Jump to content

'2.0 படத்துக்கு அதிக பொருட்செலவானது ஏன்?' - பிபிசிக்கு சுபாஷ்கரன் பேட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ்
 
லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன் Image caption லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன்

தெற்காசியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக சொல்லப்படும் 2.0 திரைப்படத்தின் தயாரிப்பாளரும் லைகா குழுமத்தின் தலைவருமான அல்லிராஜா சுபாஷ்கரன், இந்தத் திரைப்படம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார்.

 

பேட்டியளிக்க பெரிதும் தயங்கும் சுபாஷ்கரன், எல்லாக் கேள்விகளுக்கும் நேரடியாகவும் சுருக்கமாகவும் பதிலளித்தார்.

கேள்வி: 2.0 படத்தைத் தயாரிக்கும் திட்டம் எப்படி உருவானது? இத்தனைக்கும் கத்தி பட வெளியீட்டின்போது பிரச்சனைகளைச் சந்தித்திருந்த நிலையில், துணிந்து இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்?

 

பதில்: தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்ல, பொதுவாக திரைப்படங்கள் மீது எனக்குப் பெரிய ஈர்ப்பும் ஆர்வமும் உண்டு. சிறுவயதிலிருந்தே, தினமும் ஒரு படமாவது பார்க்கும் பழக்கமுண்டு. அந்த ஆர்வம்தான் என்னை திரைப்படங்களை தயாரிக்கத் தூண்டியது.

கே. தொலைத்தொடர்புத் துறையில் மிகப் பெரிய தொழிலதிபராக இருந்தபோதும் திரைப்படத் துறையில் ஈடுபாடு காட்டுவதற்கு இந்த ஆர்வம் மட்டும்தான் காரணமா?

ப. ஆமாம். அந்த ஆர்வம் மட்டும்தான் காரணம். டெலிகாம் என்னுடைய தொழில். திரைப்படங்கள் என் ஆர்வம். ஆனால், அதையும் தொழிலாகச் செய்யலாமென இப்போது தோன்றுகிறது. அதனால், தொடர்ந்து எல்லா மொழிகளிலும் திரைப்படங்களை எடுப்போம்.

லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன்படத்தின் காப்புரிமை 2.0/FACEBOOK

கே. 2.0 படம் ஆசியாவில் தயாரிக்கப்பட்ட படங்களிலேயே பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்கிறார்கள்? இந்தப் படத்திற்கு ஏன் அவ்வளவு செலவு ஆனது?

ப. தொழில்நுட்பம். 4 டி ஒலிப்பதிவு, 3 டி தொழில்நுட்பம் ஆகியவை முக்கியக் காரணம். ஆசியாவில் முப்பரிமாணத்தில் உருவான படங்களில், இந்தப் படம்தான் அதிக பொருட் செலவில் உருவான திரைப்படம். அது தவிர, ரஜினி, ஷங்கர், ஏ.ஆர். ரெஹ்மான், ஏமி ஜாக்சன் என பெரிய கலைஞர்கள் இடம்பெற்றனர். ஆகவே இவ்வளவு செலவானது

கே. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2015ஆம் ஆண்டின் இறுதியில் துவங்கப்பட்டது. ஆனால், படம் வெளியாக 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்ன காரணம்? தயாரிப்பாளராக எப்படி உணர்ந்தீர்கள்? பதற்றமடைந்தீர்களா?

ப. நிச்சயமாக இல்லை. திரைப்படம் என்பது கற்பனை தொடர்பானது. அதற்கு தேவைப்படும் நேரத்தை கொடுத்துத்தான் ஆக வேண்டும்.

கே. படத்தில் கலைஞர்களுக்கான ஊதியம், படப்பிடிப்புச் செலவுகள் தவிர, ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு மட்டும் எவ்வளவு செலவிடப்பட்டது?

ப. ஸ்பெஷல் எஃபக்ஸ் மற்றும் கிராஃபிக்ஸிற்காக 200-250 கோடி ரூபாயை செலவழித்திருப்போம்.

லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன்படத்தின் காப்புரிமை 2.0/FACEBOOK

கே. 2.0 எந்த அளவுக்கு லாபத்தை கொடுக்குமென எதிர்பார்க்கிறீர்கள்?

ப. பெரிய ஒரு லாபத்தைக் கொடுக்குமென்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், எவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை.

கே. அடுத்ததாக இந்தியாவில், குறிப்பாக தமிழில் என்னென்ன படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?

ப. ஏற்கனவே 20 படங்களைத் தயாரித்து வருகிறோம். இதில் 2-3 படங்களை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கிறோம்.

கே. 2.0 போல பெரும் பொருட் செலவில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறீர்கள். தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை மட்டும்தான் தயாரிப்பீர்களா? சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்கும் எண்ணமிருக்கிறதா?

ப. இல்லை. தரமான கதைகள் இருந்தால், சின்ன பட்ஜெட் படங்களைத் தயாரிப்போம்.

லைகா குழுமத் தலைவர் சுபாஷ்கரன்

கே. 2.0 திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தீர்களா?

ப. ஆமாம். படம் வெளியான அன்று சென்னை காசி திரையரங்கில் அதிகாலை நான்கு மணி காட்சியை ரசிகர்களுடன் பார்த்தேன். எனக்கு ரொம்பவும் புதுமையாக இருந்தது. நான் வாழ்க்கையில் முதல்முறையாக முதல் நாள் - முதல் காட்சியைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது.

கே. நீங்கள் ஐரோப்பாவில் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றை நடத்துகிறீர்கள். அப்படி இருக்கும் நிலையில், தமிழ்த் திரைப்படத் துறையில் கால் பதிக்க நினைத்தது ஏன்?

ப. தமிழன் என்ற ஒரே காரணம்தான்.

கே. ஐரோப்பாவில் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் லைகா, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இதுவரை ஏன் காலடி பதிக்கவில்லை? நுழையும் திட்டமிருக்கிறதா?

ப. அதற்காக காத்திருக்கிறோம். இந்திய தொலைத் தொடர்புத் துறையில் நுழையும் வாய்ப்பு இருக்கிறதென்றுதான் சொல்வேன்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-46416682

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லைகா சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் – சந்திரமுகியாக மாறிய ரஜினி ரசிகர்கள் !!

1543818015-9247.jpg


ரஜினிகாந்த் நடிப்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் இந்தியாவின் மிக அதிகப் பிரமாண்ட பொருட்செலவில் உருவான என்ற பெருமையுடன் 2.0 படம் கடந்த நவம்பர் 29 ஆம் தேதியன்று வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினிப் படம் ரிலிஸ் என்றாலே ரஜினி ரசிகர்கள் மண்சோறு சாப்பிடுதல், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தல், காவடி எடுத்தல், மொட்டை அடித்தல் எனப் பல உணர்ச்சி வசமான செயல்களை செய்வது வழக்கம்.

இந்த செயல்கள் சமூக வலைதளங்களில் கடுமையான கேலிக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாவது வழக்கம்.

ஆனால் இந்தமுறை அதையெல்லாம் தாண்டி ஒரு செயலை செய்துள்ளனர். ரஜினி நடித்த 2.0 படத்தைத் தயாரித்த சுபாஷகரனுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பித்து தங்கள் அன்பை ( ? ) வெளிப்படுத்தியுள்ளனர்.

கிருஷணகிரி மாவட்டம் சந்தூரைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள் " தமிழ் சினிமாவை உலகமே திரும்பிப் பார்க்க வைத்த எஙகள் அண்ணன் சுபாஷ்கரனுக்கு மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள் " என்ற அடைமொழியோடு கூடிய கட் அவுட்களை கிருஷ்ணகிரியில் வைத்துள்ளனர்.

இந்த கட் அவுட்கள் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாகப் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் பலர் இந்த செயலை கலாய்த்துத் தள்ள ஆரம்பித்துள்ளனர் .

http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rajini-fans-started-a-fans-club-for-subashkaran-118120300027_1.html

டிஸ்கி :

கூடிய விரைவில் கடவுளாக்கி  பொங்க வைத்து விடுவார்கள் போல் கிடக்கு .. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு கொடுத்தால் கட் அவுட் என்ன பாலே ஊத்துவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு சில ஆங்கில ஊடகங்கள் கொடுத்துள்ள அடைமொழி.. The immigrant phone card seller. இவர்கள் இவர்களின் நிறுவனத்திற்காக அடிமட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு ஒழுங்கா சம்பளமே கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. 

இருந்தாலும்... தமிழ் சினிமா உலகத்தினரை வைச்சு... தரமான.. விஞ்ஞானக் கதை அம்சம் நிரம்பிய திரைப்படத்தை தயாரித்து.. அதனை மக்கள் மத்தியில் வெற்றிப்படமாக்குவது என்பது இலகு அல்ல. முயற்சிக்கு பாராட்டுக்கள். ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.