Jump to content

மாணவிகளை எரித்துக் கொன்றவர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டது ஏன்? ஆளுநர் விளக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பன்வாரிலால் புரோஹித் (நடுவில் இருப்பவர்). 2012ல் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி(இடது)உடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images Image caption பன்வாரிலால் புரோஹித் (நடுவில் இருப்பவர்). 2012ல் நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அப்போதைய பாஜக தலைவர் நிதின் கட்கரி(இடது)உடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதைக் கண்டித்து 3 மாணவிகளுடன் பேருந்தை எரித்துக் கொன்றதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்வதற்கான கோப்புகளை பலத்த பரிசீலனைக்குப் பிறகே ஏற்றுக்கொண்டதாக தமிழக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு 2000வது ஆண்டில் ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டபோது, அ.தி.மு.கவினர் மாநிலம் முழுவதும் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். கோவை வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் அந்தத் தருணத்தில் கல்விச் சுற்றுலா ஒன்றுக்கு சென்றுவிட்டு இரண்டு பேருந்துகளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்துகளை தர்மபுரி மாவட்டத்தில் வழிமறித்த அ.தி.மு.கவினர், மாணவிகள் பேருந்திலிருந்து வெளியேறும் முன்பே அதற்குத் தீ வைத்தனர். இதில் 3 மாணவிகள் உடல் கருகி பலியாகினர்.

இந்த வழக்கில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூன்று பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு தற்போது தமிழக அரசு 10 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவித்துவருகிறது. அந்தத் திட்டத்தின் கீழ் இந்த மூன்று பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள ஏழு பேர் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுவிக்கப்படாத நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டது ஏன் எனக் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த நிலையில், இந்த மூன்று பேரையும் விடுவிக்க ஒப்புக்கொண்டது ஏன் என தமிழக ஆளுநர்மாளிகை விளக்கமளித்துள்ளது.

ஆளுநர் மாளிகையின் விளக்கம்:

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு பிப்ரவரி மாதம் வெளியிட்டது. அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் அடிப்படையில் 1858 கைதிகளை மொத்தமாக விடுவிக்க, இது தொடர்பான கோப்புகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. ஆனால், ஒவ்வொரு கைதியின் பின்னணியையும் ஆராய்ந்துதான் விடுவிக்க வேண்டும்; அரசு குறிப்பிட்டதைப் போல ஐந்தாண்டுகளை நிறைவுசெய்த கைதிகளை விடுவிக்காமல் பத்தாண்டுகளை நிறைவுசெய்த கைதிகளையே விடுவிக்க வேண்டுமென ஆளுநர் மாளிகை கூறியது. அதற்கேற்றபடி மாற்றம் செய்து மே மாதம் 3ஆம் தேதியன்று புதிய அரசாணை இதற்கென வெளியிடப்பட்டது.

இதற்குப் பிறகு, ஒவ்வொரு கைதிக்கெனத் தனித் தனியாக கோப்புகள் சிறைத் துறையின் கூடுதல் டிஜிபி தலைமை தாங்கும் குழுவால் உருவாக்கி அனுப்பப்பட்டன. அதன் அடிப்படையில் ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று இதுவரை 1627 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற கைதிகளின் விவரங்களுடன் இந்தக் கைதிகளின் விவரங்கள் அடங்கிய கோப்புகளும் ஆளுநரின் பார்வைக்கு அனுப்பப்பட்டன. இவர்களின் விவரங்களை பரிசீலித்த ஆளுனர், அரசு தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டுமெனக் கோரி கோப்புகளைத் திருப்பி அனுப்பிவைத்தார். அந்தக் கோப்புகளை மறு பரிசீலனை செய்த அரசு, மீண்டும் அந்தக் கோப்புகளை அக்டோபர் மாதம் 25ஆம் தேதியன்று ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

தருமபுரி பேருந்து எரிப்பு - மூன்று பேரும் விடுதலைபடத்தின் காப்புரிமை unknown

இதற்குப் பிறகு, தலைமைச் செயலர், தலைமை வழக்கறிஞர், உள்துறை செயலர் ஆகியோர் அக்டோபர் 31ஆம் தேதியன்று ஆளுனரைச் சந்தித்து இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளித்தனர். இந்த மூவருக்கும் கொலைசெய்யும் நோக்கமில்லையென்றும் கும்பல் மனநிலையில் அவ்வாறு செய்துவிட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டினர். இதற்குப் பிறகு ஆளுநர்தலைமை வழக்கறிஞரின் சட்டரீதியான கருத்தைக் கேட்டார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை சுட்டிக்காட்டிய தலைமை வழக்கறிஞர் கீழ்க்கண்ட விஷயங்களை முன்வைத்தார்: 1. பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற கும்பல் மனநிலையில் செய்யப்பட்ட நடவடிக்கையின்போது மரணங்கள் ஏற்பட்டன. 2. அரசியல் தலைவர் தண்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பைத் தெரிவிக்க பொதுச் சொத்துக்கு சேதம் விளைவிக்க அவர்கள் விரும்பினர். 3. கொல்லப்பட்டவர்களை இவர்கள் முன்பின் அறியாதவர்கள் 4. முன்கூட்டிய திட்டமிடல் ஏதும் இல்லை. 5. எல்லாமே ஒரு கணத்தில் நடந்துவிட்டது.

ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க அரசு வகுத்த விதிமுறைகளுக்குள் இவர்கள் பொருந்துவார்கள் என கருதுவதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இவர்கள் சிறையில் 13 ஆண்டுகளைக் கழித்துவிட்டார்கள் என்பதாலும் கும்பல் மனநிலையில் குற்றத்தைச் செய்தார்கள் என்று உச்ச நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருப்பதாலும் இவர்களை முன்கூட்டியே விடுவிக்கும் ஆணையை பிறப்பித்ததாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-46277468

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.