Jump to content

தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவைக்கு ‘சங்கு’: ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் இன்று வெளியேற்றப்படலாம்!

November 18, 2018
%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளிற்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகிறது. இதுவரை தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் ஒன்றாக கூடும் கடைசிக் கூட்டம் இதுவாகத்தான் இருக்குமென ஊகிக்கப்படுகிறது. காரணம், தமிழ் மக்கள் பேரவையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்றுவதற்கான முதலாவது அடியை இந்த கூட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்து வைக்கிறது.

கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே இன்றைய கூட்டத்தின் நோக்கம்.

தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள், அவை பேரவையின் நோக்கங்களிற்கு இசைவாகும் தன்மை தொடர்வான விவாதம் இடம்பெற்று, அது குறித்த இறுதி முடிவொன்றை எடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் என்பவற்றை நீக்க வேண்டமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் தமிழ்மக்கள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

அத்துடன், முதலமைச்சரின் கட்சியில் இணையமாட்டோமென அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்ததை தொடர்ந்து, தமிழ் மக்கள் பேரவையல் அங்கம் வகிக்கும் வைத்தியர்கள் சமரச முயற்சியொன்றை மேற்கொண்டனர். எனினும், அது வெற்றியளிக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையை மையமாக வைத்த அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கலாமென பின்னர் வேறு தரப்புக்கள் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொள்கையடிப்படையில் இணக்கம் தெரிவித்திருந்தது. ஆனால், அந்த கூட்டில் இணைவதென்றால் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் என்பவற்றை வெளியேற்ற வேண்டுமென நிபந்தனை விதித்திருந்தார்கள். இதையடுத்தே இன்றைய கூட்டம் ஏற்பாடாகியுள்ளதாக பெயர் குறிப்பிட விருமபாத தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் வவுனியாவில் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தவறு, புளொட் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைந்து போட்டியிட்டது தவறு என்று இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்தும் என்றும், அது குறித்த விவாதங்களின் பின்னர், அந்த கட்சிகள் பேரவையில் நீடிக்கலாமா இல்லையா என்ற விவாதத்தை கோருமென்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் இன்று காலையில் தெரிவித்தார்.

இன்று அல்லது அடுத்த சில அமர்வுகளில் புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் வெளியேற்றுவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமென தெரிகிறது. உடனடியாக அதற்கு ஆதரவு கிடைக்காவிட்டால், கடந்தகால தேர்தல் நிலைப்பாடுகளை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்றி, அதன்மூலம் அந்த இரண்டு கட்சிகளிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி வெளியேற்றும் உத்தியை முன்னணி கடைப்பிடிக்குமென தெரிகிறது.

 

http://www.pagetamil.com/24249/

 

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

இன்று அல்லது அடுத்த சில அமர்வுகளில் புளொட்டையும், ஈ.பி.ஆர்.எல்.எவ் ஐயும் வெளியேற்றுவதே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமென தெரிகிறது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பேயாட்டம் எங்கும் எடுபடாது, அது அவர்களின் அரசியல் கல்லறையில் முடிவடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கந்தர்மடத்திலுள்ள தமிழ் மக்கள் பேரவையின் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணிக்கு இந்த கூட்டம் ஏற்படாகியுள்ளது. பேரவையிலுள்ள கட்சிகளின் கடந்தகால தேர்தல் செயற்பாடுகள் குறித்து ஆராய்வதே இன்றைய கூட்டத்தின் நோக்கம்.

கூட்டம் கூடுவதற்கு முதலே கோடாரிகளோடு புறப்பட்டுவிட்டீர்களா?

நல்லவிடஜம்.அதையாவது ஒழுங்கா செய்யுங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.