Jump to content

இன்றைய சிங்களவர்களை, இலங்கைக்கு கொண்டுவந்த அன்றைய முஸ்லிம்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20181116_164740.jpg

இலங்கை தேசத்தின் மதிப்பிலும், பண்பாட்டிலும் அதன் இனங்களும் ,கலாசார பாரம்பரியங்களும் செல்வாக்குச் செலுத்துகின்றன, அந்தவகையில் இலங்கையின் பெரும்பான்மை இனமாக சிங்களவர்கள் இருந்தாலும் அவர்களிடம் " குலய" என்ற சாதி முறை செல்வாக்குச் செலுத்துவதுடன் ,அதனை அவர்கள் தமது பாரம்பரிய அடையாளமாகவும் கொண்டுள்ளனர், அவ்வாறான அடையாளத்திற்கு உதவி புரிந்த முஸ்லிம் முன்னோர் பற்றிய பதிவே இதுவாகும், 
 
#அறிமுகம்,
 
பேருவளைப் பிரதேசத்தின், களு கங்கையைச் சுற்றி உள்ள "களுமோதர" பிரதேசத்தின் வளர்ச்சி, பண்பாடு, வாழ்வியல் ,பனசல, பிக்குகளின் நடைமுறை என்பதில் "சலாகம" என்ற குலத்தினரின் பங்கு மிக அதிகமாகும், இவர்கள் இன்று நாட்டின் பல பாகங்களில் பரவி வாழ்ந்தாலும்,  வரலாற்றில் இத் தேசத்திற்கான இவர்களின்  பங்கும் அதிகமாகும், 
 
#தோற்றமும் தொடர்பும் 
 
"சலாகம" ,குலத்தினர் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றவர்களாகும், இவர்களின் வரலாற்றுடன் ,முஸ்லிம்கள் மிகவும் நெருங்கிய தொடர்புடையவர்கள் மட்டுமல்ல இவர்கள் இலங்கைக்கு வரக் காரணமே அன்றைய முஸ்லிம்களாகும், 
 
#வரலாறு..
 
மில்லவத்தே மைத்திரி ஹிமி எழுதிய "..... களுமோதர சைதிகாசிக பசுவிம" என்ற நூலின்படி, இலங்கையின் குர்ணாகல பிரதேசத்தை "வத்ஹிமி விஜயபாஹூ, ஆட்சி புரிந்து கொண்டிருந்த போது, அவனது அரச சபை பட்டமளிப்ப விழாவிற்கு பிராமணர்களைக்கொண்டு சிறப்பிக்கத் தீர்மானித்தான்,அவ்வேளையில் நிகழ்வுக்கான பிராமணர்களை எங்கிருந்து, எவ்வாறு அழைத்து வருவது என்பதில் அரச சபையும் ,மக்ககளும் செய்வதறியாது இருந்த வேளையில் அப் பாரிய பணியை இங்கு கடல் வழி வியாபாரத்தில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர்கள் பொறுப்பேற்றனர், 
 
#முக்கியத்துவம்,
 
அரச விழாவுக்கான காலம் நெருங்கிய வேளையில் அதற்கான பிராமணர்களை இந்தியாவின் கேரளப் பிரதேசத்தில் இருந்து கப்பல் மூலம் முஸ்லிம்கள் அழைத்து வந்திருந்தனர்,இதனால் மகிழ்ச்சியடைந்த மன்னனும் மக்களும் ,குறித்த ஏழு பிராமணர்களையும், முஸ்லிம் வர்த்தகர்களையும், பேருவளைக் கடற்கரையில் இருந்து அரண்மணை வரை கம்பளம் விரித்து வரவேற்றதாக வாய்வழி வரலாறுகளும், நம்பிக்கைகளும் குறிப்பிடுகின்றன,  இன்னும் குறித்த அரச நிகழ்வை  #உதுமா #உடையார் #லெப்பை என்பவரின் தலைமையில் அரசன் நடாத்தியதாகவும், அதன் பின்னர் குறித்த பிராமணர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அரசன் பேருவளைப் பிரதேசத்தில் காணிகள் வழங்கியதாகவும், குறித்த பிராமணர்களில் இருந்து தோற்றம் பெற்றதே இன்றைய " சலாகம" குலத்தினராகும், அன்றைய முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து இவர்களை அழைத்து வராவிடின் இன்றைய " சலாகம குல சிங்களவர்கள் உருவாகி இருக்கமாட்டார்கள், 
 
#யாரிந்த #முஸ்லிம்கள்,??
 
குறித்த, காலப்பகுதியில் இலங்கையின் வியாபாரமும், அரசனுக்கும், மக்களுக்கும் தேவையான அத்தியவசிய மட்டுமல்ல' ஆடம்பர உதவிகளையும் உலகின் பல பிரதேசங்களில் இருந்தும் முஸ்லிம் வர்த்தகர்கள் கொண்டு வந்து உதவி புரிந்தார்கள், இந்தவகையில் விஜயபாகுவின் பட்டமளிப்புக்கான பிராமணர்களைக் கொண்டு வந்தவர்களாக,  "கப்பல் உடையார், செலஷ்டன் லெப்பே, உதுமா லெப்பே, அகமது லெப்பே, காதிருல் லெப்பே,.. போன்றோரின் பெயர்கள் இன்றும் சிங்கள வரலாற்றில் நினைவு கூரப்படுகின்றன,  இன்னும் இந்தக் கடல்வழி வியாபார ஆதாரங்களை தொல்லியல் துறையினரும் நிறுவுகின்றனர், 
 
#சலாகம, #குலத்தவர்கள் 
 
இந்தி பிராமணர்களில் இருந்து பின்னர்  சிங்கள குலமாக மாறிய இவர்கள் இலங்கை வரலாற்றில் பல சாதனைகளைப் புரிந்தவர்களையும் உள்ளடக்கி உள்ளனர், இவர்களது பெயர்களில், காலிங்க, முனி, வீரவர்த்தன, நெத்தி, அகம்பொடி, போன்ற துணைப்பெயர்களும் உள்ளடங்கி இருக்கும்,  இலங்கையின் நிதிபதிகளாக ,லலித்த ராஜபக்‌ஷ, டியுடர் ,  முதலியார் சம்சன் ராஜபக்‌ஷ, ஸ்ரீமத் சிறில் சொய்ஷா,மற்றும்  அமரபுர நிகாயாவைத்தோற்றுவித்தவரும், காலனித்துவ காலத்தில் பிரித்தானிய கிறிஸ்த்தவத்துக்கு எதிராக வாதிட்டு பிரபலமானவழுமான மிகட்டுவத்தே குணாணந்த ஹிமி, போன்றோரும்,..மட்டுமல்ல கீழே என்னோடு புகைப்படத்தில் உள்ள எனது நண்பர்  Sumedha Weerawardhana வும் இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்களே, இக்குலத்தினரின் இத்தேசத்திற்கான பங்களிப்பு அதிகமானதாகும், 
 
#எமதுபெருமையும் #கடமையும்
 
இலங்கை தேசத்தில் முஸ்லிம்முன்னோர் வெறுவனே வியாபாரத்திற்காக மட்டும் வரவில்லை மாறாக இந்நாட்டின், ஆட்சியில், ,பண்பாட்டில், இதன் பொதுக்கலாசாரத்தில்  மிகவும் உதவி புரிந்திருக்கின்றார்கள், அந்த வகையில் நாமும்  அவற்றைத் தொடர்வதும், இவ்வாறான வரலாற்றுத் தொடர்புகளை  எமது எதிர்காலச் சந்த்தியினருக்கு  எத்தி வைப்பதுமே எமது இன்றைய கட்டாய கடமையாகும், ". நாம் எமது வரலாற்றுப் பொக்கிசங்களை இயக்கவாத இறுமாப்பில்  நாமே அழித்து "#கலாசாரத் #தற்கொலை"( Cultural Suicide)  செய்து கொண்டிருக்கும்  வேளைகளில் சிங்கள மக்கள் தமது வரலாற்றின் ஊடாக எமது வரலாற்றையும், தொடர்புகளையும், வாய்வழிக்கதைகளாகவும், சமூக நம்பிக்கைகளாகவும்  இன்றுவரை பாதுகாத்து வருவதைப் பாராட்டித்தான் ஆக வேண்டும்,
 
MUFIZAL ABOOBUCKER
SENIOR LECTURER 
DEPARTMENT OF PHILOSOPHY
UNIVERSITY OF PERADENIYA

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

இத தான் சொல்லுறது.... கப்பில கெடா வெட்டிறதெண்டு....

...விட்டால், சீதைய தூக்கீட்டு வந்ததே, இராவணன் கிடையாது, மக்காவிலிருந்து, மதீனா போற வழில, டபக்கெண்டு புஸ்பக விமானத்தில கெளம்பி போய் செய்தது, நபிகள் தான் எண்டு சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

"பொய்யில் பிறந்து பொய்யில் வளர்ந்த சமூகம்" என்னும் அடைமொழி இவர்களுக்காகவே உருவாக்கப்பட்டது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, nunavilan said:

வெள்ளரசு மரத்தை கக்கீம் தான் நாட்டினார் என சொன்னாலும் சொல்வார்கள்.:grin:

 

சிரித்து டென்சன் குறைக்கத்தானப்பு இப்படியான செய்திகளை இணைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, colomban said:

சிரித்து டென்சன் குறைக்கத்தானப்பு இப்படியான செய்திகளை இணைக்கின்றேன்.

அது மட்டுமல்ல முஸ்லிம்களின் சுயரூபத்தை உலகறிய வைக்கும் பணியையும் செய்து வருகிறீர்கள்!

Link to comment
Share on other sites

உங்கள் அறியாமை உங்களுக்கு சிரிப்பை உண்டாக்குமானால் நீங்கள் அறியாமையில் இருப்பதே நன்று http://www.ft.lk/columns/The-Brahmin-footprint-in-Sri-Lankan-history/4-667051

https://www.facebook.com/278321265642331/posts/the-history-of-the-salagama-castesalagama-brahakmana-wanshaya-salagamahalagama-i/278328775641580/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, hasan said:

உங்கள் அறியாமை உங்களுக்கு சிரிப்பை உண்டாக்குமானால் நீங்கள் அறியாமையில் இருப்பதே நன்று http://www.ft.lk/columns/The-Brahmin-footprint-in-Sri-Lankan-history/4-667051

https://www.facebook.com/278321265642331/posts/the-history-of-the-salagama-castesalagama-brahakmana-wanshaya-salagamahalagama-i/278328775641580/

நாலு பேரை, அரசர் உத்தரவில், வள்ளத்தில் கொண்டு வந்த ஓட்டிகளை.... ஏதோ சிங்கள இனத்தையே.... இலங்கைக்கு (அதுக்கு முன்னமே இருந்த) சோனகர் அழைத்து வந்தது போல பீலா விடுவதை குறித்து தான் மேலே நகைச்சுவையாக பதிந்தோம்.

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

நாலு பேரை, அரசர் உத்தரவில், வள்ளத்தில் கொண்டு வந்த ஓட்டிகளை.... ஏதோ சிங்கள இனத்தையே.... இலங்கைக்கு (அதுக்கு முன்னமே இருந்த) சோனகர் அழைத்து வந்தது போல பீலா விடுவதை குறித்து தான் மேலே நகைச்சுவையாக பதிந்தோம்.

தலைப்பு தவறானதுதான். சிங்கள இனத்தின் ஒரு சாதியினரை கொண்டுவந்தது என்று வரவேண்டும். இந்த வரலாற்றை சொல்பவர்கள் சிங்களவர்கள்தான். அது ஏன் உங்களால் சகிக்கமுடியவில்லை என எனக்கு புரியவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, hasan said:

தலைப்பு தவறானதுதான். சிங்கள இனத்தின் ஒரு சாதியினரை கொண்டுவந்தது என்று வரவேண்டும். இந்த வரலாற்றை சொல்பவர்கள் சிங்களவர்கள்தான். அது ஏன் உங்களால் சகிக்கமுடியவில்லை என எனக்கு புரியவில்லை.  

முதலாவதாக தமிழர்கள் இங்கே இருந்தார்கள், அவர்களின் ஒரு பகுதியினரிடம் தான் அரேபியாவில் இருந்து வந்த இஸ்லாம் பரவியது.

மொழி முதலில் இருந்தது.... மதம் பிறகு வந்தது.

அடுத்தது, இந்த சிங்களவர்கள், வரலாறு எழுதுகிறோம் என்று மனிதனின் பொது அறிவுக்கும், விவேகத்துக்கும் சவால் விடுகின்றனர்.

இன்றும் கூட, அவர்களின் பெரும் இதிகாச நூலாக கருதப் படும் மஹாவம்சம், காட்டுக்கு ஓடிப்போன இளவரசியை கவர்ந்து சென்ற சிங்கத்துக்கும் அந்த இளவரசிக்கும் பிறந்த இரு பிள்ளைகள், ஆணும், பெண்ணும், இணைந்து உருவாக்கியதே சிங்களவர்கள் என்று கப்ஸா விடுகிறது. (அதாவது, காட்டு ஆண் விலங்குக்கும், மனித பெண்ணுக்கும் இடையேயான இணைவில் உருவானதே சிங்கள இனம்)

அதை ஏற்று சகித்துக் கொள்ள வேண்டும் என்கிறீர்களா?

நாம் சொல்ல வருவது என்னவென்றால், எங்கேயோ இருந்து நாடுகடத்தப் பட்ட, தருதலைகளான விஜயனும் 700 தோழர்களும் தான் சிங்கள சமுகத்தின் மூலம். அவர்கள், தமிழர்கள் இருந்த தீவுனுள் கள்ளத்தோணியில் நுழைந்து கொண்டனர்.

சில பிராமணர்கள் வருகைக்கு, தமிழ் மொழி பேசிய, இஸ்லாமிய மார்க்கத்தினை சேர்ந்த தமிழர்கள் உதவி இருப்பார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற பிரிவினை, ஜே ஆர் ஜெயவர்த்தனேவால் அதி தீவிரமாக கைக்கொள்ளப் பட்ட பிரித்தாளும் கொள்கையின் வெற்றி.

அதனை விழுங்கி, இது போன்ற தலைப்புகளில் எழுதும் மேதாவிகளை நினைக்க சிரிப்பு வராமல் வேறு என்ன தான் வருமாம்.

வரலாறினையே தலை கீழாக மாத்தி சொல்லும் சிங்கள போலி ஆய்வளார்களின் கதை சிரிப்பினை தான் வரவழைக்கிறது. 

உதாரணமாக தமிழர்கள் ஒரு காலத்தில் பௌத்தர்களாக இருந்திருக்கின்றனர். மணிமேகலை, சிலப்பதிகாரம் போன்றன பௌத்த தமிழ் இதிகாசங்கள்.

யாழ்ப்பாணம் கந்தரோடையில் ஆதிகால தமிழ் பௌத்த சின்னங்கள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்தர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்று கப்ஸா விடுகிறார்கள் இந்த பம்மாத்தர்கள். நம்ப வேண்டுமா?

Image result for kantharodai viharaya

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி நானா ...
சிறாவா நியம எக்ஸ்ப்ளனேசன் தானேவா குடுத்து இருக்கீங்க. 
எப்பிடிவா ஒங்கள்கிட்ட இவ்ளோ இன்போர்மேஷன் ஈக்கி ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/18/2018 at 6:00 PM, nunavilan said:

வெள்ளரசு மரத்தை கக்கீம் தான் நாட்டினார் என சொன்னாலும் சொல்வார்கள்.:grin:

எங்கடை கவிஞர் பிரான்ரை காதிலை விழாமல் மெல்லமாய் கதையுங்கோ....பிறகு அந்தாள் வந்து கக்கீம் கக்கா போறதுக்கு வெட்டின கிடங்கிலைதான் வெள்ளரசு செழிப்பாய் வளர்ந்தது எண்டு சொன்னாலும் சொல்லும் :grin:

Link to comment
Share on other sites

 
 
மதிப்புக்குரிய பேராசிரியருக்கு.
உங்கள் கூற்று மிகத் தவறானதாகும். சலாகம சாதியினர் தமிழகத்தைச் சேர்ந்த சாலையர்கள் அல்லது செங்குந்தர் என அழைக்கபட்ட் நெசவு செய்தலைக் குலத் தொழிலாக கொண்டவர்கள்.  கம என்கிற சிங்களச் சொல் சாதியையும் குறிப்ப்பதாகும்.சாலை சாதி என்பதன் சிங்கள பதமே சலாகம என்பது. 
.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Nathamuni said:

இன்றும் கூட, அவர்களின் பெரும் இதிகாச நூலாக கருதப் படும் மஹாவம்சம், காட்டுக்கு ஓடிப்போன இளவரசியை கவர்ந்து சென்ற சிங்கத்துக்கும் அந்த இளவரசிக்கும் பிறந்த இரு பிள்ளைகள், ஆணும், பெண்ணும், இணைந்து உருவாக்கியதே சிங்களவர்கள் என்று கப்ஸா விடுகிறது. (அதாவது, காட்டு ஆண் விலங்குக்கும், மனித பெண்ணுக்கும் இடையேயான இணைவில் உருவானதே சிங்கள இனம்)

ஓர் ஆண் சிங்கம் பெண் சிங்கத்துடன் கலவியில் ஈடுபடும் போது பெண்சிங்கத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை தனது வேட்டைப் பற்களால் கௌவிப் பிடிப்பதுடன், ஆண் சிங்கத்தின் முன்னம் கால் நகங்கள் பெண் சிங்கத்தின் கரைத்தோள் பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

உச்சக் கட்டத்தில் ஆண் சிங்கம் பென்சினத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை வேட்டையாடும்  போது உள்ள வேட்டைப் பற்களால் இறுக்கமான பிடியளவு இருக்கும்.

அது போலவே முன்னம் கால் நகங்களை பெண் சினத்தின் கரை தோள்  பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

இது பெண் சிங்கத்தை உச்ச கட்டத்தின் போது, வெடிக்கும் உணர்ச்சியில்  அசைய விடாமல் ஆன் சிங்கத்தின் கட்டுக்குள் வைத்திருப்பதத்திற்கும், ஆன் சிங்கத்தின் விந்து பீய்ச்சல் பெண் சினத்தின் கரு முட்டையை சென்று அடைவாதத்திற்கான நேரத்தையும் சாத்தியக் கூறுகளையும் அதிகரிப்பதற்கு   இயற்றுகை கூர்ப்பின் வாயிலாக அநேகமான மிருகங்ளிடற்கு உண்டு.

ஆயினும், பெண் சிங்கம் மிகுந்த வலியிலும், மூச்சை இழக்காமல், எந்த விதமான காயங்களோ அல்லது சதை கிழிவுகளோ, எலும்பு முறிவுகளோ ஏற்படாமல்  புணர்ச்சியின் போது ஆன் சிங்கத்திற்கு ஈடு கொடுத்து தாங்கும் அளவிடற்கு தோள் படை தசைகளையம், பின்கழுத்து தசைகளையும் முறுக்கேற்றி, என் உடம்பு முழுவதையுமே ஓர் விதமாக முறுக்கேற்றி, உண்மையில் ஆன் சிங்கத்தின்  இடித்தலிற்கு எதிரான, அதே நிகரான அழுத்தத்தை வழங்கும். இதுவும் கூர்ப்பினாலேயே வந்ததது. காலதிகால தன்னிலும் மிகப் பெரிய மிருகங்களை வேட்டையாடுவதினால் வந்தவையே இந்த முறுக்கேற்றம்.  

இந்த புணர்ச்சியை எல்லா விதமான big  cat இல் காணலாம்.       


மனிதர்களிடமும் இது உண்டு. கலவியின் பொது கடித்தல்  என்பது கூர்ப்பின் வாயிலாக புணருபவர்களில் ஆக்க குறைந்து ஒருவராயினும் கடித்தல் மூலமாக இயலுமானவரை மற்றவரை கட்டுக்குள் மற்றும் கட்டியணைத்து வைத்திருப்பதத்திற்கு, கலவியின் உச்சக்கட்ட விளைவாக, கூர்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது.    ஆயினும் எல்லா மனிதர்களும் இப்படியே கலவியை அனுபவிப்பார்கள் என்பதில்லை, ஏனெனில் அறிவு வளர்ச்சி.

திருக்குறளும், இதையே தலைவனிற்கும் தலைவிக்கும் காற்று தப்பிக்க (கவனிக்க காற்று புக அல்ல) முடியாத நெருக்கம் கலவியில் இருக்கும் என்று. அல்லால் அது கலவி அல்ல என்றும்.


சிங்களம் சொல்லும், சிங்கத்திற்கும் மனித இளவரசி இடையிலான புணர்ச்சி என்பதில், மனித இளவரசி பெண்சிங்கத்தின் பாகத்தையே எடுத்திருக்க முடியும். அதாவது, மனித இளவரசி பெண்சிங்கமாகவே, புணர்ந்த ஆன் சிங்கத்திற்கு  இருந்திருக்க முடியும்.

மனித இளவரசி, ஓர் பெண் சிங்கத்தின் முறுக்கேற்றத்தை ஒரு போதுமே வழங்கியிருக்க முடியாது. அப்படி இருந்திருப்பின், அந்த பெண் மனித வர்க்கம் அல்ல.

மேலே சொல்லிய சிங்கத்தின் வேட்டைப் பற்களும், முன்னம் கால்களின் நகங்களும், மனித இளவரசியின் தோள்களையும், முண்டத்தையும்  ஆக குறைந்தது மூன்று சதை எலும்பு கீலங்களாக புணர்ச்சி முடியும் தறுவாயில் கிழித்து, ஏன் பெண்ணுறுப்பு வரையுமே கிழிவு ஏற்றப்பட்டிருக்க கூடிய சாத்தியக்  கூறுகள் உள்ளது.

மேலும் புணர்ச்சி முடிந்த  தறுவாயில், ஆன் சிங்கத்திற்கு அருகில் பெண் சிங்கமே நிற்காது. ஏனெனில், அது மிகவும் ஆபத்தான நேரம், ஆன் சிங்கம் ஓர் விதாமான இரத்த சதை வெறியுடன் இருக்கும்.

மனித இளவரசி ஆயின், ஆன் சிங்கம்  ஓர் வேட்டையை முடிவில் இரத்த வெறியை எவ்வாறு தீர்கிறதோ அப்படியே அந்த இரத்த சதை பிண்டத்தை தனது இரத்த சதை வெறியை தீர்த்திருக்கும்.

சிங்களம் சிந்திக்காமல் கதை விட, வந்த பிரித்தானியரும் சிங்களம் கொடுத்த மது, மாது, ஆண், பெண், பொருள் இத்தியாதியால் அந்த கதையை எழுத்துருவாக்க, சிங்களத்திடம் ஆட்சியை கொடுக்க, சிங்களம் தான் சொன்ன கதையை உண்மையே என்று நம்பி விட்டது.

அனால், நவீன சிங்களத்தின் (~50 %) மரபணு இப்போதைய தமிழ் நாடு, கேரளா,ஆந்திராவுடன்,அதே வரிசையில் ஒத்துப்போகிறது.

பூர்விக சிங்களத்தின் (~50 %) மரபணு, ஈழத்தமிழ் மரபணுவுடன் ஒத்துப்போகிறது.

போத்துக்கேயர் எல்லா இஸ்லாம் மதத்தவரையும் moors என்று  பெயரிட்டபடியால் , நீங்கள் moors ஆகவோ  அல்லது அரேபிய பூர்விகம் உள்ளவராகவோ முடியாது

உங்களில் ஓர் மிக குறைந்த (~ 5000 - 10000) பகுதியினர் அரேபிய தந்தையை மூதாதையராக இருப்பதினால், உங்களை அராபியர் என்று கூறமுடியாது.

அதை கூட நீங்கள் கையில் எடுப்பதத்திற்கான  காரணம், அன்றைய சாதிக் கொடுமைகளால் உங்கள் மூதாதையரின் தோற்றமான இப்போதைய தமிழ் நாடு, கேரளா அடிகளை மறைப்பதத்திற்கு. இது சாதியை கொண்டு வேறுபடுத்துவதற்கு கூறப்படவில்லை. இதுவே உண்மையான சரித்திரமும் வரலாறும்.

உங்களிட்ற்கும் நவீன சிங்கத்திடற்கும் நிச்சயமாக மரபணுவில் மிகச் சிறிய வேறுபாடுகளே இருக்கும். 

உங்கள் என்பது உங்களை தனி நபராக குறித்து சுடப்படவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

ஓர் ஆண் சிங்கம் பெண் சிங்கத்துடன் கலவியில் ஈடுபடும் போது பெண்சிங்கத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை தனது வேட்டைப் பற்களால் கௌவிப் பிடிப்பதுடன், ஆண் சிங்கத்தின் முன்னம் கால் நகங்கள் பெண் சிங்கத்தின் கரைத்தோள் பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

உச்சக் கட்டத்தில் ஆண் சிங்கம் பென்சினத்தின் பிடரியின் கீழ் இருக்கும் கழுத்து பகுதியை வேட்டையாடும்  போது உள்ள வேட்டைப் பற்களால் இறுக்கமான பிடியளவு இருக்கும்.

அது போலவே முன்னம் கால் நகங்களை பெண் சினத்தின் கரை தோள்  பட்டையில் பதிந்து இறுக்கப் பற்றியிருக்கும்.

இது பெண் சிங்கத்தை உச்ச கட்டத்தின் போது, வெடிக்கும் உணர்ச்சியில்  அசைய விடாமல் ஆன் சிங்கத்தின் கட்டுக்குள் வைத்திருப்பதத்திற்கும், ஆன் சிங்கத்தின் விந்து பீய்ச்சல் பெண் சினத்தின் கரு முட்டையை சென்று அடைவாதத்திற்கான நேரத்தையும் சாத்தியக் கூறுகளையும் அதிகரிப்பதற்கு   இயற்றுகை கூர்ப்பின் வாயிலாக அநேகமான மிருகங்ளிடற்கு உண்டு.

ஆயினும், பெண் சிங்கம் மிகுந்த வலியிலும், மூச்சை இழக்காமல், எந்த விதமான காயங்களோ அல்லது சதை கிழிவுகளோ, எலும்பு முறிவுகளோ ஏற்படாமல்  புணர்ச்சியின் போது ஆன் சிங்கத்திற்கு ஈடு கொடுத்து தாங்கும் அளவிடற்கு தோள் படை தசைகளையம், பின்கழுத்து தசைகளையும் முறுக்கேற்றி, என் உடம்பு முழுவதையுமே ஓர் விதமாக முறுக்கேற்றி, உண்மையில் ஆன் சிங்கத்தின்  இடித்தலிற்கு எதிரான, அதே நிகரான அழுத்தத்தை வழங்கும். இதுவும் கூர்ப்பினாலேயே வந்ததது. காலதிகால தன்னிலும் மிகப் பெரிய மிருகங்களை வேட்டையாடுவதினால் வந்தவையே இந்த முறுக்கேற்றம்.  

இந்த புணர்ச்சியை எல்லா விதமான big  cat இல் காணலாம்.       


மனிதர்களிடமும் இது உண்டு. கலவியின் பொது கடித்தல்  என்பது கூர்ப்பின் வாயிலாக புணருபவர்களில் ஆக்க குறைந்து ஒருவராயினும் கடித்தல் மூலமாக இயலுமானவரை மற்றவரை கட்டுக்குள் மற்றும் கட்டியணைத்து வைத்திருப்பதத்திற்கு, கலவியின் உச்சக்கட்ட விளைவாக, கூர்ப்பினால் வழங்கப்பட்டுள்ளது.    ஆயினும் எல்லா மனிதர்களும் இப்படியே கலவியை அனுபவிப்பார்கள் என்பதில்லை, ஏனெனில் அறிவு வளர்ச்சி.

திருக்குறளும், இதையே தலைவனிற்கும் தலைவிக்கும் காற்று தப்பிக்க (கவனிக்க காற்று புக அல்ல) முடியாத நெருக்கம் கலவியில் இருக்கும் என்று. அல்லால் அது கலவி அல்ல என்றும்.


சிங்களம் சொல்லும், சிங்கத்திற்கும் மனித இளவரசி இடையிலான புணர்ச்சி என்பதில், மனித இளவரசி பெண்சிங்கத்தின் பாகத்தையே எடுத்திருக்க முடியும். அதாவது, மனித இளவரசி பெண்சிங்கமாகவே, புணர்ந்த ஆன் சிங்கத்திற்கு  இருந்திருக்க முடியும்.

மனித இளவரசி, ஓர் பெண் சிங்கத்தின் முறுக்கேற்றத்தை ஒரு போதுமே வழங்கியிருக்க முடியாது. அப்படி இருந்திருப்பின், அந்த பெண் மனித வர்க்கம் அல்ல.

மேலே சொல்லிய சிங்கத்தின் வேட்டைப் பற்களும், முன்னம் கால்களின் நகங்களும், மனித இளவரசியின் தோள்களையும், முண்டத்தையும்  ஆக குறைந்தது மூன்று சதை எலும்பு கீலங்களாக புணர்ச்சி முடியும் தறுவாயில் கிழித்து, ஏன் பெண்ணுறுப்பு வரையுமே கிழிவு ஏற்றப்பட்டிருக்க கூடிய சாத்தியக்  கூறுகள் உள்ளது.

மேலும் புணர்ச்சி முடிந்த  தறுவாயில், ஆன் சிங்கத்திற்கு அருகில் பெண் சிங்கமே நிற்காது. ஏனெனில், அது மிகவும் ஆபத்தான நேரம், ஆன் சிங்கம் ஓர் விதாமான இரத்த சதை வெறியுடன் இருக்கும்.

மனித இளவரசி ஆயின், ஆன் சிங்கம்  ஓர் வேட்டையை முடிவில் இரத்த வெறியை எவ்வாறு தீர்கிறதோ அப்படியே அந்த இரத்த சதை பிண்டத்தை தனது இரத்த சதை வெறியை தீர்த்திருக்கும்.

சிங்களம் சிந்திக்காமல் கதை விட, வந்த பிரித்தானியரும் சிங்களம் கொடுத்த மது, மாது, ஆண், பெண், பொருள் இத்தியாதியால் அந்த கதையை எழுத்துருவாக்க, சிங்களத்திடம் ஆட்சியை கொடுக்க, சிங்களம் தான் சொன்ன கதையை உண்மையே என்று நம்பி விட்டது.

அனால், நவீன சிங்களத்தின் (~50 %) மரபணு இப்போதைய தமிழ் நாடு, கேரளா,ஆந்திராவுடன்,அதே வரிசையில் ஒத்துப்போகிறது.

பூர்விக சிங்களத்தின் (~50 %) மரபணு, ஈழத்தமிழ் மரபணுவுடன் ஒத்துப்போகிறது.

போத்துக்கேயர் எல்லா இஸ்லாம் மதத்தவரையும் moors என்று  பெயரிட்டபடியால் , நீங்கள் moors ஆகவோ  அல்லது அரேபிய பூர்விகம் உள்ளவராகவோ முடியாது

உங்களில் ஓர் மிக குறைந்த (~ 5000 - 10000) பகுதியினர் அரேபிய தந்தையை மூதாதையராக இருப்பதினால், உங்களை அராபியர் என்று கூறமுடியாது.

அதை கூட நீங்கள் கையில் எடுப்பதத்திற்கான  காரணம், அன்றைய சாதிக் கொடுமைகளால் உங்கள் மூதாதையரின் தோற்றமான இப்போதைய தமிழ் நாடு, கேரளா அடிகளை மறைப்பதத்திற்கு. இது சாதியை கொண்டு வேறுபடுத்துவதற்கு கூறப்படவில்லை. இதுவே உண்மையான சரித்திரமும் வரலாறும்.

உங்களிட்ற்கும் நவீன சிங்கத்திடற்கும் நிச்சயமாக மரபணுவில் மிகச் சிறிய வேறுபாடுகளே இருக்கும். 

உங்கள் என்பது உங்களை தனி நபராக குறித்து சுடப்படவில்லை.

அட....இதுக்குள்ள...இவ்வளவு விஷயம் ஒளிஞ்சிருக்கு எண்டு ...இண்டைக்குத் தான் தெரியும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சாலகம என்பது கறுவா தயாரிப்பு தொழில் செய்யும் தாழ்த்தப்படட மக்கள். அவர்கள் தமிழகத்தில் இருந்து வந்திருக்கலாம்.

தம்மை மிக உயர்ந்த வகுப்பினர் என கருதும் பிராமணர்களை பத்தி புரியாதவர்கள் எல்லாம் அவர்களை கொண்டுவந்தோம், அவர்கள் கறுவா தோட்டம் அமைத்தார்கள் என்று சிங்கள வரலாறு சொல்கிறோம் என்று கப்ஸா விடக்கூடாது. அதை நம்பி, இஸ்லாமியர்கள் அடுத்த கப்ஸா விடக்கூடாது. 

புத்தர் மறைந்து 250 வருடங்களின் பின்னர் தான் அவரது போதனைகள் பௌத்தமதமாக, அசோக சக்கரவர்தியால் தென் கிழக்கு ஆசியா எங்கும் பரவியது. அசோகரின் பிள்ளைகள், மகிந்த, சங்கமித்தை யினால் இலங்கையில் பௌத்தம் அறிமுகமானது. அதாவது புத்தர் மறைந்து 250 ஆண்டுகள் பின்னால். 

(மான் வேட்டை ஆடி கொண்டிருந்த தேவநம்பிய தீசன் எனும் மன்னனை இடைமறித்து, கொல்வது பாவம் என்று சொல்லி போதனை செய்தார்களாம் அவர்கள். ஆனால் மகிந்த பெயர் கொண்ட ஒருவர் 2009ல் வன்னியில் நடத்தியதை புத்தர் மன்னிப்பாரா?)

ஆனாலும் புத்தர் இலங்கை வந்தார், நயினாதீவு வந்தார், சிவனொளி பாத மலை உச்சியில் காலடி வைத்தார் (சாதாரண மனிதப் பிறவியினால் முடியுமா?) , கண்டியில் 2500 ஆண்டுகள் வயதான அவரது பல், புனித பேழையில் உள்ளது என்று கப்ஸா நீள்கிறது...  

தமிழ் முருகனை தூக்கி, பிள்ளையாரின் தம்பி, சிவனாரின் இரண்டாவது மகன் என்று சொல்லி சைவத்தை, இந்துமதத்துக்குள் அமுக்கிய இந்த ஆரிய பிராமணர்கள், விகாரைகளில் மனிதப் பிறவியாக புத்தரை பூசை செய்ய முடியாததால், தமிழகத்தில் செழித்து இருந்த பௌத்தம், தூக்கி வீசப்பட்டதுக்கு காரணமாக இருந்தார்கள். 

உண்மையில் அவர்கள் இலங்கைக்கு வந்திருந்தால் இங்கே பௌத்தம் இருந்திருக்க முடியாது.

முதலில் இலங்கை முஸ்லிம்கள், தாம் இஸ்லாம் மார்க்கத்தினை பின்பற்றும், தமிழ் மொழி பேசும் தமிழர்கள் என்பதை புரிந்து கொள்ளட்டும். மார்க்கம் வேறு, மொழி வேறு என்று புரியாவிடில் சிங்கள மொழியினை படிக்கலாமே.

இலங்கை முஸ்லிகளில், லோக்கல் முஸ்லீம், ஹக்கீம், ஆசாத் அலி போன்ற பாக்கிஸ்தான், சிரிய வம்சாவளி முஸ்லிம்கள் உள்ளனர். ஆனாலும் அவர்கள் தமிழ் மொழியை தான் பேசுகின்றனர்.

அண்மைய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில், கண்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு இஸ்லாமிய சகோதரர், தமிழ் மொழியில் பேசுகிறார். பின்னர் ஒருவரை அழைத்து, எனக்கு சிங்களம் தெரியாது, நான் சொன்னதை சிங்களத்தில் சொல்லுங்கள் என்று சொல்கிறார். அங்கே தமிழர் நின்றார், இஸ்லாமியர் அல்ல.

ஆகவே சொல்ல வருவது என்னவென்றால், சில தமிழர்கள், இஸ்லாமிய மார்க்கத்தினை பின்னர் ஏற்றனர் என்கிற காரணத்தினால், தமிழர் வரலாறில் இருந்து உருவி, அதை முஸ்லீம் வரலாறாக சொல்ல முடியாது.

தமது தாய் மொழி சார்ந்த வரலாறாக சொல்வதில் என்ன தாழ்வு?

Link to comment
Share on other sites

49 minutes ago, Nathamuni said:

தமிழ் முருகனை தூக்கி, பிள்ளையாரின் தம்பி, சிவனாரின் இரண்டாவது மகன் என்று சொல்லி சைவத்தை, இந்துமதத்துக்குள் அமுக்கிய இந்த ஆரிய பிராமணர்கள்.

இன்று உலகில் வாழும் தமிழர்கள் மொழிரீதியாக, மதரீதியாக, மரபுவழி, கலாச்சாரரீதியாகக் குழம்பி நிற்பதற்குக் காரணமே இந்த ஆரிய பிராமணர்கள்தான். உலகில் பல தேசங்களை ஆண்ட தமிழர்கள் குழம்பியதால் அங்கு நிலம் பிடித்து ஆட்சி செய்யப் பலருக்கு வசதியாகப் போய்விட்டது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.