Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆண்டுகளின் முன் வீகன் என்றால் என்னவென்று பலருக்கும் தெரியாது.ஆனால் இன்று எந்தக் கடைக்குப் போனாலும் வீகன் சாமான்கள் வீகன் உணவுகள் வீகன் பீச்சா ஏன் வீகன் ஐஸ்கிறீம் கூட விற்கிறார்கள்.

வீகன் என்றால் என்ன என்று ஆராய்ந்து பார்த்தால் இறைச்சி வகை கொழுப்பு பால் என்று அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.வீகனுக்கும் சைவத்திற்கும் என்ன வித்தியாசமென்றால் பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் வெண்ணையும்.சைவம் எறத்தாள அரை வீகன்.

இந்த வீகனைப்பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னமே கேள்விப்பட்டிருந்தாலும் இதன் நம்பகத்தன்மையை சரியாக கணிக்க முடியவில்லை.ஆனாலும் கடந்த கோடை காலத்தில் ஒரு 6 மாதமாக வீகன் முறையை பின்பற்றும் ஒருவரை சந்தித்தேன்.அவரிடம் இது பற்றி பேசியதிலிருந்து கொஞ்சம் நம்பிக்கை வந்தது.அவருடைய சிறுநீரகம்(கிட்னி)கொஞ்சம் பழுதடைந்து கொண்டு போனதாகவும் பல வைத்தியங்கள் செய்தும் குணமடையவில்லை கடைசியில் வீகன் முறையைக் கேள்விப்பட்டு அந்த முறையை 6 மாதமாக பின்பற்றிய போது பெரிய மாற்றம் கண்டதாகவும் இரத்த பரிசோதனையின் பாரிய மாற்றம் கண்டதாகவும் சொன்னார்.

அத்தோடு Forks over knives(போக்ஸ் ஓவர் நைவ்) என்ற டொக்குமன்ரரியையும் பார்க்க சொன்னார்.அந்த டெக்குமனரரியைப் பார்த்த போது ரொம்பவும் அதிசயமாக இருந்தது.பல பிரச்சனை உள்ளவர்களும் இந்த முறையை பின்பற்றி நல்ல குணமடைகிறார்கள்.இந்த டொக்குமன்ரரி Net Felix (நெற் பிளக்ஸ் )உள்ளவர்கள் பார்க்கலாம் அல்லது அமெசான் யுரியூப் இவற்றில் 3 டொலர் கொடுத்து பார்க்கலாம்.உங்களுக்கு பிரச்சனையில்லாவிட்டாலும் வீட்டில் வயது போனவர்களுக்கோ உறவினர் அயலவருக்கோ சிலவேளை இந்த முறை உதவலாம்.

மனைவியையும் என்னையும் இதைப் பின்பற்றுமாறு மகள் பல நாட்களாகவே கரைச்சல் தந்து கொண்டிருக்கிறா.ஏதாவது பிரச்சனை என்று சொன்னால் என்ன பிரச்சனை என்று கேட்பதற்கு முதலே எப்ப இருந்து சொல்லிக் கொண்டுவாறன் இருவரும் செகிடு மாதிரி இருந்துட்டு இப்ப பிரச்சனை என்றவுடன் முறைப்பாடு செய்யுங்கோ இனி போய் குளிசையை வாங்கி போடுங்கோ கொஞ்ச நாளில் கிட்னியும் பழுதாகிப் போய்விடும் என்று பேச்சு நடக்கும்.எனக்கும் சிறிது காலமென்றாலும் இந்த முறையை கடைப் பிடிக்க வேண்டுமென்று விருப்பம் தான்.ஆனாலும் அடிக்கடி அங்கும் இங்கும் திரிவதால் சரியான முடிவெடுக்க முடியாமல் இருக்கிறது.

இதைப் பற்றி மேலும் தெரிந்தவர்கள் ஏன் நீங்கள் இதை பின்பற்றுபவராக கூட இருக்கலாம் தயங்காமல் கூடுதலான தகவல்களைத் தாருங்கள்.அத்துடன் மருத்துவத்துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் யூட் நெடுக்கு போன்றவர்கள் மேலதிகமான தகவல்களைத் தாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இதற்கான காரணங்கள்...பல உள்ளன! முக்கியமான காரணங்கள்...சந்தைப் படுத்தலுக்காக வளர்க்கப் படும்...விலங்குகள்...மிகவும் ...அருவருக்கத் தக்க விதத்தில் ...கொலை செய்யப்படுகின்றன!

உதாரணமாக...பயனில்லாத...சேவல் குஞ்சுகள்...பிறந்த உடனேயே...அழிக்கப் படுகின்றன!

அதே போல...மாட்டுக் கன்றுகளில்....ஆணாகப் பிறப்பவை....கண் திறக்க முன்னரே...பார ஊர்திகளில்...ஏற்றப்பட்டு...வளர்ப்புப் பிராணிகளின்..உணவுக்காக அனுப்பப் படுகின்றன!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

முந்திய தலைமுறையினரை விட... பல இளைய தலைமுறையினர், 
வேகன்  உணவுப் பழக்கத்தை பின் பற்றுகிறார்கள், என்பது...  மிக ஆச்சரியமாக உள்ளது. 
நல்லதொரு பதிவு ஈழப் பிரியன்.

சிறி இளம் தலைமுறையினரே பின்பற்றும் போது எம்மால் இன்னமும் முடியாமல் இருக்கிறதை நினைக்க மிகவும் வெட்கமாக இருக்கிறது.
கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

நானும்..இப்போது அதிகமாக....சைவ உணவுக்கு மாறிக்கொண்டு வருகின்றேன்!

இந்த அவலங்களுக்காக...எனது பங்களிப்பு...இருக்ககூடாது என்பதற்காகவே....நான்...இவற்றை விலக்குகின்றேன்!

 

சைவத்திற்கும் வீகன் முறைக்கும் சில வித்தியாசங்கள் உண்டென்கிறார்கள்.

சைவக்காரர் பிராமணர்கள் எம்மைவிட திடகாத்திரமாக இருக்கிறார்களா?இதைப்பற்றி கொஞ்சம் ஆராய வேண்டும்.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

நான் சைவ உணவுக்கு எப்போதோ மாறி விட்டேன்.....எனக்கு நோயே கிடையாது....உஸ் ....கொஞ்சம் டயபடிஸ் உண்டு. இனி எனக்கு மரணமே இல்லை. (ஆத்மாவுக்கு ஏது மரணம்).  tw_blush: 

சலரோகமென்பது இருதயநோயை விட மோசமானதென்கிறார்கள்.
எனக்கும் கடந்த 10 வருடங்களாக ஆறு ஆறுஒன்று என்று நிற்று வெருட்டிக் கொண்டே இருக்கிறது.ஒவ்வொரு தடவையும் டாக்ரரிடம் போகும் போது என்னப்பா குளிசை எடுக்கிறியா என்று என்னை குளிசைக்காரனாக மாற்றப் பார்க்கிறார்கள்.தேநீரில் சீனி போடுவதில்லை.கூடுதலாக இனிப்பு சாப்பாட்டை தவிர்த்துக் கொண்டு தான் வருகிறேன்.
சாப்பாட்டு முறையை மாற்றினால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.ஆனாலும் சாக்குக்குள் புல்லடைந்த மாதிரி அடைந்து பழகி அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறது.
உங்கள் கருத்துக்கு நன்றி.

7 hours ago, Nathamuni said:

அண்மைய ஆய்வில், பிரிட்டனில் 8ல் ஒருவர் வேகனாக உள்ளார். மிக வேகமாக இந்த உணவு முறை மாறி வருகிறது.

அதுசரி..... மரக்கறி உணவுக்கு, சைவம் என்ற மத பெயர் எவ்வாறு வந்தது? சிங்களவர்கள் கூட சைவகடே என்பார்கள். 

நாதம் கம்பேக்கர் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்றிருந்த கிளின்டன் வீகனாக மாறி இப்போது சுகமாகவே இருக்கிறார்.

சைவசமயத்தவர்கள் சைவமாக சாப்பிட்டபடியால் சைவகடை என்ற பெயர் வந்திருக்கலாம்.
கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நான் இறைச்சி வகை உணவுகளை அதிகமாக விரும்புவதில்லை, சாப்பிடுவதும் இல்லை. அனேகமாக மீன் உணவுகளும் மரக்கறியும் தான் சாப்பிடுவது. வாரத்தில் ஐந்து நாட்கள் ஒன்றில் மரக்கறி சலட் (கேல் இலை, அவகாடோ, டுனா மீன், தக்காளி, கரட் ...) அல்லது கின்வா எனும் உணவு. காலையில் மீன் துண்டு ஒன்று + முட்டை வெள்ளைக்கரு அல்லது ஓட்ஸ் (steel cut oats)

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

எதிர்காலத்தில்  சைவ உணவுகளை மட்டுமே உண்பது சாத்தியமில்லாமல் போய்விடும். உலக சனத்தொகை வளர்ச்சிக்கு ஈடாக பயிர்களை வளர்ப்பதும் பழ மரங்களின் உற்பத்தியை பெருக்குவதும் காய்கறிகளை பயிரிடுவதும் சாத்தியமில்லை. அவ்வாறு ஈடு செய்ய முற்பட்டால் காடுகள் எல்லாம் அழிக்கப்பட வேண்டி வரும். அல்லது அதிகமான விளைச்சலை தரும் இரசாயன உரவகைகளை பயன்படுத்த வேண்டி வரும். எனவே தான் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் முறையையும் மெல்ல மெல்ல அறிமுகப்படுத்த சொல்லி உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுக்கின்றது.

வீகன் உணவு முறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் வர்த்தக நலன்கள் அடங்கி இருக்கு. அதை ஒரு வர்த்தகமாக ஆக்கி அதற்கான உணவு வகைகளை சந்தைப்படுத்துகின்றனர்.  அத்துடன் வீகன் உணவு முறை வருத்தங்களை இல்லாமாக்கும் என்பது எல்லாம் கப்சா வகைக்குள் அடங்கும். கீற்றோ டயட் டும் இன்னொரு கப்சா. இன்றைய உலகில் நான் உண்ணும் மரக்கறிகளிலில் இருக்கும் நச்சுப் பொருட்களின் கலப்பும் மரபணு மாற்றங்களும் (GMO - genetically modified organism) லும் இன்னும் இன்னும் புதிய புதிய வருத்தங்களை உருவாக்க வல்லன.

நன்றாக ஓரளவுக்கு ஆரோக்கியமாக வாழ்வது என்பது வெறும் உணவில் மட்டும் தங்கியில்லையே.. உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறை,ஓய்வு, உறக்கம், பாலுறவு, சக மனிசர்களிடம் காட்டும் அன்பும் பரிவும் என்று நிறைய இருக்கின்றனவே. மூன்று வேளை வேலை செய்து கொண்டு, மற்றவர்களை பார்த்து வாழ ஆசைப்பட்டுக் கொண்டு, சதா ஓடி ஓடி உழைத்துக் கொண்டு, எல்லார் மீதும் எரிச்சலும் வெறுப்பும் வளர்த்துக் கொண்டு வாழும் ஒரு தலைமுறைக்குள் நாம் ஊடாடிக் கொண்டு இருக்கின்றோம். இந்த வாழ்க்கை முறை கொண்டு வரும் வியாதிகள் தான் ஏராளம். கடந்த நான்கு நாட்களாக ஒரு நாளைக்கு 12 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்து கொண்டு தான் இதை எழுதிக் கொண்டு இருக்கின்றேன்.

எம்  வாழ்க்கை முறை மாறாமல் எந்த உணவு முறையும் எம்மை வளப்படுத்தாது

டொட்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

என்னவோ தெரியாது எனக்கு வீகன் முறையையும் ஆட்களையும் கண்ணிலும் காட்டுவதில்லை. ஆதிகால உணவு முறை என்று சொல்லி நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகளைக் கூட தவிர்க்க சொல்கின்றனர் (ஆதி கால மனிதனுக்கு விவசாயம் தெரியாது என்பதால் நிலத்தின் கீழ் வளரும் கிழங்குகள் தவிர்க்க வேண்டுமாம் - ஆனால் சமைத்து சாப்பிடுவதும் இல்லைதானே எனக் கேட்டால் அவர்கள் அதை ஏற்பதில்லை). மனிதன் மட்டும் தான் இன்னொரு விலங்கின் பாலை குடிக்கின்றனர் என்பதால் பால்வகைகளையும் தவிர்க்க வேண்டுமாம். இதுகளை கேட்கும் போது ஆரோ ஒருவர் என் கமக்கட்டுக்குள் கிச்சு கிச்சு மூட்டுவது போல் சிரிக்க தோன்றும்.

நான் எதை நோக்கி நகர விரும்புகிறேனோ அதற்கு மாறான கருத்துக்களை எழுதியுள்ளீர்கள்.நான் ஒரு இறைச்சிப்பிரியன்.இது தான் எனக்குள்ள பிரச்சனையே.
உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி.
பச்சையில் நீங்கள் கஞ்சத்தனம் பண்ணுவதால் பச்சை கூட போட முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம்  சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல?...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் 

நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால்  அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ரதி said:

நான் பார்த்த சில பேர் கொஞ்ச நாள் வீகன் இருப்பினம்...பிறகு மச்சம்  சாப்பிடுவினம்...கொஞ்ச நாளில் திரும்ப வீகனுக்கு மாறனும் என்டுவினம்...ஆனால் மாறினதை நான் காணேல்ல?...உடம்பை குறைக்க தாங்கள் வீகன் என்று சொல்லி, தொடங்கி உடம்பை குறைத்தவுடன் கை விட்டு விடுவினம் 

நானும் வீகனுக்கு எதிர்ப்பு....எதையும் அளவோடு சாப்பிட்டால் பிரச்சினை இல்லை..நான் மாமிச உணவு என்று சாப்பிடுவது கோழியும்,கடல் உணவுகளும் எப்பாவது இருந்திட்டு ஆட்டு இறைச்சசி சாப்பிடுவது ...ஈழப்பிரியன் அண்ணா நீங்கள் மச்சம் சாப்பிட்டால்  அளவோடு சாப்பிடுங்கள்...அத்தோடு நிறைய மரக்கறிகளையும் சாப்பிடுங்கள் 

 

 

இதுவரை வீகன் என்று இருந்த ஒருவரைத் தான் சந்தித்திருக்கிறேன்.அவர் சொன்னதை வைத்து சிறிது நம்பிக்கை பிறந்துள்ளது.எனக்கும் தொடங்குவது பிரச்சனை இல்லை தொடருமா? முடியுமா ?என்பதே பிரச்சனை.

ஒரு நேரமாவது சோறு சாப்பிட வேண்டும் போல இருக்கும்.அத்தோடு கூடவும் சாப்பிட்டு பழகிப் போய்விட்டது.நீங்கள் சொன்னது போல இப்போ கொஞ்சம் குறையவே சாப்பிடுகிறேன்.இன்னொரு கெட்ட பழக்கம் ஏதோ போட்டிக்கு சாப்பிடுவது போல கோப்பை காலியாக்குவது.சாப்பிடும் போது நினைத்துக் கொண்டு தொடங்குவேன்.இடையில் மறந்துவிடுவேன்.சீனாக்காரன் மாதிரி தடியால சாப்பிடுங்கோ என்று மனைவி சொல்லுவா.
உங்கள் கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.
அர்த்தங்களை புரிந்து கொண்டவர்களுக்கு நன்கு தெரியும்..
சைவம் வியாபார நோக்கு கொண்டதல்ல என்பது யாவருக்கும் புரிய வேண்டும். 
வெள்ளைக்காரன் சொன்னால் எதுவும் சரி எண்ட கருத்துப்பாடு இங்கேயும் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இவங்கடை வீகன் வேறை.
எங்கடை சைவம் வேறை.

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஈழப்பிரியன் said:

சைவம் பால் தயிர் சீஸ் சாப்பிடுகிறார்கள்.வீகனில் மிருகங்களிலிருந்து எடுக்கப்படும் எதையும் தவிர்க்கிறார்கள்.முடிந்தால் மேலே இணைத்துள்ள காணெளியைப் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.


நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

உங்களுடைய கருத்து கண்டறியாத வெஸ்டேண் மிருகவதை கும்பலுக்குள் அகப்பட்டமாதிரியே தெரிகின்றது. :grin:

வீடியோ பார்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. வீடியோவும் வேலைசெய்யவில்லை.


நான் பிறப்பால் சைவம். எல்லாவற்றையும் விட நானும் என் முந்திய சந்ததியும் சைவம்.....அத்துடன் மனதால் நான் என்றும் சைவம்.:cool:
 

மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

மனசாலும் சைவம் என்டால் என்ன அர்த்தம் அண்ணா? 
 

கொலை , கொள்ளை ,  சூதுவாது ,  மற்றவர்களை பார்த்து எரிச்சல் படுறது , வட்டி வாங்கிறது .............இப்படி கனக்க சொல்லிக்கொண்டு போகலாம் தங்க்கச்சி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

à®à®±à¯à®à®©à®µà¯ நà®à®¨à¯à®¤à¯à®³à¯à®³à®¤à¯

வேகன் அரசியலும் அம்பலமான வதந்தியும்.. பொய்யானது நாய்கறி பிரச்சாரம்.. பின்னணி என்ன?

சென்னையில் கைப்பற்றப்பட்ட 2100 கிலோ இறைச்சி முழுக்க ஆட்டுக்கறிதான் என்று உறுதியாகி உள்ளது. இதற்கு எதிராக பரப்பப்பட்ட பல வதந்திகள் தற்போது பொய் என்று நிரூபணம் ஆகியுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட இறைச்சி ஆட்டு இறைச்சிதான் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கிறது. இது நாய்கறி கிடையாது என்று உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெப்பநிலை மாறுபாடு காரணமாகவே இந்த கறி அழுகி உள்ளது. மற்றபடி இதில் எந்த தவறும் கிடையாது என்று சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உறுதியாக தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த பிரச்சனையின் பின்புலத்திலும், நாய்கறி வதந்தியிலும் நிறைய அரசியல் இருப்பதாக தகவல்கள் வருகிறது. முக்கியமாக வேகனிசம் எனப்படும் புதிய கலாச்சாரமும் பின்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கைப்பற்றப்பட்டது நாய்க்கறி இல்லை.. ஆட்டுக்கறிதான்.. உறுதி செய்தது ஆய்வு முடிவு

Bildergebnis für vegan

வேகன் அரசியல்:  உலகம் முழுக்க வேகன் வாழ்வியல் முறை பெரிய அளவில் பரவி வருகிறது. இந்த வேகன் வாழ்வியலில் எந்த விதமான தவறும் கிடையாது. முழுக்க முழுக்க வெஜிடேரியன் உணவுகளை மட்டுமே உண்பதைதான் வேகன் வாழ்வியல் என்கிறார்கள். ஆனால், இந்த வேகன் வாழ்வியல் தற்போது பெரிய அரசியலாக, வியாபாரமாக மாறி இருக்கிறது. உலகம் முழுக்க வேகன் மார்கெட்டிற்கு பெரிய அளவில் கதவுகள் திறக்கப்பட்டு இருப்பதால், இதை பெரிதுபடுத்த பலர் வேலை செய்து வருகிறார்கள்.

ஏற்கனவே நடந்துள்ளது:  உலகம் முழுக்க இந்த வேகன் மார்க்கெட் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் இதில் என்ன பிரச்சனை என்றால் இது உலகின் மிகப்பெரிய உணவு சந்தையான அசைவ உணவு சந்தையை பெரிய அளவில் காலி செய்துள்ளது. வேகன் குறித்து வீடியோ, கருத்தரங்கு, கட்டுரைகள் என்று நிறைய எழுதி எழுதி பல கோடி மக்கள் நம்பி இருக்கும் அசைவ மார்க்கெட் படுத்தது. இதனால் பல நாடுகள் பெரிய இழப்பை சந்தித்தது. முக்கியமாக இந்தியாவின் அசைவ ஏற்றுமதியும் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. அமெரிக்காவில் வேகனிசம் பெரிய சந்தையாகி உள்ளது.

Bildergebnis für vegan

பிரச்சாரம் செய்தனர்:  அதேபோல்தான் தமிழகத்தில், நாய்கறி என்று சின்ன வதந்தி வந்தவுடன், பலர் இந்த வேகன் பிரச்சாரத்தை கையில் எடுத்தனர். அசைவ உணவுகளே இப்படித்தான், அதில் சுத்தம் இல்லை, பாதுகாப்பு இல்லை என்று தொடர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. இதனால் சென்னையின் அடையாளமாக இருந்த பல பிரியாணி கடைகள், அசைவ ஹோட்டல்கள் ஒரே வாரத்தில் பெரிய பாதிப்பை சந்தித்தது.

ஏன் இது தவறு:  சைவ உணவு சாப்பிடுவதிலும், அதை வேகன் என்று பிரச்சாரம் செய்வதிலும் எந்த தவறும் கிடையாது, ஆனால் அசைவ உணவை பற்றி போலியான பிரச்சாரம் செய்யும் பழக்கம்தான் மிகவும் ஆபத்தானது. முக்கியமாக இந்தியாவில் பிரியாணியின் அடையாளமாக சென்னை திகழ்கிறது. இஸ்லாமியர்கள் மட்டுமில்லாமல் பல ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த வியாபாரத்தை நம்பித்தான் சென்னையில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் இந்த தவறான வதந்தியால் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது.

அச்சத்தை உண்டாக்கியது:  இந்த பொய் பிரச்சாரமும், வதந்தியும் பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்கியது. இது இறைச்சி விற்பனையிலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த நாய்கறி வதந்தி முழுக்க முழுக்க பொய், அது ஆட்டுக்கறிதான் என்று மருத்துவ பரிசோதனையில் உறுதியாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் இறைச்சி விற்பனை இயல்பு நிலைக்கு திரும்ப வரும் என்று நம்பலாம்!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/vegan-politics-dog-meat-rumor-finally-the-truth-has-came-out-334797.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேகன் உணவு முறைக்கும், இந்த வீடியோ இல் சொல்லப்போடும் விஞ்ஞான ஆராய்ச்சிக்கும்  தொடர்பு உள்ளது.

இந்த விஞ்ஞான ஆராய்ச்சி உண்மையானது.

ஆனால், எனது தனிப்பட்வழங்க கூடிய ட பார்வையில், உணவு என்பதே முதல் மருந்தாகும். அதனால், அசைவமும் உண்ணப்பட வேண்டும். அப்படி இல்லாவிட்டால், அதை தாரக கூடிய பால், cheese, buttermilk போன்றவற்றால் மாற்றீடு செய்யப்பட வேண்டும்.

மேலும், எந்த உணவு பழக்கத்வீடியோ வில் தையும் திடீரென்று மாற்றுவது, கைவிடுவதோ அல்லது மாற்றீடு செய்வதோ உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

இந்த வீடியோ வில் சொல்லப்ப்டும் பாக்டீரியா பற்றி ஏற்கனவே சொல்லியுளேன். இந்த பாக்டீரியா, வாயில் இருந்து இயற்றகை அழைப்பிற்கு பதிலளிக்கும் வாசல்கள் வரை ஒவ்வொரு தனி நபரிடற்கும் தனித்துவமானது. ஓரே வீட்டில் வசிக்கும் பலரில் ஒருவரிற்கு   ஓர் குறிப்பிட்ட உணவு ஒவ்வாமைக்கு இந்த பாக்டீரியாயாவும் ஓர் காரணம். அது மட்டுமல்ல, இந்த பாக்டீரியாவின் health, உங்கள் உளநலத்தை பாதிக்கக்கூடிய வாய்ப்புகளும் உண்டு. இதை பற்றி இன்னும் விரிவாக நீங்கள் இணையத்தில் தேடிப்பாருங்கள்.

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

 

 

 

 

Link to comment
Share on other sites

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் அடைய இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.

பல வகையான தவரங்களிலிருந்தும் கொழுப்பையும் புரதங்களையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் மனிதனுக்குத் தேவையான எல்லாவிதமான புரத அமில மூலக் கூறுகளையும் தாவர உணவினால் வழங்குவது கடினம். இந்தியாவில் சைவ உணவை உண்பவர்கள் பசுப்பால் நெய் பொன்றவற்றால் இந்த விலங்குணவை ஓரளவு பெற்றுக் கொள்கின்றனர். 

இன்று நாம் உட்கொள்ளும் இறைச்சி மீன் வகைகள் எமது தேவைக்கு மிதமிஞ்சியது. இவற்றை ஓரளவு குறைத்து அதனைத் தாவரப் புரதத்தாலும் தாவரக் கொமுப்பாலும் சமப்படுத்துவதே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும்.

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kadancha said:

அதனால், எந்த உணவு முறையை புதிதாக அல்லது மாற்றுவதாயின், படிப்படியாக செய்யுங்கள்.

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, இணையவன் said:

இயற்கையாகவே மனிதரில் சமிபாட்டுத்துகுதியால் தாவர உணவுகளைக் கொழுப்பாக மாற்றும் தன்மை கிடையாது. ஏனைய விலங்குகள் போலவே மனிதர்களுக்கும் இயற்கையாகவே இரைப்பையில் சுரக்கப்படும் அமிலங்கள் விலங்கு உணவைச் சமிப்பாடடையத்தக்கவாறே இயற்கையால் பல்லாயிரம் வருட கூர்ப்பிசை மாற்றங்கங்களுக்கூடாக அமைக்கப்பட்டுள்ளது. ஆடு மாடு போன்ற விலங்குகள் வேறோரு கூர்ப்பிசைவுக்கேற்றவாறு புல்லையும் இலைகளையும் புரதமாகவும் கொழுப்பாகவும் மாற்றம் செய்யக் கூடியவாறு இயற்கை அமைத்துள்ளது. இயற்கைக்கு எதிராக நாம் மாற வேண்டுமானால் எமது இயற்கையான உடல் அமைப்பு பரிமாணம் 

அதிகரித்துவரும் சனத்தொகையாலும் குறுகிவரும் விலங்கு கடல் வளங்களாலும் நாம் தாவர உணவுகளைப் பெரிதும் நாடவேண்டிய தேவை உள்ளது. எமது உடலுக்குத் தேவையான விலங்குப் புரதத்தைப் பூர்த்திசெய்யப் புதிய வழிகளைத் தேட வேண்டும். உதாரணமாக ஆடு மாடு போன்ற விலங்குகளை விட வெட்டுக்கிளி போன்ற உயிரினங்கள் மிகக் குறைந்த அளவான தாவரங்களை உட்கொண்டு அதிகமான புரத்திதினை உற்பத்தி செய்யக் கூடியன. எதிர்காலத்தில் இவ்வாறான உணவுகளைத் தேடி உண்ணப் பழகுவது பயனுள்ளதாக இருக்கும். 

இணையவன் வீகனைப் பற்றி நிறையவே அறிந்து வைத்துள்ளீர்கள்.

எனது உண்மையான இலக்கு இந்த முறையை பின்பற்றும் யாருடனாவது நேரடியாக தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதே.
இதை வியாபாரம் என்கிறார்கள் விஞ்ஞானம் என்கிறார்கள் ஒருசில கட்டுரைகள் வியாபாரம் மாதிரி தெரியும்.
நான் முற்றிலும் எதிர்பார்ப்பது விஞ்ஞான ரீதியானதே.
உங்கள் தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, suvy said:

இணையவனை நான் சந்தித்திருக்கின்றேன், நிழலியை நான் இதுவரை சந்திக்கவில்லை. அதனால்  நிழலிக்கு குத்த முடியுது. இணையவனுக்கு குத்த முடியவில்லை. ஒருவேளை இணையவனுடன் சேர்ந்து நான் தேநீர் அருந்திய விசுவாசமோ என்னமோ தொல்லை பண்ணுது இந்தப் பச்சை......!  ☺️

சுவி தேவையான நேரத்தில் பச்சை இல்லாமல் போகும் போது மிகவும் எரிச்சலாக இருக்கும்.
பசிக்கும் போது பாக்கெற்றில் பணமில்லாமல் சாப்பாட்டுக் கடை முன் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
புது வருடத்துடன் பச்சையை கொஞ்சம் கூட்டச் சொல்லி எல்லோரும் சேர்ந்து கேட்டுப் பார்க்கலாம்.

தமிழ்சிறி செய்வது போல் காலையில் எழும்பிய உடனேயே அம்பிடுற 5 பேருக்கு விறுவிறென்று குத்திப் போட்டு பேசாமல் இருந்துடனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

கடன்சா உங்கள் விபரமான தகவல்களுக்கு மிக்க நன்றி.

எனக்கு 5 6 வருடங்களாக மூட்டுவலி உள்ளது.எனது மகளொருத்தி மருத்துவதுறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த வீகன் முறை முயற்சி செய்யுங்கள் என்று நீண்ட காலமாகவே சொல்லிக் கொண்டு வருகிறார்.கடந்த மூன்று வருடங்கள் பிள்ளைகள் திருமணம் பேரப்பிள்ளைகள் என்று அவர்களிடம் மாறி மாறி திரிவதால் போற இடங்களில் எனக்காக ஒரு சமையல் சாப்பாடு என்று பல பிரச்சனை அத்துடன் மாமிசம் இருந்தால் ஒரு கறியுடனே சாப்பிடலாம் வாய்க்கு ருசியும் தானே.இதுகளை எண்ணி தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறேன்.

இதைப்பற்றி கூடுதலான தகவல்கள் எடுப்போம் என்று தான் இங்கு பதிந்தேன்.

இப்போதும் மதில்மேல்பூனை மாதிரி தான். 

சடுதியனா மாற்றம் இருக்கும் சமநிலையைக் குழப்புவதோடு, புதிய சிக்கல்களை தோற்றுவிப்பதற்கும் அல்லது இருக்கும் பிரச்சனைகளை மேலும் சிக்கலக்குவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.  

ஆயினும், நீங்கள் இயல்பாகவே புலால், மாமிச  உணவை விரும்புவராயின், அது சிலவேளைகளில் உங்கள் மரபணு கூட காரணமாக  அமைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.   

https://www.fromthegrapevine.com/health/diet-dna-vegetarian-gene-study

மேலே உள்ள ஆய்வு பரந்துபட்ட அங்கீகாரம் பெற்றதல்ல என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

இத ஆய்வின் படி, தாவர அடிப்படையிலான  உணவுப் பழக்கத்தை கொண்ட பெற்றோரின் பிள்ளை தாவர அடிப்படையிலான உணவையே  விரும்புமவதற்கு அதிக  சாத்தியக்கூறுகள் உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.