Jump to content

ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அவசரப்பட்டு பிரதமர் பதவியை ஏற்றார் மஹிந்த?

download-2-4.jpg

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலை இன்றுடன் 23 நாட்களை எட்டியிருக்கின்றது. இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள நிலையில் நாட்டை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் நெருக்கடி அடுத்து வரும் நாட்களில் தீருமா ? அன்றேல் இன்னமும் பல நாட்களுக்கு அலைக்கழிக்க வைக்குமா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது.

கடந்த மூன்றரை வருட காலத்தில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியமை ஜனநாயகத்தை மீள் நிறுத்தியமை உட்பட பல விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் செய்திருந்த போதும் பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட அதிகரிப்புக் காரணமாக மக்கள் மத்தியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சி காணத்தொடங்கியது. இதனை கடந்த பெப்ரவரி 10 திகதி இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிக்காண்பித்திருந்தனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமைத்துவம் வழங்கிய பொதுஜன பெரமுண கட்சிக்கு அமோக ஆதரவு கிட்டியது.

இப்படியே நிலைமை சென்றிருந்தால் அரசியலமைப்பிற்கமைய அடுத்த பொதுத் தேர்தல் 2020ல் நடைபெறும் காலப்பகுதி வரும் போது ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் வெறுப்பு அதிகரித்திருக்கும். இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கமுடியும்.இதனை நேற்றைய தினம் அவிசாவளையில் ‘எலிய’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் உரையாற்றிய கோத்தாபய ராஜபக்ஷவும் கூறியிருந்தார்.

”இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மகிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியுமே என்று சிலர் கேட்கின்றனர்.

மஹிந்த ராஜபக்சவினால் அதனைச் செய்ய முடியும் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

தேர்தலுக்காக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மஹிந்த ராஜபக்ச காத்திருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பிரதமராகப் பதவியேற்றிருக்க முடியும்.

ஆனால் பிரச்சினை என்னவெனில், நாடு இன்னமும் ஒன்றரை ஆண்டுகளுக்கு  காத்திருக்க முடியுமா? என்பதேயாகும்.

ரணில் விக்கிரமசிங்கவை உருவாக்கியது வெளிநாட்டு சக்திகள் தான்.நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போது, பார்வையாளர் மாடத்தில் இருந்த மேற்குலக இராஜதந்திரிகள் கைதட்டி வரவேற்றனர்” என்றும் கோத்தாபய ராஜபக்ஷஅ தெரிவித்துள்ளார்.

ஆனால் கோத்தாவின் கருத்துக்கு முரணான கருத்துக்களும் அரசியல், ஊடகப் பரப்பில், இராஜதந்திர சமூகத்தினர் மத்தியில் தற்போது தெரிவிக்கப்படுகின்றன.

அடுத்துவரும் நாட்களில் ராஜபக்ஷவினருக்கு எதிராக பல நீதிமன்ற வழக்குகள் அடுத்தடுத்து வரவிருந்த நிலையிலேயே அவசரமாக பிரதமர் பதவியை ஏற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ முற்பட்டார் என்ற கருத்துக்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.

மீண்டும் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக வரும் அவாவில் இருந்த ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியிடம் தனது விருப்பத்தை வெளியிட்டபோதும் அதற்கு உரிய பதில் கிடைக்காத நிலையில் மஹிந்த தரப்புடன் சமரசம் செய்துகொண்டதுடன் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு உடன்பட்டிருந்தார்.

ஆனால் இவ்வளவு விரைவாக மஹிந்தவை பிரதமராக நியமிப்பதற்கு அவர் திட்டமிட்டிருந்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த இரண்டு முக்கியஸ்தர்கள் ஜனாதிபதியிடம் சென்று தம்மால் 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிருபிக்க முடியும் என பெரும் நம்பிக்கையை வெளிப்படுத்திய நிலையிலேயே ஒக்டோபர் 26ம் திகதியன்று ஒரு திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்த மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணி நேர முன்னறிவிப்பிற்குள்ளாக ஜனாதிபதி சிறிசேன பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குப்பின்னர் நடந்தது,நடந்துகொண்டிருப்பது என்ன என்பது உள்நாட்டவர்களுக்கு மட்டுமன்றி உலகிற்குமே வெளிச்சம்.

 

 

http://athavannews.com/ஏன்-அவசரப்பட்டு-பிரதமர்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

அடுத்துவரும் நாட்களில் ராஜபக்ஷவினருக்கு எதிராக பல நீதிமன்ற வழக்குகள் அடுத்தடுத்து வரவிருந்த நிலையிலேயே அவசரமாக பிரதமர் பதவியை ஏற்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ முற்பட்டார் என்ற கருத்துக்கள் தற்போது வெளியிடப்படுகின்றன.

 

ஜனாதிபதியின் கொலை முயற்சி தான் இத்தனைக்கும் காரணமாக இருக்கலாம் என்பது எனதெண்ணம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.