Jump to content

இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்


Recommended Posts

இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்

கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief

 
 
 
 
இசை நிகழ்ச்சியில் கிடைக்கும் நிதியை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் - ஏ.ஆர்.ரஹ்மான்
 
கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
 
திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.
 
விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,
 

My Sufi Ensemble and I will perform a benefit concert in Toronto on 24 Dec at Metro Toronto Convention Centre Part of the proceeds will go to for Gaja Cyclone relief in TN I will be joined by Javed Ali, Sivamani & Sana Moussa

Log on to https://t.co/dQwCs6TNu0 for details/tickets

— A.R.Rahman (@arrahman) November 20, 2018
https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/21092128/1214072/AR-Rahman-contribution-for-Gaja-Cyclone-Relief.vpf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

Link to comment
Share on other sites

17 hours ago, ரதி said:

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

இவ்வளவு காலமும் உழைத்த  கோடிகள் எங்கே .......?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரதி said:

இனி மேல் தான் உழைச்சு கொடுக்கப் போறார்....ரிக்கட் விக்க வைப்பவதற்கு என்ன எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு 

எனக்கும் இதே கேள்வி தான்.உள்ளதில் கொடுத்தால் என்ன குறைந்தா போயிடுவார்.
இனி அடுத்த நிகழ்ச்சி நடந்து அந்தப்பணம் வந்து சேரும் வரை அந்த மக்கள் என்ன செய்வது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் இனி வருவதை என்றாலும் கொடுப்பேன் என்கிறார் 

படங்களில் தமிழ் கத்திரிக்காய் என்று உசுப்பேத்தி 
படங்களை ஓடவைக்கும்  விஜய் போன்ற கோடி வாங்குவோர் 
சுவிஸ் பாங்கில் பதுக்கி கொண்டுதானே இருக்கிறார்கள் 

அவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்ளவோ மேல் 
எந்த அரசியல் நோக்கமும் இல்லை ... இனி வருவதை கொடுப்பேன் என்கிறார். 

பெரிய பணக்காரர்களின் பணம் எடுத்தவுடன் கொடுக்க முடியாது 
அவர்கள் எங்காவது முதலீடு செய்திருப்பார்கள் ..... எங்கே எப்படி 
செய்துள்ளார்கள் என்பதை பொறுத்தது அது.

விஜய் வேண்டுமானால் அடுத்த படத்தில் வரும் பணத்தை 
பாதிக்க பட்ட மக்களுக்கு கொடுப்பேன் என்று சொல்லலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Maruthankerny said:

விஜய் வேண்டுமானால் அடுத்த படத்தில் வரும் பணத்தை 
பாதிக்க பட்ட மக்களுக்கு கொடுப்பேன் என்று சொல்லலாமே? 

தற்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துள்ளார் என்று செய்திகள் சொல்லுகின்றன ஆனால் உன்மையென்பது தெரியாது 

 

அதுசரி இந்த நிகழ்ச்சி கனடாவில் எந்த மாநிலத்தில் நடக்க இருக்கிறதாம்:35_thinking:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

ஒன்ராறியோ, ரொரன்டோவில் நடைபெற இருக்கிறது.

ஈழத்தமிழரிடம் ஒரு  நல்ல  பழக்கமுண்டு

இவ்வாறு  எவர்  சொன்னாலும் கொஞ்சம்   அதிக  கவனமெடுப்பார்கள்

அதை  இவர் பிடித்துள்ளார் போலுள்ளது

பணம்  கொடுக்கணும்  என்றால்

இவரும் இந்தியாவில் முதல் தர  கோடீசுவரர் தான் தற்பொழுது..

அதுவும்   ஈழத்தவிரிடமிருந்து பெற்று

தமிழகத்துக்கு......????:(

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

ஈழத்தமிழரிடம் ஒரு  நல்ல  பழக்கமுண்டு

இவ்வாறு  எவர்  சொன்னாலும் கொஞ்சம்   அதிக  கவனமெடுப்பார்கள்

அதை  இவர் பிடித்துள்ளார் போலுள்ளது

பணம்  கொடுக்கணும்  என்றால்

இவரும் இந்தியாவில் முதல் தர  கோடீசுவரர் தான் தற்பொழுது..

அதுவும்   ஈழத்தவிரிடமிருந்து பெற்று

தமிழகத்துக்கு......????:(

இங்கு ரஹுமானின் இசை நிகழ்ச்சிக்கு ஈழத்தில் இருந்து வந்த தமிழர்களை விட இந்தியாவில் இருந்து இங்கு குடியேறியிருக்கும் இந்தியர்கள் தான் அதிகமாக செல்வர். அவருக்கென்று ஹிந்தி பாடல் ரசிகர்கள் பல இலட்சம் இங்குண்டு.

அத்துடன் இந்த நிகழ்ச்சி சினிமா பாட்டு நிகழ்சி அல்ல. இஸ்லாமிய மதம் / இஸ்லாமிய ஆன்மீக சிந்தனை தொடர்பான ஒரு நிகழ்ச்சி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.