Jump to content

பேய் மழையை, வெள்ளத்தை தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
டியாகோ ஆர்குடாஸ் ஒர்டிஸ் பிபிசி
 
பேய் மழையையும், வெள்ளத்தையும் தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

சில நிமிடங்கள் பெய்த மழைக்கு சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலைமையும், சில மணிநேரங்களுக்கு மழை பெய்தால் வீடே வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழ்நிலையும் தமிழகம் உள்பட பெரும்பாலான இடங்களில் நிலவி வருகின்றன.

 

இந்நிலையில், உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றும், அதிக மக்கள் தொகை நெருக்கமுள்ள நகரங்களில் முதலாவதாகவும், இயற்கை பேரிடர்களை அதிகம் சந்திக்கும் நகரமாகவும் விளங்கும் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளப்பாதிப்பை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இந்த கட்டுரை விளக்குகிறது.

ஜப்பானின் பொறியியல் வியப்புகளில் ஒன்றாக கருதப்படும், டோக்கியோ நகர சுரங்க வெள்ளநீர்க் கால்வாயை நோக்கி செஸில்லா டார்டஜடா என்ற பெண் நீண்ட படிக்கட்டுகளில் செல்கிறார். சில நிமிட நடைப்பயணத்துக்கு பின்னர் செஸில்லா சுமார் 500 தூண்களை கொண்ட வெள்ளப்பாதிப்பு தடுப்பு சுரங்கத்தின் தரைப்பகுதிக்கு செல்கிறார்.

 

"இந்த மிகப் பெரிய அமைப்பிற்குள் உங்களை நீங்களே மிகவும் சிறியதாக உணருவீர்கள்" என்று சிங்கப்பூரை சேர்ந்த நீர் மேலாண்மை நிபுணரான செஸில்லா கூறுகிறார். "அந்த பாதாளத்தை நீங்கள் பார்த்தவுடன், வெள்ளத்தை எதிர்கொள்ள டோக்கியோ தன்னை எவ்வாறு தயாராக வைத்துள்ளது என்பது உங்களுக்கு புரியும்" என்று அவர் கூறுகிறார்.

பேய் மழையையும், வெள்ளத்தையும் தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

வடக்கு டோக்கியோ வெள்ளப்பாதிப்பில் சிக்குவதை அறவே தடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள இந்த சுரங்கமானது தரைப்பகுதியிலிருந்து சுமார் 22 மீட்டர்கள் ஆழத்தில், 6.3 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களாக ஜப்பானின் தலைநகரமான டோக்கியோ தனது பலமிக்க வெள்ளத்தடுப்பு அமைப்பின் மூலம் புயல்கள் முதல் கனமழை வரை பல்வேறு காலநிலைகளை சமாளிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளது. ஆனால், தற்போது உலக வெப்பமயமாதலின் விளைவாக கணிப்பை மீறி தொடர்ந்து மாறிவரும் வானியல் நிகழ்வுகளை எதிர்கொள்ளும் வகையில் மீண்டுமொருமுறை அந்நகரம் தன்னைத்தானே மறுமதிப்பீடு செய்து வருகிறது.

டோக்கியோவின் நீண்ட வரலாற்றின் எல்லா பக்கங்களிலும் அந்நகரம் எவ்வாறு வெள்ள பாதிப்புகளை சந்தித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும்.

"இப்படிப்பட்ட இடத்தில் இவ்வளவு பெரிய நகரத்தை நிர்மாணிப்பதற்கு யார் முடிவு செய்தது என்று எனக்கு தெரியவில்லை" என்று இருபது வருடங்களுக்கு மேலாக நீர் மேலாண்மை துறையில் பணியாற்றி வரும் செஸில்லா நகைச்சுவையாக கூறுகிறார்.

பல நூற்றாண்டுகளாக டோக்கியோ நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்டாலும், தற்போதுள்ள வெள்ளத்தடுப்பு அமைப்புமுறை உலகப் போருக்கு பின்னர்தான் தொடங்கியது. 1947ஆம் ஆண்டு டோக்கியோவை கத்லீன் என்ற சூறாவளி தாக்கியதில் கிட்டத்தட்ட 31,000 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததுடன், 1,100 பேர் உயிரிழந்தனர். பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் கணோகவா என்ற சூறாவளி ஒரே வாரத்தில் 400 மிமீ மழை டோக்கியோவில் பொழிந்ததால் அந்நகரம் முழுவதுமே தண்ணீரில் மிதக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அடுத்தடுத்து ஏற்பட்ட சூறாவளிகள் டோக்கியோவை புரட்டிப்போட்டதால் அந்நாட்டு அரசாங்கம் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது.

"உலகப் போர் விளைவித்த மோசமான பாதிப்புகளிலிருந்து மீண்டு வந்த 1950-1960க்கு இடைப்பட்ட காலத்தில் கூட ஜப்பான் அரசாங்கம் தனது வருடாந்திர தேசிய நிதி ஒதுக்கீட்டில் சுமார் 6-7 சதவீதத்தை பேரழிவு மற்றும் ஆபத்து குறைப்பு பணிகளுக்காக முதலீடு செய்தது" என்று ஜப்பானிலிலுள்ள ஜிக்கா என்னும் பன்னாட்டு நிறுவனத்தின் பேரிடர் தடுப்பு நிபுணரான மிக்கி இனவொக்கா கூறுகிறார்.

டோக்கியோ நகர திட்டமிடுதலில் ஈடுபடுகிறவர்கள் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு எப்போதுமே தயாராக இருக்கவேண்டியுள்ளது. ஏனெனில், நதிகள் பாய்வதற்கு எதிர்பக்கத்தில் அதிகளவில் மழை பொழிந்தால் அதன் கரைகள் உடைந்து, அருகிலுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் வாய்ப்புள்ளது. அதுவே நகரத்தின் மையப்பகுதியில் கனமழை பொழிந்தால், அங்குள்ள வடிகால் அமைப்புகளில் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, நகரின் கடலோர பகுதிகள் சுனாமியால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் எவ்விதமான பாதிப்புக்களை ஏற்படுத்த கூடும் என்று நினைத்துப் பாருங்கள்.

பேய் மழையையும், வெள்ளத்தையும் தாங்கும் டோக்கியோவின் ரகசியம் என்ன?படத்தின் காப்புரிமை Getty Images

இடைவிடாமல் தாக்கிய இயற்கை பேரிடர்களை போன்றே, பல தசாப்தங்களாக தொடர்ந்து திட்டமிட்டு ஜப்பான் தற்போது வெள்ளப்பாதிப்புகளை தடுக்கக்கூடிய பல அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகளுடன் தைரியத்துடன் காட்சியளிக்கிறது. டோக்கியோ நகரத்தில் எரிவாயு குழாய்களும், சுரங்க ரயில்பாதைகளும் ஒருபுறமிருக்க, சாலையின் நடுவே ஜப்பானின் பொறியியலுக்கு உதாரணமாக திகழும் இந்த சுரங்கங்கள் அமைந்துள்ளன.

சுமார் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், 13 ஆண்டுகால உழைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்க அமைப்பு உலகின் மிகப் பெரிய வெள்ளத்தடுப்பு அமைப்பாக விளங்குகிறது.

"ஜப்பான் கடினமான தருணங்களிலிருந்து பாடம் கற்பதை நம்பும் நாடு" என்று கடந்தாண்டு இந்த அமைப்பை நேரில் பார்வையிட்ட செஸில்லா கூறுகிறார்.

டோக்கியோவில் வடக்குப்பகுதியிலுள்ள சிறிய மற்றும் நடுத்தரமான ஆறுகளிலிருந்து தண்ணீரை உறிஞ்சும் இந்த சுரங்கங்கள் தொலைதூரத்திலுள்ள அதிக கொள்ளவுள்ள தண்ணீரையும் பிடிக்கக்கூடிய எடோ என்னும் ஆறுக்கு நீரை எடுத்துச்செல்கிறது.

அதாவது டோக்யோவிலுள்ள ஏதாவதொரு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதன் நீளத்துக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கத்தின் உருளை வடிவ நுழைவுப் பகுதிகள் திறந்து தண்ணீரை உறிஞ்ச ஆரம்பிக்கும். இந்த சுரங்க அமைப்பின் மையப்பகுதியை தண்ணீர் அடையும்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைகிறது. பிறகு, சுரங்கத்தின் மைய பகுதியிலிருந்து 'எடோ' ஆற்றை நோக்கி நீரானது பம்புகளின் மூலம் உந்தப்படும்.

வெள்ளத்தடுப்பு அமைப்பின் கட்டுப்பாட்டு அறைபடத்தின் காப்புரிமை Carl Court Image caption வெள்ளத்தடுப்பு அமைப்பின் கட்டுப்பாட்டு அறை

தற்போதுள்ள அமைப்புகளின் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 50 மில்லி மீட்டர் மழை பெய்தாலும் அதை தாங்க முடியும் என்று டோக்கியோ நகர அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருந்தபோதிலும், ஜப்பான் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாறிவரும் மழைப்பொழிவின் வீரியத்தை தாக்குப்பிடிக்கும் வகையில், டோக்கியோவின் சில பகுதிகளில் 65 முதல் 75 மில்லி மீட்டர் வரையிலான மழைப்பொழிவை தாங்கும் வெள்ளத்தடுப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

உலக வெப்பமயமாதலால் டோக்கியோ மட்டுமின்றி நியூயார்க், ஷாங்காய், பாங்காங் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை எதிர்நோக்கியுள்ளன. வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உலக நாடுகள் டோக்கியோவை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/global-46418271

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. கேரள மாநிலத்தில் 3-ம் கட்டமாக வரும் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சோதனை நடத்தப்பட்டு, தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காசர்கோடில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் மோக் போல் (Mock Poll) நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜென்ட் காங்கிரஸ் சின்னத்தில் வாக்களித்துள்ளார். அப்போது விவி பேட் மிஷினில் காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீதும், அடுத்ததாக பா.ஜ.க-வின் தாமரை சின்னம் பொறித்த ரசீதும் பதிவாகி வந்துள்ளது. இதையடுத்து எந்த சின்னத்திலும் ஒருமுறை வாக்களித்தால் இரண்டு வாக்குகள் பதிவாவதாகவும், அதில் மற்றொரு வாக்கு பா.ஜ.க-வுக்கும் பதிவாவதாக புகார் எழுந்தது. மோக் போலிங்கில் முதல் ரவுண்டில் இது போன்ற பிரச்னை எழுந்ததாகவும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் தலா ஒரு ஒட்டு வீதம் செலுத்தியபோது, பா.ஜ.க வேட்பாளருக்கு கூடுதலாக ஒரு வாக்கு பதிவானதாகவும், முதல் மூன்று ரவுண்டுகளில் அப்படி நடந்ததாகவும், பின்னர் அது சரிசெய்யப்பட்டதாகவும் காங்கிரஸ் கூட்டணியில் காசர்கோடு பூத் ஏஜென்ட்டாச் செயல்படும் செர்க்களா நாசர் ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.         மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாதிரிப் படம் அதே சமயம், முதலில் உள்ள வேட்பாளரின் சின்னம் ஒரு டம்மி ரசீதாக பதிவாகும் எனவும், அந்த ரசீது மற்ற ரசீதுகளைவிட அளவில் சிறியதாக இருக்கும் எனவும, அது எண்ணுவதற்கு தகுந்தது அல்ல என ரசீதிலேயே குறிப்பிடப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் பொருத்தப்பட்டுள்ள விவி பேட் ரசீதுகளையும் எண்ண வேண்டும் என பிரசாந்த் பூஷன் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காசர்கோடில் மோக் போலிங்கில் ஏற்பட்ட குழறுபடி குறித்தும் கோர்ட்டின் கவனத்துக்கு கொண்டுசென்றிருந்தார்.     தேர்தல் ஆணையம் அது குறித்து இன்று மதியத்துக்கு மேல் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குழறுபடி செய்ய வாய்ப்பே இல்லை எனவும், காசர்கோடில் பா.ஜ.க-வுக்கு அதிக வாக்குகள் பதிவாவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும், ஒரு பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலே பிரசாந்த் பூஷன் அதை தெரிவித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறி உள்ளது. மேலும், காசர்கோடு கலெக்டர் மற்றும் ரிட்டனிங் ஆபீசர் ஆகியோர் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சிகள் அடிக்கடி சந்தேகம் கிளப்பிவரும் நிலையில், மோக் போலிங்கில் எழுந்துள்ள குளறுபடி சர்ச்சையாகியுள்ளது. இ.வி.எம்-மில் பாஜக-வுக்கு அதிக வாக்குகள் பதிவாகின்றனவா? - சர்ச்சையும் தேர்தல் கமிஷன் விளக்கமும்! | Reports of EVMs showing ‘extra votes’ during mock poll in Kerala are false: ECI informs Supreme Court - Vikatan
    • தம்பி கணிதத்தில் வீக் என்று சொன்ன மாதிரி இருந்ததே?
    • எதையும் கணித ரீதியில் சொன்னால் இலகுவாய் புரியும்🤣
    • 52 வீதமான மக்கள் போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது. 74 வீதமான மக்கள் போரை வீரும்பவில்லை என்று உங்களுக்கும் கபிதானுக்கும் விளங்குகிறது.  🙂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.