Jump to content

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை!

வ. ந. கிரிதரன்

 

vng_selvam_paul_kadal.jpg

தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாகவும் பதவி வகித்திருக்கின்றார். கிழக்கு இலணடன் பல்கலைக்கழகம் இவரது சமூக சேவையினைப்பாராட்டி, இவருக்கு கெளரவ பட்டம் வழங்கிக் கெளரவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கம், மக்னிகல் சந்திக்கருகில் அமைந்துள்ள டிம் ஹோர்ட்டன் கோப்பிக் கடையில் இன்று மாலை நடைபெற்ற சந்திபில் நண்பர் செல்வம் மற்றும் எழுத்தாளர் கடல்புத்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணித்தியாலம் நடைபெற்ற சந்திப்பில் போல் சத்தியநேசன் அவர்கள் பல்வேறு விடயங்கள் பற்றித்தன் கருத்துகளை எம்முடன் பகிர்ந்துகொண்டார். அவற்றில் முக்கியமான விடயங்களாகப்பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்:

1. புகலிடத்தமிழர்களின் அகதிக்கோரிக்கைகள், குடிவரவுச்சட்டங்கள், மற்றும் அக்கோரிக்கைகளைக் கையாண்ட தமிழ் அமைப்புகள் அல்லது தனிநபர்கள் பற்றிய கருத்துகள்.
2. கனடாத்தமிழர்களின் வளர்ச்சி, அரசியற்செயற்பாடுகள் மற்றும் புதிய கலாச்சாரச் சூழல் குடும்பங்களில் ஏற்படுத்திய தாக்கங்கள் அவற்றின் விளைவுகள் பற்றிய கருத்துகள்.
3. நியுஹாம் நகரசபை உறுப்பினராகக் கடந்த இருபதாண்டு வருடங்களாகச் செயற்பட்டுவரும் போல் சத்தியநேசன அவர்களின் அரசியல் மற்றும் சமூகச் செயற்பாடுகள் பற்றிய கருத்துகள். புலம்பெயர் தமிழர்களில் இவ்வளவு நீண்ட காலம் அரசியலில் பதவி வகிப்பது இவர் ஒருவரே என்பதையும் தனது உரையாடலில் இவர் சுட்டிக்காட்டினார்.
4. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (ஐக்கிய இராச்சியம்) என்னும் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வு பற்றிய கருத்துகள்.
5. புலம்பெயர் தமிழர்களின் பலமும், ஈழத்தில் அவர்கள் ஆற்ற வேண்டிய பணிகளின் அவசியமும் பற்றிய கருத்துகள்.

இவ்விடயங்களைப்பற்றி உரையாடிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவலை.

அகதிக்கோரிக்கைகளைப்பற்றிக் குறிப்பிடுகையில் இவர் குறிப்பிட்ட ஒரு விடயம் முக்கியமானது. யூதர்களைப்பாதிக்கப்பட்ட இனமாக மேற்கு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. அதுபோல் வேறு பல நாட்டைச்சேர்ந்தவர்களையும் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அகதிக்கோரிக்கை வைத்த ஈழத்தமிழர்களை மட்டும் அவ்விதம் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில் அகதிகளுக்காக வழக்குகள் எழுதி உழைத்த அமைப்புகளும் சரி, தன் நபர்களும் சரி மேற்கு நாடுகளின் அரசாங்கங்களுடன் இவ்விடயத்தை எடுத்துக்கூறி இலங்கைத்தமிழர்களையும் பாதிக்கப்பட்ட இனமாக ஏற்றுக்கொள்ளச் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்விதம் செய்யவில்லை. அவ்விதம் செய்திருந்தால் ஒவ்வொருவரும் தனித்தனியாக வழக்குகளுக்கு முகம் கொடுத்திருக்கத்தேவையில்லாமல் இருந்திருக்கும். சிலவேளை வழக்கு எழுதி உழைத்தவர்களுக்கு ஈழத்தமிழர்கள் அனைவரையும் பாதிக்கப்பட்ட இனமாக அங்கீகரிப்பதானது பாதகமானதாக, வருமானத்தை இழக்கும் நிலையினை ஏற்படுத்திவிடும் என்பதற்காக அல்லது அறியாமையின் காரணமாக அவ்விதம் அவர்கள் அவ்விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கக் கூடும் என்னும் அர்த்தத்தில் அமைந்திருந்தன இவ்விடயம் பற்றிய அவரது கருத்துகள்.

புலம்பெயர் தமிழர்களைப்பற்றிக் குறிப்பிடுகையில் 'புலம்பெயர் தமிழ்ச்சமூகம் தற்போது கல்வி, பொருளாதாரம், அரசியல் எனப் பல்வேறு துறைகளிலும் மிகவும் வலிமையான சமூகமாக உருமாற்றம் அடைந்திருக்கின்றது. இச்சமூகம் ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காகத் தம் வலிமையினைப் பயன்படுத்த வேண்டும். இவர்கள் அடுத்த போகத்துக்காகக் காத்திருக்கும் விதை நெல்லைப்போன்றவர்கள். ஈழத்தமிழர்களின் நல்வாழ்வுக்காக இவ்விதை நெல் விதைக்கப்பட வேண்டும் ' என்னும் சாரப்படத் தன் கருத்துகளை எடுத்துரைத்தார் திரு.போல் சத்தியநேசன்.

அடுத்து ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அவரது ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்குரிய தீர்வு பற்றி கருத்துகளைத்தெரிவிக்கையில் அவர் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாகக் கட்சி பேதங்களை மறந்து குரல் கொடுக்க வேண்டுமென்றும், இலங்கைத்தமிழர்களுக்கு நியாயமான, உரிமைகளுடனும் வாழக்கூடிய நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும். அதனை எம் தலைமுறையிலேயே எம் மக்களுக்கு நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி மக்களின் ஜனநாயகத்தை வலியுறுத்தும் கட்சி. இலங்கை மக்கள் அனைவருக்குமான ஜனநாயகத்தை வலியுறுத்தும் , ஆதரிக்கும் அதற்காகக் குரல் கொடுக்கும் கட்சி என்று எடுத்துரைத்தார்.

கனடாக் கலாச்சாரச்சூழலில் குடும்பங்கள் சில சிதையுண்டு அமைந்திருப்பதைத் தான் அவதானித்ததாகவும் , ஆனால் அதே சமயம் இரண்டாவது தலைமுறை பல்வேறு துறைகளிலும் வெற்றிகரமாகக் கால் பதித்து வருவதாகவும், அது ஆரோக்கியமான விடயமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்செயலாக அழைக்கப்பட்டு நிகழ்ந்த சந்திப்பு இச்சந்திப்பு. திடீர்ச் சந்திப்பு என்றாலும், போல் சத்தியநேசன் அவர்கள் அவசரப்படாது, நிதானமாகத் தன் கருத்துகளை எடுத்துரைத்த விதம் என்னைக் கவர்ந்தது.

 

http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4822:2018-11-17-05-59-25&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.