Jump to content

Recommended Posts

_104489628_iravartham_mahadevan.jpg

உண்மையான தமிழகனாக இருந்தால் ஷேர் செய்யவும் என்ற சமூக வலைதள பதிவுகள் தோன்றாத காலம் அது. தனக்கு கிடைத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பை துறந்து, தமிழ்மொழி குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக 1953ல் இந்தியாவிலேயே தனது வேலையை அமைத்துக்கொண்டவர் ஐராவதம் மகாதேவன்.

அவர் தனது 88வது வயதில் இன்று காலமானார்.

சிந்து சமவெளி வரலாறு, தமிழ் மொழியின் தொன்மை குறித்து விஞ்ஞானபூர்வமாக ஆய்வுகளை நடத்தி, தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த கல்வெட்டியியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன்.

வயது மூப்பு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது இழப்புக்கு உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் அமைப்புகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, தினமணி பத்திரிகையின் ஆசிரியர், கல்வெட்டியியல் அறிஞர், வரலாறு ஆய்வாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக இருந்தவர் ஐராவதம் மகாதேவன்.

சுமார் 50 ஆண்டு காலம் நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில், சிந்துசமவெளிக் குறியீடுகளில் இருப்பவை தொல் திராவிட எழுத்துரு வடிவங்கள் என்று அறிவித்தார். அதேபோல, பல ஆண்டு கால கல்வெட்டியியல் ஆய்வுகளின் அடிப்படையில், கல்வெட்டுகளில் உள்ள தமிழ் எழுத்துருக்களை, பிராமி எழுத்துக்கள் என்று சொல்லாமல், தமிழ்பிராமி எழுத்துக்கள் என்றே சொல்லவேண்டும் என்ற கருத்தை நிறுவியவர்.

சிந்து சமவெளி ஆராய்ச்சி மற்றும் தொல்தமிழ் கல்வெட்டுகள் ஆகிய துறைகளில் ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு அளப்பரியது என அவரோடு பயணித்த மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.

''ஆராய்ச்சிகள் நடத்தும்போது, அதன் தீர்வுகளை நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும் என்ற கருத்துப்படி வாழ்ந்தவர் மகாதேவன். கிடைத்த தரவுகளுக்கு உண்மையாக இருந்தவர். கணினி பயன்பாடு குறித்து பலரும் அறிந்திராத காலத்தில், 1977ல், சிந்துசமவெளி குறியீடுகளின் எழுத்துக்கள் மற்றும் பொறிப்புகளை அட்டவணைப்படுத்தியவர். வரலாற்று ஆராய்ச்சிகளில் மறக்கமுடியாத ஆளுமையாக இருப்பவர். அவரது கடைசி யோசனை கூட சிந்துவெளி பற்றியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை''என்று கூறுகிறார் பாலகிருஷ்ணன்.

''உலகதமிழ் மாநாடுகளில் பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்ததோடு, சிந்துசமவெளி குறியீடுகளுக்கும், பண்டைத்தமிழ்ச் சொற்களுக்கும் இருக்கும் தொடர்பை நிறுவி திராவிட கருதுகோளுக்கு வலுசேர்த்தவர் மகாதேவன்,'' என்கிறார் அவர்.

பத்மஸ்ரீ விருது, தமிழக அரசின் தொல்காப்பியர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற மகாதேவன் சிந்து சமவெளி ஆய்வு மையம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

தமிழக வரலாற்றை படிக்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஐராவதம் மகாதேவனின் புத்தகங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் அவரது ஆய்வுகள் கல்வெட்டியியல் துறை, பாடங்களில் இடம்பெற்றுள்ளன என சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் துறை தலைவர் பாலாஜி தெரிவித்தார்.

''கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்களை ஆய்வு செய்த ஐராவதம் மகாதேவன், தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான காலம் மூன்றாம் நூற்றாண்டு என்று நிறுவியுள்ளார். இதுவரை கிடைத்த சான்றுகளைக் கொண்டு அவர் நிறுவிய கால அளவு பல ஆராய்ச்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக பிராமி எழுத்துக்கள் அடங்கிய கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டால், அதன் காலத்தை துல்லியமாக அறிய மகாதேவனைத்தான் தொடர்பு கொள்ளவேண்டும், அவரது முடிவு இறுதியானதாக இருக்கும் என்ற நிலை இருந்தது. உலகம் முழுவதும் உள்ள வரலாறு ஆய்வாளர்கள் மகாதேவனின் தமிழ் பிராமி குறித்த ஆய்வு முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர்,'' என்கிறார் பாலாஜி.

மகாதேவனின் மறைவு ஈடுசெய்யமுடியாத இழப்பு என அரசியல்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில், ''மறைந்த தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கோவையில் நடைபெற்ற உலக செம்மொழி தமிழ் மாநாட்டில் சிந்து சமவெளி நாகரீக ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து, பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து சிந்து சமவெளி நாகரீகத்தை அறிந்து கொள்ள முடிகிறது என்ற அவரது ஆய்வினை மேற்கோள்காட்டி மாநாட்டில் அவரின் தலைமையுரையிலேயே பாராட்டப்பட்டவர். அவரின் மறைவு பத்திரிகை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கியத் துறைக்கும் பேரிழப்பாகும்,''என்று கூறியுள்ளார்.

ஐராவதம் மகாதேவனிடம் புதைந்து கிடந்த திறமைகளை தமிழகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தனது இரங்கல் அறிக்கையில் கூறியுள்ளார். ''தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வுகளில் மூலம் சிந்து சமவெளி நாகரீகக் குறியீடுகளுக்கும், தமிழ் எழுத்துகளுக்கும் ஒற்றுமை இருப்பதை சங்ககால இலக்கியங்களின் துணையுடன் நிரூபித்து சிந்து சமவெளி நாகரீகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரீகம் என்பதை நிறுவியவர். பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர். மகாதேவனின் மறைவு தமிழுக்கும், தொல்லியல் துறைக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு,'' என்று தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-46344293

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு பேரிழப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள் ..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.