Jump to content

நாடா­ளு­மன்­றத்­தில் ரணில் மீது நம்­பிக்­கைத் தீர்­மா­னம் விரை­வில்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்­ர­ம­சிங்க தலைமை அமைச்­ச­ராக செயற்­பட நாடா­ளு­மன்­றத்­தில் அவ­ருக்­குப் பெரும்­பான்மை ஆத­ரவு உண்டு என்­பதை நிரூ­பிக்­கும் நம்­பிக்­கைத் தீர்­மா­னம் ஒன்று 12ஆம் திகதி நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான முன்­ன­றி­வித்­தல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய நம்­பிக்­கைத் தீர்­மா­னம் ஒன்றை நிறை­வேற்­றி­னால் அத­னைத் தான் ஏற்­றுக்­கொள்­வார் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­தி­ருந்­தார். அதை­ய­டுத்து 5ஆம் திக­தி­யான நேற்று அத்­த­கை­ய­தொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­ப­டும் என்று கூறப்­பட்­டது. ஆனால், கூட்­ட­மைப்­பி­ன­ரைச் சந்­தித்த மறு­நாள் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­ன­ரைச் சந்­தித்த மைத்­திரி ஒட்­டு­மொத்த நா◌டா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் ஆத­ர­வ­ளித்­தா­லும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை தலைமை அமைச்­ச­ராக்க மாட்­டேன் என்று தெரி­வித்­தார். இதை­ய­டுத்து 5ஆம் திக­திய தீர்­மா­னம் கைவி­டப்­பட்­டது.

இந்­தப் பின்­ன­ணி­யில் நம்­பிக்­கைத் தீர்­மா­னம் ஒன்றை நிறை­வேற்­று­வ­தற்­கான முன்­ன­றி­வித்­தலை ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சஜித் பிரே­ம­தாச, ரவி கரு­ணா­நா­யக்க, அகி­ல­வி­ராஜ் ◌காரி­ய­வா­சம், லக்ஸ்­மன் கிரி­யெல்ல மற்­றும் ராஜித சேனா­ரத்ன, பழனி திகாம்­ப­ரம், மங்­கள சம­ர­வீர, ரிசாத் பதி­யு­தீன் ஆகி­யோர் இணைந்து இந்­தத் தீர்­மா­னத்­துக்­கான முன்­ன­றி­வித்­தலை வழங்­கி­யுள்­ள­னர்.

இந்த முன்­ன­றி­வித்­த­லில் திகதி குறிக்­கப்­ப­ட­வில்லை என்­றா­லும் எதிர்­வ­ரும் 12ஆம் திகதி அது நிறை­வேற்­றப்­ப­டும் என்று நம்­ப­க­மான அர­சி­யல் வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. அரச தலை­வர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைத்­த­மையை எதிர்த்து உயர் நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட வழக்கு விசா­ர­ணை­யின் மீது நாளை தீர்ப்பு வழங்­கப்­ப­ட­லாம் என்­கிற எதிர்­பார்ப்பு இருக்­கும் நிலை­யில், அதன் பின்­னர் இந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்க வச­தி­யாக முன்­ன­றி­வித்­தல் கொடுக்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது

https://newuthayan.com/story/12/நாடா­ளு­மன்­றத்­தில்-ரணில்-மீது-நம்­பிக்­கைத்-தீர்­மா­னம்-விரை­வில்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.