Jump to content

தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்!

November 18, 2018
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. இதுவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடும் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான் இருக்குமென ஊகிக்கப்படுகிறது. காரணம், தமிழ் மக்கள் பேரவையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்றுவதற்கான முதலாவது அடியை இந்த கூட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து வைக்கிறது.

கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே இன்றைய கூட்டத்தின் நோக்கம்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள், அவை பேரவையின் நோக்கங்களிற்கு இசைவாகும் தன்மை தொடர்வான விவாதம் இடம்பெற்று, அது குறித்த இறுதி முடிவொன்றை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் என்பவற்றை நீக்க வேண்டமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் தமிழ்மக்கள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், முதலமைச்சரின் கட்சியில் இணையமாட்டோமென அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்ததை தொடர்ந்து, தமிழ் மக்கள் பேரவையல் அங்கம் வகிக்கும் வைத்தியர்கள் சமரச முயற்சியொன்றை மேற்கொண்டனர். எனினும், அது வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையை மையமாக வைத்த அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கலாமென பின்னர் வேறு தரப்புக்கள் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையடிப்படையில் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த கூட்டில் இணைவதென்றால் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்ற வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தார்கள். இதையடுத்தே இன்றைய கூட்டம் ஏற்பாடாகியுள்ளதாக பெயர் குறிப்பிட விருமபாத தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் வவுனியாவில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தவறு, புளொட் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டது தவறு என்று இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தும் என்றும், அது குறித்த விவாதங்களின் பின்னர், அந்த கட்சிகள் பேரவையில் நீடிக்கலாமா இல்லையா என்ற விவாதத்தை கோருமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் இன்று காலையில் தெரிவித்தார்.

இன்று அல்லது அடுத்த சில அமர்வுகளில் புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் வெளியேற்றுவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமென தெரிகிறது. உடனடியாக அதற்கு ஆதரவு கிடைக்காவிட்டால், கடந்தகால தேர்தல் நிலைப்பாடுகளை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றி, அதன்மூலம் அந்த இரண்டு கட்சிகளிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வெளியேற்றும் உத்தியை முன்னணி கடைப்பிடிக்குமென தெரிகிறது.

 

http://www.pagetamil.com/24249/

 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இன்று அல்லது அடுத்த சில அமர்வுகளில் புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் வெளியேற்றுவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமென தெரிகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேயாட்டம் எங்கும் எடுபடாது, அது அவர்களின் அரசியல் கல்லறையில் முடிவடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே இன்றைய கூட்டத்தின் நோக்கம்.

கூட்டம் கூடுவதற்கு முதலே கோடாரிகளோடு புறப்பட்டுவிட்டீர்களா?

நல்லவிடஜம்.அதையாவது ஒழுங்கா செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.