Jump to content

யாழ் தேவியிலிருந்து பிரிந்து சென்ற ரயில் பெட்டிகளால் பதற்றமடைந்த பயணிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் நேற்று நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பு நோக்கி பயணித்த  யாழ்தேவி ரயில் ஈரப்பெரியகுளம் ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ரயில்ப் பெட்டியின் கடைசி இரு பெட்டிகளும் துண்டித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

train.jpg

 இதன்போது இறுதி பெட்டியில் கடமையிலிருந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஒருவர் கீழே வீழந்து காயமடைந்துள்ளார். இவ்விபத்து குறித்து அனுராதபுரம் ரயில்  நிலையத்தினர்  விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற யாழ் தேவி ரயில்  வவுனியா ரயில்  நிலையத்தினை சென்றடைந்து நண்பகல் 11.30 மணியளவில் கொழும்பை நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது. 

 

 

 

அதன்போது ஈரப்பெரியகுளம் ரயில்  நிலையத்திற்குச் செல்லும் வழியில் திடீரென்று ரயில் பெட்டியின் கடைசிப் பெட்டிகள் இரண்டு தனியாக துண்டித்து பிரிந்துள்ளது. இதனை அவதானித்த கடைசிப் பெட்டியிலிருந்த ரயில்  நிலைய உத்தியோகத்தர் தன்னிடமிருந்த சிவப்புக் கொடியினை அசைத்து ரயிலுக்கு சைகை காட்டியுள்ளார். 

 

உடனடியாக ரயில் நிலையத்தினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சித்த ரயில் சாரதி பல முயற்சியின் பின்னர் ரயிலை நிறுத்தியுள்ளார். துண்டித்த இரு பெட்டிகளும் வேகமாச் சென்று ஒன்றுடன் ஒன்று  இரண்டும் மோதிய வேகத்தில் சிவப்புக்கொடியுடன் கடைசிப் பெட்டியில் நின்றிருந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தர் தூக்கி வெளியே வீசப்பட்டு தலையில் காயமடைந்துள்ளார். அத்துடன் கடைசிப் பெட்டியிலிருந்த சிறுவர்கள் உட்பட சிலருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

துண்டித்த பெட்டியை திரும்பவும் இணைத்துக்கொண்டு அனுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில்  அனுராதபுரம் ரயில்  நிலையத்தில் இவ்விபத்து குறித்து ரயில்  சாரதி முறைப்பாட்டினை மேற்கொண்டார். காயமடைந்த ரயில்  திணைக்களத்தின் உத்தியோகத்தருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு ரயில்  கொழும்பை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ளதாக ரயில்  நிலையத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.http://www.virakesari.lk/article/45752

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் அன்பளிப்பு.. ஹிந்தியாவின் ரயில் பாதை.. சிங்களத்தின் சேவை.. என்றால்.. இதெல்லாம் சகஜமே. ?

Link to comment
Share on other sites

தமிழ் மண்ணை விட்டு வரமுடியாது என்று அந்த பெட்டிகள் அடம்பிடித்துள்ளன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, போல் said:

தமிழ் மண்ணை விட்டு வரமுடியாது என்று அந்த பெட்டிகள் அடம்பிடித்துள்ளன.

 

யாழ்ப்பாணத்தான் பிரிவினை கேட்டான் என்றால் இப்ப ரயில் பெட்டிகளும் பிரிவினை கேட்குதுகள்....உந்த ரயில் பெட்டிகளுக்கு இணைந்திருப்பது எப்படி என புனர்வாழ்வு வழங்க  வேண்டும் .....சிங்க லே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயந்திர கோளாறு விமானத்திலே ஏற்பட்டு அது வீழ்வதும் வெடிப்பதும் வெளிநாடுகளில் சகஜம் வளர்ச்சியடைந்த நாடுகள் இப்படி இருக்க  இந்த பழைய கால ரெயில் பெட்டி மட்டும் கழண்டது எப்படியெல்லாம் நம்ம ஆட்களை யோசிக்க வைக்கிறது :grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.