Jump to content

பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா? என்ன சொல்கிறார்கள் முன்னாள் போராளிகள்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
இலங்கைபடத்தின் காப்புரிமை LAKRUWAN WANNIARACHCHI

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று, அந்த இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

 

வவுனியாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் கூறினார்.

எவ்வாறாயினும், சில தனிப்பட்ட நபர்கள் தமது நலன்களுக்காக பொட்டு, அம்மான் உயிரோடு இருப்பதாகக் கூறுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 

ஆயினும், புலிகள் அமைப்பின் தலைவர் எவரும் தற்போது உயிருடன் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைபடத்தின் காப்புரிமை ISHARA S. KODIKARA

"பொட்டு அம்மான் உயிருடன் இருப்பதாக தற்போது கூறுகின்றவர்கள், எதிர் காலத்தில் தமது நலன்களுக்காக புலிகளின் ஏனைய தலைவர்களான பால்ராஜ் அல்லது கிட்டு போன்றோரைக் கூட உயிருடன் உள்ளார்கள் என்று கூறுவார்கள்" எனவும், 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் துளசி கூறினார்.

மேலும், புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது, அவர்களுடன் முள்ளிவாய்க்காலில் இணைந்து நின்று போராடிய, இப்போதைய புனர்வாழ்வு பெற்றுள்ள முன்னாள் போரளிகளுக்கே தெரியும் எனவும், புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் கட்சியினுடைய ஊடகப் பேச்சாளர் கே. துளசி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் உயிருடன் உள்ளானர் என்றும், அவர் நோர்வேயில் வசித்து வருவதாகவும் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த, அந்த அமைப்பின் முன்னாள் தளபதி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருந்த நிலையிலேயே, 'ஜனநாயகப் போராளிகள் கட்சி'யின் ஊடகப் பேச்சாளர் துளசி மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-46423840

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் யாரும் இருந்தாலும் வரவும் கூடாது அது தான் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு நல்லது இருவர் சுட்டுக்கொல்ப்பட்டதற்கு மட்டக்களப்பு எப்படி சோதனை (வாகனங்கள் , போகும் பயணிகள்) என்பது நான் கண்டது  இது எங்களுக்கு பழகிப்போன ஒன்று இளையவர்கள் பாவம் அவர்களுக்கு கொஞ்சம் கடுப்பாகும் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் எனும் செய்தி புலம்பெயர் தேசத்தில் சிலருக்குச் சந்தோசமாகவும் பலருக்கு உதறலாகவும் இருக்கும் சந்தோசமாக இருப்பவர்கள் ஆகா புலத்தில் வானவேடிக்கை நடக்கப்போகுது எனவும் உதறல் கொள்பவர்கள் அடிச்ச காசு பணம் புலிகளது சொத்து இவைகளில் கைவைக்கப்பொகினம் எனவும் இருப்பார்கள்.

சந்தோசப்படுபவர்கள் ஒரு விடையத்தில் ஆயத்தமாக இருக்கவும் அங்கை இனிமேல் யாரோ பெத்த பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பமுடியாது ஆகவே உங்களது மகள் மகன் பேரப்பிள்ளைகளை நாட்டுக்கு அனுப்பி போராட ஆயத்தமாகுங்கோ ஒரு டீல் வைப்பம் புலம்பெயர் தேசத்தில் ஐந்துபேரை அனுப்பினால தாயகத்தில் ஒருவர் எனும் விகிதாசத்தில் போராட்டத்துக்கு ஆக்களை அனுப்புவம் டீல் ஓகேயா நண்பர்களே.

பொட்டம்மான் இருந்தால் ஒரு நல்ல வேலை செய்யலாம் புலம்பெயர் தேசங்களில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிச்சவர்களைக் கண்டுபிடித்து அவர்களது கோவணத்துண்டு முதற்கொண்டு உருவவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

சிலவேளை பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறார் எனும் செய்தி புலம்பெயர் தேசத்தில் சிலருக்குச் சந்தோசமாகவும் பலருக்கு உதறலாகவும் இருக்கும் சந்தோசமாக இருப்பவர்கள் ஆகா புலத்தில் வானவேடிக்கை நடக்கப்போகுது எனவும் உதறல் கொள்பவர்கள் அடிச்ச காசு பணம் புலிகளது சொத்து இவைகளில் கைவைக்கப்பொகினம் எனவும் இருப்பார்கள்.

சந்தோசப்படுபவர்கள் ஒரு விடையத்தில் ஆயத்தமாக இருக்கவும் அங்கை இனிமேல் யாரோ பெத்த பிள்ளைகளை போர்க்களத்துக்கு அனுப்பமுடியாது ஆகவே உங்களது மகள் மகன் பேரப்பிள்ளைகளை நாட்டுக்கு அனுப்பி போராட ஆயத்தமாகுங்கோ ஒரு டீல் வைப்பம் புலம்பெயர் தேசத்தில் ஐந்துபேரை அனுப்பினால தாயகத்தில் ஒருவர் எனும் விகிதாசத்தில் போராட்டத்துக்கு ஆக்களை அனுப்புவம் டீல் ஓகேயா நண்பர்களே.

பொட்டம்மான் இருந்தால் ஒரு நல்ல வேலை செய்யலாம் புலம்பெயர் தேசங்களில் ஊர்ப்பணத்தைக் கொள்ளையடிச்சவர்களைக் கண்டுபிடித்து அவர்களது கோவணத்துண்டு முதற்கொண்டு உருவவேண்டும்.

அதெப்படி சாத்தியமாகும்.நாங்கள் எமது பிள்ளைகளை யுனிக்கு அனுப்புவதில் குறியாக இருக்கிறம்.அப்படி அவர்கள் மேலை மேலை போனால் சமுகவலைத்தளங்களிலில் பிரசுரித்து மகிழுவம்.எங்கடை தேசியப்பற்றை கேலி செய்யக் குடாது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
    • ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது-சர்வதேச நாணய நிதியம்! உலகின் அனைத்து முன்னேறிய பொருளாதாரங்களையும் விட இந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் வேகமாக வளரும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் இந்த ஆண்டு ரஷ்ய பொருளாதாரம் 3.2% வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறது என்றும் இது பிரித்தானியா ,பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியை விட கணிசமாக வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இதேவேளை சர்வதேச நாணய நிதியம், எண்ணெய் ஏற்றுமதி “நிலையாக” இருப்பதாலும், உயர்வாக இருப்பதாலும், அரசாங்க செலவினங்களின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது என கூறுகிறது. மொத்தத்தில், ரஷ்யப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்த நிலைப்பாட்டில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யா வங்கி அமைப்பை பெருமளவில் மீள்தன்மையுடன் வைத்திருக்க முடிந்ததுடன் உலகளாவிய மந்தநிலையைத் தவிர்க்க முடிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378768
    • எந்த வயதினர் என்றாலும் funny life மனித வாழ்வில் தேவையான ஒன்றே. அந்த வகையில் தாயகத்தில் தற்போதைய  இள வட்டங்களின் funny life video   
    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.