Jump to content

விவகார ரத்து


sathiri

Recommended Posts

அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் ..

எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ...

இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் ..

இப்போ பெரிய பிரச்னை ...

என்ன உன்னை போட்டு அடிச்சாளா ....

அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ...

அப்போ நீயே சொல்லு ....

விஸ்கியை ஒரே மிடறில் இழுத்தவன் .. பாக்கெட்டிலிருந்து ஒரு என்வலப்பை எடுத்து நீட்டினான் ..

அதை வாங்கி உள்ளே இருந்த கடிதத்தை எடுத்தேன் விவாக ரத்து கேட்டு அவனது மனைவி வக்கீல் மூலம் அனுப்பிய கடிதம் ..படிக்கலாமா என்றேன் ..

உதட்டை பிதுக்கி.. படி.. என்று கைகளாலேயே சைகை செய்து சிவாஜி கணேசன் ரேஞ்சுக்கு போயிருந்தான் ..

பல பக்க கடிதத்தை படித்ததன் சுருக்கம் என்னவெனில் அவன் சுத்தமாக சவரம் செய்வதில்லை அப்படி சவரம் செய்யாத காரணத்தால் ஒரே படுக்கையில் படுக்கவே அருவருப்பாக இருக்கின்றது .தாம்பத்திய உறவு பாதிக்கப் படுகிறது எனவே விவாக ரத்து வேண்டும் என்பதே ..

படித்து முடித்து விட்டு சிரித்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்தேன் ..

இப்போ சொல்லு எங்களுக்கு ஒரு பிள்ளையிருக்கு அப்போ வராத அருவருப்பு இப்போ வந்ததா ?

அதுபற்றி எனக்கு தெரியாது ஆனால் சவரம் செய்வதெல்லாம் ஒரு பிரச்சனையா ? வேண்டுமென்றால் உனக்கு ஒரு சவரக்கத்தி வாங்கி கொடுக்கிறேன் ..

கடிதத்தை வடிவா படிச்சியா இல்லையா ? அவள் ஒவ்வொரு நாளும் சவரம் செய்ய சொல்லியிருப்பது மேல இல்லை கீழ ..அங்கை ஒவ்வொரு நாளும் செய்ய இயலுமா ? நீயே சொல்லு ...

சரி எனக்கு விளங்கிது ..உண்மையான பிரச்சனைஎன்ன நீயே சொல்லு ..

இன்னொரு விஸ்கி என்று கிளாசை நீட்டினான் ..ஊற்றியதும் .. அவளுக்கும் அவளோட வேலை செய்யிற ஒரு கறுப்பனுக்கும் தொடர்பு ..ஓங்கி மேசையில் குத்தினான் ...

ஓன்று சொன்னால் கோபிக்க மாட்டாயா ??

சொல்லு ...

தன்பாட்டில் வாழ்ந்து கொண்டுருந்த ஆபிரிக்க மக்களை ஆட்சி செய்கிறோமென காலனித் துவப்படுத்தி உன் மூதையர் கறுப்பின பெண்கள் மீது செய்த கொடுமையை விட .....முடிக்கவில்லை ..

கிளாசை வீசி எறிந்து விட்டு போய்க் கொண்டிருந்தான் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார்,  உங்களது  பிரெஞ்சு காரநண்பனிடம் ....  
கறுப்பன்  ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா  என்று  ஏன்  நீங்கள்  கேட்கவில்லை.  :grin:

Link to comment
Share on other sites

23 hours ago, தமிழ் சிறி said:

சாத்திரியார்,  உங்களது  பிரெஞ்சு காரநண்பனிடம் ....  
கறுப்பன்  ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா  என்று  ஏன்  நீங்கள்  கேட்கவில்லை.  :grin:

அவன் வழிக்க தேவையில்லையெண்டு நினைக்கிறன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2018 at 6:08 PM, தமிழ் சிறி said:

சாத்திரியார்,  உங்களது  பிரெஞ்சு காரநண்பனிடம் ....  
கறுப்பன்  ஒவ்வொரு நாளும், அங்கே சவரம் செய்பவனா  என்று  ஏன்  நீங்கள்  கேட்கவில்லை.  :grin:

கேட்டிருப்பார் அவன் வேற பதில் சொல்லியிருப்பான் இந்தாள் மழுப்புகிறார்:unsure::grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.