் தொழிலே தெய்வம் என நினைத்து முதலாளி முதல் மேலதிகாரி வரைக்கும் அன்னியோன்யமாக நடப்பீர்களேயானால் அந்த இடத்தில் நீங்களும் முதலாளி போல் இருக்கலாம். நினைத்த நேரத்தில் லீவு எடுப்பது முதல்.......:cool:

Link to comment
Share on other sites

7ஆம் திகதி விடுமுறை வேண்டும் என்று 4 ஆம் திகதி அறிவித்தது சற்று அதிகம்.

பல வருடங்களாக இரவு பகல் அலுப்புப் பாராமல் உங்கள் நிறுவனத்துக்காக நீங்கள் உழைத்தவராகவும் அவசரமாக முக்கியமாகத் தேவையான நேரத்தில் அதிகாரி உங்கள் கோரிக்கையை உதாசீனம் செய்திருந்ததாகவும் எடுத்துக் கொண்டால் நீங்கள் செய்தது திருப்தியான காரியம்.

விடுமுறை முடிந்து நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அதிகாரி முன்னால் போய் நிற்க எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை வேண்டிக் கொள்ளுங்கள். tw_blush:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

இன்று லீவு போட்டுட்டு ஆள் அப்படி என்னத்தை செய்து இருப்பார்? இதை அறியா விட்டால் தலையே வெடிச்சுடும் போல இருக்கு....ஆள் இன்று யாழ் பக்கமும் வரவில்லை போலிருக்கு.

நான் நினைக்கிறன்......

நிழலி....   நீங்கள் என்னை... எவ்வளவு மட்டமாக நினைத் திருந்திருந்தாலும்,
அதனை... வெளிப்படையாக சொல்லுங்கள். சத்தியமாக நான்.. கோவிக்க  மாட்டேன். 
சொல்லா.. விட்டால்... என் மண்டை வெடித்து விடும் போல்.. உள்ளது ஐயா. :grin:

இந்தத் திரியில்... எத்தனை பேரிடம்,  பேச்சு  வாங்கி விட்டேன்.  
உங்களின்... பேச்சையும் கேட்காமல்  இருப்பது சரியல்ல.
நண்பர்களிடம்... உரிமையாக... பேச்சு வாங்குவதே... தனி சுகம். ⛑️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.