Jump to content

புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புஜாராவின் சதத்தால் சரிவிலிருந்து மீண்டது இந்தியா

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் புஜாராவின் சதத்தின் துணையுடன் இந்திய அணி பெரும் சரவிலிருந்து மீண்டு 9 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை குவித்துள்ளது.

aus1.jpg

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு 20 தொடர் சமநிலையில் முடிவடைந்த நிலையில் இன்று அடிலெய்டில் இவ் விரு அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தார். 

அதன்போடி இந்திய அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு ஆடுகளம் புகுந்த கே.எல்.ராகுலும், முரளி விஜய்யும் சொற்ப ஓட்டத்துடன் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். ராகுல் 2 ஓட்டத்துடன் ஹேசல்வுட்டினுடைய பந்து வீச்சிலும், முரளி விஜய் 11 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இவர்களின் வெளியேற்றத்தையடுத்து புஜார மற்றும் அணித் தலைவர் விராட் கோலி ஆகியோர் ஜோடி சேர்ந்தாட ஆரம்பிக்க விராட் கோலி 3 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து இந்திய அணியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதைத் தொடர்ந்து ரகானே 13 ஓட்டத்துடனும், ரோஹித் சர்மா 37 ஒட்டத்துடனும், ரிஷாத் பந்த் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 49.1 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டத்தை பெற்றுக் கொண்டது. 

அதன் பின்னர் 6 ஆவது விக்கெட்டுக்காக புஜாராவும் அஸ்வினும் ஜோடி சேர்ந்தாடி வர புஜாரா 58.4 ஆவது ஓவரில் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ததையடுத்து இந்திய அணி 150 ஓட்டங்களை கடந்தது.

இவர்கள் இருவரும் இணைந்து தொடர்ந்தும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 189 ஓட்டங்களை 6 விக்கெட் இழப்பிற்கு பெற்றது. எனினும் 73 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் அஷ்வின் 25 ஓட்டத்துடன் பேட் கம்மின்ஸின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவருக்கு அடுத்தபடியாக ஆடுகளம் நுழைந்த இஷாந் சர்மாவும் 4 ஓட்டத்துடன் ஸ்டாக்கினுடைய பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

pujara1.jpg

இந் நிலையில் 84.2 ஆவது ஓவரில் பொறுமையாக ஆடிவந்த புஜாரா 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக சர்வதேச ஒருநாள் அரங்கில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்து 123 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேற போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் மொஹமட் ஷமி 6 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

aus2.jpg

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிச்செல் ஸ்டாக், ஹேசல்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் நெதன் லியோன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

நாளை போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமாகும்.

 

http://www.virakesari.lk/article/45876

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.