Jump to content

டெல்டா பகுதியில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெல்டாவில் சீமான் தலைமையில் கஜா நிவாரண பணிகள்.. அகதிகள் முகாமில் உதவி.. பெரும் வரவேற்பு !

gajastormnaamtamilarseemandidasplendidwo

தஞ்சாவூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் டெல்டா மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரிய அளவில் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

கஜா புயலால் டெல்டா பகுதிகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. அங்கு அரசு பெரிய அளவில் இன்னும் நிவாரண பணிகளை செய்யவில்லை.இந்த நிலையில் அங்கு நிவாரண பணிகளை சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி செய்து வருகிறது.

மூன்று நாட்கள்

நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மூன்று நாட்கள் இந்த நிவாரண பணிகள் திட்டமிடப்பட்டு இருக்கிறது. நேற்று காலை தொடங்கிய இந்த நிவாரண உதவி வழங்கும் பணிகள் நாளை இரவு வரை நடைபெறும். மூன்று நாட்களில் அனைத்து டெல்டா மாவட்டங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து உதவிகளை வழங்க சீமான் திட்டமிட்டுள்ளார்.

அகதிகள் முகாம்

புதுக்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களும் இந்த புயலால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அங்கு பெரிய அளவில் உதவிகள் சென்று சேரவில்லை. அரசு அதிகாரிகள் அந்த பகுதியில் கவனம் செலுத்தவில்லை என்று புகார் வந்துள்ளது.

சீமான் சென்று பார்த்தார்

இந்த நிலையில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள புதுக்கோட்டை ஈழத்தமிழர் முகாமில் சீமான் ஆய்வு செய்தார். அங்கிருந்த மக்களிடம் நிவாரண பொருட்களை வழங்கினார். அவரிடம் ஈழத்தமிழர்கள் நிவாரண பணிகள் எதுவும் நடக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்தனர்.

வேறு எங்கு எல்லாம் சென்றார்

இது மட்டுமில்லாமல் டெல்டாவின் பிறபகுதிகளுக்கும் சென்று அவர் நிவாரண பொருட்களை வழங்கினார். திருவாரூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு சென்றார். இன்னும் தஞ்சாவூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் செல்ல இருக்கிறார்.

இவரது நிவாரண பணிகளுக்கு மக்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

https://tamil.oneindia.com/news/thanjavur/gaja-storm-naam-tamilar-seeman-did-splendid-work-relief-operation/articlecontent-pf337906-334708.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் செம ஐடியா - விளக்கு உதவி  

ntk-cadres-send-kerosene-lights-to-delta

ெ்னை:  காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு விதம் விதமாக பிற மாவட்ட மக்கள் உதவி வருகின்றனர்.இன்னும் இன்னும் என்று நீண்டு கொண்டே போகிறது காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு செய்து வரும் உதவிகள் காரணம், அந்த அளவுக்கு மிகப் பெரிய அளவிலான பாதிப்பை டெல்டா சந்தித்துள்ளது. இது வரலாறு காணாத பாதிப்பு.

அதை விட முக்கியமானது, அத்தனை பேரும் அடிப்படை வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.எத்தனை பொருட்களை அனுப்பினாலும் அது போதாது என்ற நிலையில்தான் உள்ளது காவிரி டெல்டா.

அந்த அளவுக்கு ஒவ்வொரு நாளும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் டெல்டா பகுதி மக்கள்.

முதல் ஆளாய் நாம் தமிழர்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் களத்தில் இறங்கி படு ஜரூராக பணியாற்றி வருகின்றனர். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இவர்கள் இரவு பகலாக காவிரி டெல்டாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி வருகின்றனர்.

குவியும் பாராட்டுகள்

புயல் பாதித்த பகுதிகளில் யாரும் அழைக்காமலேயே நாம் தமிழர் கட்சியினர்தான் முதலில் களம் இறங்கி பணிகளில் இறங்கியதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்கள் உள்ளன. இதை சமீபத்தில் ஒரு டிவியில் பேசிய ஒருவர் நினைவு கூர்ந்தார். அரசியல் கட்சிகள் யாருமே வரவில்லை. சீமான்தான் வந்தார் என்று அவர் கூறியிருந்தார்.

வித்தியாசமான ஐடியா.

ntk-cadres-send-kerosene-lights-to-delta

இந்த நிலையில் சென்னை ஆவடியில் உள்ள நாம் தமிழர்கட்சியினர் வித்தியாசமான ஒரு யோசனையை கையில் எடுத்து அசத்தியுள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட பகுதிகளில் இப்போது மின்சாரம்தான் பெரிய பிரச்சினை.

எப்ப கரண்ட் வரும்னே தெரியாது என்ற நிலையில்தான் உள்ளனர். காரணம் அத்தனை மின் வயர்களும் அறுந்து போய் விட்டன, கம்பங்கள் சாய்ந்து விட்டன. டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்து விட்டன.

மண்ணெண்ணெய் விளக்கு

இந்த நிலையில் ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பேராரூட்சியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் மண்ணெண்ணையை மொத்தமாக வாங்கி அதை சிறு சிறு பாட்டில்களில் நிரப்பி, திரி போட்டு விளக்கு போல ரெடி செய்து அனுப்புகின்றனர். இந்த ஐடியாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

https://tamil.oneindia.com/news/chennai/ntk-cadres-send-kerosene-lights-delta-region-334945.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.