Jump to content

மூங்கில் கறி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் சுட்டியில் எப்போதும் வீட்டில் செய்யும் செய்த உணவுகளை மாத்திரமே பகிர்ந்து கொண்டு வருகின்றேன்.அந்த வகையில் இன்று மூங்கில் கறியைப் பற்றி எழுதலாம் என எண்ணுகிறேன்.

தேவையான சாமான்——கறுப்பு கண் அவரைக்கொட்டை
மூங்கில் வெட்டிய துண்டுகள் நிரம்பிய ஒரு தகரம்

முதலில் அவரைக்கொட்டையை தனியே கொஞ்ச உப்பு தூள் போட்டு வேகவையுங்கள்.
இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் விட்டு வழமையில் தாழிப்பது போல வெண்காயம் மிளகாய்(செத்தல் மிளகாய் முழுதாக 10)சீரகம் கொஞ்சம் வெந்தயம் போட்டு தாழித்து அரைவாசி வந்ததும் மூங்கில் துண்டுகளை நீர் இல்லாமல் வடித்து அதையும் போட்டு தாழித்து விட்டு ஏற்கனவே அவிந்த அவரைக்கொட்டையுடன் போட்டு சிறிது நேரம் பிரட்டி அடுப்பு நிற்பாட்டியதும் ஒரு தேசிக்காய் பிழிந்து விடவும்.

அவரையை அவிக்கும் போது 2 சிகப்பு உருளைக்கிழங்கும் வெட்டி போடவும்.
தாழிக்கும் போது தேவையானவர்கள் இஞ்சி உள்ளி போட்டு தாழிக்கலாம்.

அவரைக்கொட்டையுடன் 2 சிகப்பு உருளைக்கிழங்கும் போட்டு அவித்தால் நன்று.

3-C000-EFA-4347-4999-95-E1-56903225-EBA8

8-F627-A48-FB2-D-48-E3-916-E-332310-BEA6

E0063-F2-F-94-CD-4094-95-AA-E2-B1-EA3328

தகரத்தில் அடைக்கப்பட்ட மூங்கில்கள் வெட்டியதும் இருக்கிறது.வெட்டாமல் பெரிய பெரிய துண்டுகளாகவும் இருக்கிறது.பெரிய துண்டுகளாக உள்ளதை வெண்காயம் வெட்டுவது போல வெட்டியும் போடலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று வைத்க கறிக்கு கிழங்கு இல்லாமையால் போடவில்லை.ஆனபடியால் எனது சட்டிக்குள் கிழங்கைத் தேடி சட்டியை ஓட்டையாக்கிப் போடாதைங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூங்கில் என்றவுடன் பிரம்பு தான் நினைவுக்கு வந்து, அதில கறியா என்று மலைக்க வைக்கிறது.

நான் நினைக்கிறேன்... இது முளைவிடும் மூங்கில் அரும்பு, அல்லது மொட்டு என்று நினைக்கிறேன். விளங்கப் படுத்துவீர்களா? 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  சமையல் குறிப்பிற்கு...  நன்றி ஈழப் பிரியன். 
பருப்பு  இனத்தை சேர்ந்த ... அவரை கொட்டையை, சமைக்கும் போது... 
நாலு  உள்ளி,  குத்திப்  போடா விட்டால்...   வாய்வு வரும் என்று சொல்வார்கள்.
நான்.. உள்ளி போடவா... வேண்டாமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Nathamuni said:

மூங்கில் என்றவுடன் பிரம்பு தான் நினைவுக்கு வந்து, அதில கறியா என்று மலைக்க வைக்கிறது.

நான் நினைக்கிறேன்... இது முளைவிடும் மூங்கில் அரும்பு, அல்லது மொட்டு என்று நினைக்கிறேன். விளங்கப் படுத்துவீர்களா? 


 

90-BB3-BC9-9-FBA-4-DF0-95-E4-BD104-C499-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதம் 2015 க்கு முன்னர் இதைப்பற்றி அறிந்ததில்லை.எனது மருமகன் நேபாலைச் சேர்ந்தவர்.அவர்கள் தேசிய உணவாக உண்கிறார்கள்.அவர்களுடன் சேர்ந்த பின்தான் நாங்களும் உண்ணத் தொடங்கினோம்.
இது மூங்கில் முளைத்து வரும் போது வெட்டி எடுக்கிறார்கள்.இருவகையாக தகரங்களில் அடைக்கிறார்கள்.
1)சிறிது சிறிதாக வெட்டி அடைக்கிறார்கள்
2)பெரிய பெரிய துண்டுகளாக அடைக்கிறார்கள்.இதை நாங்கள் சிறிதாக்கினால் சரி.
நல்ல சுவையாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தமிழ் சிறி said:

நல்லதொரு  சமையல் குறிப்பிற்கு...  நன்றி ஈழப் பிரியன். 
பருப்பு  இனத்தை சேர்ந்த ... அவரை கொட்டையை, சமைக்கும் போது... 
நாலு  உள்ளி,  குத்திப்  போடா விட்டால்...   வாய்வு வரும் என்று சொல்வார்கள்.
நான்.. உள்ளி போடவா... வேண்டாமா?

நாங்கள் அனேகமான கறிக்கு உள்ளியும் இஞ்சியும் போட்டுத் தான் சமைப்போம்.இதற்கும் இரண்டும் போட்டோம்.சிலருக்கு இரண்டும் ஒத்து வருவதில்லை.ஆதலால் எழுதவில்லை.
உங்களுக்கு பிரச்சனை இல்லை என்றால் தாராளமாக போட்டு சமையுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுசு புதுசா இருக்கு சமையல்கள்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

புதுசு புதுசா இருக்கு சமையல்கள்:unsure:

இலங்கையில் மூங்கில் காடுகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எந்தெந்த இடங்கள் என்று தெரியவில்லை.மட்டக்களப்பில் மூங்கில் விளைகிறதா?விளைந்தால் தகரத்தில் அடைத்தது இல்லாமல் உடனடியாகவே வெட்டி சமைக்கலாம்.

இந்த மூங்கில் நிறைய பைபர் சத்துக் கொண்டதும் சலரோகத்துக்கு நல்லதும் என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் மூங்கில் காடுகள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் எந்தெந்த இடங்கள் என்று தெரியவில்லை.மட்டக்களப்பில் மூங்கில் விளைகிறதா?விளைந்தால் தகரத்தில் அடைத்தது இல்லாமல் உடனடியாகவே வெட்டி சமைக்கலாம்.

இந்த மூங்கில் நிறைய பைபர் சத்துக் கொண்டதும் சலரோகத்துக்கு நல்லதும் என்கிறார்கள்.

இலங்கையில் மூங்கில் காடுகள் என்று இல்லை ஆனால் மஞ்சள் நிறமானதும் பச்சை நிறமான மூங்கில்களும் உண்டு நான் இன்றுவரையில் இலங்கையில் சமைப்பதாக கேள்விப்பட்டதில்லை அப்படி சமைப்பதென்றால் உனக்கு பைத்தியமா என்று கேட்பார்கள் கேட்பவர்களும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.