Jump to content

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்.. ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால் , இவங்க கதி என்னவாகி இருக்கும்? சிறு கற்பனை !

whatifjjayalallithaisalivetodayintamilna

டிச. 5, 2016 அவ்வளவு எளிதாக யாராலும் தமிழக வரலாற்றிலும், தமிழக அரசியலிலும் மறந்துவிட முடியாது. தனி மனுஷியாக எம்.ஜி.ஆர் உருவாக்கி சென்ற  கட்சியை வழிநடத்தி நான்கு முறை ஆட்சி அமைத்தவர், அனைவராலும் "அம்மா" என்று ஆசையாக அழைக்கப்பட்ட ஜெ ஜெயலலிதா அவர்கள் மரணம் அடைந்த நாள்.

அவருக்கு என்ன ஆனது, எப்படி இறந்தார்.. ?

75 நாட்கள் மருத்துவ மனையில் ஊசி, மருந்துகளில் சூழ்ந்திருந்த நபர் மரணமடைந்த போது எப்படி அவ்வளவு பூரிப்புடன், முகத்தில் சிறு வாட்டம் கூட இல்லாமல் இருந்தார் ? அவரது கால்கள் எங்கே... ? சிகிச்சையின் போது அவரது கால்கள் எடுக்கப்பட்டனவா ?  ஜெ ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன ?  என்று விசாரணை கமிஷன் ஒருபுறமும், நியூஸ் சேனல்கள் மறுபுறமும் இன்றளவும் அலசிக் கொண்டே தான் இருக்கின்றன.

நடந்தது என்ன ?

உண்மையில் ஜெ ஜெயலலிதா உடல்நலம் குன்றி தான் மரணம் அடைந்தாரா என்பது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...ஒருவேளை, இன்று... ஜெ ஜெயலலிதா எனும் இரும்பு மனுஷி உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தின் சூழல் எப்படி இருந்திருக்கும், சிலர் என்னென்ன செய்திருப்பார்கள், செய்திருக்க மாட்டார்கள் என்ற ஒரு சிறிய கற்பனை தொகுப்பு.

( குறிப்பு: இது யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல...)

ரஜினி !

"சிஸ்டம் "சரியில்லை என்று சொல்லி இருக்க மாட்டார். சென்ற ஆண்டு இறுதியில் அரசியிலில் குதிப்பது உறுதி என்பதற்கு பதிலாக, ரசிகர்களுடன் போட்டோக்கள் எல்லாம் எடுத்து முடித்தவுடன், மீண்டும் எப்போதும் போல " எல்லாம் ஆண்டவன் கையில தான் இருக்கு..! , நீங்க எல்லாம் வீட்டுக்கு போயிட்டு வாங்க..!"  என்று கூறி இருக்கலாம்.

எம்.ஜி.ஆர் ஆட்சி...

முக்கியமாக, எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவில் அந்த வீர ஆவேச உரை, "எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்பேன்"  போன்றவை எல்லாம் தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்காது. ஏன், அந்த விழாவிற்கு ரஜினியை  அழைத்தால் கூட சென்றிருக்க வாய்ப்பில்லை. "ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு", "யாரந்த ஏழு பேர் ? எனக்கு தெரியலையே... !" போன்ற சமாச்சாரங்கள் நடந்திருக்காது. காலா இன்னும் நல்ல வசூல் பெற்று இருக்காலம். ரஜினியின் மாஸ் இன்னும் சற்றும் குறையாமல் அதே அளவிற்கு இருந்திருக்க கூடும்.

கமல் ! 

மய்யம் உருவாகி இருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. மக்கள் கொஞ்சம், அவரது இலக்கிய ட்வீட்களில் இருந்து தப்பித்திருந்திருக்க கூடும். சார்ந்தோருக்கு அனுதாபங்கள் என்ற ட்ரெண்ட் ட்வீட், ஆல் டைம் ட்ரால் மெட்டீரியல் நெட்டிசன்களுக்கு கிடைக்காமலேயே போயிருக்கும். இந்தியன் 2 தான் எனது கடைசி படம் என்று கமல் கூறி இருக்க மாட்டார். தேவர் மகன் 2, ஏன் மருதநாயகம் கூட அவர் மீண்டும் கையில் எடுக்க வாய்ப்புகள் இருந்திருக்கலாம்.

விஜய் !

மெர்சல் படம் தமிழகத்தில் ரிலீஸுக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஏன், என்றால்... அதில் பெரும்பாலும் "மத்தியத்தை" தான் தாக்கி இருந்தனர். ஆனால், தாமரை கட்சியின் அந்த பிரமோஷன் தடைப்பட்டு போயிருக்கலாம். எனவே, 250 கோடிகள் என்பது 200 கோடிகளில் முடிந்திருக்கலாம்.

சர்கார் ! 

சர்கார் படத்தில் கோமளவல்லி, ஆளும்கட்சி இலவச பொருட்கள் விமர்சன காட்சிகள் இருந்திருக்காது என்பதை எல்லாம் தாண்டி,  சர்கார் என்ற படம் இன்னமும் ஒரு "பவுண்டட் ஸ்க்ரிப்ட்டாக" எழுத்தாளர் சங்கத்தில் உறங்கிக் கொண்டிருந்திருக்கும்.

அடுத்தத்தடுத்த 200 கோடி படங்கள் என்ற சாதனை நிகழாது இருந்திருக்கும். மெர்சலுக்கு பிறகு மீண்டும் ஒரு பைரவா, ஜில்லா வெளியாகி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற நிலை இருந்திருக்கும்.

சசிகலா & கோ !

சசிகலா ஜெ ஜெயலலிதா போன்று உருவ மாற்றம் ஏற்றிருக்க மாட்டார். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர் என்று எல்.கே.ஜி குழந்தை இன்டர்வெல் ரைமில் பேசிக் கொண்டிருந்த மாணவர்களை கிளாஸ் டீச்சரிடம் போட்டுக் கொடுப்பது போல புகார் செய்திருக்க மாட்டார். அந்த வீர சமாதி ஆவேச சபதம் நடந்திருக்காது. அப்பறம் அந்த ஜெயில்... அத நாம கடைசியில பார்ப்போம்.. அங்க தான் ட்விஸ்ட்...

தர்மயுத்தம் !

ஒருக்கட்டதில் ஜெயலலிதா அவர்களின் சமாதிக்கு யாராவது சென்றாலே அங்கே மீடியாக்கள் மைக்கும், மேகராவுமாக ஓட வேண்டிய சூழல் இருந்தது. ஏன் என்றால் அங்கே தான் கட்சிகள் உடைந்தன, பிறந்தன, யுத்தங்கள் துவங்கின. பன்னீர் செல்வம் அவர்களின் தியானமும், தர்மயுத்த போராட்டமும், ஓ.பி.எஸ் தீபா அவர்களின் கூட்டு பிரார்த்தனையும் என அப்பப்பா.... இன்னும் எத்தனை...

நான் தான் ஜெ மகள் .

அதே போல, நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று யாரும் நீதிமன்ற படி ஏறி இருக்க மாட்டார்கள். பல ஆண்டுகளாக ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார், அவர் வெளிநாட்டில் படித்து வருகிறார், அங்கேயே செட்டிலாகி விட்டார் என்ற வதந்திகள் வந்துக் கொண்டே தான் இருந்தன.

ஆனால், அவரது மறைவிற்கு பிறகு தான், நான் தான் ஜெயலலிதா அவர்களின் மகள் என்று கூறி வெளிய வந்து நீதிமன்றபடி ஏறிய சம்பவங்கள் நிகழ்ந்தன.

எச்.ராஜா !

எச். ராஜா மற்றும் அவரது அட்மின் பயல்கள் இன்டர்நெட்டிலும், தமிழக அரசியலிலும் மற்றும் மீம்களிலும் இத்தனை பேச்சுக்களுக்கு ஆளாகி இருக்க மாட்டார்கள். நாங்களும் ஹரிஹர ராஜா ஷர்மா என்கிற எச்.ராஜா பற்றி நீங்கள் அறியாத உண்மைகள் என்ற கட்டுரையை எழுதி இருக்கவே மாட்டோம்.

தமிழிசை சௌந்தரராஜன் !

"தாமரை மலர்ந்தே தீரும் "என்ற வாசகத்தை தமிழக மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள், ஏன் ஒருமுறை கூட கேட்டிருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அப்படி ஒரு வாசகத்தை தமிழசை சௌந்தரராஜன் அவர்களே கூட பேசாமல் இருந்திருப்பார். (பேப்பரில் எழுதியிருக்க கூட வாய்ப்பில்லை).

அமைச்சர்கள் !

இன்று வரையிலும் மூவ் மற்றும் வோலோனி போன்ற இடுப்பு வலி நிவாரண க்ரீம், ஸ்ப்ரேக்களை டஜன் கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு கும்புடு குருசாமி போல இருந்திருப்பார்கள். எடப்பாடி என்ற ஊர் இருப்பது சேலம் மக்களை தாண்டி தமிழகத்தில் பெரும்பாலானோர் அறிந்திருக்க மாட்டார்கள்.

சயிண்டிஸ்ட்கள் !

நீரை ஆவியாகாமல் தடுக்க தர்மாக்கோல், மலேரியா பரவுவதற்கு டெல்லி கொசுக்கள் தான் காரணம் என்ற தமிழகத்தின் சயிண்டிஸ்ட் ரேஞ்சுக்கு  அமைச்சர்கள் இருப்பது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலேயே போயிருக்கும். அவர்களுடைய பெயரும் இந்த அளவிற்கு டேமேஜ் ஆகி இருக்காது.

போராட்ட பூமி !

கடந்த இருபது, முப்பது ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் அதிக அளவிலான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதேவேளையில் தான் ஜெயலலிதாவின் மரணம் மற்றும் கருணாநிதி உடல் நலம் குன்றி இருந்து மரணம் அடைந்தார். ஒருவேளை, இவர்கள் இருவரும் ஆக்டிவாக இருந்திருந்தால் இத்தனை போராட்டங்கள் நடைப்பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை.

காளான்கள் கட்சிகள் !

எம்ஜிஆர் அம்மா தீபா, எம்ஜிஆர் ஜெஜெ, அம்மா மக்கள் முன்னேற்ற கட்சிகள் உருவாகி இருக்காது. அதே போல, நியூஸ் ஜெ நியூஸ் தொலைக்காட்சி துவங்கப்பட்டிருக்காது., நமது எம்.ஜி.ஆர் நாளேடு மட்டுமே அதிமுகவின் பிரதான நாளேடாக இருந்திருக்கும். முக்கியமாக, இது அம்மாவா என்று சந்தேகிக்க வைத்த அந்த அபூர்வ சிலையை நாம் பார்த்திருக்கவே மாட்டோம்.

சிறைவாசம் !

இன்று ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நான்காவது முறையாக முதலமைச்சராக இருந்திருக்கலாம். காரணம், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா & கோ எல்லாரும் இந்நேரம் சிறையில் இருந்திருப்பார். இல்லையேல்... இன்னும் சொத்துக் குவிப்பு வழக்கு கிடப்பிலேயே கிடந்திருக்கும்... எல்லாவற்றுக்கும் மேல், மக்கள் கொஞ்சமாவது நிம்மதியாக இருந்திருப்பார்கள், தமிழகத்தில் !

https://tamil.boldsky.com/insync/pulse/2018/what-if-j-jayalallitha-is-alive-today-in-tamilnadu-023711.html

டிஸ்கி :

எல்லாவற்றுக்கும் மேலாக செம்பு தட்ஸ்தமிழ்  திமுக - காங்கிரஸ் யால்ரா கட்டுக்குள் இருந்திருக்கும் .?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 6:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஒருவேளை ஜெயலலிதா இன்று உயிரோடு இருந்திருந்தால்.....

இரண்டு  இட்லி சாப்பிட்டதற்கு ... ஒரு கோடி 17 லட்சம்  ரூபாய்  கொடுக்க வேண்டி வந்திருக்காது. :grin:

 

 

Image may contain: one or more people and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2018 at 6:34 PM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி :

எல்லாவற்றுக்கும் மேலாக செம்பு தட்ஸ்தமிழ்  திமுக - காங்கிரஸ் யால்ரா கட்டுக்குள் இருந்திருக்கும் .?

நூற்றுக்கு நூறு வீதம் சரி....:91_thumbsup:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.