Jump to content

கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன்

November 25, 2018

1 Min Read

DSC00365.jpg?resize=800%2C450

கழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம்  சொல்லியும் அவர்கள்  கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.

ஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன்  பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவுகள் எந்த வித பொறுப்பும் இன்றி திறந்த வெளியில்  தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் எமது உப்பளத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இச் செயற்பாடு எதிர்காலத்தில் கைத்தொழில் வலயத்திற்கு தடையாகவும் இருக்கலாம் என்றார்  அவர்.

கிளிநொச்சியின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் இவ்வாறு பலரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வருகின்றனர். ஆனால் இவை எவற்றையும் கரைச்சி பிரதேச சபை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. மாறாக தங்களின் வழமையான தோல்விகண்ட கழிவகற்றல் முறையினையே மேற்கொண்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் என்பது போல எங்களது பிரதேச சபையும் குப்பைகளை அகற்றுகிறது என்ற வகையில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெறுகிறது. இது குறித்த பிரதேசத்திற்கும் அதன் சுற்றுப்புறச் சூழவுக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.

கிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் அனைத்தும் அதாவது தின்மக் கழிவு, திரவக் கழிவு, வைத்தியசாலைகளின் கழிவுகள்,  என அனைத்தும் உழவு இயந்திரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பரந்தன் உமையாள்புரம் பகுதியில் ஏ9 பிரதான வீதியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது.

IMG_6466.jpg?resize=800%2C534

இங்கே கழிவகற்றல் முகாமைத்துவம் கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கழிவகற்றல் முகாமைத்துவத்தின் படி கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பு ஏற்படாத வகையில் மீள்சுழற்சி செய்தல், உருமாற்றுதல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளை சுட்டிகாட்டுகின்றது. ஆனால் கிளிநொச்சியில் அதில் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. கழிவுகளை சேகரித்தல் விடயத்திலும் எல்லா கழிவுகளையும் ஒன்றாகவே சேகரித்து செல்கின்றனர். எனவே இந்த  செயற்பாடுகள் தொடர்பிலேயே பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்கின்ற ஒரு வசதிவாய்ப்பு ஏற்படுகின்ற போது உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கொட்டுகின்ற கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியாத நிலையே ஏற்படும். காரணம் அங்கு பிளாஸ்ரிக், கழிவுகள், உடைந்த போத்தல்கள் வைத்தியசாலை கழிவுகள் விலங்கு கழிவுகள் என அனைத்தும் ஒன்றாக குவிக்கப்படுகிறது. அத்தோடு இந்தக் கழிவுகள் அங்கு தேங்கி நிற்கும் மழை நீருடன் சேர்ந்து அழுகிய நிலையில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, வழிந்தோடுகிறது. இது சுற்றயலில் மிக மோசனமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கழிவகற்றல் முறையால் நிலம், நீர் என்பன படுமோசனமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்தப் பாதிப்புக்களின்  பாதகத்தை சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை  மாறாக பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதே கழிகவற்றல் பொறிமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

IMG_6499.jpg?resize=800%2C534

மனிதன் குலத்திற்கு மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்துக்கும் சுற்றுச் சூழல் மிக முக்கியமானது. உயிரினங்களிலிருந்து சுற்றுச் சூழலை பிரிக்க முடியாது. சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலேயே உயிரினங்களின் பாதுகாப்பும் தங்கியிருக்கிறது. அந்த வகையில் நிலம்,நீர், வாயு என்பன சுத்தமாக இருக்க வேண்டும். இவற்றின் சுத்தம் என்பது மனித நடவடிக்கையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் இங்கே தெரிந்தும் கொண்டும் பாதிப்பபை ஏற்படுத்துகின்ற கழிவகற்றல் முறை தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. கழிவு முகாமைத்துவம் பற்றியும் உரிய தரப்பினர் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு.

இதேவேளை பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கழிவகற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றி உள்ளுராட்சி மன்றங்கள் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை வீடுகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், தனிநபர்களில் இருந்து ஆரம்பிக்கின்ற இச் செயற்பாடுகள் சமூகமா, பிரதேசமாக மாற்றமடைகின்ற போதே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும்.  பாதுகாப்பான கழிவகற்றலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் என்பது தனிநபர் சாந்த விடயமல்ல அதுவொரு கூட்டுழைப்பு. கூட்டுப்பொறுப்பு இந்தக் கூட்டுழைப்பை, கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்த வேண்டியது உள்ளுராட்சி மன்றங்களினதும் கடமையாகும். ஆனால் கிளிநொச்சியில் உள்ளுராட்சி மன்றங்கள் தங்களது கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் அப்பால் அரசியல் இலாபநட்டங்களை கவனத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.

IMG_6485.jpg?resize=800%2C534

கிளிநொச்சியை பொறுத்தவரை கிளிநொச்சி நகரும் அதனை அண்டியப் பகுதிகளிலும் கழிவுகள் அகறப்படுகிறது. இதற்குள் வியாபார நிலையங்களின் கழிவுகள், வைத்தியசாலைக் கழிவுகள் என்பன உள்ளடங்குகின்றன. குறிப்பாக வைத்தியசாலை கழிவுகள் விடயத்தில் மிகவும் அவதானம் தேவை  ஆனால் இங்கே வைத்தியசாலை கழிவுகளும் ஏனைய கழிவுகளுடன் சேர்த்து உமையாள்புரத்தில் கொட்டப்படுகிறது.  இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி  சிந்திப்பதாக தெரியவில்லை. மீள் சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்ரிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், உலோக கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் என எல்லா கழிவுகளும் பரந்த வெளியில் கொட்டப்பட்டு அவ்வாறே விடப்படுகிறது.ஒருபுறம் பறவைகளாலும், விலங்குகளாலும் சுற்றுப்புறச் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. மறுபுறம்   வெள்ள நீருடன் கலந்து அடித்துச் செல்லப்படுகிறது.

உள்ளுராட்சி சபைகளின் மிக முக்கிய பணிகளில் ஒன்று கழிவகற்றல் அதனையே  இந்த நவீன யுகத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியாத நிர்வாகங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி  கொண்டுள்ளனர். எனவே சுற்றுப்புறச் பாதுகாப்பு, மக்களின் சுhதாரமான வாழ்வு, என்பனவற்றை கருத்தில் எடுத்து தூரநோக்கோடு உள்ளுராட்சி சபைகள் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பும்.

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.