Jump to content

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையிலும் அரசியல்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

CH-A-Hospitil1.jpg?resize=800%2C533

சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் நியமனத்தில் உண்மையில் நடந்தது என்ன?அரசியல் தலையீடு காரணமாக வைத்தியர் ப.அச்சுதன் இடமாற்றப்பட்டாரா?

கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைத்திய பொறுப்பதிகாரியாக இருந்த வைத்தியர் பசுபதி அச்சுதன் 01.03.2018ம் திகதி சாவகச்சேரி வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகராக வடக்கு மாகாண ஆளுனரால் விஷேட நியமனம் மூலம் நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் மற்றும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையின் அபிவிருத்தி குழு கேட்டுகொண்டதற்கு இணங்க வடக்கு மாகாணசபையின் அமைச்சரவையின் ஒப்புதலுடன் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.

இன் நிலையில் கடந்த 07.11.2018ம் திகதி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் தயாளினி மகேந்திரன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டார்.

மன்னார்,முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைகளில் பணிப்பாளர் வெற்றிடமும், ஊர்காவற்துறை தள வைத்திய சாலையில் வைத்திய அத்தியட்சகர் வெற்றிடமும், முல்லைத்தீவில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெற்றிடமும் ஏற்கனவே உள்ள போதும் ஏற்கனவே வைத்திய அத்தியட்சகர் உள்ள சுமூகமாக இயங்கிவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மத்திய சுகாதார அமைச்சினால் வைத்திய அத்தியட்சகர் நியமனம் வழங்கப்படுள்ளது. மகிந்த ராஜபக்சவின் சகோதரர் சமல் ராஜபக்ச சுகாதார அமைச்சராக பதவியேற்ற பின்னர் இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இய் நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக நியமனம் பெற்ற வைத்தியர் தயாளினி மகேந்திரன் 07.11.18ம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்க வைத்தியசாலைக்கு சென்ற சமயம் ஏற்கனவே வைத்திய சாலையின் அத்தியட்சகராக இருந்த ப.அச்சுதன் கடமை நேரத்திற்கு முன்பாகவே வைத்தியசாலையை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்பட்டது. எனினும் அதில் உண்மையில்லை என வைத்தியர் ப.அச்சுதன் சி.சி.ரி.வி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்.

CH-A-Hospitil3.jpg?resize=629%2C336

பிற்பகல் 4மணிக்கு வைத்தியசாலையின் அலுவலக நேரம் நிறைவடைந்த நிலையிலும் பிற்பகல் 4.17 மணிக்கே நான் வைத்திய சாலையை விட்டு வெளியேறினேன். நான் வெளியேறிய பின்பே வைத்தியர் தயாளினி மகேந்திரன் வைத்தியசாலைக்கு வருகைதந்துள்ளார்.

புதிதாக ஒருவர் நியமிக்கப்பட்டது தொடர்பிலும் அவர் கடமைகளை பொறுப்பேற்க வருவார் என்பது தொடர்பிலும் எனக்கு எதுவிதமான அறிவித்தல்களும் கிடைக்கவில்லை என்றார்.

இந் நிலையில் வைத்தியசாலை சமூகம் சார்பில் வைத்தியர் ப.அச்சுதனை தொடர்ந்தும் வைத்திய அத்தியட்சகாரக பணியாற்ற அனுமதிக்குமாறு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சமூகம்,வைத்தியசாலையின் அபிவிருத்தி சங்கம் சார்பில் 07.11.18 அன்று காலை ஆளுநருக்கு கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இந் நிலையில் ஆளுனர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாகவும்,வைத்திய சாலை சமூகத்தின் கோரிக்கையினையும் காரணம் காட்டி இந்த ஆண்டு டிசம்பர் வரை வைத்தியர் ப.அச்சுதன் பணியினை தொடர அனுமதிக்குமாறும் இடமாற்றத்தை நிறுத்திவைக்குமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தனது செயாலாளர் இளங்கோவன் மூலம் கடிதம் ஊடாக பணித்துள்ளார்.

இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுனரின் பணிப்பிணையும் மீறி மீண்டும் நேற்று முன்தினம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக தயாளினி மகேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். ஏற்கனவே கடமையாற்றிய வைத்தியர் ப.அச்சுதன் வரணி பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரியாக இடம்மாற்றப்பட்டுள்ளார்.

வைத்தியர் ப.அச்சுதன் பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில் புதிதாக சிறுநீரக சுத்திகரிப்பு பிரிவினை அமைத்தமை, விபத்து சிகிச்சை பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவினை இயங்க வைப்பதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டார்.

வைத்தியசாலையின் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையில் துரிதகதியில் ஈடுபட்டார். இந் நிலையில் இவரை இடம்மாற்றியமை வைத்தியசாலைக்கு பாதிப்பாக அமையும் என வைத்திய சாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/2018/105755/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.