Jump to content

தமிழ் அரசியல் கைதிகளா? ரணிலா? - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

தமிழ் அரசியல் கைதிகளா? ரணிலா?
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
ரணில் கேட்டதற்காக நிபந்தனையின்றி தமிழர் தேசிய கூட்டமைப்பு ரணில் அரசை ஆதரிப்பதாக தெரிவித்திருப்பது அதிற்ச்சி தருகிறது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படியான குறைந்த பட்சக் கோரிக்கையையும் கூட்டமைப்பு கைகழுவிவிட்டது. 
.
வெட்கக்கேடும் துரோகமுமான இந்த அறிக்கை கூட்டமைப்பை இன்று யார்கைப்பற்றியுள்ளார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. அன்று செல்வநாயகத்தின் முதுமையைப் பயன்படுத்தி கட்சியைக் கைப்பற்றி தமிழரை காட்டிக்கொடுக்கும் முயற்ச்சியில் கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் தோற்றுப்போனார். வரலாறு திரும்பும் என்பார்கள். இன்று அரை நூற்றாண்டுகளின் பின்னர் இன்னுமொரு கொழும்பு வளக்கறிஞர் ஒருவர் அதே பாணியில் சம்பந்தரின் முதுமையை பயன்படுத்தி கட்சியைக் கைபற்றுவதில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளமை அச்சம் தருகிறது. 
.
ஜனாதிபதியே அரசியல் கைதிகளை உடனே விடுதலை செய்யென்று குரல் கொடுக்க வேண்டிய ஒரு சிலர் துரோகத்தனமாக ராஜபக்ச அரசை உடனே கலைத்து ரணிலிடம் அரசைக் கொடு எனக் குத்தி முறிகிறார்கள். இவர்கள் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பாராளுமன்றத்தில் சம்பந்தரின் குறி வைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவரது பாதுகாப்பை கட்ச்சி உறுதிப் படுத்த வேண்டும். 
. 
குறைந்த பட்ச்ச நிபந்தனையாக அரசியல் கைதிகள் விடுதலைக்கு ரணில் உத்தரவிடவேண்டுமெனவும் இல்லையேல் ரணில் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் எனவும் கூட்டமைப்பைச் சேர்ந்த முதுகெலும்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல்கொடுக்க வேண்டும்.
.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.