Jump to content

‘காவிரி டெல்டா’வைப் புரட்டிப் போட்ட ‘கஜா’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘காவிரி டெல்டா’வைப் புரட்டிப் போட்ட ‘கஜா’

எம். காசிநாதன் / 2018 நவம்பர் 26 திங்கட்கிழமை, மு.ப. 12:29 

‘கஜா’ப் புயல், தமிழகத்தைப் புரட்டிப் போட்டு விட்டு, பறந்து விட்டது. 63 பேருக்கு மேல், உயிர்ப் பலி வாங்கிய இந்தப் புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம் மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.   

தமிழ்நாடு,‘சுனாமி’யைப் பார்த்தது; ‘தானே’ புயலைப் பார்த்தது; ‘ஒகி’ புயலைப் பார்த்தது; ஆனால், இந்தக் ‘கஜா’ புயல் பாதிப்பு, மற்றப் புயல்களை விட வீரியமானது.    

இரண்டரை இலட்சம் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்கள், “கஜாப் புயல், உயிரை விட்டுவிட்டு, உடைமைகளை எடுத்துச் சென்று விட்டது” எனக் கூறுகிறார்கள்.   

இலட்சத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால், நான்கு மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள், இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. ‘விளக்கும் இல்லை; விடியலும் இல்லை’ என்பது போல், மக்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.   

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, வெற்றிகரமாகச் சமாளித்த அரசு நிர்வாகம், நிவாரணப் பணிகளில் கடும் விமர்சனத்தைச் சந்தித்துள்ளது.  

நவம்பர் 16 ஆம் திகதி, புயல் தாக்கிய நேரத்தில், அரசாங்கத்தின் முன்னேற்பாடுகள் வெற்றி பெற்று விட்டதாகவே அரசியல் கட்சிகள் கருதின.   

தி.மு.க சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின், “புயலைச் சமாளிக்க, ‘மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையம்’ எடுத்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை” என்று கூறினார்.   

அவரைத் தொடர்ந்து, அனைத்து எதிர்க்கட்சிகளும் அ.தி.மு.க அரசாங்கத்தைப் பாராட்டினார்கள். ஓர் ஆக்கபூர்வமான அரசியல், தமிழகத்தில் நீண்ட நாள்களுக்குப் பிறகு, ‘கஜா’ புயலால் ஏற்பட்டிருக்கிறது என்றே அனைவரும் எண்ணினர். ஆனால், புயல் தாக்கிய மறுநாளில் இருந்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்த தகவல்கள், அனைவரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தன. இவை, அரசாங்கத்தின் மீது கடும் விமர்சனத்தை, முன்வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தின. அமைச்சர்கள் சிலர், மக்களால் விரட்டி அடிக்கப்பட்டனர்; அதிகாரிகள் முற்றுகையிடப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார்.  

அனைத்து அரசியல் கட்சிகளும் புயல் பாதித்த பகுதிகளில் முகாமிட்டாலும், நிவாரணப் பொருட்களை அனுப்பினாலும், அமைச்சர்களும் அதிகாரிகளும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டாலும் மக்களின் கோபத் தீயை அணைக்க முடியவில்லை. ஏனென்றால், ஏற்பட்ட பாதிப்பு, அவ்வளவு மோசமானது. மக்களின் போராட்டம் காரணமாக, முதலமைச்சர் பழனிசாமி, ஹெலிகொப்டரில் சென்று, பார்வையிட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகினார்.  

ஆனால், தி.மு.க தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், சாலை மார்க்கமாகவே சென்று, மக்களைச் சந்தித்தார்கள். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சாலை மார்க்கமாகவே சென்று, மக்களைச் சந்தித்தார்.  

சேதங்களைப் பார்வையிட்டு விட்டு, முதலமைச்சர், டெல்லி சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து, நிவாரணப் பணிகளுக்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் நிதியுதவி கேட்டிருக்கிறார்.   

நிரந்தரச் சீரமைப்புப் பணிகளுக்கு, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மில்லியன் ரூபாயும், உடனடி நிவாரணத்துக்கு பதினையாயிரம் மில்லியன் ரூபாயும் கேட்டிருக்கிறார். ஆனால், கடந்த காலங்களில் அனர்த்தப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு, இவ்வளவு நிதியை ஒதுக்கியதில்லை. ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், இப்போது எடப்பாடி பழனிசாமி ஆகிய மூன்று முதலமைச்சர்களும் கேட்ட நிதி வந்தது இல்லை.   

ஏனென்றால், இயற்கைப் பேரிடர்களின் போது, கொடுக்க வேண்டிய நிதி குறித்து, ‘தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்’ வழி காட்டுதல்களை வழங்கியிருக்கிறது. அந்த வழிகாட்டுதல் படிதான், மத்திய அரசாங்கம் மட்டுமல்ல, மாநில அரசாங்கம் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும்.   

அதேநேரத்தில், ‘கஜா’ புயல்ப் பாதிப்புகளைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கோரிக்கையை, மத்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்டால், நிதியுதவி கொஞ்சம் அதிகம் கிடைக்கும் என்பதுதான், தற்போதைய நிலைமை.  

கடந்த ஏழு வருடங்களில், ‘தானே’, ‘வர்தா’, ‘ஒகி’, ‘கஜா’ப் புயல்களின் பாதிப்பு, 2015 மழை வெள்ளப் பாதிப்பு, கடும் வரட்சி என்று, பல்வேறு பேரிடர்களில் சிக்கி, உட்கட்டமைப்பைத் தமிழகம் இழந்து கொண்டிருக்கிறது.   
ஒவ்வொரு முறை வந்த பேரிடரும், ஒவ்வொரு பகுதியைப் பதம் பார்த்து விட்டுச் சென்றிருக்கிறது. ‘தானே’ கடலூர் மாவட்டத்தை நிலைகுலைய வைத்தது. ‘வர்தா’ சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைக் கலங்க வைத்தது. ‘ஒகி’ கன்னியாகுமரி மாவட்டத்தைத் துவம்சம் செய்தது. ‘கஜா’ புதுக்கோட்டை, திருவாரூர், நாகபட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் தாண்டவமாடி விட்டது.   

2015 மழை வெள்ளமோ, சென்னை, புறநகர் மாவட்டங்களை நிலைகுலைய வைத்தது. ஆனால், இந்தப் பாதிப்புகளில் இருந்து, அரசாங்கம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை; மக்களும் பாடத்தை கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான், இன்றைய வருத்தத்துக்குரிய செய்தி.  

அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில், கடந்த காலப் புயல்களுக்கும், இந்தப் புயலுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பாராட்டும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. வானிலை ஆராய்ச்சி மய்யம் விடுத்த எச்சரிக்கை, அரசாங்கத்துக்குக் கை கொடுத்தது. ஆனால், நிவாரணப் பணிகள், மறுசீரமைப்புப் பணிகளில் அரசாங்கம், இன்னும் தயார் நிலையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.   

புயல் பாதிப்பு இருக்கும் என்றார்களே தவிர, இவ்வளவு கடுமையான பாதிப்பு இருக்கும் என்பதை, வானிலை ஆராய்ச்சி மய்யமும் சொல்லவில்லை; அரசாங்கத் தரப்பிலும் உணரவில்லை.   

நாகபட்டினத்தை மட்டும், புயல் தாக்கி விட்டுச் செல்லும் என்று நினைத்திருந்த அரசாங்கத்துக்கு, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது அதிர்ச்சியாகி விட்டது.  அதனால், வீசும் புயலால் எத்தகைய பாதிப்பு இருக்கும் என்பதை, முழுவதுமாகக் கணிக்க முடியவில்லை என்றாலும், ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்கும் வாய்ப்புகளை, வானிலை ஆராய்ச்சி மய்யம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.   

அரசாங்க நிர்வாகம், குறிப்பாகப் பேரிடர் மேலாண்மை ஆணையம் முழு வீச்சில் பணியாற்றி, இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை, முன் கூட்டியே அடையாளம் காணும் வல்லமை பெறவேண்டும். அப்போது மட்டுமே, வானிலை ஆராய்ச்சி மய்யத்தின் எச்சரிக்கை பயனுள்ளதாக இருக்கும்.   

மக்களைப் பொறுத்தவரை, பாதிப்பிலிருந்து வெளிவந்து, நிவாரணப் பணிகளுக்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் மனவோட்டத்துக்கு வர வேண்டும். ஆனால், ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுவதால், நிவாரணமும் தடைப்படுகிறது; மறுசீரமைப்புப் பணிகளும் நின்று போகின்றன. ஆகவே, பேரிடர் காலங்களில், அதை எதிர்கொள்ளும் வகையில், மக்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள், நிச்சயம் தேவைப்படுகிறது.  

இதுதவிர, உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடைபெறவில்லை என்பதால், உள்ளூராட்சி அமைப்புகள் இல்லாதது, நிவாரணமும் மறுசீரமமைப்பும் மக்களைச் சென்றடைவதில் பெரும் பிரச்சினையை உருவாக்கி இருக்கிறது.   

உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் இருந்திருந்தால், மக்களைச் சமாதானப்படுத்தும் தகுதி அவர்களுக்கு இருந்திருக்கும். ஏனென்றால், அவர்கள் எல்லாம் உள்ளூர் கிராம மக்களுடன் நடமாடுகிறவர்கள். 

ஆகவே, பேரிடர்கள் குறித்த விழிப்புணர்வு, வானிலை ஆராய்ச்சி மய்யம் பாதிப்பைத் துல்லியமாக எடுத்துரைக்க இயலாதது, உள்ளூராட்சித் தேர்தல் நடத்தாமல் இருப்பது எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, ‘கஜா’ப் புயல் பாதிப்பின் கஷ்டத்தை மக்கள் சந்தித்து, கதற வேண்டிய நிலை, இந்த நான்கு மாவட்டங்களிலும் ஏற்பட்டு விட்டது.  இந்தப் புயலில், கலைஞர் கருணாநிதியின் பிறந்த வீடே, பாதிக்கப்பட்டுள்ளது. 

‘காவிரி டெல்டா’ பகுதிகள், ஏற்கெனவே காவிரி நீர் கிடைக்காததால் பாதிக்கப்பட்டு, பின்னர், இந்த வருடத்தில் காவிரியில் வந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வரட்சியாலும் பாதிப்பு; வௌ்ளத்தாலும் பாதிப்பு. இப்போது ‘கஜா’ புயலால், ‘காவிரி டெல்டா’ மீண்டும் சூறையாடப்பட்டுள்ளது.   

தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் அடங்கிய, ‘காவிரி டெல்டா’, தமிழக பொருளாதாரத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது மட்டும்தான், இப்போதைக்கு உண்மை.   

நிரந்தரச் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ‘காவிரி டெல்டா’ மீண்டும் செழிப்புடன், வழமைபோல்த் தலை தூக்குமா என்பது, மத்திய அரசாங்கம் வழங்கப் போகும் நிவாரண நிதியில்தான் இருக்கிறது.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காவிரி-டெல்டா-வைப்-புரட்டிப்-போட்ட-கஜா/91-225719

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.