Jump to content

கணக்கில் எடுக்கப்படாத ஆணைகளும் அபிலாஷைகளும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கில் எடுக்கப்படாத ஆணைகளும் அபிலாஷைகளும்

மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 02 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:25 Comments - 0

மக்கள் தங்கள்தங்கள் அபிலாஷைகளின் அடிப்படையில், அரசியல்வாதிகளுக்கு வழங்கிய ஆணையை, பெருந்தேசிய அரசியல் தலைவர்களும் சிறுபான்மை அரசியல்வாதிகளும் மீறி, அல்லது மதிக்காமல் நடக்கின்ற ஒரு போக்கையும் பொறுப்புக்கூறலில் இருந்து, தப்பியோடப் பார்க்கின்ற எத்தனங்களையும் வெளிப்படையாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.   

காணி ஒன்றைக் குத்தகைக்கு எடுத்தவர், அதில் என்னவேண்டுமென்றாலும் செய்து கொள்ளலாம் என்று நினைப்பதைப் போல, ஜனநாயக நாடொன்றினது மக்களின் வாக்குகளையும் அதன் ஊடாக, சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற மக்கள் ஆணையையும் தமது தாய்வீட்டுச் சீதனம் போல, அல்லது ஐந்துவருடக் குத்தகைக் காணிபோல, சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் கையாள நினைக்கின்றனர்.   

தாம் தலைவர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்ற போதிலும், உண்மையில் தாம் மக்களின் சேவகர்கள் என்பதையும் நாடாளுமன்றத்திலும் ஏனைய பிரதிநிதித்துவ அவைகளிலும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள் என்பதையும் அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விடுகின்றனர்.   

வாக்குக் கேட்டு வருகின்ற போது, அவர்களிடம் இருக்கின்ற பவ்வியமும் பணிவும், தேர்தலில் வெற்றி பெற்றபிறகு, அதிகாரத் தோரணையாகத் தலைக்கேறி விடுகின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் மட்டுமல்ல, ஆட்சியாளர்களிடமும் இந்தப் போக்கு இருப்பதைக் காண்கின்றோம்.   

ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கோ, அரசியல்வாதிகளுக்கோ மக்களுக்கு வழங்கப்பட்ட ஆணை, அவர்களின் எந்த அபிலாஷையை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்டது என்பதை, மறந்து செயற்படுவதையும் ஆணைக்கு முரணாக நடப்பதும் பின்னர், மக்களின் விருப்பம் அறியப்படாமலேயே தங்களது முடிவுகளைத் தான்தோன்றித்தனமாக எடுப்பதும் வாடிக்கையாகி விட்டது.   

தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில், தமக்கு வாக்களித்த மக்களுடனான இருவழித் தொடர்பாடல், கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டே விடுகின்றது எனலாம். ஓரிரு கட்சிகளையும் விரல்விட்டு எண்ணக்கூடிய அரசியல்வாதிகளையும் தவிர, வேறு எந்தத் தரப்பினருக்கும் மக்களுடனான ஒரு வலைப்பின்னல் கிடையாது.   

தமக்கு ஆணை வழங்கப்பட்டுள்ள விடயத்துக்கு அப்பாலான, ஒரு முடிவை எடுக்க முனைகின்ற போது, அதுபற்றி மக்கள் அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிவதற்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை. பெருந்தேசியக் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ இதற்கு விதிவிலக்கல்ல.  

முப்பது ரூபாய் விற்கின்ற ஒரு பிஸ்கட் பக்கற்றில் அதனது சுவை, நிறைகுறைகளைச் சொல்வதற்குத் தொலைபேசி இலக்கம் போடப்பட்டிருக்கும். வீதியில் செல்லும் கனரக வாகனங்களில், இந்த  ‘வாகனச் செலுத்துகை எவ்வாறு?’ என்ற கேள்வியுடன், அதன் முதலாளியின் தொலைபேசி இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கும்.   

ஆனால், உயிரைக் கொடுத்துப் பாடுபட்டு வளர்த்து, மக்கள் ஆணை வழங்கப்படுகின்ற இலங்கை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு பற்றி மக்கள் கருத்தை, ஓர் அமைச்சரை, எம்.பியைத் தொடர்பு கொண்டு, தமது தேவையைச் சொல்வதற்கான ஒரு தொலைபேசி இலக்கமாவது கொடுக்கப்பட்டிருக்கின்றதா?   

முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிவதற்காக, கருத்தறிவதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும் சந்திப்புகளை நடத்தியதாகச் செய்திகள் வந்ததுண்டா?   

அன்றேல், தாம் எடுக்க வேண்டிய ஒரு தீர்மானம் தொடர்பில், முஸ்லிம்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காகத் தமக்கு வாக்களித்த மக்களை, ஆதரவாளர்களை இந்தத் திகதிகளில் தலைவர் சந்திப்பார் என்று, பத்திரிகைகளில் பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டதுண்டா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடைதான்.   

இங்கு மக்கள், ஆதரவுத் தரப்பினர் என்று கூறப்படுபவர்களைத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு கட்சித் தலைவரைச் சுற்றி இருக்கின்ற கூட்டத்தையோ, அமைச்சரின் இணைப்பதிகாரிகளையோ, கொந்தராத்துக் காரர்களையோ, சமூக வலைத்தளச் செயற்பாட்டாளர்களையோ, தம்முடன் இருக்கும் ‘ஆமாம்சாமி’ கூட்டத்தையோ, மக்கள் என்ற வகுதிக்குள் உள்ளடக்க முடியாது என்பதை, அழுத்தமாக உணர்ந்து கொள்ள வேண்டும்.   

இவ்வாறு மக்களின் ஆணைக்கான, பிரதியுபகாரம் செய்யப்படாமல் விடப்பட்டதும், மக்களின் விருப்பு வெறுப்புகளை அறியாது அரசியல் தலைவர்கள் தீர்மானங்களை, நடவடிக்கைகளை எடுப்பதும் அதுவே மக்களின் தீர்மானம் என்று கூறுவதும் முஸ்லிம் அரசியலில் மட்டுமன்றி பெருந்தேசிய அரசியலிலும் நடந்து வருவதை, நாம் சிலபோதுகளில் அவதானிக்கத் தவறி விடுகின்றோம்.   

தேசிய அரசியலைப் பொறுத்தமட்டில், 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதியாக வெற்றிபெற்ற மஹிந்த ராஜபக்‌ஷ, தனது பிரதான வாக்குறுதியாக இருந்த, யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதல் என்பதை நிகழ்த்திக் காட்டினார்.   

அதுவே இன்னுமொரு தடவை, அவருக்கு ஆணை கிடைக்கவும் வழிவகுத்தது. மஹிந்த ராஜபக்‌ஷவின், 2010 தேர்தல் வெற்றிக்கான ஆணையை, முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க அளவில் வழங்கிய போதும், இனவாதம் மேலெழுந்த வேளையில், அவரது அரசாங்கம் அந்த ஆணையை மதிக்கவில்லை.   

பேருவளை, அளுத்கம, ஜின்தோட்டை போன்ற இடங்களில், இனவாதத் தீயைக் கொளுத்திவிட்டவர்கள் யாராக இருப்பினும், ஆட்சியும் அதிகாரமும் பாதுகாப்பு அமைச்சும் கூட, ஜனாதிபதியிடமே இருந்தது என்ற அடிப்படையில், முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில், ராஜபக்‌ஷவின் அரசாங்கம் நடந்து கொள்ளவில்லை என்பது, பொதுவான மனப்பதிவாகும்.   

இந்தச் சூழமைவை, தமது பிரதான முதலீடாகப் பயன்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதானமாகக் கொண்ட ஐ.தே.முன்னணி, 2015இல் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று, தனது ஆட்சியை உறுதி செய்தது. நாள்கள் நகரநகர, தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நிவர்த்திக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, நல்லாட்சியை நம்பியிருந்த முஸ்லிம்களுக்கும் ஆன பலன் ஒன்றுமில்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. திகண, அம்பாறைக் கலவரங்கள், இதற்கு நல்ல உதாரணங்களாகும்.  

 நல்லாட்சி மீது, முஸ்லிம்கள் வைத்திருந்த நம்பிக்கை பெருமளவுக்கு இல்லாது போவதற்கு, இந்தக் கலவரங்களும்  அதன்போது பாதுகாப்புக்குப் பொறுப்பான அமைச்சராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவால் சட்டமும் ஒழுங்கும் நடைமுறைப்படுத்தப்பட்ட விதங்களும் காரணமாக அமைந்தன.   

ஆக, இந்த அரசாங்கமும் முஸ்லிம்கள் தமக்கு எதற்காக ஆணை வழங்கினார்கள் என்பதை மதித்து, இனவாதத்துக்கு எதிராகத் திருப்திப்படக் கூடிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. முஸ்லிம்களின் உணர்வுகளையும் அபிலாஷைகளையும் புரிந்து கொண்டு, நல்லாட்சி செயற்பட்டதாகச் சொல்வதும் கடினமானது.  இவ்வாறு, மக்கள் சார்பு அரசியலில், நல்லாட்சியின் தோல்விக்கு, ரணில் விக்கிரமசிங்க மீதே, எல்லோரும் சுட்டுவிரலை இன்று நீட்டுகின்றார்கள். இருந்தபோதும், அதற்கு அவர் மட்டுமே, முழுப் பொறுப்பாளியாக முடியாது.  

 இந்த நல்லாட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் (ஆணையில்), ஐ.தே.கட்சியின் வாக்குகள், மஹிந்தவுக்கு எதிரான வாக்குகள், சிறுபான்மைக் கட்சிகளின் வாக்குகள், சந்திரிகா அம்மையார், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன போன்றோரில் ஏற்பட்ட ஈர்ப்பால் கிடைத்த வாக்குகளும் உள்ளன.  

எனவே, இன்று நல்லாட்சி தோல்வி அடைந்திருக்கிறது என்றால், மேற்சொன்னவர்கள் உள்ளிட்ட, முஸ்லிம் கட்சிகளும் கூட, அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.  இதே அடிப்படையில் நாட்டு மக்கள், குறிப்பாக, சிறுபான்மையினர் வழங்கிய ஆணை, மீறப்படுகின்ற நிகழ்வுகளே இலங்கை அரசியலில் தற்போதும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.  

 ரணிலைப் போலவே, ஜனாதிபதியும் மக்கள் ஆணையுடன் ஒத்திசைந்து செயற்படவில்லை என்றே தோன்றுகின்றது. ஏனெனில், ஜனாதிபதிக்கு நாட்டு மக்கள் வழங்கிய ஆணை என்பது, இப்போது அவர் கூட்டுச் சேர்ந்திருக்கின்ற தரப்பினருக்கு ஆதரவானதல்ல. அதற்கு அதிகாரம் இருந்தாலும், அதற்கான மக்கள் அபிப்பிராயத்தைப் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.   

சமகாலத்தில், பாரிய எதிர்பார்ப்புகளோடு மக்கள் வழங்கிய ஆணையை, ரணில் விக்கிரமசிங்கவும் மீறியிருக்கின்றார் என்றே கருத வேண்டியுள்ளது. மேட்டுக்குடி அரசியல் போக்கை, இன்றுவரையும் மீள்பரிசீலனை செய்யாதது மட்டுமன்றி, மத்திய வங்கிப் பிணைமுறி உள்ளிட்ட மோசடிகளுக்கும் இன்னோரன்ன தவறுகளுக்கும் ஜனாதிபதி சொல்வது போல், ஆசீர்வாதம் வழங்கியதன் மூலம் அவர், நல்லாட்சியின் தோல்விக்கான பிரதான பொறுப்பை, ஏற்க வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை.   

ஆக, தங்கள் தங்களது அதிகார ஆசைக்காகவும் ஆட்சிக் கனவுக்காகவும் ஒரு நாட்டின் மக்கள் வழங்கிய ஆணை மீறப்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ‘நாடும் மக்களும் என்னபாடு பட்டாலும் பரவாயில்லை, நாங்கள் இரண்டில் ஒன்று பார்ப்போம்’ என்ற கோதாவிலேயே, பெரும்பான்மைக் கட்சிகள் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.  இந்தப் பின்னணியில், முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மேற்குறிப்பிட்ட காலமெல்லாம் பரவலாக, மக்கள் ஆணையை மீறி வந்திருக்கின்றனர். 

ஏதாவது ஒன்றுக்காக, ஆணையைப் பெற்று விட்டு, பிறகு இன்னுமொரு முடிவை எடுக்கின்ற போது, அதுபற்றி மக்களின் அபிப்பிராயத்தைப் பெறாமல், தற்றுணிவான தீர்மானங்களை எடுக்கின்ற போக்குகளை, நெடுங்காலமாகக் காண முடிகின்றது. இந்தச் சந்தர்ப்பங்களில் எல்லாம், முஸ்லிம்களின் அபிலாஷைகள் கறிவேப்பிலையாகக் கையாளப்படுகின்றன.   

முஸ்லிம்களுக்கு அநியாயங்கள் நடந்த போது, தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கங்கள் மீறிய போது, இனவாதம் தலைவிரித்தாடிய போது, ஜனநாயகமும் இனத்துவ அடையாளமும் கேலிக்குள்ளாக்கப்பட்ட போது, முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்த ஞாபகங்கள் இல்லை. மாறாக, தேர்தல் காலங்களில், அரசியல் மாற்றங்களின் போதே, அவ்வாறான தைரியம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.   

இதேவேளை, மக்கள் வழங்கிய ஆணையைப் பொருட்படுத்தாமல் தேசியப்பட்டியல் எம்.பி பதவியோடு, கட்சி மாறுபவர்களும் இருக்கின்றார்கள். மக்களிடம் கேட்காமல் தீர்மானங்களை எடுத்துவிட்டு, ‘மக்களின் விருப்பமும் அதுதான்’ என்று நிறுவ முனைந்த அரசியல் கட்சிகளும் நம்மிடையே இருக்கின்றன.  

இந்நிலையில், தேசிய அரசியலில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், முஸ்லிம் கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி, நோக்க வேண்டியிருக்கின்றது.   

உண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு கட்சிகள், மக்கள் ஆணையைப் பெற்றது, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவாகவும்தான். ஆனால், ஜனாதிபதித் தேர்தலில், இதே கட்சிகள் இரண்டும், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆணை கிடைக்க முன்னின்றன என்பதையும் இவ்விடத்தில் மறந்து விடக் கூடாது.   

அந்த வகையில், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதற்கு எடுத்திருக்கின்ற முடிவில் சரியும் காணலாம்; இங்கு ஒரு தர்க்கம் இருக்கின்றது. அதாவது, ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது ஜனாதிபதியோ எதற்காக முஸ்லிம்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டார்களோ, அதை நிறைவேற்றிக் கொடுத்திருக்கின்றார்களா என்ற ஆராய வேண்டியுள்ளது. எனவே, தமது தீர்மானம் எதுவாகினும், அதுகுறித்து மக்கள் கருத்தை அறிந்து, அதன்படி முடிவெடுத்திருக்க வேண்டும்.ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.   

மேற்குறிப்பிட்டது போன்று, முஸ்லிம்களின் உணர்வைக் கணக்கிலெடுத்து, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கமும் செயற்படவில்லை என்றால், அவருக்கு ஆதரவளிக்க, முஸ்லிம் கட்சிகளும் அரசியல்வாதிகளும் முன்னிற்க வேண்டுமா என்ற கேள்வி எழுகின்றது. அதற்காக மஹிந்தவை ஆதரிக்க வேண்டும் என்றோ, அது சரி என்றோ கூறுவதற்கில்லை.   

மாறாக, இந்தச் சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க எல்லோருமே முஸ்லிம்களின் ஆணையை, அபிலாஷைகளை மதிக்கவில்லை என்று எடுத்துக் கொண்டால், இவர்கள் யாருக்கும் இந்தச் சமூகம் கடமைப்படவில்லை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.   

அதையும் தாண்டி, சில நியாயங்களின் அடிப்படையில் ரணிலுக்கு, மஹிந்தவுக்கு ஆதரவளிப்பது என்ற நிலை வந்துவிட்டால், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள, முஸ்லிம் கட்சிகள் முன்வர வேண்டும். ஜனநாயகத்துக்கான ஆதரவு என்று சொல்லி, நமக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை, மீண்டும் ஒரு தடவை வீணடித்துவிடக் கூடாது.   

முஸ்லிம் கட்சிகள், அரசியல்வாதிகள் தமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு அமையச் செயற்படுவதுடன், முக்கிய தீர்மானங்கள் எடுக்கின்ற போது, மக்களிடம் இருந்து அபிப்பிராயம் பெறுவதற்கான பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் ஆணையைக் கணக்கிலெடுக்காத ஆட்சியாளர்களிடம், நீண்டகாலமாகக் கிடப்பில் கிடக்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளை முன்னிறுத்த வேண்டும்.   

முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகள், மீள்குடியேற்றம், அரசியல் தீர்வில் உரிய பங்கு, இனவிகிதாசாரப்படியான காணிப் பகிர்வு உள்ளடங்கலான சிவில் சமூகப் பிரச்சினைகளைப் பேரம் பேசி, ஒப்பந்த அடிப்படையில் ஆதரவளிக்க வேண்டும்.   

ரணில் விக்கிரமசிங்கவைப் பலப்படுத்துவதற்காக, என்றுமில்லாதவாறு ஒன்றுசேர்ந்துள்ள கட்சிகள், ஒன்றுபட்டு முன்வைக்கும் கோரிக்கை கனதியாகவும் இருக்கும். அவ்வாறு உடன்படும் ஆட்சியாளர்கள், அதை நிறைவேற்றித்தர மறுக்கின்ற போது, அவர்களுக்குப் ‘பாடம்’ படிப்பிக்கும் தைரியத்தையும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பெற வேண்டியிருக்கின்றது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கணக்கில்-எடுக்கப்படாத-ஆணைகளும்-அபிலாஷைகளும்/91-226005

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீ வா என்றது உருவம்  நீ போ என்றது நானம் ........!  😍
    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.