Jump to content

வேடமில்ல நட்பின் வேந்தன் புதுவைக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இந்த நடுநிசியில் ஒலமிடும் ஆந்தைகளின்

சாபங்கள் செவி மடுத்தேன்.

உங்கள் கவியையுமா

கோத்தா சிறையெடுத்தான்?

நானும் சபிக்கின்றேன்

எங்கள்  கவியை சிறையிட்ட பாதகன்மேல்

இடியாய் நரகம் இறங்க அறம்பாடுகிறேன்.


 

ஆசை மச்சான் புதுவை, . ”விமர்சிக்கிறாய் சகிக்கிறோம்

எனெனில் நீ தேசபக்தன்”

என்ற உன் தோழமையை


 

எண்ணிக் கரைகின்றேன்

தோழமையே உனது மொழி

தோழமையே உனது வழி

தோழமையே உன் கவிதை

தோழமையே தத்துவமாய்

எனக்கு தோழ்கொடுத்த பெருவாழ்வே

வேடமில்ல நட்ப்பின் வேந்தனே

ஊதுகிறேன் சங்கு

உனைத் தின்ற கோழைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நினைவுகளையும்...காலம் தின்று ஜீரணித்து விடுகின்றது!

அந்த நினைவுகளுடன்...புதுவையின் நினைவுகளும்...கலந்து விடாதிருக்க...உங்கள் கவிதைகள்...நிச்சயம் துணை புரியும் என்பது எனது நம்பிக்கை!

 

அறம் பாடும் கவிஞனுக்கு....நன்றிகள்!

Link to comment
Share on other sites

எனக்கும் அவனுக்கும் சின்ன வயசுகளில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சாதி எதிர்ப்பு  போராடங்களில் துளித்த நட்பும் விருட்சமாய் நிழல்பரப்பிய தோழமையும் 

நன்றி புங்கையூரான்.

 

என் முகநூலில் இருந்து

வல்வை சகாறா பொயட் உங்களை அறியக்கூடிய ஆரம்ப கட்டங்களில் உங்கள் மீது எனக்கு அதிக சினம் இருந்தது. காரணம் நீங்கள் எழுதிய கவிப்பாக்களில் பெண்கள் தொடர்பான வர்ணனைகள் என்றும் சொல்லலாம் அதனால் உங்களைப்பற்றி தோழமைக்கவிஞர்(தேசிய கவிஞர்) என்னுடன் உரையாடும்போது எனக்கு அதீத கோபம் வரும். கோபித்துக்கொள்வேன் அவரோ வாய்விட்டுச்சிரிப்பார். என்னை பேசவிட்டு வேடிக்கை செய்துவிட்டு விடயத்திற்கு வருவார். அடீ... அவன் என் நண்பனடி நாங்கள் எல்லாம் ஒரே ரகம் (கவிஞர்) இந்தப் போராட்டத்தின் வெற்றிகள் உருவாக்கப்பட்ட பிற்பாடு நானும் கூட அப்படித்தான் கவிதை எழுதுவேன். அப்போது நீ என்ன என்னையும் திட்டுவாயா? என்று கேட்டு வாயடைக்க வைத்ததுடன் உங்களுடனான ஒரு நட்பு வெளியை நான் பேண வேண்டும் என்று தொடர்ந்தும் உங்கள் கவிதைகளை உன்னிப்பாக கவனிக்கும்படி ஆர்வப்படுத்தியவரும் அவர்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரை நினைவு கூருவதற்கு உரிய அருமையான கவிதை. அதில் உங்களின் தோழமை தெறிக்கின்றது, ஆயினும் இனிமேல் தயவுசெய்து அறம் பாடாதீர்கள்.அது பூமராங் மாதிரி  இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் எறிந்தவரிடமே வந்து நிக்கும். நன்றி ஐயா.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.