Jump to content

முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் ; பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

47304409_2009620255790963_4974668775652589568_o.jpg?_nc_cat=109&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=79c0b31d8655d218d678ec3fc81db573&oe=5C6B0214

முஸ்லிம்களின் தாய்மொழியாக  சிங்கள மொழியை ஏற்கவேண்டும் என பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

பேருவளை நகர சபை தலைவர் மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டுள்ள வாசு

 

தற்போது நாட்டின் இறையாண்மைக்கு ஆப்பு வைக்க சில சக்திகள் செயற்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்பிற்கு மதிப்பு வழங்கும் இது போன்ற செயற்பாடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.madawalaenews.com/2018/12/blog-post_4.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் ....100 வருடத்தின் பின்பு சிங்களவர் றீல் விடமுடியாது.....சிங்கள லே என்று.....

சிறிலங்கா முஸ்லீம்கள் தங்களை சிங்கள முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்....


என்ன தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்று அரசியல் பேசும் எம்மவ‌ருக்குத்தான் கொஞ்ம் கடுப்பாய் இருக்கும்....

எனைய உலக‌ மொழியை தாய்மொழியாக கொண்டவர்களில்   முஸ்லிம்கள் இருக்கின்றனர் ....முதல் முறையாக சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்ட முஸ்லீம்கள் உருவாகின்றனர்....

.

Link to comment
Share on other sites

நல்ல விடயம் இவர்கள் சிங்களவர்களாகினால் தமிழர்களுக்கு மட்டும்தான் தீர்வுதேவை விட்டது கறுப்பு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு மொழி முக்கியமில்லை மதம்தான் சிங்களவரின் சாதிக்குள் இன்னும் ஒரு சாதி கூடப்போகின்றது வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் கொள்ளுபடபோகும் இரண்டு தரப்புக்கும் .

Link to comment
Share on other sites

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

4 minutes ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

அவர்களின் மதம்  ஏன்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

நீங்கள் கேட்ப்பது புரியவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

இந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

47304409_2009620255790963_4974668775652589568_o.jpg?_nc_cat=109&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=79c0b31d8655d218d678ec3fc81db573&oe=5C6B0214

எவ்வளவு கெதியாய் செய்து முடிக்கேலுமோ அவ்வளவு கெதியாய் செய்து அலுவலை முடியுங்கப்பா.....துலைஞ்சுது ஒரு சோலி....tw_glasses:
 

நல்ல முஸ்லீம் சகோதரங்கள் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

9 hours ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

 

10 hours ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளில் மட்டுமல்ல இதே நிலை பொலநறுவை, குருநாகல், அனுராதபுரம் பகுதிகளிலும்  நடந்துள்ளது. இப்பகுதியில் பரந்து வாழ்ந்த தமிழர்கள் கல்விக்காக போதியளவு தமிழ் மொழிப்  பாடசாலைகள் இல்லாமையும், காணி வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை வழங்கியமையும், இப்பகுதிகளில் தமிழர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமையும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு கைகொடுத்துள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, போல் said:

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

 

சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளில் மட்டுமல்ல இதே நிலை பொலநறுவை, குருநாகல், அனுராதபுரம் பகுதிகளிலும்  நடந்துள்ளது. இப்பகுதியில் பரந்து வாழ்ந்த தமிழர்கள் கல்விக்காக போதியளவு தமிழ் மொழிப்  பாடசாலைகள் இல்லாமையும், காணி வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை வழங்கியமையும், இப்பகுதிகளில் தமிழர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமையும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு கைகொடுத்துள்ளது. 

இதே நிலைமைதான் வடகிழக்கு பிரதேசங்களுக்கும் வந்து கொண்டிருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, போல் said:

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

ஆங்கிலேயர் வந்த போது மதம் மாறினோம்.இப்போ மொழி.

Link to comment
Share on other sites

7 minutes ago, குமாரசாமி said:

இதே நிலைமைதான் வடகிழக்கு பிரதேசங்களுக்கும் வந்து கொண்டிருக்கின்றது.

நூற்றுக்கு நூறு உண்மை!

ஒருசிலருக்குத் தான் இந்த யதார்த்தம் விளங்குகிறது என்பது தமிழரின் பலவீனமாக உள்ளது.

வவுனியா தெற்கு, வவுனியா கிழக்கு, வவுனியா மேற்கு, மணலாறு (வெலிஓயா), கொக்கிளாய், தம்பலகாமம், மன்னம்பிட்டி (வலிகந்த), அம்பாறை, உடப்பு, முந்தல், புத்தளம் பகுதிகளில் ஏற்கனவே நடக்கிறது.

 

Link to comment
Share on other sites

7 hours ago, ரதி said:

இந்து 

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களர் அனைவரும் உலகின் மூத்த மொழியும் இலங்கையின்ர தொன்மையான மொழியான அரபியை படிக்குக" என்று தீர்மானம் நிறைவேற்றாததையிட்டு சந்தோச பட வேண்டும் ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

ஓம் கண்டிருக்கிறேன் சுத்தமான தமிழ் சிங்களவர்கள் அடித்துக்கூட கேட்டால் கூட தமிழர் என்று சொல்லாதவர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு சிலாபத்தை சேர்ந்த பெண் இருக்கிறார்...அவர் திருமணம் செய்தது ஒரு சிங்களவரை ...அவர் சிங்களம் மட்டும் தான் கதைப்பார் தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கத் தெரியாது ,இத்தனைக்கும் அவரது தாயார் தமிழ் ...இப்படி எத்தனையோ தமிழர்கள் தங்கட இனம் மறந்து,மொழி மறந்து வாழ்ந்து கொண்டு இருக்குறார்கள்...மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ...யுத்தத்திற்கு முன்னரான நிலைமையே இப்படி என்டால் நிகழ்காலத்தில் ,எதிர்காலத்தில் தமிழரின் நிலைமை? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

Link to comment
Share on other sites

16 hours ago, Jude said:

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

முன்னால் அமைச்சராக இருந்து தற்கொலை தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே யும் இப்படியானவர் தானே? ஆனால் அவர் தமிழை சரளமாக கதைப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

அப்பப்ப வந்து போனாலும் சடார் என்று எதையாவது சொல்லிட்டும் போறியள் உன்மையை:)

Link to comment
Share on other sites

77 கலவரத்தின்போது பல தமிழர்கள் தென்பகுதியிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டு மட்டக்களப்பிற்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் பெயர்தான் தமிழே தவிரச் சிங்களம் தவிர்ந்த ஒரு சொற்கூடத் தமிழ் தெரியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎5‎/‎2018 at 7:47 PM, சுவைப்பிரியன் said:

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்டாலும்,ஊரில் இருப்பவர்களால் தான் நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்...இங்குள்ள பிள்ளைகள் தமிழ் கதைக்காட்டில்  அது இனத்தை  பாதிக்கும் தான்...ஆனால் அங்குள்ள மக்கள் தமிழே கதைக்கா விட்டால் தமிழர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்டாலும்,ஊரில் இருப்பவர்களால் தான் நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்...இங்குள்ள பிள்ளைகள் தமிழ் கதைக்காட்டில்  அது இனத்தை  பாதிக்கும் தான்...ஆனால் அங்குள்ள மக்கள் தமிழே கதைக்கா விட்டால் தமிழர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்

மிக்க நன்றி ரதி,

அண்மையில் நீங்கள் எழுதிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்த கருத்து இது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.