Jump to content

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புளொட் பிரதிநிதிகளை பேரவையினர் வெளியேற்றியுள்ளனர்

Editorial / 2018 நவம்பர் 19 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0

-எஸ்.நிதர்ஷன் 

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்துக்குச் சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை, பேரவையினர் வெளியேற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

யாழ்ப்பாணம், பலாலி வீதியிலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் பேரவையின் கூட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. 

இக்கூட்டத்துக்கு பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பொது அமைப்புகளின் பிரதிதிநிதிகள் பேரவை உறுப்பினர்கள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதற்கமைய புளொட் அமைப்பின் சார்பில் அக்கட்சியின் செயலாளர் சதானந்தம் மற்றும் பொருளாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சிவனேசன் ஆகியோர் சென்றிருந்தனர். 

இந்நிலையில், கூட்டம் ஆரம்பமாவதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகளை பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ.லக்ஸ்மன், அங்கிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார்.  

  இவ்விடயம் தொடர்பில் புளொட் அமைப்பின் பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான சிவனேசனிடம் கேட்ட போது, அவர் தெரிவித்துள்ளதாவது, 

“நாங்கள் கூட்டத்துக்கு சரியான நேரத்துக்கே வந்திருந்தோம். அப்போது இக்கூட்டத்தில் நாங்கள் பங்கு பற்ற முடியாது என்றும் அங்கிருந்து வெளியேறுமாறும் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்‌ஷ்மன் தெரிவித்தார்” என்றார். 

“இதனையடுத்து நாங்கள் அங்கிருந்து வெளியேறி இந்த விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவருக்கும் தெரியப்படுத்தி இருக்கின்றோம். இதேவேளை இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பேரவையால் எமது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கமையவே நாங்கள் வந்திருந்தோம்” என்றார்.  

“ஆகவே, பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன், திடீரென ஏன் இன்று இவ்வாறு நடந்து கொண்டார் என்று தெரியவில்லை” என்றும் சிவனேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர் கலாநிதிநி சரவணபவன் தெரிவிக்கையில்,

புளொட் அமைப்பு வௌியேற்றப்பட்டதாக வௌியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லை.

 தொடர்பாடல் பிரச்சினை காரணமாகவே, அவர்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அதாவது, வழமையாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுக்கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள், அந்தக் கட்சி சார்ந்த பொறுப்பு கூறுபவர்கள் அல்லது கட்சித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளத் தவறியதன் காரணமாக, தனக்கு பதிலாக, வேறொருவர் கலந்துகொள்பவர்கள் குறித்து, பேரவைக்குத் தெரியப்படுத்தி, அனுமதிபெற்று, அவர்கள் அனுப்பப்பட்டனர்.

ஆனால், புளொட் சார்பில், பொறுப்பு கூறுபவர்களோ அல்லது கட்சித் தலைவரோ கலந்துகொள்ளாது, அவர்களுக்குப் பதிலாக வெறோருவரை அனுப்பியுள்ளனர். அவ்வாறு கலந்துகொண்டவர்கள் தொடர்பில் முன்கூட்டியே தெரியப்படுத்தி அனுமதிபெறாததையடுத்தே, அவர்களை இன்றைய கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளவில்லையென, அவர் மேலும் கூறினார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/புளொட்-பிரதிநிதிகளை-பேரவையினர்-வெளியேற்றியுள்ளனர்/175-225433

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புளொட்டிடம் மன்னிப்பு… சுரேஷ் பிரேமச்சந்திரனிற்கு ஒருவார காலஅவகாசம்: தமிழ் மக்கள் பேரவை சுவாரஸ்யங்கள்!

November 18, 2018
SAM-696x464.jpg

இன்றைய தினம் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சென்ற புளொட் அமைப்பின் பிரதிநிதிகள் இருவரையும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான பூ.லக்ஸ்மன் வெளியேற்றியிருந்தார்.

எனினும், கூட்டத்தில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாக தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகள் சமாதானம் கூறி, நிலைமையை சமாளித்தார்கள். எனினும், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை, அவர்கள் கூறியது பொய்யானதென புளொட் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

இன்றைய தமிழ் மக்கள் பேரவையின் இன்றைய கூட்டம் கந்தர்மடத்திலுள்ள அதன் அலுவலகத்தில் இடம்பெற்றது. கூட்டத்திற்கு புளொட் தரப்பிலிருந்து அதன் செயலாளர் பவானந்தன், பொருளாளர் சிவநேசன் ஆகியோர் சென்றிருந்தனர். கூட்டம் நடக்கும் இடத்தில் அமர்ந்திருந்தபோது, வைத்தியர் லக்ஸ்மன் அவர்களை சந்திக்க காத்திருப்பதாக கூறப்பட்டது. அவர்கள் இருவரும் வெளியில் செல்ல, “கட்சி தலைவர்கள் மாத்திரமே வரலாம். கட்சியின் பிரதிநிதிகள் வர முடியாது“ என லக்ஸ்மனால் கூறப்பட்டது.

“தமிழ் மக்கள் பேரவையின் முதல் கூட்டத்திற்கும் நானே வந்தேன். தலைவர் தவிர்ந்தவர்கள் வர முடியாதென்றால் அதை முதலிலேயே அறிவித்திருக்க வேண்டுமே. புளொட் சார்பில் சித்தார்த்தன் அல்லது நான்தான் வருவோமென ஏற்கனவே எழுத்து மூலமும் அறிவித்திருக்கிறோம் அல்லவா?“ என சிவநேசன் குறிப்பிட்டுள்ளார்.

கஜேந்திரகுமார் தரப்பபு அழுத்தம் தருகிறது என்பதை போல ஏதோ காரணங்களை ஏற்பாட்டாளர்கள் கூ, புளொட் பிரதிநிதிகள் இருவரும் கூட்டத்திலிருந்து வெளியேறி விட்டனர்.

 

பின்னர் சற்று நேரம் கழித்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன் கூட்டத்திற்கு வந்தார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு சர்வேஸ்வரன் முதலாவது தடவையாக வந்தார். (புளொட் சார்பில் சிவநேசன், பவானந்தன் முதலாவது கூட்டத்திலிருந்து கலந்து கொள்கிறார்கள்). சர்வேஸ்வரனையும் பேரவை ஏற்பாட்டாளர்கள் இடைமறித்து, கலந்து கொள்ள முடியாதென அறிவித்தனர்.

அந்த இடத்திலிருந்தபடியே தொலைபேசியில் தனது சகோதரனான சுரேஷ் பிரேமச்சந்திரனை தொடர்பு கொண்டு விடயத்தை சொன்னார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தொலைபேசியில் க.வி.விக்னேஸ்வரனை தொடர்பு கொண்டு, விடயத்தை சொன்னார். இதையடுத்து, விக்னேஸ்வரன் விடயத்தில் தலையிட்டு, சர்வேஸ்வரனை உள்ளே அனுமதிக்க சொன்னார்.

இதன்போது, ஏற்கனவே புளொட் பிரதிநிதிகள் திருப்பியனுப்பப்பட்ட விடயத்தை ஏற்பட்டாளர்கள் கூறினார்கள். இதற்கு அங்கிருந்த பிரதிநிதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலம்புரி பத்திரிகை ஆசிரியர் தவிர்ந்த ஏனையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த விடயம் தனக்கு தெரியாமல் நடந்து விட்டதென க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டு, அப்படி திருப்பியனுப்பியது பிழையானதென்றார்.

இதையடுத்து, ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடும்போது- “ஒரு தவறு நடந்து விட்டது. எமது தரப்பில் பழை நடந்ததை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களிப்பு நடந்தால், தலைவர்கள் தேவையென்பதால் அப்படி நடந்து விட்டோம். உடனடியாக புளொட் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்புகொண்டு மன்னிப்பு கேட்டோம். திரும்பி வரும்படி கேட்டோம். அவர்கள் கூட்டம் நடக்குமிடத்தை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டதாக கூறினார்கள்“ என்றார்கள்.

 

எனினும், பேரவை தரப்பிலிருந்து தம்முடன் யாருமே பேசவுமில்லை, மன்னிப்பு கேட்கவுமில்லையென புளொட் பொருளாளர் க.சிவநேசன் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

இப்படியான சர்ச்சைகள் ஏற்பட காரணம், யாப்பில்லாததே என சிலர் குறிப்பிட்டனர். உடனடியாக தமிழ் மக்கள் பேரவைக்கு யாப்பு உருவாக்க வேண்டுமென பலர் வலியுறுத்தினர்.

இந்த சர்ச்சையின் பின்னர், பேரவை கூட்டம் ஆரம்பித்தது. இதில் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடயம்தான் முக்கியமாக ஆராயப்பட்டது. வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தது தவறு என கஜேந்திரகுமார் கூறினார். ஈ.பி.ஆர்.எல்.எவ் இருக்கும் கூட்டணிக்கு வரவேமாட்டோம் என்றும் அடித்து சொன்னார்.

வவுனியாவில் தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்தது தவறு என பெரும்பாலானவர்கள் குறிப்பிட்டார்கள். இதையடுத்து, சுரேஷ் பிரேமச்சந்திரனுக்கு ஒரு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள், தென்னிலங்கை கட்சிகளுடன் கூட்டு வைத்த விவகாரத்திற்கு தன்னிலை விளக்கமளிக்க வேண்டும், அதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும், இல்லாத பட்சத்தில் அந்த அமைப்பு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

சுரேஷ் பிரேமச்சந்திரன் மன்னிப்பு கோரினாலும், மீண்டும் இணைவது சாத்தியமில்லை, இந்த விடயத்தில் கட்சி எடுக்கும் முடிவே இறுதியானது என கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

 

Page 2 of 2
46486327_1192622314218168_52300963347861

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பெரும்பான்மை பலமில்லாத பிரதமரான மஹிந்த ராஜபக்ச மீதான நம்பிக்கையில்லா பிரேரணை வாக்கெடுப்பை நிலையியல் கட்டளைகளிற்கு அமைவான நடத்த, இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு உறுப்பினரின் பெயர் குறிப்பிட்ட குரல்வழி வாக்கெடுப்பிற்கோ, அல்லது இலத்திரனியல் முறைப்படியான வாக்கெடுப்பிற்கோ செல்லலாம், அது நிலையியற் கட்டளைக்குட்பட்டதாக அமைய வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ச எம்.பி, ரணில் விக்கிரமசிங்க எம்.பி, இரா.சம்பந்தன் எம்.பி, டக்ளஸ் தேவானந்தா எம்.பி, ரவூப் ஹக்கீம் எம்.பி, மனோ கணேசன் எம்.பி  உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது, கருத்து வெளியிட்ட ஜனாதிபதி- “ஐதேக பொருத்தமான ஒரு பிரதமரை நியமித்தால் நிலையியல் கட்டளைகளின்படி செயற்பட்டு, அரசியல் குழப்பத்திற்கு முடிவை காணலாம். எந்தக்காரணத்தை கொண்டும் நாடாளுமன்ற கூட்டத் தொடரை ஒத்திவைக்க மாட்டேன். நான் ஐதேகவிற்கு பல யோசனைகளை தெரிவித்து வருகிறேன். அவர்கள் தரப்பிலிருந்துதான் ஒத்துழைப்பு வரவில்லை. புதிய பிரதமரை தெரிவுசெய்து, நாடாளுமன்ற ஒழுங்குகளை கடைப்பிடியுங்கள்“ என்றார்.

நாளையதினம் மீண்டும் பெரும்பான்மையை ஐதேக நிரூபிக்கும் என்பதை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். நாடாளுமன்ற பெரும்பான்மையை நிரூபிப்பது மாத்திரமல்ல, 113 எம்.பிக்களுடன் ஜனாதிபதி செயலகத்திற்கு வர முடியுமென ஐதேக குறிப்பிட்டது. எனினும், ஜனாதிபதி இதை ஏற்கவில்லை.

ஜனாதிபதி நடந்து கொள்வது அரசியல் நீதிக்கு பொருத்தமானதில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டார். 26ம் திகதிக்கு முற்பட்ட நிலைமையை ஏற்படுத்துவதே தற்போதையை நிலைமைழய சரிசெய்ய உள்ள பொருத்தமான வழியென்றார்.

இடையில், வழக்கம் போல விமல் வீரவன்ச எம்.பி வாய்ச்சவடால்கள் விட்டபடியிருந்தனர். உங்களால் முடிந்தால் 113 எம்.பிக்களின் கையெழுத்தை காண்பிக்க முடியுமா என்றார்.

வழக்கமாக இப்படியான சந்தர்ப்பங்களில் நகைச்சுவையாக பேசாத இரா.சம்பந்தன், “நாடாளுமன்றத்தில் இரண்டுமுறை நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது இவர் எங்கிருந்தார்?“ என நகைச்சுவையாக கேட்டார்.

இன்றைய கூட்டத்தின் முடிவில், ஐதேக புதிய பிரதமரை தெரிவு செய்து, நாடாளுமன்ற நிலையியல் கட்டளைகளிற்கு அமைவாக நடந்தால், அரசியல் நெருக்கடியை தீர்க்கலாமென ஜனாதிபதி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

http://www.pagetamil.com/24306/

Link to comment
Share on other sites

பேரவையினர் கஜேந்திரகுமார் சொற்படி ஆட நினைத்தால் பெயரை "சிற்றவை" என்று மாத்திவிடுவது நல்லது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.