Jump to content

யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

625.500.560.350.160.300.053.800.900.160.90-1-720x450.jpg

யாழில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திர சிகிச்சை – விசாரணைகள் ஆரம்பம்

யாழ். போதனா வைத்தியசாலையில் நோயாளர்களிடம் பணம் பெற்று சத்திரசிகிச்சைகளை முன்னெடுத்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பணம் வழங்கி சிகிச்சை பெற்றுக்கொண்ட நோயாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். போதனா வைத்தியசாலையில் தென்னிலங்கையைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் அண்மைக்காலங்களில் சிறுநீரக நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சைகளுக்கு பணம் பெற்றுள்ளார்.

குறித்த நபரினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் நோயாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும் சிலர் தமது பொருளாதார நிலைகளைக் கூறி ஒரு இலட்சத்துக்கு அண்மித்த தொகையை வழங்கியுள்ளனர்.

நோயாளர்கள் சார்பில் அவர்களது உறவினர்களை யாழ்-திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து இந்தப் பணம் தொடர்பான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மருத்துவரால் நிர்ணயிக்கப்பட்ட பணம் அவரது வங்கிக் கணக்குக்கு வைப்பிலிடப்பட்ட பின்னரே சத்திரசிகிச்சை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு பணம் செலுத்தி யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டோரில் பெண் நோயாளி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளார் எனஅறியமுடிகிறது.

வைத்தியரின் இந்தச் செயற்பாடு தொடர்பில் அறிந்த ஏனைய வைத்தியர்கள் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவரின் இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் பணிப்பாளரிடம் கோரினர்.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக அண்மைக்காலங்களில் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்ட நோயாளர்களின் விபரங்களைச் சேகரித்து அவர்களுடன் தொடர்பை வைத்தியசாலை தரப்பு ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மருத்துவருக்கு வழங்கப்பட்ட பணத்தை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி மீளப் பெற்றுத் தருவதாகவும் பாதிக்கப்பட்டோரிடம் வைத்திய சாலை தரப்பு தெரிவித்துள்ளது.

http://athavannews.com/யாழில்-நோயாளர்களிடம்-பணம/

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

 

யாழ் போதனா வைத்தியசாலையில் பெற்றுக்கொள்ள முடியாத மருந்து ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணம் நோயாளர்களிடம் கோரப்பட்டுள்ளது.

.............

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் அவர்கள் பணிப்பாளரிடம் கோரினர்.

பாதிக்கப் பட்டவர்கள் இந்த மருத்துவரிடம் போகாத காரணத்தால் மருந்து கிடைக்காதவர்களா அல்லது மருந்து கிடைத்து குணம் பெற்றவர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

பாதிக்கப் பட்டவர்கள் இந்த மருத்துவரிடம் போகாத காரணத்தால் மருந்து கிடைக்காதவர்களா அல்லது மருந்து கிடைத்து குணம் பெற்றவர்களா?

அதென்ன வைத்தியசாலையில் கிடைக்காத மருந்து ஆனால் சத்திர சிகிச்சை மட்டும் வைத்திய சாலையில்? வைத்தியசாலையில் கிடைக்காதவற்றை நோயாளர்களையே நேரடியாக வாங்கி வர சொல்வார்கள்.

அந்த வைத்தியர் மருந்தை சாட்டி காசு வாங்கி இருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பொது மருத்துவமனை இப்படிக்கேவலமாக வைத்திருக்கவேண்டும் என அங்குள்ள வைத்தியர்கள்தான் திட்டமிட்டு இந்தவேலைகளைச் செய்கிறார்கள் காரணம் இப்படியான மோசமான செயல்பாடுகளுடஙூடிய மருத்துவமனையாக இருந்தால் மட்டுமே தனியார் மருத்துவமனையிலும் அவர்கள் வீட்டு முற்றத்தில் நடாத்தும் டிஸ்பென்சரிகளிலும் காசுபாக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியார் மயம் ..

 

Link to comment
Share on other sites

சென்ற வருடம் எனது உறவினர் ஒருவர் கொழும்பில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறவேண்டி இருந்தது. சுமார் 60 ஆயிரம் ரூபா செலவாகியது. இதுவே யாழ்ப்பாணமாக இருந்திருந்தால் இரண்டு இலட்சத்துக்கும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறினார்கள். 

Link to comment
Share on other sites

யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிசெய்யும் பெரும்பாலான வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்கு, பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெரிந்தது. அங்கு நடக்கும் திருவிளையாடல்களுக்கு யார் பொறுப்பு.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான திருவிளையாடல்கள் நடப்பது நிர்வாகத்தினருக்கு தெரியாதா என்ன?:35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசியமான மருந்து ஒன்று வாங்குவதாக கூறி நோயளர்களின் குடும்பத்தினரை நம்பவைத்து இல்லாத ஒரு மருந்தை சாட்டாக வைத்து பணம் பெறப்பட்டதன் மூலம் இலஞ்சம் வாங்கப்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைத்தியமென்பது இன்று ஒரு வியாபாரமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

இன்றைய வைத்தியர்கள் பெரும்பாலானவர்கள் பணம் பறிக்கும் ரவுடிகளாகவும் கொள்ளைக்காரர்களாகவும் உள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதுதானே உலகத்திலை இல்லாத பிரச்சனையா சிலோனிலை இருக்குது? மிண்டு கொடுத்து வாழ்பவர்களுக்கு சகலதும் சகஜம்.😂 இலங்கையில் எவ்வித பிரச்சனையுமே இல்லை என நிறுவ ஒரு கூட்டம் யாழ் இணையத்தில் உள்ளது யாவரும் அறிந்ததே.🤣
    • நீங்கள் விரைந்து குணம் பெற எல்லாம் வல்ல இறையை வேண்டுகிறோம். அத்தோடு வைத்திய ஆலோசனைகளை சரியாக பின்பற்றத் தவற வேண்டாம்.. அதேவேளை வைத்தியர்களின் அலோசனைக்கு ஏற்ப உடல் தன்னை சரிப்படுத்திக் கொள்ளவில்லை என்றால்.. உடல் உளம் சொல்வதை வைத்தியரிடம் சொல்லாமல் இருப்பதையும் செய்ய வேண்டாம். 
    • இல்லை பொதுவாக வில்லனும் வில்லனும் ஒன்றாவது சகஜம்தானே. அமெரிக்காவுக்கு சோவியத் காலம் தவிர ரஸ்யா வேறெப்போதும் எதிரி இல்லைத்தான்.  ஆனால் கிழக்கு ஐரோப்பிய சிறிய தேசிய இனவழி நாடுகள், பின்லாந்து இவையின் நிலமை எப்போதும் முதலை குளத்தில் நீர் அருந்தும் மான்களின் நிலைதான். ரஸ்யாவில் ஒரு பீட்டர் த கிரேட், அல்லது அவன் த டெரிபிள், அல்லது கத்தரீன் த கிரேட், அல்லது ஸ்டாலின், அல்லது புட்டின் இருந்தால் இவர்கள் இரையாவது நிச்சயம்.
    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.