Jump to content

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர்நாள் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு!


Recommended Posts

தேசிய மாவீரர் தின நினைவேந்தல் இன்று யாழ் பல்கலைகழத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுகிறது. இந்நினைவேந்தல் பல்கலைகழக ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வாக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனையடுத்து மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், ஆசிரியர், மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரநடுகை மாதத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

https://www.ibctamil.com/srilanka/80/109874?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • போல் changed the title to யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மாவீரர்நாள் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு!

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி!!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாளாகத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

47063562_2177878099145726_7761007922506646736146_2177878069145729_3752252325079546718951_2177878115812391_36011372852040

https://newuthayan.com/story/13/யாழ்-பல்கலைக்கழகத்தில்-மாவீரர்களுக்கு-அஞ்சலி.html

Link to comment
Share on other sites

தமிழர் தாயகமெங்கும் உணர்வு பூர்வமாக மாவீரர்களுக்கு அஞ்சலி

maveerar-2018-2-1.jpg

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்கள் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டனர்.

இன்று மாலை 6.05 மணியளவில், மணிஒலி எழுப்பப்பட்டதை அடுத்து, ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.

அதையடுத்து, 6.07 மணியளவில், மாவீரர்களுக்காக துயிலுமில்லங்களிலும், நினைவிடங்களிலும், வீடுகளிலும் பொதுச்சுடர் மற்றும் ஈகச் சுடர்கள் ஏற்றப்பட்டன.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் பிரிகேடியர் தீபன், லெப்.கேணல் கில்மன் ஆகியோரின் தந்தை பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.

பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் பெற்றோர், உறவினர், மற்றும் பொதுமக்கள் கனகபுரம் துயிலுமில்லத்தில் குவிந்து, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.

அதேவேளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சிறிலங்கா இராணுவப் பிடியில் இல்லாத துயிலுமில்லங்களிலும் இம்முறை மாவீரர் நாள் உணர்வுபூர்வமாகவும் பெருமளவு மக்களின் பங்கேற்புடனும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும் இன்று காலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதேவேளை, மாலையிலும், நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டன.

maveerar-2018-1-1.jpg

maveerar-2018-3-1.jpg

http://www.puthinappalakai.net/2018/11/27/news/34902

Link to comment
Share on other sites

மாணவர்களின் உணர்வுத் தீயால் மீண்டும் எழுச்சிகொண்டது யாழ் பல்கலைக்கழகம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றுதிரண்டு தேசிய மாவீரர் நாளினை உணர்வுபூர்வமாக அனுட்டித்துள்ளனர்.

சரியாக மாலை ஆறு ஐந்து மணிக்கு மாவீரர்களுக்கான முதன்மை ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து தூபியினைச் சூழ்ந்திருந்த மாணவர்களும் மாணவிகளும் தீபமேற்றி மாவீரர்களை நினைவில் ஏந்தினர்.

இதன்போது மாவீரர் நினைவுப் பாடல் ஒலிக்கவிடப்பட்டதுடன் மாணவ மாணவியர் கண்ணீர் விட்டுக் கலங்கி அழுதனர்.

இதேவேளை இன்று மதியம் மாவீரர்களுக்கான மலர் வணக்க நிகழ்வும் யாழ் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/109904?ref=bre-news

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடையம்.ஆனால் உங்கள் பாதுகாப்பும் கல்வியும் இடையுறு வராமால் பார்கவும்.மீண்டும் நன்றி.

Link to comment
Share on other sites

இந்த உலகம் கோழைகளுக்கல்ல என்பதை தமிழ் மாணவர்கள் அறிந்து வைத்துள்ளனர்!

கோழைகளுக்கு தினமும் மரணம், வீரர்களுக்கு ஒரே தடவை தான் மரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Rajesh said:

இந்த உலகம் கோழைகளுக்கல்ல என்பதை தமிழ் மாணவர்கள் அறிந்து வைத்துள்ளனர்!

கோழைகளுக்கு தினமும் மரணம், வீரர்களுக்கு ஒரே தடவை தான் மரணம்.

 

அடடா! இதை ஊரில் இருந்து கொண்டு தாங்கள் சொல்லி இருந்தால் நானும் சந்தோசப்பட்டு இருப்பேன் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.