Jump to content

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்


Recommended Posts

சிறிலங்காவைப் புறக்கணிக்கும் சுற்றுலா பயணிகள் – ரத்தாகும் முன்பதிவுகள்

 

tourist-arrival-300x200.jpgசிறிலங்காவின் தற்போதைய அரசியல் நெருக்கடிகளை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் வருகை மற்றும் வணிக முயற்சியாளர்களின் வருகைகள் வீழ்ச்சியடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக  ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவின் அண்மைய அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர், 20 வீதமான அறை முன்பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பில் 200 அறைகளைக் கொண்ட, கோல் பேஸ் விடுதியின்  முகாமையாளர் சந்திர மகோற்றி தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக எமது விடுதி நிரம்பியிருக்கும். முன்பதிவு ஒதுக்கீடு பயன்படுத்தப்படாது என்ற அச்சத்தினால் நாங்கள் தள்ளுபடிகளை வழங்குகிறோம்.” என்றும் அவர் கூறினார்.

அதேவேளை, ”பல்வேறு விமானங்களின் முன்பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, குறிப்பாக ஐரோப்பாவில் இருந்தான பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன” என்று சிறிலங்கன் விமானசேவை வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

சிறிலங்காவின் அரசியல் குழப்பங்களை அடுத்து, இங்கு நடத்தவிருந்த கூட்டங்கள், நிகழ்வுகளை பல்வேறு நிறுவனங்களும் தென்கிழக்காசியாவுக்கு நகர்த்த ஆரம்பித்துள்ளன.

இதுகுறித்து, கருத்து வெளியிட்ட சிறிலங்கா விடுதிகள் சங்கத்தின் தலைவர் சனத் உக்வத்த,“ சிலர் ரத்துச் செய்திருக்கிறார்கள். சிலர் சிங்கப்பூர், இந்தோனேசியாவுக்கு மாற்றியிருக்கிறார்கள். கருத்தரங்குகள், கண்காட்சிகள் தொடர்பான முன்பதிவுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா சுற்றுலா ஒழுங்கமைப்பு சங்கத்தின் தலைவர், ஹிரத் பெரேரா கருத்து வெளியிடுகையில், “இந்த நேரத்தில் முன்பதிவு மெதுவாகி விட்டது, இது கவலை தருக்கிறது.

தற்போதைய நெருக்கடி இழுத்தடிக்கப்படும் போது,அதன் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஐரோப்பிய சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, எல்லா இடங்களைச் சேர்ந்தவர்களும் ரத்துச் செய்கிறார்கள்” எனஅவர் கூறினார்.

http://www.puthinappalakai.net/2018/12/07/news/35169

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

Link to comment
Share on other sites

6 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

ஓவர் ரியாக்க்‌ஷன் ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

 

36 minutes ago, Dash said:

ஓவர் ரியாக்க்‌ஷன் ???

நோ ஓவரீயாக்சன்.

ஏன் அங்க, இங்க பார்க்கிறீயள்....

அக்டோபர் கடைசி வாரத்தில் போக இருந்தேன். நாலுநாள் கொழும்பு கோட்டலில், இரண்டு நாள் யாழ் கிறீன் கிறாஸ், இரண்டு நாள், கிக்கடுவ என்று பிளான்..... கடைசீல கனடா போய் வந்தேன்.....

சிங்களம் பேச்கூடிய ஒரு பக்கா லோக்கல் பாட்டியே (?) தவிர்த்தால், வெள்ளையள் ஏன் போகப் போகினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

மகிந்த ராஜபக்ச... ஆறு  கிழமை பிரதமராக இருந்தபோதே...
எங்கடை ஆட்களும், அலறி அடித்துக் கொண்டு... சிலோனுக்கு போறதுக்கு போட்ட பிளானை, நிற்பாட்டி விட்டார்கள்.

அங்கு வட்டி வீதம் கூட என்று எத்தனையோ பேர் லட்சக் கணக்காக நிரந்தரமாக கைப்பிலிட்டுள்ளனர்.
கூட்டணிகாரர் மாதிரி இவைக்கும் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

1 hour ago, Nathamuni said:

 

நோ ஓவரீயாக்சன்.

ஏன் அங்க, இங்க பார்க்கிறீயள்....

அக்டோபர் கடைசி வாரத்தில் போக இருந்தேன். நாலுநாள் கொழும்பு கோட்டலில், இரண்டு நாள் யாழ் கிறீன் கிறாஸ், இரண்டு நாள், கிக்கடுவ என்று பிளான்..... கடைசீல கனடா போய் வந்தேன்.....

சிங்களம் பேச்கூடிய ஒரு பக்கா லோக்கல் பாட்டியே (?) தவிர்த்தால், வெள்ளையள் ஏன் போகப் போகினம்.

கனடா போவதைப் பற்றி மூச்சே காட்டேல்லை.சொல்லியிருந்தா நம்மாக்கள் செங்கம்பளம் விரித்திருப்பார்களே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

அங்கு வட்டி வீதம் கூட என்று எத்தனையோ பேர் லட்சக் கணக்காக நிரந்தரமாக கைப்பிலிட்டுள்ளனர்.
கூட்டணிகாரர் மாதிரி இவைக்கும் கொஞ்சம் படபடப்பாகத் தான் இருக்கும்.

Bildergebnis für நாமமà¯

கதிர்காமத்தில்.. கந்தன்.... கோவணத்தில  நிக்கிறது, தெரிந்தும்... 
கோவிந்தா... கோவிந்தா...  என  நாமம் போடும்...  கூட்டணிக்காரரும்,  ரொம்ப  ஜாக்கிரதையாக இருக்க வேணும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50% மேற்பட்ட Hotel முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கனடா போவதைப் பற்றி மூச்சே காட்டேல்லை.சொல்லியிருந்தா நம்மாக்கள் செங்கம்பளம் விரித்திருப்பார்களே?

முகம் காட்ட மறந்தேன்..... முகவரியை தொலைத்தேன்....

அது அல்ல..... நண்பர்கள்... உறவினர்கள்.... 

அடுத்த முறை சந்திப்போம் என நினைக்கிறேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

50% மேற்பட்ட Hotel முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டது என்று கூறினார்கள்.

உல்லாச பயணத்துறை பாரிய சரிவுதான் இலங்கை நிலவரத்தால் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.