Jump to content

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இடமாற்றம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
November 18, 2018

Nishantha.jpg?zoom=0.8099999785423279&re
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொள்ளை விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல்துறைப் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை உள்ளிட்ட முக்கிய விசாரணைகளை நிஷாந்த சில்வாவே முன்னெடுத்து வந்திருந்தார்.  இந்தநிலையில் உடனும் அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது

இவர் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட 60 குற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் செய்து, பல சந்தேகநபர்களை கைதுசெய்தவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் விசாரணைகளை முன்னெடுத்ததும் நிஷாந்த சில்வா தலைமையிலான இரகசியப் காவல்துறைக் குழு என்பதுடன், கொழும்பில் 11 மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் ஒருவருக்கு பாதுகாப்பு பிரதானியொருவர் பாதுகாப்பு வழங்கியமை தொடர்பான விசாரணைகளையும் நிஷாந்த சில்வா முன்னெடுத்து வந்திருந்தார்.

அவர் குற்றப்புலனாய்வு பிரிவிலிருந்து நீர்கொழும்பு பிரிவின் சாதாரண கடமைகளுக்காக இடமாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/103764/

Link to comment
Share on other sites

படைப் புலனாய்வு அதிகாரிகளை நீதிமன்றில் நிறுத்திய சீ.ஐ.டி நிஷாந்த சில்வா அதிரடிாக இடமாற்றம்

சிறிலங்காவில் பிரதமர் யார் என்ற குழப்பம் நீடித்துவரும் நிலையில் வெள்ளை வான் கடத்தல், ஊடகவியலாளர் படுகொலை,சித்திரவதைகள் உள்ளிட்ட கொடூரங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவம், கடற்படை உள்ளிட்ட அரச படைப் பலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட படைப் புலனாய்வாளர்களை கைதுசெய்து விளக்கமறியலில் வைத்த சீ.ஐ.டி யின் பாரிய கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நிஷாந்த சில்வா உடனடியாக அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்து பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வாவை சீ.ஐ.டி என்ற குறு:றுபு:புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றார்.

புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற 11 இளைஞர்கள் கடத்தல், சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை, சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் மற்றும் தி நேசன் பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஆகியன தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான குற்றப்புலனாய்வு பிரிவினரே, கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிகள் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உட்பட 20 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்களை கைதுசெய்தனர். இவர்களில் சிலர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை தலைநகர் கொழும்பின் கொட்டாஞ்சேசனை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் வைதது தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 இளைஞர்களை கடத்தி சித்திரவதைக்கு உட்படுத்தி காணாமல் ஆக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக கருதப்படும் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரிகளில் ஒருவரான லெப்டினன் கமாண்டர் ஹெட்டியாராச்சிக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் தற்போதைய முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தொடர்புபட்டிருப்பதையும் கண்டுபிடித்து நீதிமன்றத்திற்கு நிஷாந்த சில்வா தலைமையிலான சீ.ஐ.டி யினர் அறிவித்திருந்தனர்.

இதற்கமைய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அட்மிரல் விஜேகுணரத்னவை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தமாறு உத்தரவிட்டும் உள்ளது. இதற்கு பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா தலைமையிலான சீ.ஐ.டி யினருக்கு அனுமதி மறுத்துவரும் சிறிலங்கா அரச தலைமை, அவர்களை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தும் இருந்ததாக கொழும்பிலிருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதேவேளை மீண்டும் சிறிலங்கா ஜனாதிபதி மைத்ரியுடன் கூட்டு சேர்ந்துள்ள மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியினரும் படைப் புலனாய்வாளர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதற்கும்,அட்மிரல் விஜேகுணரத்னவை கைதுசெய்ய எடுத்துவரும் முயற்சிக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்ததிருந்தனர்.

அதேவேளை தாங்கள் ஆட்சியை கைப்பற்றினால் படைப் புலனாய்வாளர்கள் உட்பட படை அதிகாரிகளை கைதுசெய்யும் படலத்தை தடுத்து நிறுத்துவதாகவும் சூளுரைத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே ஒக்டோபர் 26 ஆம் திகதி மைத்ரியுடன் இணைந்து ரணில் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சியை கைப்பற்றியுள்ள மஹிந்த ராஜபக்ச தரப்பினர் சீ.ஐ.டி பொலி்ஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை அதிரடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவிற்கு அழுத்தங்களை கொடுத்தே மஹிந்த தரப்பு இந்த இடமாற்றத்தை செய்திரப்பதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் கூறுகின்றன.

அதெவேளை எந்தவித அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது கடமையை நிறைவேற்றிவந்த பொலிஸ் அதிகாரியான நிஸாந்த சில்வாவை இடமாற்றியது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இடையே கடும் விசனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத தலைமை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்கு 11 இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்ட வழக்கு உள்ளிட்ட பாரதுஸரமான குற்றங்கள் தொடர்பான அனைத்து வழக்குகளும் கிடப்பில் போடப்பட்டுவிடும் என்றும் சட்டத்தரணிகளும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் குடும்பத்தினரும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

https://www.ibctamil.com/security/80/109434?ref=rightsidebar

Link to comment
Share on other sites

9 hours ago, போல் said:

எந்தவித அச்சுறுத்தல்களுக்கும், அழுத்தங்களுக்கும் அடிபணியாது தமது கடமையை நிறைவேற்றிவந்த பொலிஸ் அதிகாரியான நிஸாந்த சில்வாவை இடமாற்றியது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இடையே கடும் விசனத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெயரைக் குறிப்பிட விரும்பாத தலைமை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் எப்போது கிளர்ந்தெழுவார்கள்?
இன்னொரு ஆட்டத்தை தமிழர் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.