Jump to content

கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம்

December 1, 2018

tna.jpg?resize=259%2C194

வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை.

இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும் இடப்பட்டது. பௌத்த மதத்தின் வழிநின்று மக்கள் ஆட்சியைக் கொண்டு செல்வதற்கான அடித்தளமும், கட்டமைப்புக்களும் உருவாக்கப்பட்டன. இதன் அடிப்படையிலேயே, இலங்கை என்பது சிறிலங்காவாகவும், இது பௌத்த சிங்கள தேசம் என்ற தேசிய கொள்கை நிலைப்பாடாகவும் மாற்றம் பெற்றது.

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சி, சிங்களவர்களையும், தமிழர்களையும் உள்ளடக்கியதாக தேசிய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் நோக்கத்துடன் பிறப்பெடுத்தது. தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சிக்கு மாற்றாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது, சிங்களம் மட்டும் என்ற கோஷடித்தை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டது. அதேவேளை, தமிழர் தரப்பில் தமிழரசுக் கட்சி உதயம் பெற்றது.

சிங்களம் மற்றும் தமிழ் என்ற அடையாளத்தை வலியுறுத்துகின்ற வகையில் உருவாகிய இந்த அரசியல் கட்சி அமைப்புக்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும், அடிப்படையில் மனமொருமித்து ஆட்சியைப் பகிர்ந்து கொண்டு நாட்டை வழிநடத்திச் செல்வதற்கு எந்த வகையிலும் உதவவில்லை. அதற்கான வழிசமைக்கவும் இல்லை. இத்தகைய அரசியல் கட்சிகளின் தோற்றமானது, இன ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தி வைப்பதற்கான அடித்தளத்தையே இட்டிருந்தன என கூற வேண்டும்.

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற ஒரு தசாப்த காலம் முடிவடைவதற்கு முன்பே, 1956 ஆம் ஆண்டு மோசமான இனக்கலவரம் ஒன்றைச் சந்திக்க நேர்ந்தது. சிங்களம் மட்டும் என்ற மொழிச்சட்டத்தைக் கொண்டு வந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க சிங்கள இனவாதி ஒருவருடைய துப்பாக்கிக்குண்டுக்கே இலக்காகி மடிய நேர்ந்த சோகம் நிகழ்ந்தது. ஆனாலும், சிங்களம் மட்டும் என்ற மொழிக் கொள்கையும், நாட்டின் தேசிய அதிகாhரம் வாய்ந்த அரச மொழி சிங்களமே என்பது அரசியலமைப்பு ரீதியாக நிலைநிறுத்தப்பட்டது. சிங்களமே அரச மொழி என பிரகடனப்படுத்தப்பட்டு தமிழும் அரச கரும மொழியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலான அந்தஸ்து தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி முடிவுகள் எடுக்கப்படும்போது சிங்கள மொழியில் அமைந்த சட்டக் கோவைகளும் அரசியல் சட்ட முறைமைகளுமே, சட்ட ரீதியான ஆதாரமாக, அதிகாரபூர்வ நிலைப்பாடாகக் கொள்ளப்பட்டது.

அக்டோபர் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமனம் செய்வதற்கு அரசியலமைப்பின் சிங்கள மொழிமூலமான சட்ட விதிகளே வழிகாட்டியாகக் கொள்ளப்பட்டன. அரசியலமைப்புக்கு நேர் விரோதமாக பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு, வேறு ஒருவரை நியமித்த நடவடிக்கைக்கு, இந்த சிங்கள மொழி மூல வழிகாட்டியையே பயன்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தனர்.

பௌத்த சிங்கள மேலாதிக்கத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தி சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் இந்த நாட்டின் வரலாற்று ரீதியான தேசிய இனமாக இருந்த போதிலும், அதற்குரிய கௌரவத்தையும், சட்ட ரீதியான இடத்தையும் வழங்காமல் இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளே வெளிப்படையாகவும், மறைமுகமான அரசியல் நிகழ்ச்சி நிரலின் ஊடாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அஹிம்சைப் போராட்டங்கள் உதாசீனம் செய்யப்பட்டு, ஆயுதப் போராட்டமானது, பயங்கரவாதம் என்ற போர்வையில் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்ட வகையில் சர்வதேசத்தின் உதவியுடன் அடித்து நொறுக்கப்பட்டது, ஆயுதப் போராட்டத்தை முறியடித்துவிட்ட போதிலும், சிங்கள, தமிழ் மக்களிடையே இன ரீதியான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதில் கண்துடைப்பு நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டன. இதய சுத்தியுடன் கூடிய வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றே கூற வேண்டும்.

சுதந்திரத்துக்குப் பின்னர், 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்கள் இதன் முக்கிய அம்சமாக வரலாற்றில் பதிவாகியிருக்கின்றன. ஏனெனில் இந்த அரசியலமைப்புச் சட்டங்களின் உருவாக்கத்தில் தமிழர் தரப்பு கருத்துக்கள் உள்வாங்கப்படவில்லை. இந்தப் பின்னணியிலேயே, 2015 ஆம் ஆண்டு எதேச்சதிகார அரசாங்கத்தைத் தோற்கடித்து, நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டபோது, சிங்கள தமிழ்த் தலைமைகள் மற்றும் முஸ்லிம் தப்பினர் ஆகியோரை உள்ளடக்கியதாக புதியதோர் அரசியலமைப்பைத் தயாரித்து, அதன் ஊடாக இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

நடந்ததும், நடப்பதும்

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம், புதிய அரசியலமைப்பை உருவாக்கி, ஓர் அரசியல் தீர்வைக் கண்டுவிடலாம் என்ற கனவில் மிதந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அதன் தலைமையும், இரண்டு பெரிய தேசிய அரசியல் கட்சிகளும் இணைந்த அரசாங்கத்தின் போக்கில் ஏற்பட்டிருந்த அதிகாரப் போட்டி, மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படு;த்திவிட்டது. நல்லாட்சி நிறுவப்பட்ட அடுத்த வருடமே அரசியல் தீர்வு காணப்பட்டுவிடும் என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடைய எதிர்பார்ப்பு, 2017 முடிந்து 2018 பிறந்த பின்னரும் கூட நிறைவேறவில்லை. மாறாக அரச தலைவர்களாகிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முகிழ்த்த அதிகாரப் போட்டி, கூட்டமைப்பினதும், அதன் தலைமையினதும் அரசியல் கனவையும், எதிர்பார்ப்புக்களையும் சிதறடித்து துவண்டு போகவே வழி சமைத்திருந்தது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான முயற்சிகள் ஆமை வேகத்தில் முன்னெடுக்கபட்டு, அதன் இடைக்கால அறிக்கையும் கூட்டமைப்பின் சமஸ்டி ஆட்சி முறைக்கு சாதகமானதாக வெளியாகவில்லை. ஒற்றையாட்சி போக்கில் இருந்து எந்தவிதமான முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தாத அந்த அறிக்கையில் ஒற்றையாட்சி முறை உள்ளடக்கப்படவில்லை. பெயரில்லாத வகையில் சமஷ்டி முறைக்கே இடமளிக்கப்பட்டிருக்கின்றது என்று தமிழ் மக்களை நம்பச் செய்து, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு அரசியல் ரீதியான ஆதரவைத் திரட்டுவதில் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொள்வதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.

ஆயினும் உத்தேச புதிய அரசியலமைப்பில் அரசியல் தீர்வுக்கான சம்பிக்கை தரத்தக்க அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை என எழுந்திருந்த கடும் விமர்சனங்களும், ஒற்றையாட்சியே புதிய அரசியலமைப்பின் உயிர்நாடி என்ற, அரச தலைவர்கள் உள்ளிட்ட சிங்களத் தரப்பினரது பிரசாரங்களும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என தமிழ் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டிருந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்கே வழிகோலியிருந்தன. இருப்பினும், அரசியல் தீர்வு கிட்டிவிடும் என்ற நம்பிக்கையைத் தமிழ் மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்கு கூட்டமைப்பு மிகக் கடினமாகப் போராட வேண்டியிருந்தது.

இந்தச் சூழலில்தான் அக்டேபார் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி நடவடிக்கையான அரசியல் மாற்றமும், அதனைத் தொடர்ந்து அடுக்கடுக்காக அரசியல் நெருக்கடிகளும் உருவாகின. ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்த இந்த அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை பலத்தை ஊட்டுவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்;த்தேசிய கூட்டமைப்பு இறங்கியிருக்கின்றது. அத்தகைய பெரும்பான்மை பலத்தைக் காட்டி, ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக வேறு ஒருவரை பிரதமராக நியமிக்கின்ற ஜனாதிபதியின் முடிவுக்கு ஆதரவாக இதன் மூலம் செயற்படுவதற்கும் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த முயற்சிகள் சரிவருமேயானால், அரசியல் நெருக்கடிகள் முடிவுக்கு வருவதுடன், ஐக்கிய தேசிய கட்சி உறுதியளித்துள்ளவாறு அடுத்த சுதந்திர தினத்துக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சியும் வெற்றி பெறும் என்பது கூட்டமைப்பின் இப்போதைய நம்பி;க்கையாகும்.

நம்பிக்கை நிறைவேறுமா….?

ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது அரசியல் நிலைப்பாட்டையும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி, அரசாங்கம் அமைக்க அந்தக் கட்சிக்கு உதவ முன்வந்துள்ளதன் மூலம், அரசியல் நெருக்கடிக்கு முடிவு காண்பதில் கூட்டமைப்பு வெற்றிகரமாகக் காய்நகர்த்தல்களை மேற்கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

ஆனாலும், கட்சி ரீதியான அரசியல் நிலைப்பாட்டில் எதிரும் புதிருமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்திருந்த நல்லாட்சி அரசாங்கம் என்ற சாதகமானதோர் அரசியல் சூழலில் அரசியல் தீர்வு காண முடியாதுபோன தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முயற்சி, அரசியல் நெருக்கடி தணிவு நிலையில் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே.

ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்கள் சார்பில் சுதந்திரக் கட்சியினரிலும் பார்க்க மென்போக்குடையவராகத் தோற்றினாலும், அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்பவற்றில் எத்தனைய உறுதியான மென்போக்கைக் கடைப்பிடிப்பார் என்பது தெரியவில்லை. எதிர்த்தரப்பினராகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரதும், பொதுஜன பெரமுனவினதும் எதிர்ப்பை அல்லது அவர்களது விருப்பமின்மையைப் போக்கி எந்த அளவுக்கு இராஜதந்திர ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவின், அமையப் போகின்ற அரசாங்கம் வலுவாகச் செயற்பட முடியும் என்று உறுதியாகக் கூறமுடியாதுள்ளது.

ஏனெனில் அவ்வாறு அமையப் போகின்ற அரசாங்கம் குறுகிய காலத்திற்கே செயற்பட முடியும். அத்துடன், அரசியல் நெருக்கடி காலத்தின் மோசமான கசப்புணர்வு மிக்க அரசியல் நிலைமைகளின் பின்னர் அமைகின்ற ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு, பொதுத் தேர்தல் ஒன்றை 2020 ஆம் ஆண்டு எதிர்கொள்ள வேண்டிய அரசியல் சூழலில் மகிந்த ராஜபக்ச தரப்பினருடைய ஆதரவு போதிய அளவில் இருக்குமா என்பதும் கேள்விக்குரியதாகும்.

அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அரசியலமைப்பு விதிகளுக்கு விரோதமானது என்ற அடிப்படை உரிமை மீறல் வழக்கில் ஏழு பேரைக் கொண்ட முழுமையானதொரு நீதிபதி குழாம் வழங்கப் போகின்ற தீர்ப்பே, தற்போதைய அரசியல் நெருக்கடியை திசை மாற்றம் செய்ய வல்லதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய ஒரு சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசியகட்சி ஆட்சி அமைப்பதற்கான முயற்சி எத்தகைய போக்கில் அமையும் என்பதையும் முன்கூட்டியே ஊகித்தறிவதும் கடினமான காரியமாகும்.

தமிழர் தரப்பு அரசியல் நிலைமைகள்

நாட்டின் இரண்டு முக்கிய பேரின அரசியல் கட்சிகளும் இணைந்து அமைத்த அரசாங்கத்தில் சாதகமான ஒரு சூழல் நிலவிய போதிலும், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எதிர்பார்த்த அளவில் தீர்வு காணப்படவில்லை. அதேபோன்று புதிய அரசியலமைப்பை உருவாக்கி, அதன் ஊடாக அரசியல் தீர்வு காணும் முயற்சியும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கப்படவில்லை. காலம் காலமாக இன ரீதியாக அரசியல் வழிமுறையில் சிங்களம் மற்றும் தமிழ் சமூகங்கள் பிளவுண்டு கிடக்கின்ற ஓர் அரசியல் நிலைப்பாடே இதற்கு அடிப்படை காரணம் என கூறலாம்.

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இரண்டு பேரின அரசியல் கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக முட்டுக்கட்டைகளைப் போட்டு செய்பட்டு வந்ததே இந்த நாட்டின் அரசியல் வரலாறாகும். அத்தகைய ஒரு வரலாற்றுப் பின்னணியில் தமிழ் மக்களை எந்த அளவுக்கு அடக்கி ஒடுக்க முடியுமோ அந்த அளவுக்கு அவசியமான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இரண்டு அரசியல் கட்சிகளும் தயங்கியதில்லை. பின்வாங்கியதுமில்லை. தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குவதில் அல்லது விட்டுக்கொடுப்பதில் இரண்டு கட்சிகளுமே உறுதியாகவும் ஒற்றுமையாகவும் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்துள்ளன.

தங்களுக்குள் அதிகாரப் போட்டிக்காக மோதிக்கொள்ளும்போது, தங்கள் தரப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக எடுப்பார் கைப்பிள்ளையைப் போன்று தமிழர் தரப்பு அரசியல் சக்தியைப் பயன்படுத்துவதும், தமது காரியங்கள் முடிந்த பின்னர், அந்தத் தரப்பைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் வழமையான அரசியல் நடவடிக்கைகளாக இடம்பெற்று வந்துள்ளன. பேரின அரசியல் கட்சிகளின் இத்தகைய தொடர்ச்சியானதோர் அரசியல் நிலைப்பாட்டுச் சூழலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் இராஜதந்திர ரீதியில் ஒற்றுமையுடன் கூடிய நடவடிக்கைகளை தமிழர் தரப்பு முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

ஆனால் ஒன்றுபட்டு ஓரணியில் திரண்டு நின்று சிங்களப் பேரின அரசியல் சக்திகளை வளைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டிய செயன்முறைகளில் தமிழர் தரப்பு ஒருபோதும் ஒன்றிணைந்து உறுதியாகச் செயற்பட்டதில்லை. ஆயுதப் போராட்ட காலத்தில் ஆயுத பலமே இந்த நாட்டின் அரசியல் செல்நெறியைத் தீர்மானிக்க வல்லதாகத் திகழ்ந்தது. ஆயுத பலத்தில் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இத்தகைய ஒரு சூழலில்தான் அரசாங்கத்தை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு வலிந்து இழுத்துவர முடிந்திருந்தது. அந்த பேச்சுவார்த்தை முயற்சிகளும், விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டமும் ஏன் வெற்றி பெறவில்லை என்பது தனியாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ஆயினும் எதிர்த்தரப்புடன் சம வல்லமை உடைய நிலையில் இருந்தால் மட்டுமே அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடன்படவும், பேச்சுவார்த்தைகளுக்கு உடன்படவும் செய்ய முடியும் என்பது நிதர்சனமாக விடுதலைப்புலிகளின் காலத்திலும், அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தை காலத்திலும் நடந்தேறியிருக்கின்றது.

ஆனால், ஆயுதப் போராட்டம் மோசமான முறையில் முறியடிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மிகமோசமான முறையில் நடத்தப்படுகின்ற ஓர் அரசியல் சூழலில் தமிழர் தப்பில் ஏற்பட்டிருக்க வேண்டிய அரசியல் ரீதியான ஒற்றுமையும், ஓர் அணியிலான அரசியல் செயற்பாடும், யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்தத்தை எட்டுகின்ற அளவுக்கு காலம் கடந்துள்ள போதிலும், இன்னும் சாத்தியமாகவில்லை.

தமிழ் மக்களின் முக்கிய அரசியல் தலைமையாகக் கருதப்படுகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் செல்நெறி காலத்துக்குக் காலம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்த போதிலும், கூட்டமைப்பை வலுப்படுத்தி அனைத்துத் தமிழ்த்தரப்பினரையும் ஒரு குடையின் கீழ் இணைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அரசியல் தீர்வு காண்பதற்கும் உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

பேரின அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்புக்கு துணை போகலாமா?

கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்தும், கண்டித்தும் மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெறமுயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் மாற்றுத் தலைமையொன்றை உருவாக்குவதற்காகத் தங்களுக்குள் ஒன்றுபட முடியாதவைகளாகவே இருக்கின்றன. கூட்டமைப்பும்சரி, மாற்றுத்தலைமையை உருவாக்க முயற்சிக்கின்ற ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும்சரி, அடுத்து வரப்போகின்ற தேர்தலையும், தேர்தலில் தாங்கள் அடையப் போகின்ற வெற்றியையுமே இலக்காக வைத்துச் செயற்பட்டு வருகின்றன. ஏனைய கட்சிகளுடன் முரண்பாடுகள் இருந்த போதிலும், முரண்பாடுகளுக்கு மத்தியிலும், பிரச்சினைகளுக்கு எப்போது தீர்வு கிட்டும் என்று ஏங்கிக்கொண்டிருக்கின்ற மக்கள் நலன்சார்ந்ததாக, அவர்களை முதன்மைப்படுத்திச் செயற்படுவதற்குத் தாயராக இல்லாதவைகளாகவே காணப்படுகின்றன.

தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் நாடாளுமன்ற ஆசனங்ளை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்பதிலேயே அவைகள் அனைத்தும் குறியாக இருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் வீற்றிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதில் அவைகள் அசைக்க முடியாத நம்பிக்கையே இதற்கான காரணமாகத் தெரிகின்றது. ஆனால் காலம் காலமாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகிச் சென்றதன் பின்னர் மக்கள் பிரதிநிதிகளாக அங்கு வீற்றிருந்து அவர்கள் சாதித்தவை என்ன என்பது கேள்விக்குரியது.

மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதில் நாட்டம் கொண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈபிஆர்எல்எவ் மற்றும் வடமாகாண மக்களின் அமோகமான ஆதரவைப் பெற்று வடமாகாண முதலமைச்சராகத் திகழ்ந்த சி.வி.விக்னேஸ்வரன் உருவாக்கியுள்ள தமிழ் மக்கள் கூட்டணி என்பன தமக்குள் ஒன்றிணைய முடியாமல் தவித்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

வடமாகாண மக்களின் அரசியல் கதாநாயகனாகத் தோற்றம் பெற்றிருந்த விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து தமிழ் மக்களை சரியான அரசியல் செல்நெறியில் வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்பு மாற்றுத்தலைமையை விரும்புகின்ற கட்சிகளின் எதிர்பார்ப்பாகவும், ஒரு வகையில் நம்பிக்கையாகவும் காணப்படுகின்றது. ஆனால் நிலைமை என்னவென்றால், இந்த மூன்று தரப்பினருமே, சிவில் அமைப்பாகிய தமிழ் மக்கள் பேரவை என்ற அச்சாணியில் சுழல முயற்சிக்கின்றன.

ஆனால் தமிழ் மக்கள் பேரவையோ அரசியலில் ஈடுபடப்போவதில்லை. அரசியல் கட்சியாகச் செற்படப்போவதில்லை என்று கங்கணம்கட்டிச் செயற்பட்டு வருகின்றது. அதேநேரம் அரசியல் தலைவர்களைத் தலைமைப் பங்காளிகளாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. வடமாகாண சபை பதவி இழந்தபின்னர், அந்த மக்கள் பேரவையின் நிழல் அரசியல் கட்சி என்று கருதத்தக்க வகையில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பித்து தமிழர் தரப்பு அரசியலில் மேலும் ஒரு பிரிவை உருவாக்கியுள்ளார். இதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்துள்ள முன்னாள் வடமாகாண சபை உறுப்பினராகிய அனந்தி சசிதரனும் புதிய அரசியல் கட்சியொன்றை அறிவித்துள்ளார்.

மாற்றுத்தலைமையில் நாட்டம் கொண்டுள்ள இந்த கட்சிகள வரப்போகின்ற தேர்தலை குறிவைத்து செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதையே காண முடிகின்றது. அதற்கென ஓர் அணியை உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் விட்டுக்கொடுப்பையோ அல்லது பொதுக்கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைவதற்கான நடவடிக்கைகளையே காண முடியவில்லை.

உள்ளுராட்சித் தேர்தலில் முன்னேற்றத்தைக் கண்டுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஜனரஞ்சக அரசியல் அடையாளம் என்று வர்ணிக்கப்படுகின்ற முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து கூட்டணியை உருவாக்க முயற்சித்துள்ளதாகத் தெரிகின்றது. ஆயினும், அந்தக் கூட்டணியில் தமிழ் மக்கள் பேரவையின் வாயிலாக இணைந்துள்ள ஈபிஆர்எல்எவ், புளொட் ஆகிய கட்சிகள் இணைந்திருக்க முடியாது என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

புளொட் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதனால் அந்தக் கட்சியை இணைக்க முடியாது என்றும், தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைளுக்கு முரணான வகையில் செயற்பட்டு, தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் கூட்டிணைந்து தேர்தலில் போட்டியிட்டது மட்டுமல்லாமல், தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி சபைகளில் பதவியைக் கைப்பற்றியிருப்பதனால், அந்தக் கட்சியையும் இணைக்க முடியாது என்றும் காரணங்களைக் காட்டி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விக்னேஸ்வரனுக்கு அழுத்தம் பிரயோகித்துள்ளது.

புதிய கூட்டணி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் டிசம்பர் மாத முற்பகுதியில் இடம்பெறவுள்ள நிலையிலேயே தமி;ழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரித்து, அவற்றை விக்னேஸ்வரனும் நிராகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. பிந்திய தகவல்களின்படி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அல்லது நிலைப்பாட்டிற்கு ஈபிஆர்எல்எவ் மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் விளக்கத்தையும் நிலைப்பாட்டையும் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்களிடம் கேட்டுள்ளதாகத் தெரிகின்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளும் அளிக்கின்ற பதில்களின் அடிப்படையிலேயே மாற்றுத் தலைமைக்கான தமது தமிழ் மக்கள் கூட்டணியின் கூட்டு அமைப்பு குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளதாகவும் தெரிகின்றது.

கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவும், அதன் பின்னர் மாற்றுத்தலைமை ஒன்று உரிய முறையில் உருவாகாத நிலையும் தேசிய சிங்களக் கட்சிகள் உள்ளுராட்சித் தேர்தலில் வடக்கில் கால் ஊன்றுவதற்கு வழிகோலியிருந்தன என்பதை இந்தக் கட்சிகள் கவனத்திற்கொள்வது அவசியம்.

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகத் தங்களுக்குள் எவ்வளவுக்கு எவ்வளவு பிளவுபடுகின்றார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு தேசிய சிங்கள அரசியல் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாகச் செல்வாக்கு பெறவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் பொருளாதார அபிவிருத்தி என்ற போர்வையில் நீர்த்துப் போகவும் வழி சமைக்கும் என்ற அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்வது நல்லது.

 

http://globaltamilnews.net/2018/105318/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.