Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

சுவி தேவையான நேரத்தில் பச்சை இல்லாமல் போகும் போது மிகவும் எரிச்சலாக இருக்கும்.
பசிக்கும் போது பாக்கெற்றில் பணமில்லாமல் சாப்பாட்டுக் கடை முன் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
புது வருடத்துடன் பச்சையை கொஞ்சம் கூட்டச் சொல்லி எல்லோரும் சேர்ந்து கேட்டுப் பார்க்கலாம்.

தமிழ்சிறி செய்வது போல் காலையில் எழும்பிய உடனேயே அம்பிடுற 5 பேருக்கு விறுவிறென்று குத்திப் போட்டு பேசாமல் இருந்துடனும்.

ஈழப்பிரியன்.... பகிடி,   விடாதேங்கோ....
கங்காரு  இறைச்சி... சாப்பிட்டால்.... உங்களாலும்  நித்திரையால்... துள்ளி  எழ  முடியும். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎21‎/‎2018 at 8:18 PM, குமாரசாமி said:

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.


நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 

அண்ணா,நீங்கள் சுத்த மரக்கறி மட்டும் தான் சாப்பிடுவீர்கள் என்பதை நம்ப முடியவில்லை?

 

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் சுத்த மரக்கறி மட்டும் தான் சாப்பிடுவீர்கள் என்பதை நம்ப முடியவில்லை?

 

எனக்கும் இதே கேள்விதான் கு.சா அண்ணாவின் பதிலை பார்த்தவுடன் எழுந்தது. ஆள் முழு சைவம் என்று அவரின் எழுத்துகளினூடாக உணர முடிந்திருக்கவில்லை.

Link to comment
Share on other sites

கு.சா. தனது சுய விபரத்தில் Location:கள்ளுக் கொட்டில் - Interests:கள்ளடித்தல் என்று போட்டுள்ளாராயினும் அவர் மது அருந்துவதில்லை என்று பல வருடங்களுக்கு முன் யாரோ சொன்னதாக ஞாபகம் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎25‎/‎2018 at 9:11 PM, இணையவன் said:

கு.சா. தனது சுய விபரத்தில் Location:கள்ளுக் கொட்டில் - Interests:கள்ளடித்தல் என்று போட்டுள்ளாராயினும் அவர் மது அருந்துவதில்லை என்று பல வருடங்களுக்கு முன் யாரோ சொன்னதாக ஞாபகம் ?

சுவியண்ணா முன்பு மாமிசம் சாப்பிட்டவர் அதனால் அவரால் இப்போதும்(சாப்பிடாத போதும் ) அதன் சுவை பற்றி கூற முடிகிறது.... அதன் சுவை பற்றி தெரியாமல் எப்படி கு சா அண்ணாவால் அதன் சுவை பற்றி சொல்ல முடியும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரதி said:

சுவியண்ணா முன்பு மாமிசம் சாப்பிட்டவர் அதனால் அவரால் இப்போதும்(சாப்பிடாத போதும் ) அதன் சுவை பற்றி கூற முடிகிறது.... அதன் சுவை பற்றி தெரியாமல் எப்படி கு சா அண்ணாவால் அதன் சுவை பற்றி சொல்ல முடியும்?

நானும்கூட  மது, புகை பிடித்தல், கஞ்சா, அபின் எல்லாம் பாவிக்கிறவர்களைப்பற்றி எழுதுகின்றேன்தானே. ஆனால் இவற்றை நான் பாவித்ததில்லை. அதுபோல்தான் அவரும் கூறுகின்றார் போலும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீகன் உணவுமுறை பாதுகாப்பானதா... ப்ளஸ் மைனஸ் என்ன? #VeganDiet

உங்கள் உணவுப் பழக்கம் உலகையே காக்குமா? - நனி சைவத்தினர் சொல்வது என்ன?

வீகன் உணவுமுறை பாதுகாப்பானதா... ப்ளஸ் மைனஸ் என்ன? #VeganDiet

ணவில் அரசியல் இருக்கிறது; கலாசாரம் இருக்கிறது; பிரிவினை இருக்கிறது; நாகரிகம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; வணிகம்  இருக்கிறது; உடல்நலம் இருக்கிறது... கூடவே மிருக நலமும் இருக்கிறது என்கிறார்கள் சிலர். `வீகனிசம்' என்ற உணவு முறையைக் கடைப்பிடிக்கும் இவர்கள் `வீகன்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள். தமிழில், `நனி சைவத்தினர்' என்று இவர்களைக் குறிப்பிடுகிறார்கள். நவம்பர் மாதத்தை `உலக வீகன் மாதமா'கவும் இவர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கமான சைவ உணவுப் பழக்கத்தோடு சேர்த்து, பால் மற்றும் `டயரி' பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும், விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்க்கும் உணவுமுறையே இந்த வீகன் உணவுமுறை.

வீகன் உணவுமுறை

நாகரிக வளர்ச்சிக்கும், வாழ்க்கைத்தரத்துக்கும் ஏற்ப மனிதனின் உணவுப் பழக்கம் மாறிவந்தது. இன்று, நுகர்வு கலாசாரம் ஊடுருவிய 21-ம் நூற்றாண்டில், வியாபார உத்திகளும், லாப நோக்கங்களுமே உணவுப் பழக்கத்தைத் தீர்மானிக்கின்றன. தமிழகத்தின் குக்கிராமங்களில் கூட விற்பனையாகும் காற்றடைத்த சிப்ஸ் பாக்கெட்டுகளே இதற்குச் சாட்சி.

 

இப்படித் துரித உணவு வகைகள் தொடங்கி, பேலியோ, கீட்டோ டயட்  முறைகள், ஆர்கானிக் உணவுப் பொருள்கள் என்று உணவு விஷயத்தில் புதிய புதிய மாற்றங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. இவற்றிலிருந்தெல்லாம் முற்றிலும் வேறுபட்ட ஓர் உணவுப் பழக்கமாக உருவெடுத்திருக்கிறது `வீகன்' உணவுமுறை. உணவுச் சந்தையின் பெருவுற்பத்தி பொருள்களை  இவர்கள் புறக்கணிக்கின்றனர். அதற்கு மூன்று முக்கியக் காரணங்களை முன்வைக்கின்றனர். 

முதலாவது, மிருக நலன். பெரும் வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் கூடங்களில் லாபநோக்கத்துக்காகக் கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன. மனிதர்களைப் போலவே மிருகங்களுக்கும் வாழ்வுரிமை இருக்கிறது; நரம்பு மண்டலமும், மூளையும் உள்ள அவற்றுக்கு வலி உணர்வு இருக்கிறது.  

இரண்டாவது, உலக நலன். `உலகின் பருவ நிலைக்குக் கேடு விளைவிக்கும் வாயுக்கள் வெளியேற்றத்தில் அதிக பங்கு வகிப்பது விலங்குப் பண்ணைகள். உணவுக்காக, அல்லது பிற தேவைகளுக்காக மிருகங்களைப் பயன்படுத்துவதை தடுப்பதன்மூலம் இவற்றைக் குறைக்கலாம். 

மூன்றாவது, தனிநபர் உடல் நலன். `பால் சம்பந்தப்பட்ட பொருள்கள், முட்டை, இறைச்சி ஆகியவற்றைத் தவிர்த்து சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பதால் உடல்நலமும், ஆரோக்கியமும் கூடும். 

இப்படி `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிக்கும் பலரும், அவரவருக்குச் சரியான காரணத்தை முன்னிட்டு அதை மேற்கொள்கின்றனர். உலகில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள், எண்ணிக்கை பல நூறு சதவிகிதம் அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது ஓர் அறிக்கை. இந்நிலையில் மேற்கண்ட மூன்று காரணங்களைப் பற்றி அலசுவதும், ஆராய்ந்து அறிந்து கொள்வதும் அவசியமாகிறது.

மிருக நலம் 

உலகின் உணவுப் பயன்பாட்டில் பிரதானமாக இருப்பது பால் சம்பந்தப்பட்ட பொருள்களும், முட்டையும். அவை உற்பத்தி செய்யும் பண்ணைகளில் இரக்கமற்ற நிலையில் விலங்குகளும், பறவைகளும் நடத்தப்படுகின்றன. பசுக்கள் பால் உற்பத்திசெய்ய கர்ப்பம் தரித்திருத்தல் அவசியம் என்பதால், செயற்கையான முறையில், ஊசி மூலம் அவை கர்ப்பமாக்கப்படுகின்றன. கன்று பிறந்ததும், ஆண் கன்று என்றால் இறைச்சிக்காக விற்கப்படுகிறது. பெண் கன்றாக இருந்தால் பால் கறவைக்காக வளர்க்கப்படுகின்றன. கன்றுகள் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதும் இல்லை. பால் சுரப்பதற்கு கன்றின் வாயைக்கட்டி அவை பசுவின் அருகில் விடப்படுகின்றன. 5 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட பசுவின் மடியில், ஊசியால் 20 லிட்டர் வரைப் பால் சுரக்க வைக்கப்படுகிறது. பசுவைத் தெய்வமாக வழிபட்டு, வணங்கி, கன்று அருந்தி மீதம் விட்ட பாலை மட்டும் பயன்பாட்டுக்கு எடுக்கும் பண்டைய பழக்கம் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. பசுவை நிற்பதற்குக்கூட இடமில்லாமல் அடைத்துவைத்து, மடியின் கணம் தாங்காது தளரவிட்டு, கன்றைப் பால் சுரக்கும் கருவியாக மட்டும் பயன்படுத்தும் பால் பண்ணைகள் மீதுள்ள வெறுப்பு பலரை இந்த `வீகன்' முறைக்கு மாறத் தூண்டுகிறது.

 

நனி சைவ

பசுக்களைப் போலவே பெரும்பான்மையான பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், வெளிச்சத்தையே பார்ப்பதில்லை. ஓர் அடி  நகரக்கூட இடம் இருப்பதில்லை. இப்படி இயற்கைக்கு மாறாக ஓர் உயிர் வதைக்கப்படுகிறது. அதைத்தடுக்க, அதன் தேவையைக் குறைப்பதே ஒரே வழி என்கின்றனர் `வீகன்' உணவுமுறையைக் கடைப்பிடிப்பவர்கள்.

உலக நலம்

உலக வங்கியின் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் 2015-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், `உலகின் பசுமை வாயு வெளியேற்றத்தில் 51 சதவிகிதம் கால்நடை வளர்ப்பினால்தான் நிகழ்கிறது' என்கின்றனர். `உலகின் மக்கள்தொகை பெருக்கத்துக்கும், அதனால் ஏற்பட்ட உணவுத்தேவை பெருக்கத்துக்கும் ஈடுகொடுக்க, 2050-ம் ஆண்டில் உணவுக்காகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கை தற்போதைய எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகரிக்கும்' என்று ஐ.நா சபையின் ஆராய்ச்சி அறிக்கை சொல்கிறது.

நனி சைவ

அதிகமாகும் இந்தக் கால்நடைப் பண்ணைகளால், உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, காடுகள் அழிப்பு, நோய் பரவுதல், தண்ணீர்ப் பஞ்சம் போன்ற பிரச்னைகள் அதிகரிக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள். 

உடல்நலம் 

சைவ உணவு மட்டுமே உட்கொள்வதால், ஒருவரின் உடல் ஆரோக்கியம் கணிசமான அளவு முன்னேறும் என்றும், அவர்களின் சிந்தனை திறன் மேம்படும் என்றும் சொல்கிறார்கள் வீகன் உணவுமுறையினர். உடல் எடை அதிகரிப்பது, இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகக் கொழுப்பு சேர்வது போன்ற பிரச்னைகள் வராமல் இருக்க இந்த உணவு முறை உதவுகிறது என்பதும் இவர்கள் கருத்து. குறிப்பாக இறைச்சி மற்றும் பால் பொருள்களின் மூலமாகக் கிடைக்கும் ஊட்டச்சத்துகள் குறைவதால் அவற்றை சமன்படுத்த மாற்று உணவு உட்கொள்ளவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும், இதனால் சரிவிகித உணவு உண்ண வேண்டும் என்ற உணர்வு அதிகரிப்பதாகவும் சொல்கின்றனர்.

உண்மையில் இந்த உணவு முறை நன்மை அளிக்குமா, இதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் என்ன, இது பாதுகாப்பானதுதானா?  ஊட்டச்சத்து நிபுணர், திவ்யா சத்யராஜிடம் பேசினோம்.

``வீகன் உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பது என்பது கொலஸ்ட்ரால் (cholestrol) இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. தோல் தொடர்பான பிரச்னைகளைக் குறைப்பதற்கு, பால் சம்பந்தப்பட்ட பொருள்களைத் தவிர்ப்பது நல்லது, மேலும், உடலில் நச்சுத்தன்மையை நீக்கி, சுத்திகரிப்பதற்கும் இந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்றலாம். ஆனால், நாம் தவிர்க்கும் உணவுகளான இறைச்சி, பால் சம்பந்தப்பட்ட பொருள்களால் உடலுக்குக் கிடைக்கும் ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளின் மூலம் சமன் செய்ய வேண்டும். குறிப்பாக கால்சியம், பி-12, புரோட்டீன் ஆகிய ஊட்டச்சத்துகளை வேறு உணவுகளை உட்கொண்டு சமன் செய்வது மிகவும் அவசியம். ஆனால் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதை நான் பரிந்துரைப்பதில்லை. யார் இந்த உணவு முறையைப் பின்பற்றினாலும் அவர்கள் முறையாக ஓர் ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். முக்கியமாக, இந்த உணவுப் பழக்கத்தை ஏன் பின்பற்றுகிறோம் என்ற தெளிவு வேண்டும். சமூக வலைதளங்களின் பாதிப்பால் ஈர்க்கப்பட்டு இதைப் பின்பற்றுவது ஆபத்தில் முடியும்" என்றார் அவர்.

நனி சைவ

கடந்த 3 ஆண்டுகளாக, இந்தியாவிலும் இந்த வீகன் உணவுமுறைகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியர்கள் சைவ உணவுக்குப் பழக்கப்பட்டவர்களே என்றாலும், உணவில் பால் சம்பந்தப்பட்ட பொருள்களின் ஆதிக்கம் இருக்கிறது என்பதே உண்மை. நெய் இல்லாத இனிப்பு வகைகளும் தயிர் இல்லாத உணவும் பன்னீர் இல்லாத சைவ விருந்தும் சாத்தியப்படுவதில்லை. இருப்பினும் இதற்கான மாற்றுப் பொருள்கள் நம் வர்த்தக உலகில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. மாட்டுப் பாலுக்கு மாற்றாக சோயா பாலும், மற்ற வீகன் உணவுப்பொருள்களும், உணவகங்களும் பெருநகரங்களில் வரத்தொடங்கிவிட்டன.

வீகன் உணவுமுறை குறித்த மாற்றுக் கருத்துகளும் இல்லாமல் இல்லை. பிராணிகளை வதைப்பது தடுக்கப்படும் என்பதும், உடல் நலத்துக்குச் சிறந்தது என்பதும் ஒருபுறமெனில், சைவ உணவில், பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட, மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் இருப்பது உடல்நலத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அதுமட்டுமன்றி, அசைவ உணவைத் தவிர்ப்பதற்காக விளைவிக்கப்படும் உணவுக்காகக் காடுகள் அழிக்கப்படுவதாகவும் ஒரு சாரர் வருத்தம் தெரிவிக்கின்றனர். `முழுவதுமாக ஓர் உணவைப் புறக்கணிப்பதால் உணவுச் சங்கிலியில் மாற்றம் நிகழும்' என்ற கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. 

வீகன் உணவுமுறை மட்டுமே உலகைக் காப்பதற்கான ஒற்றைத் தீர்வாக இருக்க முடியாது. உலகின் உணவு உற்பத்தியை, வெறும் வர்த்தக நோக்கத்துடன் மட்டும் கையாளாமல், வாழும் இடத்தின் சூழ்நிலைக்கேற்ப, உள்ளூரில் விளைவித்த உணவை உட்கொள்ளுவது கூட பெருமளவு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கு வகிக்கும். ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் அவகேடா பழங்களைவிட, பக்கத்துக்குப் பண்ணைகளில் தயாராகும் இறைச்சியை உண்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என்கின்றனர்.  

ஒருபக்கம் வீகன் உணவுமுறையினர், உணவுச் சந்தையின் பொருள்களை புறக்கணிக்கின்றனர், மறுபக்கம், அவர்கள் வாங்குவதற்காக ஏராளமான பொருள்களைச் சந்தையில் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கின்றன பெரும் நிறுவனங்கள். இதன் தேவை மேலும் அதிகரிக்கும் போது, அந்தத் தேவையை அதிக லாபத்தோடு நிவர்த்தி செய்ய, மீண்டும் உலகைச் சிக்கலில் இந்த நிறுவனங்கள் மாட்டிவிடும் ஆபத்தும் இருக்கிறது. 

வீகன் உணவுமுறை பற்றித் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா... ஒரு கேள்வி..! 

இனி நீங்கள் எந்த உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பீர்கள்?

A. வீகன் நல்லது... அதற்கு மாறுவேன்! 
B. அசைவம் சாப்பிட்டுப் பழகிருச்சு... விட முடியாது! 
C. பிரியாணியை மட்டும் வீகன்ல சேர்த்துக்கங்க... மாறிடுறேன்!

https://www.vikatan.com/news/health/143351-can-your-food-choices-save-the-world-what-the-vegans-say.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

வீகன் உணவுமுறை பற்றித் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா

பிழம்பு நல்ல விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.இணைப்புக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/25/2018 at 10:11 PM, இணையவன் said:

கு.சா. தனது சுய விபரத்தில் Location:கள்ளுக் கொட்டில் - Interests:கள்ளடித்தல் என்று போட்டுள்ளாராயினும் அவர் மது அருந்துவதில்லை என்று பல வருடங்களுக்கு முன் யாரோ சொன்னதாக ஞாபகம் ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

     Image associée                                                            Image associée

இதுவும் ஒரு காரணமாய் இருக்கும்......!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.