Jump to content

மரித்தாளா ..மரியா ?


sathiri

Recommended Posts

காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன்.

மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது மாடிவது மாடியில்.. 3 ஆளுயர பெரிய நாய்களோடு குடியிருக்கிறார் . இருதய அறுவை சிகிச்சை செய்து பேஸ் மேக்கர் வேறு பொருத்தப்பட்டிருக்கிறது. அவரின் ஒரே மகன் இத்தாலியில் வசிப்பதால். அவர் கேட்டுக்கொண்டதுக்கிணங்க ஒவ்வொருநாளும் மரியாவுக்கு மனைவிதான் காலையுணவு கொடுத்து நாய்களுக்கும் உணவு வைத்து விட்டு வருவார். இது 3 வருசமாக நடக்கும் நிகழ்வு .. .இன்று அவர் கதவை திறக்கவில்லை .....

நான் அவசரமாக. ஓடிப்போய் லிப்டில் ஏறி. 7ம் மாடிக்கு போனதுமே பதற்றத்தில் இருந்த மனைவி அடக்கி வைத்திருந்த அழுகையை அவிழ்த்து விட. அவரைதேற்றிவிட்டு கதவை பலமாக தட்டினேன். நாய்கள் மட்டுமே குலைத்துக்கொண்டிருந்தது . அதற்கிடையில் மரியாவின் மகனுக்கு மனைவி செய்தியை சொல்லிவிட அவர் அவசரமாக அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தார் .அந்த அடை மழையில் இத்தாலியிலியிலிருந்து வந்து சேர நாலு மணி நேரமாவது எடுக்கும் .அப்போதான் பக்கத்துக்கு வீட்டு பெண்மணி ஒப்பனை முடிந்து மெதுவாக கதவை திறந்து என்ன பிரச்னை என்றார் . அவரும் தனியாக வசிக்கும் வயதானவர் . விடயத்தை சொன்னேன் . சரி என் பால்கனி வழியாக அவரது பால்கனிக்கு பாய்ந்து போகலாம் அப்படிப்போய் யன்னல் வழியாக உள்ளே பார்க்கிறாயா என்றார் ..

போகலாம் தான் ஆனால் இரண்டு விடயம் ஒன்று மழை வேறு விடாமல் பெய்து கொண்டிருந்தது .
இந்த பால்கனியிலிருந்து தாவும்போது சறுக்கினால் நாளைக்கு பால் ..அடுத்தது அப்படி தாவி போய் விட்டாலும் யன்னலை திறந்து உள்ளே போக முடியாது ஆளுயர மூன்று நாய்கள் .எனக்கு அவைகள் பழக்கமில்லை ..இல்லையில்லை அவைகளுக்கு என்னை பழக்கமில்லை ..அவை எங்கே பாய்ந்து எதை கவ்வும் என்று தெரியாது ..ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை .

போலிசுக்கு போனடிக்கலாமா முதலுதவிக்கு போனடிக்கலமா என்று யோசித்து முதலுதவி தீயணைப்பு படைக்கு போனடிதேன் .பத்து நிமிடத்தில் வருவதாக சொன்னவர்கள் இருபது நிமிடத்தில் வந்து சேர்ந்தார்கள் .தீயணைப்பு வண்டியின் சைரன் சத்தம் கேட்டு குடியிருப்பின் அனைத்து பல்கனிகளிலும் விடுப்பு பார்க்கும் தலைகள் முளைத்து விட்டிருந்தது .
வந்தவர்களிடம் விபரத்தை சொன்னேன் .முன் கதவை அவர்கள் உடைத்து உள்ளே போக சட்டமில்லை .அதுவும் அதியுயர் பாதுகாப்பான இரும்பு கதவு .அதுக்கு போலீசை அழைக்க வேண்டும் .அந்த கதவை அவர்களும் உடைக்க முடியாது அதுக்காக அதிரடி போலீசை அழைக்க வேண்டும் .சட்ட ஒழுங்கின் விதி முறைப்படி நடக்க அவையெல்லாம் நேரமெடுக்கும் .

அடுத்ததாக இன்னொரு தெரிவு கிரேன் கொண்டு வர வேண்டும் .அதுக்கும் நேரமெடுக்கும் .எனவே பக்கத்துக்கு வீட்டு காரியின் பால்கனியால் பாய்ந்து போகலாம் என்று நான் சொன்னதும் தீயணைப்பு படையினர் இருவர் முதலுதவி கருவிகள் யன்னலை உடைக்கும் சுத்தியல்.நாய்கள் பாய்ந்து வந்தால் அவற்றை அமைதியாக்க அடிக்கும் ஸ்பிரே.. என்பவற்றோடு அவர் வீட்டுள் புகுந்து செல்ல இன்னொருவர் எங்களோடு நின்றுகொண்டிருந்தார் .

யன்னலை உடைத்து உள்ளே செல்லும் சத்தமும்.குரைத்துக்கொண்டிருந்த நாய்களை அமைதியாக்கும் சத்தமும் கேட்டது .அவர்கள் வெளியே வந்து என்ன சொல்லப்போகிறார்கள் என்கிற பதட்டத்தோடு பிரசவ அறை வாசலில் நின்றவனைப்போல நான் நின்று கொண்டிருக்க . இத் தாலியிலிருந்து காரில் வேகமாக வந்து கொண்டிருக்கும் மரியாவின் மகனுக்கு மனைவி போனில் நேரடி வர்ணனை செய்து கொண்டிருந்தார் .வெளியே இடியுடன் கூடிய அடை மழை .. யன்னலை உடைத்து உள்ளே சென்றவர்கள் கதவை திறக்கவில்லை நிமிடங்கள் ஒன்று.. இரண்டென.. கடந்து கொண்டிருந்தது .என் இதயத் துடிப்பு பின்னணி இசையாக என் காதில் கேட்டுக்கொண்டிருந்தது .ஒரு திகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான அனைத்தும் அங்கேயிருந்தது .

பன்னிரெண்டாவது நிமிடத்தில் கதவை திறந்த தீயணைப்பு படையினர் ஒருவர் லேசாக சிரித்தபடி பயப்பிட ஒன்றுமில்லை என்றவர் மனைவியை மட்டும் உள்ளே அழைத்தார் ..உள்ளே போன மனைவி சிறிது நேரத்தில் என்னை அழைத்தார் ..உள்ளே போய் பார்த்தேன் .மரியாவை கட்டிலில் கிடத்தி போர்த்திருந்தர்கள் .அவர் எதோ முனகிக்கொண்டிருந்தார் .எனக்கு வேலைக்கு போகும் நேரமாகி விட்டது அங்கிருந்து கிழம்பி விட்டேன் .

சரி நடந்த விடயத்தை உங்களுக்கும் சொல்ல வேணுமெல்லோ ..நேற்றிரவு மரியாவுக்கு இளைமைக்கால நினைவு எதோ வந்து தொலைத்திருக்க வேண்டும் எண்டு நினைக்கிறன் ..அவர் ஒரு விலையுயர்ந்த மார்டினி குடி வகை ஒன்றை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றவர் தொட்டியில் இளம் சுடு நீரை திறந்து விட்டு ஆடைகளை அவிழ்த்து தொட்டியில் இறங்கியவர் .நீராடியபடி குடிக்கத் தொடங்கியிருக்கிறார் .

அதிகாமாக குடித்து போதை தலைக்கேற சிறிய கோமா நிலைக்கு போய் விட்டார் .அவரின் நல்ல காலம் நவீன குளியல் தொட்டி என்பதால் அவரின் கழுத்தளவு தண்ணீர் மட்டுமே வழிந்தோடிக்கொண்டிருந்திருக்கின்றது . இல்லாவிட்டால் ஸ்ரீ தேவியை போலவே குடித்துக் கொண்டு குளித்த பெண் மரணம் என்கிற செய்தி வெளியாகியிருக்கும் .உள்ளே சென்ற தீ அணைப்பு வீரர் தொட்டியில் உறங்கிக்கொண்டிருந்தவரிடம் உயிர் இருக்கிறதா? ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என பரிசோதித்து விட்டு கன்னத்தில் ஓன்று பளாரென போட்டிருக்கிறார்கள் .அப்போ தான் மரியா அசைந்திருக்கிறார் .அதன் பின்னர் மனைவியை அழைத்து கட்டிலில் கொண்டு போய் கிடத்தி போர்த்தி விட்டு சென்று விட்டார்கள் ..

வெளியே வரும்போது குளியலறையை எட்டிப்பார்த்தேன் .பாதிக்கு மேல் முடிந்த மார்டினி போத்தல் இருந்தது .மரியா மீண்டும் அந்த தவறை செய்து விடக் கூடாது என்பதுகாக அதனை கொண்டு வந்து விட்டேன் .இனி அந்த கறுமத்தை நானே குடித்து முடிக்க வேண்டும் ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, sathiri said:

வெளியே வரும்போது குளியலறையை எட்டிப்பார்த்தேன் .பாதிக்கு மேல் முடிந்த மார்டினி போத்தல் இருந்தது .மரியா மீண்டும் அந்த தவறை செய்து விடக் கூடாது என்பதுகாக அதனை கொண்டு வந்து விட்டேன் .இனி அந்த கறுமத்தை நானே குடித்து முடிக்க வேண்டும் ..

ஆகா.... நல்ல நகைச்சுவை கதை✍️. சாத்திரியார். :grin:
பொதுவாக... இப்போ.  எனக்கு கதை படிக்கும்..  ஆர்வம் இல்லை.
ஆனால்... "மரித்தாளா.. மரியா"  என்ற தலைப்புடன்.. கதையை... பிரசுரித்தவுடன்,  
படிக்கும் ஆவல் வந்து, ஓரே மூச்சில், ?  படித்து விட்டேன்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

Link to comment
Share on other sites

8 minutes ago, பெருமாள் said:

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

இரண்டும் ஒண்டுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் கறுமத்தை குடித்து தொலைத்தாகி விட்டதா ...... நல்லாய் இருக்கு கதை.......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

உங்கள் அரசியலை விட்டு பார்த்தால்  இப்படியான கதைகள் உங்களை அடிக்க ஆள் கிடையாது நன்றி சாத்திரியார் உங்களின் ஆக்கத்துக்கு ஒரு டவுட் மார்ட்டில் வேறை மார்ட்டினி வேறையா ?

Martini

853px-Martini_Extra_Dry_7408.jpg

 

Martell

martell-vs-cognac-20cl_temp.jpg

 

இதில் எந்தக் கறுமத்தை மரியா குடிச்சு ரகளையை உண்டுபண்ணினார் என்பதை மிச்சக் கறுமத்தைக் கொண்டுபோன சாத்திரியார்தான் சொல்லவேண்டும்?

Link to comment
Share on other sites

18 hours ago, கிருபன் said:

Martini

853px-Martini_Extra_Dry_7408.jpg

 

Martell

martell-vs-cognac-20cl_temp.jpg

 

இதில் எந்தக் கறுமத்தை மரியா குடிச்சு ரகளையை உண்டுபண்ணினார் என்பதை மிச்சக் கறுமத்தைக் கொண்டுபோன சாத்திரியார்தான் சொல்லவேண்டும்?

இரண்டுமில்லை  இது

remy-martin-louis-xiii-cognac-grande-champagne.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.