Jump to content

தமி­ழர்­கள் ஒரு­போ­தும்- அடங்­கிப்­போக மாட்­டார்­கள்!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிங்­கப்­பூ­ரின் சிற்பி என்று வர்­ணிக்­கப்­ப­டு­ப­வர் அந்த நாட்­டின் முன்­னாள் தலைமை அமைச்­சர் லீ குவான் யூ. சுமார் 30 ஆண்­டு­கள் நாட்டை ஆண்­ட­வர். சிங்­கப்­பூர் என்­கிற நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்­பி­ய­வரே அவர்­தான் என்­கி­றார்­கள். தன்­னு­டைய காலத்­தி­லேயே மூன்­றாம் உலக நாடு­க­ளில் ஒன்­றாக இருந்த சிங்­கப்­பூரை முத­லா­வது உலக நாடு­க­ளில் ஒன்­றாக மாற்­றிக் காட்­டி­ய­வர். அது­வும் ஒரே தலை­மு­றைக் காலத்­துக்­குள் அதைச் சாத்­தி­ய­மாக்­கிக் காட்­டி­ய­வர். இலங்­கை­யில் போர் நிறை­வுக்கு வந்த சம­யத்­தில் ஊட­கம் ஒன்­றுக்கு வழங்­கிய பேட்­டி­யில், ‘‘போரை இலங்கை அரசு வென்­றி­ருந்­தா­லும் தமி­ழர்­கள் அடங்­கிப் போவார்­கள் என்று நான் நம்­ப­வில்லை.’’ என்று அவர் சொன்­னார்.

வடக்­குக் கிழக்கு எங்­கும் நேற்­றை­ய­தி­னம் நடந்த தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்க மாவீ­ரர்­கள் நாள் வெகு எழுச்­சி­யோடு, நேர்த்­தி­யான ஏற்­பா­டு­க­ளோடு நடை­பெற்­ற­தைப் பார்த்­த­போது லீ குவான் யூவின் அந்­தத் தீர்க்க தரி­ச­ன­மான பார்­வை­தான் மீண்­டும் மீண்­டும் ஞாப­கத்­துக்கு வந்­தது.
சில வரு­டங்­க­ளுக்கு முந்­தையை மாவீ­ரர் நாள் நினை­வு­களை மீட்­டிப் பார்க்­கும்­போது லீயின் கருத்­துக்­க­ளைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

9 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் மாவீ­ரர் நாள் என்­பதை உச்­ச­ரிப்­ப­தற்­குக்­கூட அச்­சப்­ப­டும் நிலமை இருந்­தது. 2010, 2011ஆம் ஆண்­டு­க­ளிலே வெளி­நா­டு­க­ளில் மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் நடக்­கின்­றன என்­கிற செய்­தியை உத­யன் பத்­தி­ரி­கை­யில் வெளி­யி­டு­வதே ஆபத்­தைக் கொண்டு வருமோ, செய்­தி­யா­கக்­கூட அதை வெளி­யி­டு­வதை வைத்து மகிந்த அரசு பத்­தி­ரி­கை­யையே தடை செய்­யுமோ என்று அஞ்சி அஞ்­சிச் செய்­தியை வெளி­யி­ட­வேண்­டி­யி­ருந்­தது.

மாவீ­ரர் நாளை நினை­வேந்­தி­ய­தன் கார­ண­மாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தாக்­கப்­பட்­டார்­கள். அவர்­கள் மட்­டு­மல்­லர் அந்­தச் செய்­தி­யைச் சேக­ரிக்­கச் சென்ற உத­யன் பத்­தி­ரி­கை­யின் ஆசி­ரி­யர் பல்­க­லைக்­க­ழக மாண­வர் விடு­தி­யின் அருகே வைத்­துத் தரைப் படை அதி­காரி ஒரு­வ­ரால் தாக்­கப்­பட்­டார். அவ­ரது ஒளிப்­ப­டக் கரு­வி­யைப் பறித்­தெ­டுப்பதற்கு அடை­யா­ளம் தெரி­யா­த­வர்­கள் முயற்­சித்­தார்­கள்.

அது பற்­றிக் கொடுக்­கப்­பட்ட முறைப்­பாடு மீது பொலி­ஸார் எந்த நட­வ­டிக்­கை­யை­யும் எடுக்க மறுத்­தார்­கள். மாண­வர்­கள் மீதான அடக்­கு­மு­றை­யைக் கண்­டித்து மறு­நாள் பல்­கலை மாண­வர்­கள் நடத்த முற்­பட்ட அமை­திப் பேர­ணி­யில் கலந்­து­கொண்­ட­வர்­களை விரட்டி விரட்­டித் தாக்­கி­னார்­கள். பர­மேஸ்­வரா வீதி கொஞ்ச நேரத்­தில் ஓய்ந்­து­போன போர்க்­க­ளம் போன்று காட்­சி­ய­ளித்­தது. இவை­யெல்­லாம் 2012ஆம் ஆண்­டில் நடந்­தவை.

ஆனா­லும் ஒவ்­வோர் ஆண்­டும் ஏதோ ஒரு­வி­தத்­தில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லுக்­கான முட்­டி­மோ­தல்­கள் தொடர்ந்­து­கொண்டே இருந்­தன. வாய்ப்­புக் கிடைத்­த­போது 2015ஆம் ஆண்டு ஆட்­சியை மாற்றுவதற்குத் தமிழர்கள் முன்­னின்று உழைத்­தார்­கள். அதே­யாண்­டில் இல்­லை­யென்­றா­லும் அடுத்த ஆண்­டி­லேயே தமது அர­சி­யல் நகர்­வின் விளை­வைப் பரி­சோ­தித்­தார்­கள்.

களம் புதிய பரி­ணா­மத்தை, எழுச்­சியை, புதிய அர­சி­யல் செல்­நெறி நோக்­கிய பாதையை, மீண்­டும் ஒரு செய்­தியை வெளிப்­ப­டுத்தி நின்­றது.
பிச்­சல், பிடுங்­குப்­பா­டு­கள் எல்­லாம் தாண்டி, இன்று மாவீ­ரர் தினத்துக்குத் தடை வருமோ என்­கிற அச்­சம் தோன்­று­கை­யில், அவற்­றைத் தடுப்­ப­தற்­கான சட்­டச் சேட்­டை­கள் அரங்­கே­று­கை­யில், நேர்த்­தி­யான திசை நோக்கி உறு­தி­யோடு அடி­யெ­டுத்து வைத்­தி­ருக்­கி­றது இந்த ஆண்டு மாவீ­ரர் நாள்.

உல­கெங்­கும் பிள­வுண்டு கிடந்த ஈழத் தமி­ழர்­களை மீண்­டும் ஒரு தடவை ஒரு­கு­டை­யின் கீழ் ஒன்­றி­ணைத்­தி­ருக்­கி­றார்­கள் மாவீ­ரர்­கள். இந்த எழுச்சி புதிய அர­சி­யல் செல்­நெ­றி­யின் வழி தமி­ழர்­களை நடத்­திச் செல்­லும் என்று நம்­பு­வோம். அதே நேரத்­தில் நேற்­றைய நிகழ்வு எடுத்­தி­யம்­பி­யி­ருக்­கும் உறு­தி­யான செய்தி, லீ கூறி­ய­தைப் போன்று தமி­ழர்­கள் அடங்­கிப் போக­மாட்­டார்­கள்.

https://newuthayan.com/story/11/தமி­ழர்­கள்-ஒரு­போ­தும்-அடங்­கிப்­போக-மாட்­டார்­கள்.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு போராட்டம் இல்லை என்பது தெரிந்தும் 2009 போராட்டம் முடிவுக்கு கொண்டுவரபட்டும் ஒன்பது வருடங்கள் கடந்தும் நேற்று 27 உலகு எங்கும் தமிழர் வாழும் பகுதிகள் நடைபெற்ற மாவீரர் நாள்  நிகழ்வுக்கு வந்த மக்களின் உற்சாகம் பங்களிப்பு தெளிவான செய்தியொன்றை விட்டு செல்கிறது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.