Jump to content

உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ..ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

உலகுக்கே சோறுதந்த
ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
 
புயலால் விழுந்தவரை
மழை எறி மிதிக்கிறதே
அயலும் தொலையும்
ஆறு குளம் சேறாக
தரை வீழ்ந்த மீனாய் என்
தமிழ்சுற்றம் துடிக்கிறதே.
 
ஊர்கூடி கடா வெட்டி
உறவாடும் பேரூர்கள்
சிறாருக்கும் பாலின்றி
துணியின்றித் தவிக்கிறதே
 
மாழையும் குளிர் காற்றும்
வாளாய் சுழல்கிறதே
உலகுக்குகே சோறு தந்த
ஊர் பசித்துக் கிடக்கிறதே
 
வங்கக் கடல் நடு நடுங்க
மரீனாவைக் கடந்த புயல்
எங்கென்று வாடிவாசல்சீமை
ஏங்கி ஏங்கி அழுகிறதே
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை பேரிடரை இதயம் கசிய எடுத்துரைத்தீர் 

இம் மாந்தர் வாழ்வில் இதுவும் கடந்து போகும் காண்.....! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.