Jump to content

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரியது ஜேர்மன் அரசாங்கம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

muslim-summit-germon-pork.jpg

இஸ்லாமியர்களிடம் மன்னிப்புக் கோரியது ஜேர்மன் அரசாங்கம்!

ஜேர்மன் தலைநகர் பேர்லினில் இந்த வார ஆரம்பத்தில் நடைபெற்ற ஜேர்மன் இஸ்லாமிய மாநாட்டில் உணவு பறிமாற்றத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் தொடர்பாக அதிகாரிகள் மன்னிப்பு கோரியுள்ளனர்.

குறித்த மாநாட்டில் பன்றி இறைச்சி கொண்டு தயாரிக்கப்பட்ட வொசேஜுகளை பரிமாறியதற்காக ஜேர்மன் உள்விவகார துறை அமைச்சகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள் என்பதை மனதில் வைத்தே உணவுத் தெரிவுகள் அமைந்ததாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறித்த இஸ்லாமிய மாநாட்டில் பரிமாறப்பட்ட சொசேஜுகளில் பன்றி இறைச்சி மற்றும் ரத்தம் சேர்க்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் இஸ்லாமிய மத உணர்வுகளுக்கோ, தனிநபர் உணர்வுக்கோ பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருத்துவதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அந்த அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் முஸ்லீம்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/இஸ்லாமியர்களிடம்-மன்னிப/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.